அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே


அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே – 2
1.
ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள்ஒளி வீசும் ஒரு வழி போவோம் (2)
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் – 2
பரிவுள்ள இறைவன் திருவுளம் காண்போம்
2.
பிறப்பிலும் இயேசு இறப்பிலும் நம்மை
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை (2)
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் – 2
பிறரையும் நமைப் போல் நினைத்திட வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக