விண்ணக வேந்தன் என் அகம் இங்கே வருகின்றார்


விண்ணக வேந்தன் என் அகம் இங்கே வருகின்றார் வருக வருகவே 
என் நிலை மாற என்னிலே வாழ எழுகின்றார் எழுக எழுகவே 
விடியலின் கீதங்கள் பாடி விருந்துக்கு வாருங்கள் 
வியாதிகள் குணமாகும் நமது வாழ்வே சுகமாகும் 
அன்பாலே நமை ஆளும் இறைவன் இருப்பே இனிதாகும் 
எந்நாளும் (விண்ணக....) 

விடியலில் வானம் தெளிகிறதே புதிதாய் மன்னா பொழிகிறதே 
ஏதோ மாற்றம் நிகழ்கிறதே இதை மனமே இதயம் கமழ்கிறதே 
விதையாய் இதயம் விழுகிறதே நூறு மடங்கு பலன் தரவே
உறவில் விருந்து தொடர்கிறதே புது நிறைவில் இதயம் மகிழ்கிறதே 
கல்லான மனதெல்லாம் கனி இல்லா மரமாகும் 
கனிவான மனமெல்லாம் கனிகள் தரும் நிலமாகும்
மனமாய் வா வளமே வா ஒளியே அருளே இதயம் வா (இசை) எந்நாளும் (விண்ணக....) 

அன்னை தந்த அமுதல்லவா அழகாய் கரத்தில் தவழ்கிறதே 
உயிருள்ள உணவு இது அல்லவோ? அந்த வானக விருந்து மருந்தல்லவா அப்பம் என்பது அன்பல்லவா? 
அப்பாவின் நேசம் பெரிதல்லவா 
உள்ளம் என்பது குடில் அல்லவா? அதில் வாழ்ந்திட வருவது இறை அல்லவா 
இதை வாங்கி உண்ணுங்கள் இனிமையெல்லாம் இதிலேதான் 
இதை வாங்கி பருகுங்கள் நிலை வாழ்வு இதிலேதான்
அழியாத உணவே வா அருகில் நடக்கும் உறவே வா (இசை) எப்போதும் (விண்ணக....) 

அன்பான தந்தை ஒருவர்

 
அன்பான தந்தை ஒருவர்
அவருக்கு பண்பான பிள்ளைகள் இருவர் (2)

ஏராள செல்வம் வீட்டிலே
தாராள விளைச்சல் காட்டிலே (2)

1.தந்தையிடம் வந்தானே இரண்டாம் மகன்
சிந்தை மாறி சொத்தை பிரி என்றான் அவன்
கேட்டபடி சொத்தை பிரித்து கொடுத்தார் தந்தை
கேட்ட விலைக்கு சொத்தை விற்று சென்றான் பிள்ளை
இப்படி தான் வாழ வேண்டும் என்பதை மறந்தான்
எப்படியும் வாழலாம் என்றே நினைத்தான்
அப்படியே ஊதாரியாய் செலவுகள் செய்தான்
கைப்பிடி செல்வம் என்று எல்லாம் இழந்தான்
பன்றி மேய்க்கும் வேளையில் சேர்ந்தான்
உணவு இன்றி அவன் வாடியே நின்றான்
அன்பான தந்தை

2.வாடியவன் செய்த குற்றம் நினைத்தே நொந்தான்
ஓடியே நான் தந்தை காலில் விழுவேன் என்றான்
மகனென்று சொல்லும் தகுதி இழந்தேன் நானே
அடிமையாக சேர்த்து கொள்ளும் என்பேன் என்றான்
தொலைவினிலே இவன் வருவதை தந்தை பார்த்தார்
அலைக்குறளுள் அன்புடனும் ஓடியே அழைத்தார்
வருந்தி அவன் நினைத்ததெல்லாம் சொல்லியே அழுதான்
விருந்துக்கு வா மகனே என் மகனே என்றார்
மனிதர்களே பாவங்களை இன்றே உணருங்கள்
மன்னிக்கின்ற தந்தையிடம் விரைந்து திரும்புங்கள்

அன்பான தந்தை
அன்பான தந்தை ஒருவர்
என்றும் மன்னிக்கும் மனம் கொண்டவர் (3)

அன்பே அன்பே உயர்ந்தது இறை

பாடலைக் கேட்க


அன்பே அன்பே உயர்ந்தது இறை

அன்பே உலகில் சிறந்தது (2)

அன்பிற்காய் மனுவான அன்பிற்காய் தனைத் தந்த

அவர் அன்பே உலகில் சிறந்தது - 2


1. இறையன்பில் வேரூன்றி நான் பிறரன்பில் செழித்தோங்கி

அவரன்பின் ஆற்றலிலே நான் அவனியிலே காலூன்றி (2)

அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2


2. மதவெறியை வேரறுத்து தினம் மனித இனம் தனை நினைத்து

கல்வாரி சரித்திரத்தை நான் காலமெல்லாம் காத்திடவே (2)

அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2

பொதுக்காலம் 4 ஆம் ஞாயிறு இரண்டாம் ஆண்டு


முன்னுரை:
இயேசுவின வாழ்வு என்றுமே “உங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள் , ஆண்டவர் குரலுக்குச் செவிசாய்ப்பீர்”  என்று கூறி நம்மைக் சிந்திக்க அழைக்கிறது ஆண்டின் பொதுக்காலம் நான்காம் ஞாயிறு. தீய சக்திகளாகிய இருளாட்சியை, ஆதிக்கத்தை, அக்கிரமத்தை அழித்தொழித்து இறையாட்சியை நிலை நிறுத்தி செயலாக்கிட நம்மை அழைக்கிறார் நம் இறைமகன் இயேசு கிறிஸ்து. தீமையின் ஒட்டுமொத்த உருவமாயிருக்கின்ற சுயநலம், சுரண்டல், அடிமைத்தனம், சாதி, பயங்கரவாதம், பாலியல் வன்கொடுமை, அடக்கியாளும் அதிகாரம், பிளவுப்படுத்தும் எண்ணம், ஏழைப் பணக்காரன், போட்டி பொறாமை ஆகிய அனைத்தும் சிறிய பெரிய விதங்களில் நம்மையும், நமது குடும்பத்தையும் சமுதாயத்தையும் ஆட்டி அலைக்கழித்து வரும் இந்த தீய சக்திகளை எதிர்த்து வாழும்போது இறைவனுக்கு உகந்தவர்களாக, மகிமையானவர்களாக மாறுவோம். நாம் அத்தகைய மகிமையை அடைய இத்திருப்பலியிலம் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: இச 18:15-20
மனித மனம் அது ஒரு நிலம.  அங்கே விதைக்கப்படும் இறைவார்த்தைகள் அனைத்தும் தவறாது முளைக்கும.  அவ்வார்த்தையின்படி நடக்கிறவர்கள் சிறகடித்துப்பறப்பார்கள், அவ்விரைவார்த்தையின் படி நடவாதவர்கள் அனைவரையும் வேரறுப்பேனென்று கடவுள் இறைவாக்கினர் மோசேயிடம் கூறுவதைக் கவனமுடன் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: 1 கொரி 7:32-35
இல்லறம் என்பது இமயம் போன்றது. அதன் உச்சத்தை அடைய எண்ணற்ற தியாகங்களை செய்வதில் கணவனுக்கு மட்டும் என்று நின்று விடாமல் ஆண்டவரிடமும் பற்றுக்கொண்டு இருக்க வேண்டும் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்:

  1. அனைவரும் என்னைப் போல இருங்கள் என்று சொன்ன எம் இறைவா! உம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள,  குருக்கள,  கன்னியர் பொதுநிலையினர் அனைவரும் உம்மைப்போல வாழ்ந்து தங்களது வாழ்வால் மற்றவருக்கு நற்செய்தியை அறிவித்திட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. தலைவனாக விரும்புபவன் பணியாளனாக இருக்கட்டும் என்று சொன்ன தெய்வமே, சுதந்திரம், சமத்துவம,  சகோதரத்துவத்தின் பார்வையில் எங்கள் நாட்டுத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் வாழ்ந்து நீதியின் கண் கொண்டு எங்களை வழிநடத்த தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. எங்களையெல்லாம் பராமரிக்கும் நல்தெய்வமே, நவீனம் என்னும் பெயரில் கலாச்சாரத்தையும,  பண்பாட்டையும் துளைத்து நிற்கும் இச்சமுதாயத்திற்காக மன்றாடுகிறோம். நாங்கள் வாழுகின்ற நிலையில் மற்றவரின் உணர்வுகளை மதிக்கவும் தனி மனித சுதந்திரத்திற்கு மதிப்புக் கொடுக்கவும் தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இரக்கமுள்ள இறைவா எங்கள் ஊரில் வாழும் குடும்பத்தார்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பு செய்துவாழவும், அவர்களில் உம் தரிசனத்தை பெற்றிடவும், அவர்களுக்கு என்றும் ஆதரவாக அவர்கள் குழந்தைகள் விளங்க வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.