கிறிஸ்துமஸ் பாடல் - கன்னி ஈன்ற செல்வமே


கன்னி ஈன்ற செல்வமே இம்
மண்ணில் வந்த தெய்வமே
கண்ணே மணியே அமுதமே
எம்பொன்னே தேனே இன்பமே
எண்ண வேவும் வண்ணமே
என்னைத் தேடி வந்ததே! கன்னி

எங்கும் நிறைந்த இறைவன் நீ
நங்கை உதரம் ஒடுங்கினாய்
ஞாலம் காக்கும் நாதன் நீ
சீலக் கரத்தில் அடங்கினாய்
தாய் உன் பிள்ளை அல்லவா
சேயாய் மாறும் விந்தையே

வல்ல தேவன் வார்த்தை நீ
வாயில்லாத சிசுவானாய்
ஆற்றல் அனைத்தின் ஊற்று நீ
அன்னைத் துணையை நாடினாய்
இன்ப வாழ்வின் மையம் நீ
துன்ப வாழ்வைத் தேர்ந்ததேன்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக