விவிலிய ஞாயிறு - 2010 - “இறைவார்த்தையும் இளைஞர்களும்”

முன்னுரை
வாழ்வு தரும் இறைவார்த்தையின்மீது வற்றாத அன்பு கொண்ட இறைமக்களே, இருபால் இளம் உள்ளங்களே உங்கள் அனைவருக்கும் புனித யுஸ்ரீதா ததேயு பங்கின் 2010 - ஆம் ஆண்டிடுக்கான திருவிவிலிய ஞாயிறு நல்வாழ்த்துகள்.
முன்மதியுடன் முன்னுரிமை அளித்து முன்னேற்றப் பாதையில் அடிவைக்கப் பெயர் சொல்லி அழைக்கப்பட்டுள்ள இளைஞர்கள், நம் நாட்டின், சழூகத்தின் மற்றும் திருச்சபையின் விலை உயர்ந்த சொத்துக்கள்.
அகிலத்தை அறநெறியில் பயணிக்கச் செய்ய முற்படும் ஐ.நா. சபை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அனைத்துலக இளைஞர்களுக்கான ஆண்டை பிரகடனப்படுத்தியது. நம் வாழ்வை நாயகர் இயேசுவின் ஒளியில் நாளும் நடத்தி, நாம் அனைவரும் புத்துலகு படைக்கும் சிற்பிகள் என பறைசாற்றிக் கொண்டிருக்கும் கத்தோலிக்கத் திருச்சபையும் அனைத்துலக கத்தோலிக்க இளைஞர் ஆண்டு என அதை ஏற்று சிறப்புச் செய்தது.
ஐந்து ஆண்டுகளாக எத்தனையோ வளர்ச்சித் திட்டங்கள் இளைஞர் வாழ்வை ஏற்றம்பெறச் செய்துள்ளன. இன்னும் அவர்களை எவ்வழியில் முயன்று முன்னேற்றலாம் என்பதை துருவி ஆய்ந்து, துணைநின்று, கடமை ஆற்ற தமிழக ஆயர் பேரவை இவ்வாண்டை இளைஞர் ஆண்டு என அறிவித்துள்ளது. இதனால் இவ்வாண்டு விவிலிய வாரம் மேலும் சிறப்புப் பெற்றுள்ளது.
இவ்வாரம் முழூவதும் இளைஞர்களை மையப்படுத்தி பல்வேறு சிறப்புக் கருத்துகளில் இறைவார்த்தையை வாழ்வாக்க எடுத்த இளைஞர்களுக்கு முத்தாய்ப்பாக இன்று இறைவார்த்தையும் இளைஞர்களும் என்ற மையக்கருத்தில் திருப்பலிக் கொண்டாட்டத்தைச் சிறப்பிக்க இருக்கிறோம். நாம் அனைவரும,; குறிப்பாக இளைஞர்கள் அனைவரும் இறைவார்த்தையில் தாகம்கொண்டு வாழ, அதன் ஒளியில் தங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ள, அதைச் சான்றுடன் முழக்கமிடும் வாய்ப்பைப் பெற்று வளமாக வாழச் செபிப்போம். இதன் வழியாகத் தலத் திருச்சபையும், இல்லங்களும் இறைவார்த்தைச் சழூகமாக மாற இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

மன்னிப்பு வழிபாடு
1. தடைகள் அகற்றி தலைநிமிரச் செய்யும் இறைவா!
உம் இறைவார்த்தைப் பணிகளைச் செய்வோரை உதாசீனம் செய்து, அதற்குச் சான்றுரைப்போரை ஏளனம் செய்து எமக்கு நாங்களே தடைகளாக இருந்துவிட்டோம். இதயக் கதவைத் தட்டி எழு, விழி, ஒளிகொடு என எமக்கு விடுக்கப்பட்ட அழைப்புகளை எங்களில் பலர் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. செவிகொடுத்தும் கேட்கவில்லை. முன்சார்பு எண்ணத்துடன் இறைவார்;த்தைகள் எமக்கு பெரிய முன்னேற்றத்தை அளிக்கப்போவதில்லை என்று பல நேரங்களில் ஒதுங்கி வாழ்ந்து விட்டோம். இக்குற்றங்களை உணர்ந்து இப்போது மன்னிப்பு வேண்டுகின்றோம். எங்களை மன்னித்து உம் உறவில் இணைத்திடும் இறைவா.

2. ஊடகங்களின் பயன்களை உணர்த்திடும் இறைவா!
உள்ளத்தை ஈர்த்து, உணர்ச்சிக்குத் தீனிபோட்டு உருக்குலைக்கும் ஊடகங்கள் பற்றி பல்வேறு சேவை மையங்கள் எடுத்துரைத்தும் பண்பாட்டைச் சீரழிக்கும் ஊடகங்களின் தூண்டுதலால் காலம், பொருள், நற்பெயர், அனைத்தையும் வீணடித்து எங்களில் பலர் உம் அருள் இழந்து நிற்கின்றோம்;. குடும்பத்தை உயர்த்தும் குறிக்கோளைக் குழிதோண்டிப் புதைத்துவிட்டு வரட்டுக் கௌரவம் என்ற போலி வாழ்வில் பற்றுக்கொண்டு கண்ணிருந்தும் குருடர்களாய் எங்களில் பலர் வாழ்ந்து வருகின்றோம். உமது வார்த்தை ஒளியில் மனம் வருந்துகின்றோம்;. எம்மை மன்னித்து பயன்தரும் ஊடகங்களில் பற்றுக்கொண்டு வாழ அருள்புரியும்.

3. ஒளிவீசிக் களிகூர உரிமையுடன் அழைக்கும் இறைவா!
திறமைகளை வெளிப்படுத்தவும், தீமைகளை எதிர்க்கவும் அறப்பணிகள் ஆற்றவும் அன்றாடம் எமக்கு ஏராளமான வாய்ப்புகளை நீர் அளிக்கின்றீர். எங்களில் பலர் அவற்றைப் பயன்படுத்தி சாதனைகள் புரிவதற்குப் பதிலாக சுகந்திரம் என்ற போர்வையால் சோம்பலை அணிந்து கொண்டு உள்ளத்தில் ஊனமுற்று வாழ்ந்துவிட்டோம். ஆன்றோரின் அறிவுரையை அகமேற்க மறுத்துவிட்டோம். தான்தோன்றித் தனமாக தவறுக்குமேல் தவறு செய்தோம். எங்களில் பலர் ஒளிவீசி களிகூர விரும்பாமல் மனம்போன போக்கில் இலக்கின்றி வாழ்கின்றோம். இத்தயை குற்றங்களை நினைத்து மனம் வருந்துகின்றோம். எம்மை மன்னியும்.

முதல் வாசக முன்னுரை (நீதி மொழிகள் 3:1-12)
மேன்மைமிக்கோரின் அறிவுரையை ஆன்ம தாகத்தடன் கேட்டு, ஆண்டவரை மனத்தில் வைத்து செயல்படும்போது நமக்கு அனைத்து நலன்களும் கிட்டும். அவர் நம்மைக் கண்டித்துத் திருத்துவதற்கு முழுமனத்தோடு நம்மை அர்ப்பணிக்கும்போது நாம் வளமான வாழ்வைப் பொறுவோம் எனக்கூறும் இவ்வாசகத்தை நீதி மொழிகள் நூலிலிருந்து வாசிக்கக் கேட்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை (1திமொத்தேயு 4:6-16)
இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டிய நற்பண்புக்ள பல. அவை விளைவிக்கும் நற்பண்புகள் பல. கடமையைச் செய்து உரிமையைக் கோருதல் உவகை தரும். நம்பிக்கையுடன் ஒப்படைத்த நற்பணிகளைக் செவ்வென செய்து நற்பேறு பெற்றவர்களாய் வாழ அழைப்பு விடுக்கும் திருத்தூதர் பவுலின் பொன்மொழிகளுக்குச் செவிசாய்ப்போம்.

மன்றாட்டுகள்

1. காரிருள் நீக்கிபேரருள் புரியும் கருணைக் கடலே இறைவா!
இறைவார்த்தைக்குத் தங்களை அர்ப்பணித்து சான்று வாழ்வாலும் சமத்துவ உணர்வாலும் திருச்சபையை வழிநடத்தும் எங்கள் திருத்தந்தை 16-ஆம் பெனடிக்ட், ஆயர்கள், குருக்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவருக்கும் உமது பேரருளைப் பொழியும். மேலும் அவர்கள் இறைவார்த்தையில் எப்பொழுதும் பற்றுள்ளவர்களாக விளங்க அருள்புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

2. இம்மை வாழ்வைச் செம்மைப்படுத்தும் இனிய இயேசுவே!
‘உம் ஒழுங்கு முறைகள் எக்காலமும் நீதியுள்ளவை’ என்ற உமது வார்த்தைகளை நாங்கள் திருப்பாடல்கள் நூலில் வாசிக்கின்றோம். எமது வாழ்வு எல்லா விதங்களிலும் ஏற்றம் பெற வேண்டும் என்று விரும்புகின்ற நாங்கள் முறையாக நேர்வழியில் உயர்நிலையை அடைய வேண்டும். குறுக்கு வழியிலோ குதர்க்க நிலையிலோ முன்னேற்றத்தை நாடாமல் உம் வழிகளையும் நெறிகளையும் பின்பற்றி வாழும் மனப்பக்குவத்தை எமக்கு அருளும்படியாக உம்மை மன்றாடுகிறோம்.

3. கனிவுடன் எம்மை வழிநடத்தும் வானகத் தந்தையே இறைவவா!
இளைஞர் ஆண்டைக் கொண்டாடும் எம் பங்கின் இருபால் இளைஞர்களுக்கு உம் வார்த்தைகளே மிகச்சிறந்த வழிகாட்டியாக இருந்து அவர்களை உமது மதிப்பீடுகளின்படி வழிநடத்தவும், அவர்கள் தங்கள் எதிர்காலப் பணிகளைத் தெரிந்து கொள்வதிலும், சரியான வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்வதிலும் துணைநிற்க வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

4. சாதனைகள் வழி சரித்திரம் படைக்கும் இறைவா!
எம் பங்கு மக்கள் உம் வார்த்தையின் வல்லமையால் தீமைகளை வெல்லவும், தங்கள் ஆற்றல்களை வெளிப்படுத்தி உலகு, சமூகம், திருச்சபை ஆகியவற்றிற்கு தங்களால் ஆன நம்மைகளைச் செய்யவும், தங்கள் குடும்பங்களில் நல்லுறவுடன் வாழ்ந்து, தங்களது மனமுவந்த பங்கேற்புச் செயல்பாடுகளால் புத்துலகுப் படைக்கும் கருவிகளாய் திகழ அருள்புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

5. நலன்களுகெல்லாம் ஊற்றான நல்ல தந்தையே இறைவா!
இவ்வாண்டு திருவிவிலிய ஞாயிறுத் திருப்பலியில் பங்கேற்கும் நாங்கள் அனைவரும் நீர் படைத்து வழிங்கியுள்ள தொடர்பு ஊடகங்களின் பயன்பாட்டை நன்கு அறிந்துகொண்டு அவற்றை எமது ஒருங்கிருணைந்த வளர்ச்சிப் பயன்படுத்தவும், அவற்றின் தீமைகளை ஏற்ற முறையில் பிறருக்கு எடுத்துரைக்கவும், இயற்கைப் பேரழிவு ஏதுமின்றி வளமான வாழ்வைப் பெறவும் மேலும் எம் குழந்தைகள் உமது வார்;த்தையின் ஒளியில் வளரவும் அருள்புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

6. உறவு வாழ்வின் ஊற்றே இறைவா!
‘ழூத்தோர் சொன்ன வார்த்தை அமிர்தம்’ என்ற செம்மொழி தமிழ் உணர்த்தும் ழூதுரைப்படி ஆன்றோர், சான்றோர் கூறும் அறவுரை மற்றும் அறிவுரைகளை ஆய்வுக் கண்ணோட்டத்தில் ஏற்று, மதித்து, கடைபிடித்து வாழவும், எல்லா நிலையினருடனும் வேறுபாடு காட்டாமல் நல்லுறவு கொண்டு வாழவும், அமைதி விரும்பிகளாவும், ஆக்க சக்திகளாகவும் திகழ அருள்புரிய வேண்டுமென்று ஆண்டவரே உம்மை மன்றாடுகிறோம்.

Prepared by
I Year Theology Students (2010)
Good Shepherd Seminary
Coimbatore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக