புனித தோமையார் நவநாள்


அப்போஸ்தலரான புனித தோமையாரை நோக்கி செபம்

எங்கள் செல்வ நாட்டில் திருமறையைப் போதிக்க வரம் பெற்ற் புனித தோமையாரே, நீர் ஆண்டவர் மீது கொண்டிருந்த பற்றுதலால் அவரோடு இறக்கவும் துணிந்திருந்தீரே! காணாமல் நம்புவோரின் வீர விசுவாசத்தையும், சாவுக்கும் அஞ்சாத தீர அன்பையும், எங்களுக்குப் பெற்றுத் தந்தருளும். நீர் எங்கள் நாட்டில் திருமறையைப் போதித்து, அரும் அடையாளங்களால் எங்கள் முன்னோர்களில் கணக்கற்ற பேரை மெய் மறையின் ஒளிக்குக் கொண்டு வந்தீர்! இன்னும் இந்த நாட்டில் எங்கள் சகோதரர்களில் எத்தனை கோடிப்பேர் இயேசுவை அறிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் மனந்திரும்பி, இந்தியா முழுவதும் ஒரே மந்தையாய், கிறிஸ்துவின் அன்பரசின்கீழ் வருவது எப்போது? விசுவாசத்தில் உறுதியடைந்த அப்போஸ்தலரே, எங்கள் அனைவரையும் விசுவாசத்திலும் பக்தி ஒழுக்கத்திலும் உறுதிப்படுத்தி, எங்களில் துலங்கும் விசுவாசத்தின் ஞானஒளி எங்கும் பரவி, இந்தியா முழுவதும் கிறிஸ்து கொண்டு வந்த விடுதலையையும் அமைதியையும் பெற்று அவருடைய அரசின்கீழ் அணிவகுத்து நிற்கும்படியாக இறைவனை மன்றாட உம்மை வேண்டுகிறோம்.  ஆமென்.

புனித தோமையார் மன்றாட்டுமாலை

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்

கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்னையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
இஸ்பிரித்து சாந்துவாகிய சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி
தூய தமத்திருத்துவமாயிருக்கிற ஏக சர்வேசுரா -எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி

இறையன்னையை மிகவும் அன்பு செய்த அப்போஸ்தலரான புனித தோமையயாரே, எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
கலிலேயா நாட்டில் பிறந்த புனித தோமையாரே. எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
முடிவில்லா அமைதி தரும் நற்செய்தியைப் போதித்த புனித தோமையாரே.

தூய மரியாயே -எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
இளம் வயதிலேயே தந்தையின் சொற்படி அவர் தொழிலை நடத்திக் கொண்டு வந்த புனித தோமையாரே.
இயேசு மெய்யாகவே உலக மீட்பரென்று விசுவாசம் கொண்ட புனித தோமையாரே.
இயேசு தம்முடைய சீடர்களுக்குள்ளே ஒருவராகத் தெரிந்து கொண்ட புனித தோமையாரே.
இயேசுவின் மீது கொண்டிருக்கும் பற்றுதலால் “நாமும் செல்வோம், அவரோடு இறப்போம்!” என்று கூறிய புனித தோமையாரே.
ஆண்டவரே, நீர் போகிறதற்கான வழியை நாங்கள் எப்படித் தெரிந்து கொள்ள இயலும்?” என்ற வினாவை எழுப்பி, “வழியும் உண்மையும் வாழ்வும் நானே!” என்ற இயேசுவின் பதிலைப் பெற்ற புனித தோமையாரே. 
இயேசு உயிர்த்த பிறகு “நான் அவருடைய கைகளில் ஆணிகளால் ஏற்பட்ட தழும்பைப் பார்த்து, அதில் என் விரலை விட்டு, அவர் விலாவில் என் கையை இட்டாலன்றி நான் நம்பமாட்டேன்!” என்ற புனித தோமையாரே
அவர் உமக்குத் தோன்றியதும் அவரைக் கண்டு மகிழ்ந்து “நீரே என் ஆண்டவர், நீரே என் கடவுள்!” என்று சொன்ன புனித தோமையாரே. 
இயேசு, “தோமா, நீ என்னைக் கண்டதால் நம்பினாய். காணாமலே நம்புவோர் பேறு பெற்றோர்!” என்று சொல்லக் கேட்ட புனித தோமையாரே.
தூய ஆவியாரால் ஏவப்பட்டு இறையன்னையும் அப்போஸ்தலர்களும் கூடிய சபையிலே மேதியா முதலான நாடுகளில் நற்செய்தியைப் போதிக்கக் குறிப்பிடப்பட்ட புனித தோமையாரே.
இறையன்னையின் அடக்கத்துக்கு மிகவும் ஆவலுடனே ஓடி வந்த புனித தோமையாரே.
மாபெரும் மகிழ்ச்சியோடே இயேசுவுக்கு உயிரை ஒப்புக் கொடுத்து பெரிய விருந்துக்கு அழைக்கப்பட்டவர் போல உமது இரத்தத்தைச் சிந்தி திருமறைக்காக உயிரைக் கொடுக்க விரும்பிய புனித தோமையாரே.
மண்ணுலகில் உள்ள எல்லா பொருள்களையும் உம்மையும் விட இறைவனை அதிகமாக அன்பு செய்த புனித தோமையாரே.
வேற்று நாடுகளிலே உமக்கு வரப்போகிற வேதனைகளையும் தடைகளையும் எண்ணி மகிழ்ச்சி கொண்ட புனித தோமையாரே.
இயேசுவையும் இறையன்னையையும் நினைத்து இரவும் பகலும் விண்ணகத்தை நோக்கிக் கையேந்திக் கொண்டு இடைவிடாமல் செபித்த புனித தோமையாரே.
தூய ஆவியாரால் ஏவப்பட்டு மக்களுக்குத் திருவுரையாற்றும்போது வானத்தூதர் போல காணப்பட்ட புனித தோமையாரே.
உயிரையும் உடலையும் தத்தம் செய்து, படாத பாடுபட்டு, மக்களை மெய்மறையில் சேர்க்க ஆவல்கொண்ட புனித தோமையாரே.
விண்ணுல வரங்களைத் தாங்கிய உன்னத மரக்கலமாகிய புனித தோமையாரே.
மூன்று அறிஞர்களுக்கு திருமுழுக்கு அளித்து அவர்களை மெய்மறையில் சேர்த்த புனித தோமையாரே.
பார்த்தியா நாட்டிலே மக்கள் மெய்மறையைக் கண்டடையச் செய்த புனித தோமையாரே.
மேதியா நாட்டிலேயும் பெர்சியா நாட்டிலேயும் வெகு துன்பப்பட்டு ஈடேற்றத்தின் வழியிலே திருப்பிக் கொண்டு வந்த புனித தோமையாரே.
ஈக்கானியா நாட்டிலே வந்த சோதனைகளை எல்லாம், அன்பினாலும், செபத்தினாலும் வென்று, அஞ்சா நெஞ்சத்தவராய் திருமறையை அவர்களுக்குப் போதித்த புனித தோமையாரே.
எத்தியோப்பியா நாட்டுக்கு ஒளியாக நின்ற புனித தோமையாரே.
சிந்து தேசத்தில் கந்தபோரஸ் அரச குடும்பத்துக்குத திருமுழுக்குக் கொடுத்து ஞான ஒளி பெருகச் செய்த புனித தோமையாரே.
கடலில் சுற்றி வந்த பிரமாண்டமான மரத்தை உமது இடுப்பில் இருந்த கயிற்றினாலே கட்டித் திருச்சிலுவை அடையாளத்தை வரைந்து இழுந்துக் கொண்டு வந்து கரையிற் சேர்ந்த புனித தோமையாரே.
இறந்த குழந்தையை இறைவனுடைய அருளாலே உயிர்ப்பித்தவரான புனித தோமையாரே
இயேசுவுக்கான பணிகளை எல்லாம் மகா அன்போடும் தாழ்ச்சியோடும் செய்த புனித தோமையாரே.
உமக்குப் பின் புனித சவேரியார் பாரத நாட்டுக்கு வரப்போகிறதை தொலைப் பார்வையால் கண்டு மக்களுக்கு வெளிப்படுத்தின புனித தோமையாரே.
ஈட்டியால் குத்தப்பட்டு பெருமகிழ்வோடே மறைச்சாட்சி முடி பெற்று முடிவில்லாக் காலம் வாழ விண்ணுலகிற்குச் சென்ற புனித தோமையாரே
கிறிஸ்துவில் நாங்கள் உறுதியான விசுவாசம் கொள்ளும்படியாக, புனித தோமையாரே.
கிறிஸ்துவின் நற்செய்தி உலகெங்கும் பரவும் படியாக, புனித தோமையாரே.
உமது திருவடியைத் தாங்கிய பாரதநாடு மனம் திரும்பும்படியாக, புனித தோமையாரே.

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே - எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே - எங்கள் மன்றாட்டை தயவாய் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கின்ற சர்வேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே - எங்களை தயைபண்ணி இரட்சியும் சுவாமி.
மு. – கிறிஸ்துவின் வாக்குறுதிகளுக்கு நாங்கள் தகுதி பெறும்படியாக.
து. – புனித தோமையாரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

செபிப்போமாக
தந்தையே, எங்கள் பாரத நாட்டிற்கு உமது நற்செய்தியை முதன்முதல் கொணர்ந்த புனித தோமையார் எங்கள் நாட்டிலே மறைபரப்பி, இரத்தம் சிந்தி, அடக்கமானார் என்பதைப் பெருமையுடன் கொண்டாடி உம்மைப் புகழ்கின்றோம். குhலங்காலமாக உண்மைக் கடவைள பல்வேறு வகைகளில் தேடியலைந்து கொண்டிருக்கும் இந்தியராகிய நாங்கள், புனித தோமையாரின் வேண்டுதலால் இயேசுவே எங்கள் ஆண்டவர் என்று கண்டு. “நீரே என் ஆண்டவர். நீரே என் கடவுள்!” என்று அறிக்கையிட்டு அவர் திருவடிகளில் சரணடையச் செய்தருளும். எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்.

ஆயனைத் தேடும் ஆடுகளே

ஆயனைத் தேடும் ஆடுகளே
ஆயன் நம்மை தேடுகிறார் -2
சிதறிய சிறுமந்தை நாமே -2
சேர்ந்தே அவரிடம் செல்வோம்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2
1.
பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாற செய்வேன்
பாயும் நீர் அருவிக்கு நடத்தி செல்வேன் -2
நலிவுற்றதும் வலுவற்றதும்
களைப்புற்றதும் சோர்வுற்றதும்
நிலை வாழ்விலே நிலைபெற செய்வேன்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2
2.
பெரும்சுமை சுமர்ந்து சோர்ந்திருப்போரே
பணிவும் கனிவும் எனக்குண்டு -2
என சுமையோ எளிதானது என் நுகமும் எளிதானது
என்னிடம் பகின்று இளைப்பாற்றி காண்பீர்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2

திருவிருந்து பாடல்

எனில் வாரும் என் இயேசுவே
என்றும் என்னோடு உறவாடவே
நீயின்றி ஒன்றில்லையே
என்றும் நீதானே என் எல்லையே

1.
என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே
உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே
என் அன்பு தாயாக என் நாளும் எனைக் காக்கவே
என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனையழைத்தேன் உயிர்கொடுத்தேன்
உறவைத் தேடியே
2.
பயணம் தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
உனையழைத்தேன் உயிர்கொடுத்தேன்
உறவைத் தேடியே

திருவிருந்து பாடல்

என்தேடல் நீ என் தெய்வமே நீயின்றி என் வாழ்வு நிறம் மாறுதே
உனை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே

இறைவா இறைவா வருவாய் இங்கே
இதயம் அருகில் அமர்வாய் இன்றே - 2

1.
ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
இறைவார்த்தையில் நிறையாகுவேன்
மறைவாழ்விலே நிலையாகுவேன்
வழிதேடும் எனைக் காக்க நீ வேண்டுமே.. (இறைவா)
2.
உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழிதேடும் எனைக் காக்க நீ வேண்டுமே.. (இறைவா)

காணிக்கைப் பாடல் - பொன்னும் பொருளும் இல்லை


பொன்னும் பொருளும் இல்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் சொந்தம் பந்தமுமெல்லாம்
நீயென சொல்லி வந்தேன் எந்தையும் என்தாயும் நீயன்றோ - நீயே
என்னை ஆளும் மன்னவனன்றோ.
1.
நிலையில்லா உலகினில் நிலைத்து நான் வாழ
என் நிம்மதி இழந்து நின்றேன்
வளமில்லா வாழிவினில் வசந்தங்கள் தேடி நான்
அளவில்லா பாவம் செய்தேன்
தனது இன்னுயிரை பலியென தந்தவரே
உனக்கு நான் எதையளிப்பேன்
இன்று உனக்கு நான் எனையளிப்பேன்
2.
வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பணி செய்வேன்
உன்னத தேவனே உனதருள் கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன்
என்றும் உன்னிலே வாழ்ந்திடுவேன்

தியானப்பாடல்

அம்மையப்பன் உந்தன் அன்பே நிரந்தரம்
மாறும் உலகில் மாறா உன் உறவே நிரந்தரம்
இம்மை வாழ்வில் மறுமை இருப்பது நிரந்தரம் (2) நான்
மாண்ட பின்பும் உன்னில் உயிர்ப்பது நிரந்தரம்
நிரந்தரம் - 2 நீயே நிரந்தரம் - 2

1.
தாயின் அன்பு சேய்க்கு இங்கே நிரந்தரம்
தாயும் தந்தையும் எமக்கு நீயே நிரந்தரம்
தேயும் வாழ்வில் நம்பிக்கை நீயே நிரந்தரம் - நான்
சாயும் போது காப்பது நீயே நிரந்தரம் -2
நிரந்தரம் - 2 நீயே நிரந்தரம் - 2
2.
செல்வங்கள் கொணரும் இன்பத்தில் இல்லை நிரந்தரம்
பதவியும் புகழும் தருவது இல்லை நிரந்தரம்
நிலைவாழ்வு என்றும் நிஜமான நீயே நிரந்தரம் - அதன்
விலையாக எனை நீ உன்னில் இணைப்பாய் நிரந்தரம் - 2
நிரந்தரம் - 2 நீயே நிரந்தரம் - 2

வருகைப்பாடல்

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளிpயினில் நடந்திட
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
1.
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் நம்மை தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியை காட்டுவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்
2.
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார். வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்

ஒரு தாய் தேற்றுவதுபோல்

ஒரு தாய் தேற்றுவதுபோல்
என் நேசர் தேற்றுவார்
அல்லேலூயா - (4)
1.
மார்போடு அணைப்பாரே
மனக் கவலை தீர்ப்பாரே
2.
கரம்பிடித்து நடத்துவார்
கன் மலைமேல் நிறுத்துவார்
3.
எனக்காக மரித்தாரே
என் பாவம் சுமந்தாரே
4.
ஒரு போதும் கைவிடார்
ஒரு நாளும் விலகிடார்

காணிக்கை தந்தோம் கர்த்தாவே

காணிக்கை தந்தோம் கர்த்தாவே
ஏற்றுக்கொள் எம்மை இப்போதே
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
காணிக்கை யார் தந்தார் நீர்தானே

1.
நாங்கள் தந்த காணிக்கை எல்லாம் இரட்சகர் கொடுத்தது
மேகம் சிந்தும் நீர்த்துளியெல்லாம் பூமி கொடுத்தது
காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்
ஆகாயம் மாறும் இறைவனின் மகனே
ஆனாலும் உம் அன்பு மாறாது

2.
ஆலயத்தின் வாசல் வந்தால் அழுகை வருகுதே
ஆனமட்டும் அழுதுவிட்டால் அமைதி பெருகுதே
கண்ணீரைப்போல காணிக்கை இல்லை
கண்கொண்டு பாரும் இறைவனின் மகனே
கண்ணீரின் அர்த்தங்கள் நீர்தானே

3.
காணிக்கை தான் செலுத்த வந்தோம் கருணை கிடைக்கட்டும்
தேவன் தந்த ஜீவன் எல்லாம் புனிதம் அடையட்டும்
என்னண்டை வாரும் பாவங்கள் தீரும்
ஏனென்று கேளும் இறைவனின் மகனே
எம்மையே காணிக்கை தந்தோமே

THE SPREAD OF CHRISTIANITY IN THE TIME OF APOSTLES

  1. St.Peter: In the first twelve chapters of the Acts,he appears as the leader of the infant church.the college of the apostles is clearly the central authority,and it is he who speaks for them severl occasions. After Saul's conversion,peace returned to the church and Peter traveled through Galilee,Samaria and Judea , visiting new communities and adding to them by his preaching and miracles. During that time the Holy Spirit taught him the equality of Jew and Gentile. With regard to Peter's death what is certain is that he died in Rome during time of Neronian: persecution between 64 and 68 A.D. Tradation puts his martyrdom in 67. together with that of St.Paul and even givesJune 29th as the exact date.this date had a symbolic character:it was day on which the romans celebrated the founding of their city by Romans.
  2. St.John: He spent most of the time in Ephesus. During the persecution of Domitian,he was brought to Rome and thrown into the boiling oil.He was escaped from that and after the death of Domitian he came back to Epessus and died at a very advanced age in the year 100A.D
  3. St.James the less : He was the Brother of St.thaddues and thought to have been the cousin of Jesus Christ . The epistls of St.James was written about 47 A.D. He sufferd martyrdom by being cast down from the parapet of the temple and killed with a fuller's club at C.62 A.D.
  4. St.James the great: He was the brother of St.John the evangelist. They were the brothers of Jesus Christ .Jesus chose St.peter,St.James and St.John to witness his transfiguration,agony in the garden.He was the first apostle to be martyred.King Herod Agrippa the grandson of Herod the great arrested St.James in order to please the Jews and he was beheaded in the Year C.60 A.D
  5. 5.St.Andrew: He was the brother of St.Peter.He preached the Gospel in Turkey.he was martyred during the reign of Nero 30th November in the year 60 A.D.being tied on the X like cross called Andrew' cross.
  6. St.Bartholomew: He was introduced to Jesus by St.Philip.He preached in Arabia. According to tradition he was martyred by being flayed alive in Armenia around the 1st Century A.D
  7. St.Philip: After the ressurection he went to preach the good news to the region of Asia Minor(Turkey) along with his daughters.traditions say that he suffered martyrdom by the crucifiction in Phrygia around 62 A.D
  8. St.Matthew: He was the tax collecter when Jesus called him. He only wrote the first gospel in Aramaic and Greek. It is belived that he was stoned to death around 1st century A.D.
  9. St.Thomas: He was the apostle of India. He preached the gospel in India. In Madras St.Thomas is believed to have met death by the spear and there the miraculous cross of St.Thomas is venerated. He died around the year 100 A.D.
  10. St.Simon the zealot: His surname is zelous. According to greek tradition he was the bridegroom at the wedding feast of Cana where Jesus performed his first miracle. Nothing was known about his ministry and death.
  11. St.Thaddeus: He was the brother of St.James the less. He preached the gospel in Palestin and later went to Persia and Armania. Death was not known.
  12. St.Mathias: He preached christianity in Judea and Ethiopia where he was crucified. Some say he was beheaded at Jerusalem around 1st century A.D.
Arokia Rajesh
III Year B.A.
Mathur

யாரைத்தேடி வந்தீர்கள் (யோவான் 18:4)

இயேசுவின் பிரியமானவர்களே,

ஆத்திகன் முதல் நாத்திகன் வரை, அமெரிக்கா முதல் அண்டை வீட்டு மனிதன் வரை படித்தவன் முதல் படிக்காதவன் வரை, ஏழை முதல் பணக்காரன் வரை, பெரியவர் முதல் சிறியவர் வரை.  .  .   ஒவ்வொரு மனிதனும் ஏதாவது ஒன்றை தன் வாழ் நாளில் தேடிக்கொண்டிருக்கிறான்.   சிலர் பொன்னையும் பொருளையும்,  பலர் மண்ணையும்-மனிதத்தையும் ,  அநேகர் பணத்தையும் பதவியையும் தேடி அலைந்து கொண்டிருக்கின்றனர்.   இப்படிப்பட்டவர்கள் மத்தியில் நீங்களும்-நானும் எதைத் தேடி? யாரைத் தேடி? இந்த தேவாலாயத்திற்க்கு வந்திருக்கிறோம்.   நிச்சயமாக நாம் அனைவரும் நமது ஆண்டவர் இயேசு கிறிஸ்துவைத் தேடித்தான் வந்திருப்போம்.   அப்படி என்றால் எந்த நோக்கத்திற்க்காக இயேசுவைத் தேடி குடும்பமாக கணவன்-மனைவியாக,  பெற்றோர்-பிள்ளையாக,  தனிமனிதனாக வந்திருக்கின்றோம் என்று சிந்தித்துப் பார்க்க இன்றைய வாசகமும் வழிபாடு தமக்கு அழைப்பு விடுக்கின்றது.

விவிலியத்தில் பக்கங்களை புரட்டிப்பாருங்கள் ஒவ்வொரு மனிதனும் இயேசுவைத் தேடி இருக்கின்றார்கள்.   ஆனால் அந்த தேடுதலின் நோக்கம் மனிதனுக்கு மனிதன் வேறுபடுகின்றது.  
  • மத்தேயு 2:13 பெத்தலகேமில் பிறந்த குழந்தை இயேசுவை மன்னன் ஏரோது தேடுகிறான் அந்த குழந்தையை கொன்று விட வேண்டும் என்பதற்காக மெத்த படித்த பரிசேயரும் சதுசேயரும் இயேசுவை தேடுகிறார்கள் எப்படி சூழ்ச்சியின் வலையில் சிக்க வைக்கலாம் என்று.  
  • மத்தேயு 20:20 தனது இரு பிள்ளைகளையும் இயேசுவின் வலமும் இடமும் அமர வைத்துவிட செபதேயுவின் மணைவி இயேசுவை தேடி செல்கிறாள்.
  • யோவான் 18:4 கெத்சமணி தோட்டத்திலே தன் தலைவரை தேடிச்சென்றான் யூதாசு 30 வெள்ளி காசுக்கு காட்டிக்கொடுப்பதற்காக.

இன்றைய நற்செய்தியிலும் மக்கள் கூட்டம் இயேசுவைத் தேடி கப்பர்நாகுமுக்கு வருகின்றன.   காரணம் இயேசுவை பிடித்து தங்களது அரசனாக அமைத்து கொள்ளவேண்டும் என்ற எண்ணத்திலே.   எதற்க்காக இயேசுவை தங்கள் சொந்த அரசனாக ஆக்கிக்கொள்ள ஆசைப்படுகிறார்கள்? ஆண்டவர் இயேசுவின் மீது கொண்ட நம்பிக்கையினாலா அல்லது ஆண்டவர் தாம் எங்களது பாவ வாழ்வுக்கு ஒளியும் வழியும் அவரே எங்களது கற்பாறை அரணும் என்பதை உணர்ந்து கொண்டதாலா? இல்லை.   அன்பார்ந்தவர்களே,  அவர்களுடைய ஒரே நோக்கம் எல்லாம் இயேசுவை அரசனாக ஆக்கிவிட்டால் அன்றாட நாம் கஷ்டப்படாமல் உணவு உண்ணலாம் என்று தான் அவரைத்தேடி வந்து அரசராக்க விரும்புகிறார்கள்.   இதை அறிந்துதான் இயேசு இன்றைய நற்செய்தியில் நீங்கள் நான் செய்த அரும் அடையாளங்களை கண்டதால் அல்ல,  மாறாக  அப்பங்களை வயிறாற உண்டதால்தான் என்னை தேடி வந்தீர்கள் என்கிறார்.

ஆம்! ஐந்து அப்பத்தையும் இரண்டு மீனையும் ஐந்தாயிரம் பேருக்கு பகிர்ந்து கொடுத்த இயேசுவை ''அன்றாட உணவு கொடுக்கும் மனிதனாக எண்ணி தேடி வந்தார்களே ஒழிய,  வாழ்வு தரும் உணவை கொடுக்க கூடிய மனிதன் தம்மிடையே இருக்கிறார்:அவர் தருகின்ற ஆன்மீக உணவு என்றென்றும் அழியவே அழியாது'', என்ற எண்ணத்திலே இயேசுவைத்தளடி வரவில்லை.  ஆகவேதான் வசனம் 27-ல் தொடர்ந்து சொல்லுகிறார் அழிந்து போக்க்கூடிய அப்பத்திற்க்காகவும் மீனுக்காகவும் நீங்கள் உழைக்க வேண்டாம் அழியாத நிலைவாழ்வு தரக்கூடிய உணவுக்காக உழையுங்கள்.   இத்தகைய உணவுக்காக தேடுங்கள் என்று சொல்லுகின்றார்.   சொன்னதோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கு அவர்களின் மூதாயரின் வாழ்க்கை சுவடுகளை சுட்டிக்காட்டுகின்றார்.  அதாவது இஸ்ராயல் மக்கள் பாலைவனத்தில் பயணித்த போது உணவு கொடுத்தவர் என் தந்தையே என்று,  இதைதான் இன்றைய முதல் வாசகமும் நமக்கு எடுத்துரைக்கின்றது.   யோசேப்பின் கலத்திலே இஸ்ராயல் மக்கள் கல்லாம் எகிப்தில் ஏகபோக வாழக்கை வாழ்ந்தார்கள்.   ஆனால் எப்போது யேசேப்பு இறந்தாரோ அப்போது இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையிலே இழப்பு ஏற்ப்படுகின்றது.   விடிதலை பயணம் 1:8-ல் வாசிக்கிறோம்.   யோசேப்பு இறந்த பிறகு,  அறியந்திராத புதிய மன்னன் எகிப்தில் தோன்றுகிறான்.   அவன் இஸ்ரயேல் இனம் பெருகுவதைப் பார்த்து அவர்கள் மேல் பொறாமை கொண்டு அடிமையாக மாற்றுகிறான்.   3. 3 என்று இருந்த இனம் இயல்பு இழந்து போய் இன்னலுருகிதே என்று கடவுளுக்கு கத்திராக ஒப்பாறி வைக்கின்றார்கள்.   அப்போது தான் ஆண்டவர் மோயிசன், ஆரோன் வழியாக அவர்களை எகிப்திலிருந்து கூட்டி பாலும் தேனும் பொழியும் கானான் நாட்டிற்க்கு அவர்களை அழைத்து செல்கின்றார்.

இவ்வாறு செல்லுகின்ற வழியிலே தான் இஸ்ரயேல் மக்கள் மொயிசனையும், ஆரோனையும் பர்த்து ''பசியால் மாண்டு போகவா எங்களை அழைத்து வந்தீர்'' எகிப்தில் நாங்கள் இறைச்சில் பாத்திரத்தின் அருகில் அமர்ந்து அப்பம் உண்டு நிறைவடைந்து சந்தோசமாக இருந்திருப்போமே! என்று தங்களது அடிமை வாழ்விலே தான் ஆனந்தம் கொள்ள நினைத்து அதையே மீண்டும் தேடினார்களே ஒழிய,  தன்னை சுதந்தர மனிதனாக மாற்றி,  தனகென ஒரு நாட்டை எடவுள் ஒடுத்திருக்கிறார் என்று அதை தேடி போகாமல், போக விருப்பம் இல்லாமல் இங்கே முணுமுணுக்கின்றார்கள்.   இருந்தபோதும் கடவுள் மன்னாவையும், காடையையும் கொடுக்கின்றார்.   உணர்கிறார்களு ஆனால் நிலைவாழ்வு பெறாமல், கானான் தேசத்தை தன் கண்களாலே காணாமலே பலர் வழியிலே இறந்து போயினார்கள்.   ஆம்! உணவு உண்பதற்க்கு தேடிய மக்கள் அந்த உணவையும்,  நிறை வாழ்வையும் தர வல்ல இறைவனை தேட மறந்தார்களே,  வாழ்வை இழந்தார்கள்.

இதுதகைய நிலமை தன்னை தேடி வந்த மக்களுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காகத் நான் ''வாழ்வு தரும் உணவு நானே என்னிடம் வருபவர்க்கு பசியே இராது,  என்னிடம் நம்பிக்கை கொண்டிருப்பவர்க்கு தாகமே இராது'' என்று சொல்லி அத்தகைய உணவிற்க்காக என்னைத் தேடுங்கள் என்கிறார்.   இன்று நீங்களும் நானும் ஆண்டவரைதேடி ஆலயத்திற்க்கு வந்திருக்கின்றோம். எதற்க்காக? எத்தகைய நோக்கத்திற்க்காக?


அருள்பணி ஆரோக்கியதாசு
திரு இருதய குருமடம்
கும்பகோணம்

Gitanjali - Tagore

  • Where the mind is without fear and the head is held high;
  • Where knowledge is free;
  • Where the world has not been broken up into fragments by narrow domestic walls;
  • Where words come out from the depth of truth;
  • Where tireless striving stretches its arms towards perfection;
  • Where the clear stream of reason has not lost its way into the dreary desert sand of dead habit;
  • Where the mind is led forward by thee into ever-widening thought and action --
Into that heaven of freedom, my Father,
let my country awake.

எந்தை நாடு எழுகவே !
(நிலைமண்டில ஆசிரியப்பா)

எங்கே நெஞ்சம் அஞ்சதல் இல்லையோ
சிங்கம் எனத்தலை நிமிர்ந்து நிற்குமோ;

அறிவின் விடுதலை செறிந்தே உள்ளதோ;

சிறிய சுவர்களால் பரந்தஇவ் வுலகைப்
பிரித்துச் சிறுசிறு துண்டு செய்யாரோ;

உண்மை என்ற மண்ணுள் முளைத்து
செஞ்சொற் பூக்கள் எங்கே மலருமோ;

சலியா முயற்சியால் வலிவுகொள் கரங்கள்
கலைமலி முதிர்ச்சியைக் காண்டல் எங்கோ;

அறிவுஎன் னும்நல்ல அழகுநீர் ஓடை
உரியதன் பாதையை மறந்து தவறி

அரிய சுரத்தின் வறிய மணலெனும்
உயிரிலாப் பழக்கத்தில் ஓய்ந்தெங்கு விடாதோ

என்றும் பெருகும்நல் எண்ணம் செயலுக்கு
எங்குன்னால் உள்ளம் இயக்கப் படுமோ-

அந்தவான் உலகில் என்றன் தாய் நாடு
எந்தாய் அருள்வாய் விழித்தே எழுகவே !

Gitanjali - Tagore

This is my prayer to thee, my lord
Strike, strike at the root of penury in my heart.

  1. Give me the strength lightly to bear my joys and sorrows.
  2. Give me the strength to make my love fruitful in service.
  3. Give me the strength never to disown the poor or bend my knees before insolent might.
  4. Give me the strength to raise my mind high above daily trifles.
  5. And give me the strength to surrender my strength to thy will with love.


என் வேண்டல் !
(கலித்தாழிசை)

என்இறைவா இஃதுஎன்றன் வேண்டல் கேட்பாய்
என்மனத்தின் வறுமைதனை வேர்அ றுப்பாய்
இன்பதுன்பம் இரண்டினையும் இலகு வாக
ஏற்பதற்கு வல்லமையை எனக்குத் தாராய் ;

சேவைதனில் என்அன்பு பயன்பெற்(று) உய்யச்
செய்கின்ற வல்லமையை எனக்கு அருள்வாய்
கேவலஞ்செய் பலத்தின்முன் பணியாத் தெம்பும்
கீழானோர் தமைத்துறவாத் திறமும் தாராய் ;

அன்றாட அற்பங்கள் தமக்கு மேல்என்
தலையுயர்த்தும் உறுதிதனை அருள் எனக்கே ;
உன்திருஉள் ளப்படிஎன் திறமை தன்னை
ஒப்படைக்கும் உறுதிதனை எனக்குத் தாராய் !
LETTER OF HIS HOLINESS BENEDICT XVI

TO SEMINARIANS

Dear Seminarians,
When in December 1944 I was drafted for military service, the company commander asked each of us what we planned to do in the future. I answered that I wanted to become a Catholic priest. The lieutenant replied: “Then you ought to look for something else. In the new Germany priests are no longer needed”. I knew that this “new Germany” was already coming to an end, and that, after the enormous devastation which that madness had brought upon the country, priests would be needed more than ever. Today the situation is completely changed. In different ways, though, many people nowadays also think that the Catholic priesthood is not a “job” for the future, but one that belongs more to the past. You, dear friends, have decided to enter the seminary and to prepare for priestly ministry in the Catholic Church in spite of such opinions and objections. You have done a good thing. Because people will always have need of God, even in an age marked by technical mastery of the world and globalization: they will always need the God who has revealed himself in Jesus Christ, the God who gathers us together in the universal Church in order to learn with him and through him life’s true meaning and in order to uphold and apply the standards of true humanity. Where people no longer perceive God, life grows empty; nothing is ever enough. People then seek escape in euphoria and violence; these are the very things that increasingly threaten young people. God is alive. He has created every one of us and he knows us all. He is so great that he has time for the little things in our lives: “Every hair of your head is numbered”. God is alive, and he needs people to serve him and bring him to others. It does makes sense to become a priest: the world needs priests, pastors, today, tomorrow and always, until the end of time.
The seminary is a community journeying towards priestly ministry. I have said something very important here: one does not become a priest on one’s own. The “community of disciples” is essential, the fellowship of those who desire to serve the greater Church. In this letter I would like to point out – thinking back to my own time in the seminary – several elements which I consider important for these years of your journeying.
1. Anyone who wishes to become a priest must be first and foremost a “man of God”, to use the expression of Saint Paul (1 Tim 6:11). For us God is not some abstract hypothesis; he is not some stranger who left the scene after the “big bang”. God has revealed himself in Jesus Christ. In the face of Jesus Christ we see the face of God. In his words we hear God himself speaking to us. It follows that the most important thing in our path towards priesthood and during the whole of our priestly lives is our personal relationship with God in Jesus Christ. The priest is not the leader of a sort of association whose membership he tries to maintain and expand. He is God’s messenger to his people. He wants to lead them to God and in this way to foster authentic communion between all men and women. That is why it is so important, dear friends, that you learn to live in constant intimacy with God. When the Lord tells us to “pray constantly”, he is obviously not asking us to recite endless prayers, but urging us never to lose our inner closeness to God. Praying means growing in this intimacy. So it is important that our day should begin and end with prayer; that we listen to God as the Scriptures are read; that we share with him our desires and our hopes, our joys and our troubles, our failures and our thanks for all his blessings, and thus keep him ever before us as the point of reference for our lives. In this way we grow aware of our failings and learn to improve, but we also come to appreciate all the beauty and goodness which we daily take for granted and so we grow in gratitude. With gratitude comes joy for the fact that God is close to us and that we can serve him.
2. For us God is not simply Word. In the sacraments he gives himself to us in person, through physical realities. At the heart of our relationship with God and our way of life is the Eucharist. Celebrating it devoutly, and thus encountering Christ personally, should be the centre of all our days. In Saint Cyprian’s interpretation of the Gospel prayer, “Give us this day our daily bread”, he says among other things that “our” bread – the bread which we receive as Christians in the Church – is the Eucharistic Lord himself. In this petition of the Our Father, then, we pray that he may daily give us “our” bread; and that it may always nourish our lives; that the Risen Christ, who gives himself to us in the Eucharist, may truly shape the whole of our lives by the radiance of his divine love. The proper celebration of the Eucharist involves knowing, understanding and loving the Church’s liturgy in its concrete form. In the liturgy we pray with the faithful of every age – the past, the present and the future are joined in one great chorus of prayer. As I can state from personal experience, it is inspiring to learn how it all developed, what a great experience of faith is reflected in the structure of the Mass, and how it has been shaped by the prayer of many generations.
3. The sacrament of Penance is also important. It teaches me to see myself as God sees me, and it forces me to be honest with myself. It leads me to humility. The Curé of Ars once said: “You think it makes no sense to be absolved today, because you know that tomorrow you will commit the same sins over again. Yet,” he continues, “God instantly forgets tomorrow’s sins in order to give you his grace today.” Even when we have to struggle continually with the same failings, it is important to resist the coarsening of our souls and the indifference which would simply accept that this is the way we are. It is important to keep pressing forward, without scrupulosity, in the grateful awareness that God forgives us ever anew – yet also without the indifference that might lead us to abandon altogether the struggle for holiness and self-improvement. Moreover, by letting myself be forgiven, I learn to forgive others. In recognizing my own weakness, I grow more tolerant and understanding of the failings of my neighbour.
4. I urge you to retain an appreciation for popular piety, which is different in every culture yet always remains very similar, for the human heart is ultimately one and the same. Certainly, popular piety tends towards the irrational, and can at times be somewhat superficial. Yet it would be quite wrong to dismiss it. Through that piety, the faith has entered human hearts and become part of the common patrimony of sentiments and customs, shaping the life and emotions of the community. Popular piety is thus one of the Church’s great treasures. The faith has taken on flesh and blood. Certainly popular piety always needs to be purified and refocused, yet it is worthy of our love and it truly makes us into the “People of God”.
5. Above all, your time in the seminary is also a time of study. The Christian faith has an essentially rational and intellectual dimension. Were it to lack that dimension, it would not be itself. Paul speaks of a “standard of teaching” to which we were entrusted in Baptism (Rom 6:17). All of you know the words of Saint Peter which the medieval theologians saw as the justification for a rational and scientific theology: “Always be ready to make your defence to anyone who demands from you an ‘accounting’ (logos) for the hope that is in you” (1 Pet 3:15). Learning how to make such a defence is one of the primary responsibilities of your years in the seminary. I can only plead with you: Be committed to your studies! Take advantage of your years of study! You will not regret it. Certainly, the subjects which you are studying can often seem far removed from the practice of the Christian life and the pastoral ministry. Yet it is completely mistaken to start questioning their practical value by asking: Will this be helpful to me in the future? Will it be practically or pastorally useful? The point is not simply to learn evidently useful things, but to understand and appreciate the internal structure of the faith as a whole, so that it can become a response to people’s questions, which on the surface change from one generation to another yet ultimately remain the same. For this reason it is important to move beyond the changing questions of the moment in order to grasp the real questions, and so to understand how the answers are real answers. It is important to have a thorough knowledge of sacred Scripture as a whole, in its unity as the Old and the New Testaments: the shaping of texts, their literary characteristics, the process by which they came to form the canon of sacred books, their dynamic inner unity, a unity which may not be immediately apparent but which in fact gives the individual texts their full meaning. It is important to be familiar with the Fathers and the great Councils in which the Church appropriated, through faith-filled reflection, the essential statements of Scripture. I could easily go on. What we call dogmatic theology is the understanding of the individual contents of the faith in their unity, indeed, in their ultimate simplicity: each single element is, in the end, only an unfolding of our faith in the one God who has revealed himself to us and continues to do so. I do not need to point out the importance of knowing the essential issues of moral theology and Catholic social teaching. The importance nowadays of ecumenical theology, and of a knowledge of the different Christian communities, is obvious; as is the need for a basic introduction to the great religions, to say nothing of philosophy: the understanding of that human process of questioning and searching to which faith seeks to respond. But you should also learn to understand and – dare I say it – to love canon law, appreciating how necessary it is and valuing its practical applications: a society without law would be a society without rights. Law is the condition of love. I will not go on with this list, but I simply say once more: love the study of theology and carry it out in the clear realization that theology is anchored in the living community of the Church, which, with her authority, is not the antithesis of theological science but its presupposition. Cut off from the believing Church, theology would cease to be itself and instead it would become a medley of different disciplines lacking inner unity.
6. Your years in the seminary should also be a time of growth towards human maturity. It is important for the priest, who is called to accompany others through the journey of life up to the threshold of death, to have the right balance of heart and mind, reason and feeling, body and soul, and to be humanly integrated. To the theological virtues the Christian tradition has always joined the cardinal virtues derived from human experience and philosophy, and, more generally, from the sound ethical tradition of humanity. Paul makes this point this very clearly to the Philippians: “Finally, brothers, whatever is true, whatever is honourable, whatever is just, whatever is pure, whatever is pleasing, whatever is commendable, if there is any excellence and if there is anything worthy of praise, think about these things” (4:8). This also involves the integration of sexuality into the whole personality. Sexuality is a gift of the Creator yet it is also a task which relates to a person’s growth towards human maturity. When it is not integrated within the person, sexuality becomes banal and destructive. Today we can see many examples of this in our society. Recently we have seen with great dismay that some priests disfigured their ministry by sexually abusing children and young people. Instead of guiding people to greater human maturity and setting them an example, their abusive behaviour caused great damage for which we feel profound shame and regret. As a result of all this, many people, perhaps even some of you, might ask whether it is good to become a priest; whether the choice of celibacy makes any sense as a truly human way of life. Yet even the most reprehensible abuse cannot discredit the priestly mission, which remains great and pure. Thank God, all of us know exemplary priests, men shaped by their faith, who bear witness that one can attain to an authentic, pure and mature humanity in this state and specifically in the life of celibacy. Admittedly, what has happened should make us all the more watchful and attentive, precisely in order to examine ourselves earnestly, before God, as we make our way towards priesthood, so as to understand whether this is his will for me. It is the responsibility of your confessor and your superiors to accompany you and help you along this path of discernment. It is an essential part of your journey to practise the fundamental human virtues, with your gaze fixed on the God who has revealed himself in Christ, and to let yourselves be purified by him ever anew.
7. The origins of a priestly vocation are nowadays more varied and disparate than in the past. Today the decision to become a priest often takes shape after one has already entered upon a secular profession. Often it grows within the Communities, particularly within the Movements, which favour a communal encounter with Christ and his Church, spiritual experiences and joy in the service of the faith. It also matures in very personal encounters with the nobility and the wretchedness of human existence. As a result, candidates for the priesthood often live on very different spiritual continents. It can be difficult to recognize the common elements of one’s future mandate and its spiritual path. For this very reason, the seminary is important as a community which advances above and beyond differences of spirituality. The Movements are a magnificent thing. You know how much I esteem them and love them as a gift of the Holy Spirit to the Church. Yet they must be evaluated by their openness to what is truly Catholic, to the life of the whole Church of Christ, which for all her variety still remains one. The seminary is a time when you learn with one another and from one another. In community life, which can at times be difficult, you should learn generosity and tolerance, not only bearing with, but also enriching one another, so that each of you will be able to contribute his own gifts to the whole, even as all serve the same Church, the same Lord. This school of tolerance, indeed, of mutual acceptance and mutual understanding in the unity of Christ’s Body, is an important part of your years in the seminary.
Dear seminarians, with these few lines I have wanted to let you know how often I think of you, especially in these difficult times, and how close I am to you in prayer. Please pray for me, that I may exercise my ministry well, as long as the Lord may wish. I entrust your journey of preparation for priesthood to the maternal protection of Mary Most Holy, whose home was a school of goodness and of grace. May Almighty God bless you all, the Father, the Son and the Holy Spirit.
From the Vatican, 18 October 2010, the Feast of Saint Luke the Evangelist.
Yours devotedly in the Lord,

BENEDICTUS PP. XVI By courtesy of the Vatican Website

O come, let us adore Him

O Come All Ye Faithful
Joyful and triumphant,
O come ye, O come ye to Bethlehem.
Come and behold Him,
Born the King of Angels;
O come, let us adore Him,
O come, let us adore Him,
O come, let us adore Him,
Christ the Lord.
Adeste, fideles, laeti triumphantes;
Venite, venite in Bethlehem.
Natum videte Regem angelorum.
Refrain
Venite adoremus, venite adoremus,
Venite adoremus, (Dominum) Christ the Lord.

Sing, choirs of angels, Sing in exultation;
O Sing, all ye citizens of heaven above!
Glory to God, In the highest;
O come, let us adore Him,
O come, let us adore Him,
O come, let us adore Him,
Christ the Lord.

(Air: O Come All Ye Faithful)
-Same tune in Tamil
1.
வாரும் இறைமாந்தரே! ஆனந்தமே பொங்க!
வாரும், வாரும் பெத்தலெகெம் ஊர் அண்மையிலே
பாரும் விண்துதர் மன்னர் மானிடனா னாரே!
வாரும் ஆராதிப்போம் யாம் (2)
வாரும் ஆண்டவரை யாம் ஆராதிப்போம்!

2.
காவல் ஆயர் கேட்டனர் நள்ளிரா நற்செய்தி
''மாவல்லபர் முன்னிட்டியில் வரிந்தாரே!''
ஏவல் விட்டேகிச் சென்றார் பாலனைக் காணவே
வாரும் ஆராதிப்போம் யாம்....

3.
வானோர் கிதம் பாடவே கீழ்திசையில் ஞானி
ஆனோர், விண்மீன் பின் பொன், துபம், மீரையுடன்
போனோரைக் கண்டோம்; நாமிம் சேர்ந்து ஆராதிப்போம்
வாரும் ஆராதிப்போம் யாம்...

Silent night, holy night

Silent night, holy night!
All is calm, all is bright.
Round yon Virgin, Mother and Child.
Holy infant so tender and mild,
Sleep in heavenly peace,
Sleep in heavenly peace.
Silent night, holy night!
Shepherds quake at the sight.
Glories stream from heaven afar
Heavenly hosts sing Alleluia,
Christ the Savior is born!
Christ the Savior is born.

Silent night, holy night!
Son of God love's pure light.
Radiant beams from Thy holy face
With dawn of redeeming grace,
Jesus Lord, at Thy birth.
Jesus Lord, at Thy birth

(Air: Silent night)
-Same tune in Tamil
1.இராவினில் தூய்மையில் எங்கும் சேர் ஜோதியில்
பேரமைதி வேளையினில் கன்னித்தாயின் அன்பனைப்பில்
பாலா கண்ணுறங்காய், பாலானே கண்ணுறங்காய்

2.இரவினில் தூய்மையில் தூதரின் கீத்த்தில்
வானவீதீயின் கானத்தில் ஆயர்வந்திடும் நேரத்தில்
பாலா கண்ணுறங்காய், பாலானே கண்ணுறங்காய்

3.இரவினில் தூய்மையில் தேவசெய் அன்பொளி
தந்தைசொல் மனிவாகிடவே விந்தைசொல் நிறைவேறிடேவ
மாந்தர் மீட்படைந்தார் மாந்தரும் மீட்படைந்தார் !

கிறிஸ்துமஸ் பாடல் - ஆரிராரிரோ

ஆரிராரிரோ என் கண்ணே நீ தூங்கு- என்
அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்கு


1
அழியாத ஆன்மாவின் விருந்தாகவே
என்னில் எழுந்தே நீ வா- உன்
ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவே
என்னில் இசை பாடவா
கண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன்
தெய்வமே செல்வமே
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ

2
அழகான ஆன்மாவில் வருகின்றவர்
என்னை உருவாக்கவா- நல்
அணையாத தீபமாய் திகழ்கின்றவா
ஆன்ம ஒளி ஏற்றவா
சிறு திரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன்
தெய்வமே செல்வமே!
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ

கிறிஸ்துமஸ் பாடல் - புத்தம் புதிய மலரே

புத்தம் புதிய மலரே இந்த
புவியில் உதித்த நிலவே
புதிய உலகின் விடிவே எங்கள்
இதயம் தேடும் மகிழ்வே(2)
ஆராரோ ஆரிரரோ ஆரிரராரோ(2)


1
என்றும் வாழும் இறைமகனே உலகில் வந்தாயே
இன்று எங்கள் உடன் பிறப்பாய் மாறிவிட்டாயே(2)
கண்ணின் மணியே கனியமுதே கண்வளராயோ(2)
அன்பின் மகிமை உணர்ந்த எம்மை அன்பில் இணைப்பாயோ
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம்
மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2)

2
ஈழவானில் எழும் கதிரே எங்கள் நம்பிக்கையே
தாழ்த்தப்பட்டோர் தவித்து நிற்போர் வாழ்த்தும் உன் வரவே(2)
துன்ப துயரம் துடைக்க வந்த கடவுளின் கரமே(2)
உளமகிழ்வே இகம் முழங்கும் இன்னிசை சுரமே
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம்
மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2)

கிறிஸ்துமஸ் பாடல் - பூத்தது பார் புதுப்பொழுது

பூத்தது பார் புதுப்பொழுது பூமகன் வரவினிலே- இதை
பூமி எங்கும் முழங்கிடவே புறப்படு இறைகுலமே- நம்
இயேசுவின் பிறப்பினிலே புது வாழ்வும் மலர்ந்திடுமே
இனிஎல்லான் நலம்தானே பல வளங்களும் பெருகிடுமே
லல்லல்லா........


1
இறைமகன் யேசு பிறந்தார்- ஏழை
எளியவர் மகிழ்வு கண்டார்
மாபரன் இன்று பிறந்தார்- நம்
பாவங்கள் போக்க வந்தார்
இருளை நீக்க வந்தார்- அருள்
ஒளியை ஏற்ற விளைந்தார்
விண்ணும் மண்ணும் இணைய- அதில்
இறைவன் புனிதம் கமழ
‌பாலன் இயேசு நம் மனங்களில்
சிரிப்பார் மகிழ்வாய் மனமே

2
அன்புருவானவர் வந்தார்- மண்ணில்
மனிதனாகப் பிறந்தார்
அமைதியின் தூதன் பிறந்தார்- நம்
அகமதில் நிறைவு தந்தார்
பாசம் பரிவு கொண்டார்- நம்
பாவம் யாவும் சுமந்தார்
நம்மில் ஒருவரானார்- நம்
இன்பம் துன்பம் பகிர்ந்தார்
பாலன் இயேசு நம் மனங்களில்
சிரிப்பார் மகிழ்வாய் மனமே

கிறிஸ்துமஸ் பாடல் - மார்கழியில் உதித்த மன்னவனே

மார்கழியில் உதித்த மன்னவனே உன்
மகிமையைத் துறந்து மண்ணகம் வந்தாய்
மனிதத்தை இழந்த இம்மண்ணில் நீ
மனுவாய் மலர்ந்து விந்தையுமானாய்


1
வருந்தியே உழைத்தும் வறியவரானோர்
உண்மையில் நடந்தும் ஊர்பழி சுமந்தோர்
அன்புக்கு பணிந்து அவமானம் அடைந்தோர்
அவனியை மாற்ற அடி உதை ஏற்றோர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

2
புனிதத்தில் வாழ்ந்து மனிதத்தை மறந்தோர்
செல்வத்தில் திளைத்து செருக்குடன் வாழ்ந்தோர்
அரியணை ஏறி அடக்கியே ஆள்வோர்
அணு ஆயுதத்தால் அகிலத்தை அழிப்போர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

கிறிஸ்துமஸ் பாடல் - நமக்காய் ஒரு குழந்தை

நமக்காய் ஒரு குழந்தை- இந்த
நானிலம் தவழ்ந்தது
நலிந்த நிலை மாறும் என்னும்
நம்பிக்கை மலர்ந்தது
ஆராரோ கண்ணுறங்கு உந்தன் ஊரேதோ கண்ணுறங்கு
விண்ணகமோ மண்ணகமோ இல்லை
இரண்டும் உந்தன் பிறந்தகமோ


1
வானின் தூதர்களே இன்று
வாழ்த்து பாடுங்களேன்
விண்ணகத்தில் என்றும் மகிமைதான்- ஆனால்
மண்ணகத்தில் அமைதி எங்கே
மாடடை குடிலில் பிறந்தவனே இந்த
மானிடர் நடுவில் பிறந்தாலென்ன
‌ஆடுகளே மாடுகளே நீங்கள்
மாந்தரிலும் சிறந்தவரே

2
மாந்தர் மைந்தர்கள் யாம்- எங்கள்
வாழ்க்கை எண்ணுகின்றோம்
மனித மாண்பு என்னவென்று- முற்றும்
மறந்த கூட்டம் உண்டு இங்கு
மனிதனாய் பிறந்த இறைமகனே- எங்கள்
மான்பினை எமக்கு கூறாயோ
வறுமை நோய் பிளவுகள்- இனி
வாராதிருக்கச் செய்வாயோ

கிறிஸ்துமஸ் பாடல் - பெத்லகேம் நகரிலே

பெத்லகேம் நகரிலே பூபாள ராகம் ஒன்று கேட்குதா இங்கு கேட்குதா
இடையர்கள் வியந்திட வானதூதர் பாடும் கானம் கேட்குதா உனக்கு கேட்குதா
கனவான காலங்கள் நனவாகிட பாவங்கள் சாபங்கள் மறைந்தோடிட‌
இறைமகனும் பிறந்துவிட்டார் வாருங்களே பாருங்களே


1
வார்த்தை வடிவிலே தந்தையோடு இருந்தவர் -தூய
‌ஆவியாலே மனிதன் ஆனாரே
மழலை உருவிலே நம் மன்னன் வந்தாரே -அன்னை
கன்னிமரி மைந்தன் ஆனாரே(2)
இடையர்களும் பாலகனை கண்டு களிக்கின்றார்
வேந்தர் மூவர் வான்மலரை வணங்கி மகிழ்கின்றார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்

2
மனிதன் வாழவே ஆதி சாபம் நீங்கவே- ஏழை
அடிமைக் கோலம் பூண்டு வந்தாரே
தந்தை திருவுளம் ஏற்று தம்மைத் தாழ்த்தியே- இந்த
‌தரணி மீது மழலை ஆனாரே(2)
மாந்தரெல்லாம் வாழ்வு பெற மீட்பர் பிறந்துள்ளார்
மனித நேயம் மலர்ந்திடவே மன்னன் பிறந்துள்ளார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்

கிறிஸ்துமஸ் பாடல் - கருணைக் கடலே

கருணைக் கடலே! வா
துதித்த தயாபரா! வா
சுருதி மறையோர்க்கு
சுடரொளியே வா

|
அதோனாயீ ஆனந்தமே
ஆவலுடன் காத்திருக்கும்
அடிமைகளை சந்திக்க

||
எம்மான்வேல் ஏசு நாதர்
எங்கள் பாவதோஷம் தீர
ஏன் இன்னும் வரத்தாமதம்

|||
பேய் மயக்கு பாவ வழிப்
பீடையினால் வாடும் உந்தன்
பிள்ளைகளின் மேலிரங்கி

கிறிஸ்துமஸ் பாடல் - எந்தன் நெஞ்சுகுள்ளே

எந்தன் நெஞ்சுகுள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா - இனி
அச்சம் என்பது எனக்கில்லை
வழி எங்கும் தடையில்லை தலைவா -2
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே..ஆ...ஆ...
இறையரசு நனவாகுமே....ஆ....ஆ... -2
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே -2
எந்தன் நெஞ்சுகுள்ளே -3 பிறக்கவா


|
பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்
வழிகாட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ...ஆ...
எந்தன் துணையாகுமே...ஆ....ஆ....
உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே -உந்தன் வார்த்தை

||
வாழ்க்கையை இழந்து நான் திரிந்தேன்
நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்
உந்தன் உறவானது ....ஆ...ஆ....
உயிர் துணையாகுமே..ஆ...ஆ....
உந்தன் உறவானது உயிர் துணையாகுமே -உந்தன் வார்த்தை

கிறிஸ்மஸ் பாடல் - சர்க்கரை முத்தே

சர்க்கரை முத்தே சந்தன பொட்டே
கண்ணே கண்ணுறங்கு
முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே
கண்ணே கண்ணுறங்கு
அன்னை மரியின் செல்வமே
விண்ணக தேவ திலகமே
கண்ணே நீயும் கண்ணுறங்கு
ஆரிராரிரோ ஆரிராரிரோ -2


கந்தையில் நீயும் மகீமை கண்டாய்
கண்ணே கண்ணுறங்கு
தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் (2)
கண்ணே கண்ணுறங்கு ...
மந்தையின் ஆயர்கள் தோழமை ... (2)
கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு
விந்தையில் வந்து வேந்தர்கள்
நின்றாய் கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ ஆரிராரிரோ -2
||
விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க
கண்ணே கண்ணுறங்கு
மண்ணிலே மாந்தர் நாதங்கள் கேட்க
கண்ணே கண்ணுறங்கு
கண்கவர் விண்மீனகள் உன்புகழ் காட்ட
கண்ணே கண்ணுறங்கு
தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட
கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ ஆரிராரிரோ -2

திருவிவிலியம் பற்றி...

‘பைபிள்’ என்ற சொல் ‘பிப்ளியோன்’ என்ற கிரேக்க சொல்லிலிருந்து வருகிறது. ‘பிப்ளியோன்’ என்றால் ‘நூல்’ என்று பொருள்.
உலகிலேயே முதன்முதலில் அச்சிடப்பட்ட நூல் ‘திருவிவிலியம்’.
தமிழ் மொழியிலும் முதன்முதலில் அச்சிடப்பட்ட நூல் ‘திருவிவிலியம்’.
329 மொழிகளில் முழுவிவிலியமும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
633 மொழிகளில் புதிய ஏற்பாடு மட்டும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
46 இந்திய மொழிகளில் முழுவிவிலியமும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

திருவிவிலியத்தில்...
மொத்த புத்தகங்கள் 73 (ப.ஏ.46 + பு.ஏ.27)
மொத்த அதிகாரங்கள் 1334
மொத்த வசனங்கள் 35487
மிகப் பெரிய அதிகாரம் திருப்பாடல் 119
மிகச் சிறிய அதிகாரம் திருப்பாடல் 117
மிக நீண்ட வசனம் எஸ்தர் 8: 12
மிக குறுகிய வசனம் யோவான் 11: 35

விவிலியம் தெரிந்துகொள்வோம்


gioa Vw;ghL 46 Gj;jfq;fs; ehd;F gphpTfshf gpupf;fg;gLfpwd.
1.jpUr;rl;l E}y;fs;
  1. 1. njhlf;f E}y; 2. tpLjiyg;gazk; 3. NytpaH 4. vz;zpf;if 5. ,izr;rl;lk;
2. tuyhw;W E}y;fs;
  1. 1. NahRth 2. ePjpjiytHfs; 3. &j;J 4. 1rhKNty; 5. 2rhKNty; 6. 1murHfs; 7. 2murHfs; 8. 1Fwpg;NgL 9. 2Fwpg;NgL 10. v];uh 11. neNfkpah 12. v];jH 13. Njhgpj;J 14. A+jpj;J 15. 1kf;fNgaH 16. 2kf;fNgaH
3. Qhd E}y;fs; 1. NahG 2. jpUg;ghly; 3. ePjpnkhopfs; 4. rig ciuahsH 5. ,dpikkpF ghly; 6. rhyNkhdpd; Qhdk; 7. rPuhf;fpd; Qhdk;.
4. ,iwthf;fpdu; E}y;fs; 1. vrhah 2. vNukpah 3. Gyk;gy; 4. vNrf;fpNay; 5. jhdpNay; 6. xNrah 7. NahNty; 8. MNkh]; 9. xgjpah 10. Nahdh 11. kPf;fh 12. eh$k; 13. mgf;$f;F 14. nrg;gdpah 15. Mfha; 16. nrf;fhpah 17. kyhf;fp 18. gh&f;F.
Gjpa Vw;ghL 27 E}y;fs; Ie;J gphpTfshf gpupf;fg;gLfpwd.
1. ew;nra;jp E}y;fs;
  1. 1. kj;NjA 2. khw;F 3. Y}f;fh. 4. Nahthd;;
2. tuyhW
  1. 1. jpUj;J}jH gzpfs;
3. gTypd; jpUKfq;fs; 1. cNuhikaH 2. 1nfhhpe;jpaH; 3. 2nfhhpe;jpaH 4. fyhj;jpaH 5. vNgrpaH 6. gpypg;gpaH 7. nfhNyhNraH 8. 1njrNyhdpf;fH 9. 2njrNyhdpf;fH 10. 1jpnkhj;NjA 11. 2 jpnkhj;NjA 12 jPj;J 13. gpyNkhd;

4. nghJ jpUKfq;fs;
1. 1Nahthd; 2. 2Nahthd; 3. 3Nahthd;; 4. ahf;NfhG 5. 1NgJU 6. 2NgJU 7.; vgpNuaH 8. A+jh

5. ntspg;ghL
1. jpUntspg;ghL

சமாதானத்தின் செபம்

இறைவா,
என்னை உமது சமாதானத்தின் கருவியாக்கும்
எங்கு பகைமை நிறைந்துள்ளதோ அங்கு அன்பையும்
எங்கு கயமை நிறைந்துள்ளதோ அங்கு மன்னிப்பையும்
எங்கு ஐயம் நிறைந்துள்ளதோ அங்கு விசுவாசத்தையும்
எங்கு அவநம்பிக்கை நிறைந்துள்ளதோ அங்கு நம்பிக்கையும்
எங்கு இருள் சூழ்ந்துள்ளதோ அங்கு ஒளியையும்
எங்கு மனக்கவலை உள்ளதோ அங்கு அகமகிழ்வையும்
விதைத்திட அருள்புரியும்.
என் இறைவா,
ஆறுதல் பெருவதைவிட ஆறுதல் அளிக்கவும்
புரிந்து கொள்ளப் படுவதைவிட பிறரை புரிந்து கொள்ளவும்
அன்பு செய்யப்படுவதைவிட பிறரை அன்பு செய்யவும் வரமருள்வாய்
  ஏனெனில்,
கொடுப்பதில் யாம் பெறுவோம்
மன்னிப்பதில் மன்னிக்கபெறுவோம்
இறப்பதில் நித்திய வாழ்வடைவோம். ஆமென்.
- புனித பிரான்சிஸ் அசிசியார்
Another Tamil Version

உன் சாந்தியின் கருவியாக என்னை ஆக்க்கியருளும்.
இறைவா,
உன் சாந்தியின் கருவியாக என்னை ஆக்கியருளும்.
எங்கு பகை உள்ளதோ அங்கு அன்பையும்,
எங்கு மனவருத்தம் உள்ளதோ அங்கு மன்னிப்பையும்,
எங்கு பிரிவினை உள்ளதோ அங்கு ஒன்றிப்பினையும்,
எங்கு ஐயம் உள்ளதோ அங்கு விசுவாசத்தையும்,
எங்கு ஏக்கம் உள்ளதோ அங்கு நம்பிக்கையையும்,
எங்கு இருள் உள்ளதோ அங்கு ஒளியையும்,
எங்கு கவலை உள்ளதோ அங்கு மகிழ்வினையையும்,
நான் உமது இரக்கத்தின், பெயரால் பகிர்ந்திட அருள் தாரும்.
எனது தெய்வீக குருவே, நான் என் ஆறுதலுக்காக
அலைவதை விடுத்து மற்றவர்களுக்கு ஆறுதலைக் கொடுக்க விளைவேனாக.
என்னை மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று
துடிப்பதை விடுத்து ஏனையோரை புரிந்து கொள்ள விளைவேனாக.
என்னை மற்றவர்கள் நேசிக்க வேண்டுமென்று துடிப்பதை விடுத்து
ஏனையோரை நேசிக்க முற்படுவேனாக.
ஏனெனில்,கொடுப்பதன் மூலந்தான் பெற்றுக்கொள்ள முடியும்.
மன்னிப்பதன் மூலம் தான் மன்னிப்படைய முடியும்.
மடிவதன் மூலம் தான் முடிவில்லா வாழ்வைப் பெற முடியும்.


The prayer of St. Francis

Lord, make me an instrument of your peace,
Where there is hatred, let me sow love;
where there is injury, pardon;
where there is doubt, faith;
where there is despair, hope;
where there is darkness, light;
where there is sadness, joy;

O Divine Master, grant that I may not so much seek to be consoled as to console;
to be understood as to understand;
to be loved as to love.

For it is in giving that we receive;
it is in pardoning that we are pardoned;
and it is in dying that we are born to eternal life.

திருவருகைக்காலம் 2ஆம் ஞாயிறு

முன்னுரை
இயேசு பாலகனின் பிறப்பைக் தூய்மையான உள்ளத்தோடு கொண்டாட, அவரை இதயத்தில் வரவேற்க இவ்வாலயம் வந்துள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் வாழ்த்தி வரவேற்கின்றோம்.இயேசு கிறிஸ்துவில் பிரியமான சகோதர சகோதரிகளே இன்றைய நற்செய்தியின் வழியாகவும்,திருமுழுக்கு யோவான் வழியாகவும் இறைவன் நமக்கு விடுக்கின்ற அழைப்பு என்னவென்றால் “மனமாற்றம்”. நாம் அனைவரும் நம்முடைய பழைய பாவ இயல்பை விட்டுவிட்டு இயேசு பாலகனை நமது இதயத்தில் தாங்க வேண்டும். அதற்கான வரம் வேண்டி இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம் (பாரூக் 5:1-9)
பாரூக் புத்தகமானது இஸ்ராயேல் மக்கள் பாபிலோனியாவில் அகதிகளாக இருந்த பொழுது எழுதப்பட்டது. இஸ்ராயேல் மக்களின் வாழ்வில் மையமாக, உயிர் நாடியாக இருந்த எருசலேம் தேவாலயத்தைவிட்டு அவர்கள் அந்நிய நாட்டில் அகதிகளாகவும், துன்பத்தால் வாடுபவர்களாகவும்,நம்பிக்கையிழந்தவர்களாகவும் வாழ்ந்த மக்களுக்கு அறிவிக்கப்படுகிற நற்செய்திதான் இன்றைய முதல் வாசகம். இச்சிந்தனையோடு இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்

இரண்டாம் வாசகம் (பிலி 1:4-6,8-11)
பிலிப்பு நகரில் வாழ்ந்த இறைமக்கள் பவுலடியார் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்தனர். ஏனெனில் பவுலடியார் அவர்களுக்கு நற்செய்தி அறிவிக்க பல துன்பங்கள்; ஏற்றுகொண்டார். பிலிப்பு நகர மக்கள் பவுலடியார் மீது காட்டும் அன்பின் அடையாளமாக ஒரு குறிப்பிட்ட தொகையை அவருக்கு அனுப்பி வைக்கிறார்கள். அதை ஏற்றுக்கொண்ட பவுலடியார் அவர்களுக்கு நன்றி சொல்லியும்,அறிவுரை கூறுவதுவும் தான் இன்றைய இரண்டாம் வாசகம். இச்சிந்தனையோடு இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு
1. படைப்பின் முதல்வனே இறைவா! இந்த உலகில் பயனம் செய்யும் திருச்சபை,அதன் தலைவர்களும் மக்களின் நலனில் அக்கரைக் கொண்டு, வாழ்விழந்த மக்களுக்கு அன்பின், இரக்கத்தின், மன்னிப்பின், மற்றும் அமைதியின் கருவிகளாகச் செயல்பட, கிறிஸ்துவின் மீட்பைத் தங்கள் நல்ல செயல்கள் மூலம் பிறருக்கு அறிவிக்கும் வரம் தந்திட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2.அகதிகளையும் அனாதைகளையும் ஆதரிக்கும் அன்பு இறைவா! வீடிழந்து, உறவிழந்து. மண்ணிழந்து, மானத்தையும் இழந்து வாதை முகாம்களில் முள் வேளிக்குள் துன்பப்படும் இலங்கை தமிழர்களுக்காவும்,மற்றும் உலகெங்கும் உள்ள அகதிகளுக்காகவும் மன்றாடுகிறோம். அவர்களுக்கு நீர் கொண்டு வந்த மீட்பு விரைவில் கிடைக்க எம் நாட்டுத் தலைவர்கள் முன்வர வேண்டிய வரம்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3.அன்பின் இறைவா! கிறிஸ்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக இன்றும் கொடுமைப்படுத்தப்படும் ஒரிசாவில் வாழும் எம் சகோதர சகோதரிகளுக்காக மன்றாடுகிறோம். அவர்களுடைய வாழ்வில் இந்தாள்வரை அவர்கள் சந்திக்கும் துன்பங்களும் துயரங்களும் மறைந்து மக்கள் அனைவரும் ஒருத்தாய் பிள்ளைகளாய் வாழ்ந்திட மக்களின் மனதை மாற்றிட இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4.மனமாற்றத்தை விரும்பும் இறைவா! உம் பிறப்பிற்காகத் காத்திருக்கும் நாங்கள் எங்கள் பழைய இயல்புகளைக் கலைந்து புதிய மனிதர்களாக மாறி இந்த உலகத்தை உம் பாதையில் கொண்டுவர எங்களுக்கு உமது அருளையும் ஆசீரையும் பொழிந்து காத்தருள இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

ஆண்டவரின் திருக்காட்சி பெருவிழா

(எசா 60: 1-6; எபே 3: 2-3, 5-6; மத் 2:1-12)
முன்னுரை
வரலாற்றையே படைத்த இறைவன் வரலாற்றில் காலம், இடம் இவற்றிக்கு உட்பட்டவராக பிறந்தார். இவர் இஸ்ரயேல் குலத்தில் பிறந்திருந்தாலும் தன்னை எல்லா மக்களுக்கும் ‘தானே இறை மீட்பர்’ என்று புறவினத்தாருக்கும் வெளிப்படுத்தி தன்னுடைய மீட்பு திட்டத்தில் பங்கு கொள்ள அழைப்பு விடுக்கிறார். இன்றைய சூழ்நிலையில் நாம் இறைபிரசன்னத்தை உணர்ந்து, பிற மக்களும் கிறிஸ்துவை அறிய, கிறிஸ்துவுக்குள் வாழ கிறிஸ்துவை வெளிப்படுத்துகிறோமா? என்பதை சிந்திக்க அழைக்கின்றது இன்றைய திருவழிபாட்டு வாசகங்கள். எனவே அனைவரும் இறைவெளிப்பாட்டை, இறைபிரசன்னத்தை உணர எனது பங்களிப்பை கொடுப்பேன் என்ற சிந்தனையோடு இத்திருப்பலியில் பங்கெடுப்போம்.

முதல் வாசகம் (எசா 60: 1-6)
இஸ்ரயேல் மக்கள் பிற நாட்டவரால் அடிமைகளாக பல வழிகளில் நசுக்கப்பட்டனர். சொந்த நாட்டையும், வழிபட்டு வந்த கோவிலையும் இழந்து வேதனைப்பட்டுக் கொண்டிருந்த வேளையில், ஆண்டவர் பிற இனத்தவரும் உன் ஒளி நோக்கி வருவர், எருசலேமே எழுந்து ஒளிவீசு! என்று இறைவாக்கினர் எசாயா மூலம் நம்பிக்கை ஊட்டுவதை இவ்வாசகத்தில் கேட்போம்.

இரண்டாம் வாசகம் (எபே 3: 2-3)
புறவினத்தாரின் திருத்தூதர் என்று அழைக்கப்படும் புனித பவுலடியார் பிற இன மக்களும் கிறிஸ்து இயேசுவை அறிந்து புதிய உடன்படிக்கையின் பங்காளிகளாக மாறுகின்றனர் என்று இவ்வாசகத்தில் கூறுகின்றார்.

இறைமக்கள் வேண்டல்
1. அன்புத் தந்தையே இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், கன்னியர்கள், துறவறத்தார், மற்றும் பொதுநிலையினர் அனைவரும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களுக்கு உண்மை கிறிஸ்துவை வெளிப்படுத்தும் கருவிகளாக இருக்கவும் மக்களை கிறிஸ்துவுக்குள் வழி நடத்த அவர்களுக்கு தேவையான ஆற்றலைத்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின் அரசே! எம் நாட்டை ஆளும் தலைவர்கள் தங்களுக்குள் இருக்கும் குறுகிய மனப்பான்மையை களைந்துவிட்டு பரந்த மனத்துடன் மக்களுக்கு சேவை செய்ய ஆற்றலையும், ஞானத்தையும் தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. நல்லாயனே இறைவா! நாங்கள் அனைவரும் எங்களின் வாழ்வில் கிறிஸ்துவை வெளிப்படுத்த தடையாக இருக்கும் கர்வம், ஆணவம், பொறாமை, போட்டி மனப்பான்மை போன்றவைகளை களைந்து கிறிஸ்துவுக்கு சான்று பகர்கிறவர்களாக திகழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. பாதுகாப்பின் நாயகனே! எம் பங்கில் இருக்கின்ற நோயாளிகள், முதியவர்கள், கைவிடப்பட்டவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களை உமது அன்பில் திளைக்கவைக்க அருள்தர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நற்செய்தி முழக்கம் (மத் 2:1-12)

கிறிஸ்து இயேசுவில் பிரியமான சகோதர, சகோதரிகளே! கிறிஸ்து பிறப்பு விழாவினைக் கொண்டாடிய ஒரு சில நாட்களுக்குப் பின் நாம் திருச்சபையோடு இணைந்து திருக்காட்சி, மூன்று அரசர்கள் பெருவிழாவினை கொண்டாடுகிறோம். இந்த நாள் இயேசு தன்னையே உலகிற்கு ஒளியாக வெளிப்படுத்திய நினைவு நாள். ‘உலகின் மீட்பர்’ (யோவா 4:42) தான் உதித்த யூத குலத்திற்கும், நாட்டிற்கும் அப்பாற்பட்டு, ‘உலகனைத்திற்கும் உரியவன் நான்’ எனப் பறைசாற்றும் நாள். புறவினத்;தார்க்கு மூடியிருந்த மீட்பின் கதவுகள் அன்பிறைவன் கிறிஸ்து இயேசுவால் திறக்கப்பட்ட நாள் இந்நாள். நம் வாழ்வில் இவ்விழாவினை நம்பிக்கையின் அடிக்கல் நாட்டுவிழா எனச் சொல்லலாம். ஏனென்றால் இன்று இறைவன் தன்னையே நமக்குக் குழந்தை உருவில் வெளிப்படுத்துகின்றார்.
திருட்காட்சி ஆங்கிலத்தில் நுpiphயலெ என்று அழைக்கப்படுகிறது. இவ்வாhர்த்தையின் கிரேக்க மூலச்சொல்லாகிய ‘எப்பிபனியா’ (நுpiphயnயை) என்ற சொல் ‘இறைவனின் வெளிப்பாடு, இறைச் சக்தியின் வெளிப்பாடு அல்லது இறைமாட்சியின் வெளிப்பாடு’ என்று பொருள் தரும். இதனை ‘திருவெளிப்பாடு’ எனவும் அழைக்கலாம்.
பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர்களால் முன்னறிவிக்கப்பட்டவர்கள், ‘இயேசு என்னும் ஒளியை தேடி’ பல நாடுகளில் இருந்தும் “உன் உதயக் கதிர்நோக்கி நடைபோடுவர்” (எசா 60:3) என்று முன்மொழியப்பட்டதற்கு ஏற்ப மூன்று ஞானிகளும் இயேசுவைத் தேடி சென்றார்கள்.
மாந்தர் அனைவரும் இறைவனைத்தேடி வந்து அவரைக் கண்டுகொள்வார்கள் என்கிற கருத்தைத்தான் இன்றைய மூன்று வாசகங்களும் வலியுறுத்துகின்றன. கிறிஸ்து பிறந்தவுடன் வெட்டவெளியில் கடுங்குளிரில் நடுங்கிக்கொண்டு சாமக்காவல் புரிந்துக்கொண்டிருந்த இடையர்களுக்குத்தான் முதன் முதலாக வானதூதர் தோன்றி நற்செய்தயை அறிவித்தார். நற்செய்தியை கேட்ட இடையர்கள் தேடிச் சென்று சந்தித்தனர். விண்மீன் அடையாளத்தைக் கண்ட கீழ்த்திசை ஞானிகள் குழந்தை இயேசுவை தேடிச் சென்று பொன்னும், சாம்பிராணியும், வெள்ளைப் போளமும் காணிக்கையாக செலுத்தி வணங்கி மகிழ்ந்தனர். இவ்வாறு விண்மீனின் அடையாளத்தை வைத்து தேடிச் சென்றதால் அவர்களின் தேடல் தனித்துவம் பெறுகிறது.
ஞானிகள், அரசர்கள் என்று உலகத்தால் போற்றக்கூடியவர்கள். அப்படிப்பட்டவர்கள் சிறு குழந்தையிடம் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்குகிறார்கள் (மத் 2:11). ஆம், இயேசு கிறிஸ்து என்ற ஒளியை வாழ்வில் காண ஆர்வத்தோடு தேடிச் சென்று கண்டார்கள். எனவே நாம் எந்த மனநிலையோடு ஆர்வத்தோடு இயேசுவை தேடி செல்கிறோமோ அந்த அளவுக்குதான் கண்டடைவோம்.
மனதில் செருக்கில்லாமல், ஆணவமில்லாமல் தாழ்ச்சியோடும் பணிவோடும் இயேசுவை தேடுகின்றபோது உன்னத ஒளியாம் இயேசுவை கண்டடைவோம் ஞானிகளைப்போல. ஏனென்றால் ஒளியானது பாவ இருளை சுட்டெரிக்கும் தீப்பிழம்பாகும். இருளை புறங்காணச் செய்யும், இருண்ட இதயத்தில் நம்பிக்கை தீபத்தை ஏற்றும், பகைமையை நீக்கி பாசத்தை பெருக்கும். இப்படிப்பட்ட ஒளியாய் இயேசுவைக் கண்டு வணங்கி மகிழ்ந்தனர் புறவினத்த்து ஞானிகள் (மத் 2:11). ஆனால் ஏரோது, ஞானிகள் “யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே?.... அவரை நாங்கள் வணங்க வந்தோம்” என்ற வார்த்தையை தவறாகப் புரிந்துகொண்டு இயேசுவைக் கொல்வதற்கு திட்டம் தீட்டினான். இங்குதான் ஒளியில் இருளின் செயல்பாடு தெரிகிறது.
ஏரோது தவறான எண்ணத்தோடு தேடியதால் இயேசுவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் எவ்வளவு கஷ்டங்கள், துன்பங்கள், இன்னல்கள் மத்தியிலும் விடாமுயற்சியோடும், தன்னம்பிக்கையோடும் இயேசுவை ஞானிகள் தேடினார்கள் ஒளியாம் கிறிஸ்துவை கண்டார்கள்.
கிறிஸ்து என்னும் வாழ்வின் ஒளி திருமுழுக்குப் பெற்ற நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறது. ஆனால் நமது சுய நலப்போக்கினால், தான், தனக்கு, என்னுடையது, எனக்கு என்ற பேராசை எண்ணத்தினால், வளர்ந்துவரும் அறிவியல் மாற்றத்தினால், நுகர்வு கலாச்சாரத்தினால், உள் ஒன்றும் புறம் ஒன்றும் பேசுவதினால், மற்றவர்களின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதினால் இருளின் ஆதிக்கம் வாழ்வின் ஒளியை மறைத்துக் கொண்டுள்ளது.
எனவே கிறிஸ்து என்னும் ஒளி நமக்குள் இருக்குமானால் நாம் ஒளியின் மக்களாக, அன்பின் மக்களாக, சமாதானத்தின் மக்களாக இருப்போம். நம்மில் இருக்கும் தீய எண்ணங்கள், தீய குணங்கள், மனக்கவலைகள் போன்றவற்றை நீக்கி இடையர்களைப்போல, ஞானிகளைப் போல நம்பிக்கையோடு இயேசு என்னும் ஒளியைத்தேடுவோம். வாழ்வு பெறுவோம். எனவே நம்முடைய உள்ளத்திலும், இல்லத்திலும் இயேசு என்னும் ஒளியைக் கண்டு பெருமகிழ்ச்சியடைவோம், வாழ்வு பெறுவோம்.

- அ. இராயப்பன்

ஆண்டவரின் திருமுழுக்கு (III Year)

(எசா 42: 1-4, 6-7; திப 10: 34-38; மத் 3:15-16,21-22)

அன்புக்குரியவர்களே! கிறிஸ்துவில் நம்மையே நாம் முழுமையாக அர்ப்பணித்து, கிறிஸ்தவக் கோட்பாடுகளுக்கு அர்த்தங்களை கண்டுபிடிக்க ‘ஞானஸ்தானம்’ என்ற திருவருட்சாதனம் முழு பலனை நமக்கு தருகிறது. “கிறிஸ்தவன்” என்று தலைநிமிர்ந்து நாம் சொல்ல ஞானஸ்தானமே நமக்கு ஊட்டச்சத்து. இன்று ஆண்டவரின் ஞானஸ்தான விழாவை கொண்டழாடுகின்றோம். இயேசு பெற்ற திருமுழுக்கு மாந்தர் அனைவரையும் மனமாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஓர் அடையாளச் செயலாகும். இயேசுவின் ஞானஸ்நானம் விளிம்பு நிலைமக்கள், பாவிகள், தொழுநோயாளர் இவர்களுடன் நெருக்கமான உறவையும், தோழமையையும் எடுத்துக்காட்டும் செயலாகும். நாமும் வாழ்வில் விளிம்பு நிலைமக்கள் வலிமைபெற இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசகம் (எசா 42: 1-4, 6-7)
இஸ்ராயேல் மக்கள் பாபிலோன் அடிமைத்தனத்தில் இறைவனின் வருகைக்காக, பல விதமாக எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில எசாயா ஆண்டவரின் ஊழியனைப் பற்றி இறைவாக்காக கூறுகிறார். இறைவாக்கினர் எசாயா இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆவியினால் நிரப்பப்பட்டவர், நீதி, உண்மை அறத்தை நிலைநாட்ட வருகிறார். திருமுழுக்கில் இ.றைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாம் ஆண்டவரின் ஊழியனைப் போல வாழ்கிறோமா என் எசாயா கூறுவதைக் கேட்போம்.

இரண்டாம் வாசகம் (திப 10: 34-38)
கிறிஸ்து ஒருவரே ஆண்டவர் என் அறிக்கையிடும் நாம் அனைவரும் தூய ஆவியானவரின் அருளைப் பெற்று, இயேசுவைப் போல் தீயஆவியை வென்று, நம்மில் யாரும் வேற்றுமை பாராட்டாமல் இவ்வுலகில் நிலையான அமைதியைக் கொண்டுவர ஒற்றுமையுடன் இருந்து இறைவனுக்கு ஏற்புடையவர்களாக வாழ இன்றைய இரண்டாம் வாசகம் அழைப்பு விடுப்பதை கவனமுடன் கேட்போம்.

இறைமக்கள் மன்றாட்டு
1. அருளின் ஊற்றே இறiவா! எங்கள் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், துறவியர் அனைவரும் தங்களின் அழைத்தலின் மேன்மையை உணர்ந்து, இறைவிருப்பத்தின்படி நடந்து மக்களi தூய ஆவியின் வழியில் நடத்த இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. ஞானத்தின் பிறப்பிடமே எம் இறைவா! எங்கள் நாட்டு அரசியல் சமுதாய தலைவர்கள் அனைவரும் மக்களை நல்வழியில் அக்கறையுடன் சுயநலமில்லாமல் செயல் திட்டங்கள் தீட்ட அதனை செயல்படுத்த அருளைதர இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. வார்த்தையில் சவை தந்திடும் இறைவா! எங்கள் பங்கு மக்கள் அனைவரும் திருமுழுக்கில் கொடுத்த வாக்குறுதிகளை புதுப்பித்து இறுதிவரை இறையன்பிலும் பிறரன்பிலும் அமைதியிலும் நிலைத்து வாழ இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. இவரே என் அன்பார்ந்த மகன் என்று கூறிய இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் எங்களிடத்தில் இருக்கும் சுயநலம் கோபம், தீயநெறி ஆகிய பாவ இயல்பை களைந்து ஆவியின் கொடைகளைப் பெற்று அருள் வாழ்வில் திளைத்திடும் புதுவாழ்வை மலரச் செய்ய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

நற்செய்தி முழக்கம் (மத் 3:15-16,21-22)
கிறிஸ்துவில் பிரியமானவர்களே, 1964ம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தந்தை 6ம் சின்னப்பர் இயேசு பாலஸ்தின நாட்டிற்க திருப்பயணம் சென்றார். இயேசு திருமுழுக்கு பெற்ற யோர்தான் நதிக்கரையில் முழந்தாள் படியிட்டார். யோர்தான் தண்ணிரில் கைகளை நனைத்து நம்பிக்கை அறிக்கை செபத்தை சொன்னார். ஏனெனில் நமது கிறிஸ்தவ மறையின் அடிப்படை உண்மைகள் அனைத்தும் இதில் அடங்கியுள்ளன. இறைமகன் இயேசு திருமுழுக்கு யோவான் கையால் திருமுழுக்கு பெற்ற இதே நதியில்தான் இறைவன் ஒரேகடவுள், ஆள் வகையில் மூவராக இருக்கிறார் என்ற மறை உண்மை வெளிப்படுத்தப்பட்டது. யோர்தான் என்றால் “இறங்குகிறவர்” என்று பொருள். இயேசு திருமுழுக்கு பெற்றது நான்கு நற்செய்தி நூல்களும் குறிப்பிடுகின்றன. இயேசு திருமுழுக்கு பெற்ற இடம் தூய்மை நிலமாகிய புண்ணிய பூமியின் கையப் பகுதியாகும். யோர்தான் நதியில் மேற்குக் கரையில் பெத்தபெரா என்ற இடத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இயேசு திருமுழுக்கு பெற்ற இடம், யோசுவா இஸ்ரயேல் மக்களை இறைவனால் கூறப்பட்ட புண்ணிய பூமிக்கு அழைத்துக் கொண்டு கடந்த சென்ற இடம் என்றும் யூதர்கள் கூறுகின்றனர்.
இயேசு யோர்தான் ஆற்றில் திருமுழுக்கு பெற்ற இடத்தில் முக்கோண வடிவில் அமைந்துள்ள கற்பாறை மேடை இன்றும் அடையாளமாக விளங்குகின்றது. இயேசுவின் மீது தூய ஆவி, புறா இறங்குவதுபோல இறங்கிய இடமும் யோர்தான் நதிக்கரையில் அடையாளமாக விளங்குகின்றது. இதன் இரு கரைகளிலும் பலவகை மரங்கள் உள்ளன (எரே 12,5, 50,44).
இயேசுவின் திருமுழுக்கை 3 விதமான நிலைகளில் நாம் அறிந்துக் கொள்ளலாம். 1. வானம் திறந்தது 2. தூய ஆவியின் அருட்பொழிவு 3. வானகத்தில் ஒலித்த தந்தையில் குரல்.

1. வானம் திறந்தது.
இயேசு திருமுழுக்குப் பெறும்போது தந்தையோடு ஒன்றிணைந்திருந்தார் என்பது வெள்ளிடை மலையாகும். வானம் திறந்தது என்பது இறையுறவின் ஒன்றிப்பில் என்பது தெளிவாகிறது. மகனும், தந்தையும் ஒருவரை ஒருவர் சந்திக்கின்றனர். வானம் திறக்கப்படுதல் என்றால் விண்ணும் மண்ணும் ஒன்றிணைக்கப்படுவதின் அடையாளச் செயல் எனலாம். அதாவது இறைவன் இனி அணுகமுடியாத தொலைவில் இருப்பவர் அல்ல மாறாக அண்மையில் மக்களின் அருகில் மக்களோடு என்றும் இருப்பவர் என்பது பொருளாகும். மக்களது வாழ்வில் பின்னிப் பிணைந்திருப்பவர், மக்கள் மீது அக்கறை கொண்டிருப்பவர். இதைத்தான் மழையும், பனியும் வானத்திலிருந்து இறங்கி வருகின்றன, அவை நிலத்தை நனைத்து, முளை அரும்பி வளரச் செய்து விதைப்பவனுக்கு விதையும், உண்பவனுக்கு உணவும் தருகின்றன என்று எசாயா 55:10 கூறுகிறது. இது ஓர் அடையாளச் செயலாகிறது.
2. தூய ஆவியானவரின் அருட்பொழிவு
கடவுள் உலகத்தை படைக்கும் போது, கடவுளின் ஆவி நீர்திரளின் மேல் அசைவாடிக் கொண்டிருந்தது (தொநூ 1,2) மேலும் அந்த ஆவியானவர் இஸ்ராயேல் மக்களை வழிநடத்தி வந்தார் என்று பார்க்கிறோம். அதே ஆவியானவர் இயேசுவின் மீது வல்லமையுடன் இறங்கி வந்ததால் மானிட வரலாற்றில் மீண்டும் ஒரு புதிய காலம் புதிய படைப்பின் காலம் தொடங்கியது எனலாம். இதுவரை இருந்த பழைய வாழ்க்கையை விட்டுவிட்டு பதிய வாழ்க்கை இம்மண்ணில் புலரும் என்பதன் அடையாளம் தான் இதுவாகும். காலம் நிறைவேறிவிட்டது, “இறையாட்சி நெருங்கி விட்டது” (மாற் 1,15) என் இயேசு கற்பிக்க தொடங்குகிறார்.
தூய ஆவியின் வல்லமையைப் பெற்ற இயேசு ஏழை, பணக்காரர் என்று பாராமல் அனைவருக்கும் இறையரசை போதிக்கிறார். அனைவருக்கும் சமத்துவம் என்ற கொள்கையிலே தன்னுடைய போதனைகளை தொடர்கிறார். பணிவாழ்வில் அனைவருக்கும் முன் அவரவருடைய நிறை, குறைகளை எடுத்துக்கூற தூய ஆவி அவருடைய உள்ளத்தில் உறுதியைத் தருகிறார். எதை உண்பது, எதை உடுப்பது என்று கவலை கொள்ளமல் நேர்மையை நோக்கி தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுகிறார்.
3. வானத்தில் ஒலித்த தந்தையின் குரல்.
“என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்” (லூக் 3,22) என்று வானத்திலிருந்து ஒலித்த குரல், தந்தை இயேசுவின்மீது வைத்திருந்;த ஆழ்ந்த அன்பை வெளிக்காட்டுகிறது.
திருமுழுக்கு பெற்றநாம் ஒவ்வொருவரும், நம்முடைய இதயத்தில் தூய ஆவி வழிநடத்த இடமளிப்போம். தூய ஆவியின் வழியில் நாம் நடக்கும்போது அனைத்து தடைகளையும் இறைஇயேசுவைபோல் எதிர்த்து செயல்பட முடியும். நீரே என் அன்பார்ந்த மகன் (லூக் 3,22) என்று தந்தை மகனாகிய இயேசுவை உறுதிப்படுத்தப்பட்டதைப் போல் திருமுழுக்கு பெறும் ஒவ்வொருவரும் கிறிஸ்தவன், கிறிஸ்தவள் என்று உறுதிப்படுத்தப்படுகிறோம். திருமுழுக்கு யோவான் திருமுழுக்க பாவமன்னிப்பைக் கொடுக்கவில்லை, இயேசுவின் திருமுழுக்கு பாவ மன்னிப்பைக் கொடுக்கிறது. இயேசு பெற்ற திருமுழுக்கு மனந்திரும்பதலை காட்டுகிறது (மத் 3,11). அன்று யூதர்களுக்கு வழங்கப்பட்ட திருமுழுக்கு அது இயேசுவுக்கு தேவையில்லாத ஒன்று. ஆனால் இன்று நாம் பெறும் திருமுழுக்கு இயேசுவை நம் வாழ்வில் பிரதிபலிப்பதில் அடங்கியிருக்கிறது. அதனை வாழ்வில் வெளிக்காட்டுவோம்.
- சகோ.N. சின்னப்பராஜ்
இறையியல் 4ஆம் ஆண்டு (2009)

ஆண்டின் பொதுக்காலம் 3-ம் ஞாயிறு (III Year)

(நெகே 8: 2-6,8-10; 1கொரி 12:12-30; லூக் 1:1-4; 4:14-21)
முன்னுரை
தவிக்கின்ற மனிதனுக்குத் தேவை வாழ்வு பெற நல்வழி காட்டும் திருநூல், அது என்றும் அழியா இறைவார்த்தைகள் அடங்கிய அற்புதநூல். அது அறியப்பட வேண்டும். புதிய சமுதாயம் படைக்கப்பட வேண்டும். ஏனென்றால் திருநூல் இறைவன் எழுதியக் கடிதம். பதில் எழுதுவது நம் கடமை. இறை பேரன்பின் வெளிப்பாடுதான் திருநூல் என அறிய வேண்டும. இன்றைய முதலாவது மற்றும் நற்செய்தி வாசகத்திலும் திருநூல் பிரிக்கப்பட்டு வாசிக்கப்பட்டது என்று தெளிவாகச் சொல்லப்படுகிறது. உயிருள்ள இறைவார்த்தைகள் அடங்கிய எட்டுச்சுருள் வாசிக்கப்பட உயிற்ற, உணர்வற்றிருந்த மனித இதயங்கள் உயிர் பெறுகின்றன. அழுகின்ற நேரமல்;ல. ஆனந்தம் அடைந்து ஆண்டவனை மகிழ்விக்கின்ற நேரம் என்கின்றன. அதற்கு அடிப்படையாக இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வேண்டும் என்பதை உணர்த்துகின்றன.
இறைவார்த்தையின் முழு நிறைவான இயேசுவை உணர்ந்திடவும், அவரால் வாழ்வு பெற்றிடவும், இப்பலியில் வரம் கேட்போம் என்றும் நம் குடும்பங்கள் திருநூலைப் போற்றவும், பொருள் புரிந்து வாசிக்கவும் ஆவியின் அருட்கொடைகளால் புதுப்பிக்கப்பட்டு வாழவும் அருள் வேண்டுவோம். ஏன்னில் இன்று இறைவார்த்தை நிறைவேறியது என்ற உறுதியுடன், மகிழ்வுடன் இப்பலியில் பங்கேற்போம்.

முதல் வாசகம் (நெகே 8: 2-6,8-10)
கி.மு. 587ல் பாபிலோனிய மன்னன் நெபுகத்தனேசர் எருசலேம் நகர் மீது படையெடுத்தது மட்டுமல்லாமல் யூதர்கள் அனைவரையும் தனது நாட்டிற்கு அடிமைகளாகக் கொண்டு செல்கிறான். ஆனால் கி.மு. 536ல் சைரசு என்ற மன்னன் ஆட்சிக்கு வந்ததும் அடிமைகளாக இருந்த யூதர்களுக்கு விடுதலை வழங்குகிறான். தாங்கள் இறைவனின் சினத்திற்கு ஆளாகி நாடு கடத்தப்பட்டோம் என்பதை உணர்கிறார்கள். இனிமேல் இந்நிலை ஏற்படக்கூடாது என்பதற்காக மனம் மாறியவர்களாய் உண்மை இறைவனுக்கு கீழ்ப்படிந்து வாழவும், திருச்சட்ட நூலின் படி வாழவும் உறுதி எடுக்கின்றனர். அப்போது குருவாய் இருந்த எஸ்ராவிடம் திருநூலை வாசிக்கும்படி அணைவரும் தண்ணீர் குளத்திற்கு அருகே வருகின்றனர். இச்சூழலில் திருநூல் வாசிக்கப்படுவதை கேட்போம்.

இரண்டாம் வாசகம் (1கொரி 12:12-30)
தொடக்கக்கால திருச்சபையில் திருமுழுக்குபெற்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள் யாரென்றால் யூதர்கள், கிரேக்கர்கள், அடிமைகள், உரிமைக் குடிமக்கள், பிற இனமக்கள் ஆகியோர். இவர்கள் ஒவ்வொருவரும் தூய ஆவியின் அருட்கொடைகளையும் பல்வேறு வரங்களையும் பெற்றவர்களாக இருந்தனர். இதனால் பல்வேறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மக்களிடையே ஏற்றத்தாழ்வு தலை தூக்கத் தொடங்கியது. இதை உணர்ந்த திருத்தூதரான பவுல், தூய ஆவியின் வரங்கள் பலருக்கும் பலவேறு வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டு இருப்பது தன் சொந்த வாழ்வுக்காக அல்ல, மாறாக திருச்சபையின் வளர்ச்சிக்காக என்பதைச் சுட்டிக் காட்ட விரும்பி நாம் அனைவரும் கிறிஸ்துவின் மறையுடலாகவும், அதன் உறுப்புகளாகவும் இருக்கிறோம் என்பதை அறிவுறுத்தும் இவ்வாசகத்திற்க்கு செவிக்கொடுப்போம்.

இறைமக்களின் வேண்டல்
1. என் மந்தையின் ஆடுகளை பேணிகாக்க நான் மேய்ப்பர்களை நியமிப்பேன் என்று கூறிய இறைவா! எம் திருச்சபையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள் மற்றும் துறவறத்தார் அனைவருக்காகவும் மன்றாடுகிறோம். இவர்கள் இறைவார்த்தையின் மீது முழுநம்பிக்கை உடையவர்களாக மக்களுக்கு இறைவார்த்தையை அறிவிக்க தேவையான அருளை தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
2. சமாதானத்தின் இறைவா! நாட்டையாளும் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் பொதுநலத்திற்காக அழைக்கப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து, சுயநலம் இன்றி மக்களின் தேவையை நிறைவேற்றும் நல்தலைவர்களாய் செயல்பட தேவையான அருள் வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
3. கண்பார்வையற்ற பர்த்திமேயுவை பார்த்து நீ போகலாம் உன் நம்பிக்கை உன்னை நலமாக்கிற்று என்று மொழிந்த இறைவா! நாங்கள் ஒவ்வொருவரும் நம்பிக்கையின் நட்சத்திரங்களாக செயல்பட்டு இறையாட்சியின் விழுமிங்களான அன்பு, நீதி, சமாதானம் அகியவற்றை வாழ்வாக்கி உமது இறைவார்த்தையை நிறைவேற்ற தேவையான சக்தி தரவேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
4. துன்புற்ற இஸ்ரயேலை நோக்கி நான் ஆறுதல் அளித்து, உங்களை நீரோடைகள் ஓரமாக வழிநடத்தி செல்வேன் என்று கூறிய இறைவா! எம் பங்கிலும், இவ்வுலகிலும் வாழும் ஏழைகள், எளியோர், அனாதைகள், விதவைகள், முதியோர்கள் மற்றும் உடல நோயாளிகள் அனைவரையும் உமது ஆறுதலளிக்கும் கரங்களால் தொட்டு ஆசிரை பொழிந்தருள வேண்டி இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

நற்செய்தி முழக்கம் (லூக் 1:1-4; 4:14-21)

சிலர் அடிப்படையான ஒரு கொள்கையை தங்களுக்கே உரித்தான தனிப்பெருங்கொள்கையாக வைத்திருப்பார்கள். இது போன்று விவிலியத்தில் ஆதியாகமம் முதல் திருவெளிப்பாடுவரை, படைப்பு முதல் இறுதிவரை நாம் காணும் ஒரு அடிப்படை உண்மை “இறையன்பு”. இறைவன் தனது அன்பரசை உலகிலும், மனிதர் உள்ளத்திலும் அமைக்க எடுக்கும் முயற்சி கிளைப்போல் மீட்பு வரலாற்றில் இன்றும் ஓடுவதை நாம் காணலாம். இந்த அடிப்படையான இறையன்பு நமக்கு கிடைக்க இறைநம்பிக்கை வேண்டும்.
யோவானிடமிருந்து திருமுழுக்குப் பெறத் தீர்மானித்தது இயேசு எடுத்த முதல் முக்கியமான முடிவு என்றால், இரண்டாவது முக்கியமான முடிவு இயேசுவின் எண்ணத்தையும், நோக்கத்தையும் நமக்கு தெளிவாக்குகிறது. எல்லாரும் யோர்தானில் பாவங்களை அறிக்கையிட்டுத் திருமுழுக்குப் பெற்று அழிவிலிருந்து தப்பித்துக் கொள்வதன் வழியாக இஸ்ரயேலைக் காத்திட இயேசு நினைக்கவில்;லை. அவர் தேவை என்று கண்டது இன்னொன்று, அதாவது ஏழைகள், பாவிகள், பிணியாளர் போன்றவர்களிடம் அக்கறை காட்டுவது. இஸ்ரயேலில் தவறிப்போன ஆடுகளைத் தேடித் செல்வது - இதுவே இயேசு எடுத்த இராண்டாவது முக்கியமான முடிவு.
யோவான் திருமுழுக்குப் பெற்று மானமாற்றம் அடைய மக்களை அழைத்தார். இயேசுவோ அனைத்துத் தீமைகளிலுமிருந்து மக்களை விடுவிக்கக் தம் வாழ்வை அர்ப்பணித்தார்.
திருமுழுக்கு யோவான், மனமாற்றத்திற்கான திருமுழுக்கை வலியுறுத்தினார். இயேசுவோ அதற்கு பதிலாக நம்பிக்கையின் வலிமையை அழுத்திப் பேசினார்.
திருமுழுக்கு யோவான் பாவிகளுக்குப் போதித்தார் இயேசுவோ பாவிகளோடு தம்மை ஒன்றுப்படுதிக் கொண்டார்.
தொழுகைக் கூடத்தில் இயேசு, எசாயா நூலிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதியை வாசித்து விளக்கம் அளித்தாரா என்பதன்று பிரச்சனை. இயேசுவின் பணியை மிகவும் பொருத்தமாக விவரிக்கின்ற பகுதிகள் இவை, எனவே இப்பகுதிகளைத் தெரிந்தெடுத்து இயேசுவின் பணி எத்தகையதாய் இருந்தது என்று விளக்கிட லூக்கா முனைந்தது முற்றிலும் சரியே.
எசாயா நூல் பகுதிகளில் வருகின்ற காதுகேளாதோர், பார்வையற்றோர், காலூனமுற்றோர், வாய் பேசாதோர், ஒடுக்கப்பட்டோர், உள்ளம் உடைந்தோர், சிறைப்பட்டோர், கட்டுண்டோர் ஆகிய அனைவருமே “ஏழைகள்” மற்றும் “ஒடுக்கப்பட்டோர்” ஆவர். வௌ;வேறு விதங்களில் எழைகளாக இருப்பவர்களுக்கும் வௌ;வேறு வகையில் ஒடுக்கப்பட்டிருந்போருக்கும் இறைவன் எந்தெந்த வழிகளில் நலம் கொணர்வார் என்பதை இப்பகுதிகள் விளக்குகின்றன.
மத் 9,2 “இயேசு அவர்களுடைய நம்பிக்.கையைக் கண்டு முடக்குவாத முற்றவரிடம், மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்றார்.”
முடக்குவாதமுற்றவரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
மத் 9,29 “பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும் என்றார்.”
பார்வையற்றோரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
மாற் 1,41-42 “இயேசு அவர்மீது பரிவு கொண்டு தமது கையை நீட்டி அவரைத் தொட்டு அவரிடம், நான் விரும்புகிறேன், உமது நோய் நீங்குக என்றார். உடனே தொழுநோய் அவரைவிட்டு நீங்க, அவர் நலமடைந்தார்.”
தொழுநோயாளரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது.
பார்வையற்றோர், முடக்குவாதமுற்றோர், தொழுநோயாளரின் நம்பிக்கையில் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேறியது போன்று, நமது வாழ்க்கையில் நிறைவேற வேண்டும் என்றால் இறைவார்ததையின் மீது நமக்கு நம்பிக்கை வேண்டும். அப்படி இல்லை என்றால் நமது வாழ்க்கையில் கண் இருந்தும் குருடர்களாக, கால் இருந்தும் முடவர்களாக, காது இருந்தும் செவிடர்களாக தான் இருப்போம்.
பிரியமாணவர்களே, இறைவார்த்தையின் மீது நம்பிக்கை வைப்போம், நமது வாழ்க்கையிலும் இயேசுவின் மறைநூல் வாக்கு நிறைவேற வைப்போம்.

- அ. தாமஸ் சைமன் ராஜ்
இறையியல் 4ஆம் ஆண்டு - 2009