தூய தேவ அன்னையின் (மன்றாட்டு மாலை) பிராத்தனை


சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் பிராத்தனையை நன்றாகக் கேட்டருளும்

பரமண்டலங்களிலே இருக்கிற பிதாவாகிய சருவேசுரா
- எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி
உலகத்தை மீட்டு இரட்சித்த சுதனாகிய சருவேசுரா
பரிசுத்த ஆவியாகிய சருவேசுரா .
அர்ச்சியசிஸ்ட தம திரித்துவமாயிருக்கிற ஏக சருவேசுரா

அர்ச்சியசிஸ்ட மரியாயே - எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
சருவேசுரனுடைய அர்ச்சியசிஸ்ட மாதாவே
கன்னியாஸ்திரிகளுக்குள்ளே உத்தம அர்ச்சியசிஸ்ட மாதாவே
கிறிஸ்துவினுடைய மாதாவே
தேவப்பிரசாதத்தின் மாதாவே
மகா பரிசுத்த மாதாவே
அத்தியந்த விரத்தியாயிருக்கிற மாதாவே
பழுதற்ற கன்னியாஸ்திரியாயிருக்கிற மாதாவே
கன்னி சுத்தங் கெடாத மாதாவே
மகா அன்புக்குப் பாத்திரமாயிருக்கிற மாதாவே
ஆச்சரியத்துக்கு உரிய மாதாவே
நல்ல ஆலோசனை மாதாவே
சிருஸ்டிகருடைய மாதாவே
இரட்சகருடைய மாதாவே
மகா புத்தி உடைத்தான கன்னிகையே
மகா வணக்கத்துக்கு உரிய கன்னிகையே
பிரகாசமாய் இஸ்துதிக்கப்படயோக்கியமாயிருக்கிற கன்னிகையே
சக்தி உடையவளாயிருக்கிற கன்னிகையே
தயையுள்ள கன்னிகையே
விசுவாசியாயிருக்கிற கன்னிகையே
தருமத்தினுடைய கண்ணாடியே
ஞானத்துக்கு இருப்பிடமே
எங்கள் சந்தோசத்தின் காரணமே
ஞான பாத்திரமே
மகிமைக்குரிய பாத்திரமே
அத்தியந்த பக்தி உடைத்தான பாத்திரமே
தேவ இரகசியத்தைக்கொண்டிருக்கிற ரோசா என்கிற புஸ்பமே
தாவீது இராசாவினுடைய உப்பரிகையே
தந்த மயமாயிருக்கிற உப்பரிகையே
சொர்ண மயமாயிருக்கிற ஆலயமே
வாக்குத் தத்தத்தின் பெட்டகமே
பரலோகத்தினுடைய வாசலே
விடியற் காலத்தின் நட்சத்திரமே
வியாதிக் காரருக்கு ஆரோக்கியமே
பாவிகளுக்கு அடைக்கலமே
கஸ்திப் படுகிறவர்களுக்குத் தேற்றரவே
கிறிஸ்தவர்களுடைய சகாயமே
சம்மனசுகளுடைய இராக்கினியே
பிதாப் பிதாக்களுடைய இராக்கினியே
தீர்க்கதரிசிகளுடைய இராக்கினியே
அப்போஸ்தலர்களுடைய இராக்கினியே
வேத சாட்சிகளுடைய இராக்கினியே
இஸ்துதியருடைய இராக்கினியே
சென்ம பாவம் இல்லாமல் உற்பவித்த இராக்கினியே
பரலோகத்துக்கு ஆரோபணமான இராக்கினியே
பரிசுத்த செபமாலை இராக்கினியே
சமாதானத்தின் இராக்கினியே

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே – எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே – எங்கள் பிராத்தனையைக் கேட்டருளும் சுவாமி

உலகத்தின் பாவங்களைப் போக்கும் சருவேசுரனுடைய செம்மறிப் புருவையாகிய இயேசுவே – எங்களைத் தயைபண்ணி இரட்சியும் சுவாமி

முதல்வர்: இயேசுக் கிறிஸ்து நாதருடைய திருவாக்குத் தத்தங்களுக்கு நாங்கள் பாத்திரவான்களாய் இருக்கத்தக்கதாக
அனைவரும்: சருவேசுரனுடைய பரிசுத்த மாதாவே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

செபிப்போமாக

சருவேசுரா சுவாமி! முழுமனதுடனே தண்டணாக விழுந்து கிடக்கிற இந்தக் குடும்பத்தைப் பார்த்து எப்பொழுதும் பரிசுத்த கன்னிகையான முத்திப் பேறுபெற்ற மரியாயினுடைய வேண்டுதலினாற் சகல சத்துருக்களின் சற்பனையிலே நின்று பிரசன்னராய்த் தயை செய்து இரட்சியும். இந்த மன்நாட்டுக்களை எல்லாம் எங்கள் ஆண்டவரான இயேசுநாதருடைய திருமுகத்தைப் பார்த்து எங்களுக்குத் தந்தருளும் - ஆமென்.

3 கருத்துகள்: