நீர் ஒருவர் மட்டும்


  நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
  என்னைவிட்டு நீங்காதிருப்பது ஏனோ?
  தெய்வீக அன்பால் தானோ?

1. என்னை பாடி மகிழ்வித்த புல்லினங்கள்
  தங்கள் கூடுகள் தேடி பறந்த பின்னும்  - 2
  நான் வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம்
  நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும்
                           - நீர்

2. எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
  சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் - 2
  எந்தன் பாதையின் விளக்காய் பகலவனும்
  வந்து காரிருள் மாயையாய் பிரிந்த பின்னும்
                           - நீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக