கிறிஸ்துமஸ் பாடல் - மார்கழி குளிரினில் மன்னவனே

மார்கழி குளிரினில் மன்னவனே
பார்முகம் வந்தாயோ என் சொந்தமே.
தேனிசைப் பாடல் இசைக்கின்றேன் - உன்
குடிலினில் காணிக்கை படைக்கின்றேன் (2)
எல்லாமும் நீயென்று தெரிந்திருந்தும்
எதுவும் இல்லாது ஏன் வந்தாய்
முழுமையின் நிறைவே நீயென்றால்
வெறுமையை பூண்டு ஏன் பிறந்தாய்
என்னிடம் உள்ளதை எல்லாமும்
நீ ஏற்றிடு காணிக்கையாக்குகிறேன்
-- மார்கழி
சொந்தமே நீயென்று தெரிந்திருந்தும்
உறவுகள் இல்லாது நான் வாழ்ந்தேன்
வெறுமையின் நிறைவே நீயென்றால்
வறுமையின் கோலம் ஏன் படைத்தீர்
உள்ளதை எல்லாம் தருகின்றேன்
அந்த வெற்றிடம் நீ வந்து நிறைந்துவிடு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக