அன்னையே! ஆரோக்கிய அன்னையே!

அன்னையே!
ஆரோக்கிய அன்னையே!
அழகுள்ள வேளையில்
ஆலயம் கொண்ட எங்கள் அன்னையே!

கடலின் அலைகள் காவியம் பாடும்
கார்முகில் கூட்டம் உன் கருணையை கூறும்
மடல் விரி தாழையும் மணமது வீசும்
மாதா உந்தன் மகிமையைச் சொல்லும்
உன் திருப்பாதம் தேடியே வந்தோம்
உன் எழில் கண்டு உள்ளத்தை தந்தோம்
கண்ணென எம்மை காத்தருள்வாயே!
கர்த்தரின் தாயே! துணையென்றும் நீயே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக