தமிழால் உன் புகழ் பாடி


தமிழால் உன் புகழ் பாடி
தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா  
வரம் தருவாயே உருவானவா ( 2 )

1
எனைச் சூழும் துன்பங்கள்
கணையாக வரும்போது
துணையாகி எனை ஆள்பவா( 2 )
மனநோயில் நான் மூழ்கி
மடிகின்ற பொழுதிங்கு ( 2 )
குணமாக்க வருவாயப்பா
எனை உனதாக்கி அருள்வாயப்பா
2
உலகெல்லாம் இருளாகி
உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா ( 2 )
நீதானே எனக்கெல்லாம்
நினைவெல்லாம் நீ தானே ( 2 )
நாதா உன் புகழ்பாடுவேன்
எனை நாளெல்லாம் நீ ஆளுவாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக