இறைவனைத் தேடும் இதயங்களே


  இறைவனைத் தேடும் இதயங்களே
  வாருங்கள் என் இறைவன் யார்
  என்று சொல்வேன் கேளுங்கள்

1. பாடும் குயிலுக்கு பாடச் சொல்லி தந்தவர் யார்?
  ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லி தந்தவர் யார்?
  அவரே என் இயேசு
  அவர் தாழ் நான் பணிவேன்
  அவர் தாழ் நான் பணிந்தால்
  அகமே மகிழ்ந்திடுமே

2. வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவர் யார்?
  வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவன் யார்?
  என்னென்ன விந்தைகள்
  எங்கெங்கே காண்கின்றோம்
  அனைத்திற்கும் அடிப்படையாம்
  இயேசுவே காரணம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக