சக்தியானவா ஜீவநாயகா

சக்தியானவா ஜீவநாயகா
அன்பாலே வாழும் தேவா
ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய்
என்றென்றும் வாழும் தேவா-2

I
மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்கவா
அக்களிக்க வா அன்பில் அக்களிக்கவா
அச்சமின்றே வாழ்வில் ஒத்துழைக்கவா
திக்கனைத்துமே உண்மை எதிரொலிக்கவா
எதிரொலிக்கவா உண்மை எதிரொலிக்கவா
யுத்தம் நீக்கியே அமைதி உதிக்கச் செய்யவா
உதிக்க செய்ய வா அமைதி உதிக்கச் செய்யவா
பூமி எங்கும் நெஞ்சம் யாவும் தங்கியே அன்பாலே வாழும் தேவா

II
வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்கவா
மகிழ்வளிக்க வா வளமை மகிழ்வளிக்கவா
சமத்துவத்திலே மனித மாண்புயர்த்தவா
மாண்புயர்த்த வா மனித மாண்புயர்த்தவா
ஆணவத்தையே வென்று பணிவைக்கவா
பணிவைக்கவா வென்று பணிவைக்கவா
தாழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கம் ஊட்ட வா
நீதி நேர்மையில் என்றும் நாளும் வாழவே
அன்பாலே வாழும் தேவா

2 கருத்துகள்: