என் ஆயனாய் இறைவன்


  என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது
  என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
  எந்நேரமும் நடத்திடும் போதினிலே - 2
  என்றும் இன்பம் ஆ ... ஆ என்றும் இன்பம்
  ஆ... ஆ என்றென்றும் இன்பமல்லவா!

2. என்னோடவர் வாழ்ந்திடும் போதினிலே
  எங்கே இருள் படர்ந்திரும் பாதையிலே - 2
  எங்கும் ஒளி ஆ... ஆ எங்கும் ஒளி
  ஆ... ஆ எங்கெங்கும் ஒளி அல்லவா!

3. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
  எல்லோர்க்குமே நண்பனாய் ஆக்கியதால் - 2
  என்னுள்ளமே ஆ... ஆ - என் தேவனை
  ஆ... ஆ எந்நாளும் புகழ்ந்திடுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக