புதுநன்மை பெருவிழா – மரியன்னை பேராலயம், குடந்தை

வருகைப்பாடல்
மங்கள நாளில் தலைவனே எம் மனக்கோயிலின் இறைவனே
அன்பு நிறைந்த தந்தையே என்றும் ஆராதிப்போம் துதிப்போம்
அல்லேலுயா-4
|
நீர் தந்த நாளெல்லாம் திருநாளே பேரானந்த்த் திருநாளே
நீர் செய்த செயலெல்லாம் வெளிப்பாடே
உம் நேசத்தின் வெளிப்பாடே-2

உண்மையிலும் ஆவியிலும் உம்மை
தொழுதேத்தும் இந்த நாள் நல்ல நாளே
உண்மையிலும் ஆவியிலும் உம்மை
தொழுதேத்தும் இந்த நாள் நல்ல நாளே
||
உம் கோயில் பறவைகள் சரணாலயம்
என்றும் வாழ்கின்ற சரணாலயம்
உம் பார்வைபட்டாலே வளமாகும்
உம் பயிர்கள் வளமாகும் -2
பறவையிலும் பயுர்களிலும்
பெரிதாகும் உமதன்பு உமக்கின்பம்-2

தியானப் பாடல் 
தொகையறா..
தாயாக அன்பு செய்யும் இறைவா என் வாழ்விலே
ஒளியேற்றவா

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2
கொஞ்சும் தமிழ் மொழி பேசி எனைத்தேற்றவே -2
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா

1.
உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும் இன்னல்கள் நீங்கிடுமே
உன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும் விண்வாசல் அடைந்திடுவேன்
நான் என்றும் உன் சாயல் தானே உன் கோவில் குடி கொள்ள நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
2.
உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும் சுகராகம் மிட்டிவேன்
உன் வார்த்தைகடலில் மிதந்தாலே போதும் யுகம் பல படைத்திடுவேன்
எல்லாமே நீதானே இறைவா என் உள்ள தினைவாக நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

காணிக்கைப்பாடல்
நிலத்தின் விளையும் மனித உழைப்பும்
சேரும் நேரம் இது
கனிவாய் ஏற்றிடுவாய் பலியாய் மாற்றிடுவாய்
|
அப்பமும் இரசமும் மாறும் வளே
உமது பிரசன்னம் ஆகுமே
அமைதி இழந்த எனது வாழ்வில்
அதிசயங்கள் காணுமே
உம்மையே அறிந்தேன் என்னையே இழந்தேன்
கனிவாய் ஏற்றிடுவாய் பலியாய் மாற்றிடுவாய்
||
உடலும் உள்ளமும்உயர்ந்த பலியாய்
உமது பாதம் படைக்கின்றேன்
உமது வழியில் உவகை காண
உள்ளது அனைத்தும் இழக்கின்றேன்
உம்மையே அறிந்தேன் உன்னையே இழந்தேன்
கனிவாய் ஏற்றிடுவாய் பலியாய் மாற்றிடுவாய்

திருவிருந்து பாடல்
என் இயேசு தந்த இந்த அன்பான விருந்து
என் வாழ்வின் அருமருந்து-2
இதை என் நினைவாக செய்யுங்கள்
என்றார் இயேசு-2 இயேசு
|
உயிரினை அளித்திடும் திரு உடலாம்
உறவினை வளர்த்திடும் இறை உடலாம்
பிணிகளை நீக்கிடும் கனிகளை கொடுத்திடும்
மாபரன் இயேசுவின் உயிருடலாமை
அனைவரும் இதைவாங்கி உண்ணுங்ஙகள் என்றே
அன்புடன் அழைக்கிறார் இயேசு இயேசு
||
பாவங்கள் கழுவிடும் திரு இரத்தமாம்
பரகதி சேர்த்திடும் இறை இரத்தமாம்
அன்பிலும் பண்பிலும் அருளிலும் வளர்த்திடும்
ஆண்டவர் இயேசுவின் திரு இரத்தமாம்
அனைவரும் இதை வாங்கி பருகுங்கள் என்றே
அன்புடன் அழைக்கிறார் இயேசு இயேசு

நன்றி பாடல்
நன்றியால் துதிப்பாடு நம் இயேசுவை
நாவாலே என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உணமையுள்ளவர்
|
எரிக்கோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்-2
கலங்ஙிடதே திகைத்திடதே
துதியினால் இடுந்து விழும்-2
||
செங்கடல் நம்மைச் சுழ்ந்து கொண்டாலும்
சிலுவையின் நிழலுண்டு-2
பாடிடுவோம் துதித்திடுவோம்
பாதைகள் கிடைத்துவிடும்-2

மாதப்பாடல்
அலங்காரத் தாயே அமலோற்ப மரியே ஆரோக்கியம் நீயே அம்மா
உம்மை அண்டி வந்தோர்க்கு அடைக்கலமே ஆறுதல் நீயே அம்மா
அம்மா மரியே நீ வாழ்க அலங்காரத் தாயே நீ வாழ்க
அருளின் நிறைவே நீ வாழ்க ஆவியின் ஓவியமே வாழ்க
வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2

|
குழந்தையின் அழுகுரல் கேட்டிடும் தாயைப்போல் -எம்
குடந்தை மக்களின் வேண்டுதலைக் கேளும் தாயே
ஆயர் குருக்கள் துறவியர் மாந்தர்
இயேசுவின் தலைமையில் இணைந்தே வாழ்ந்திட
பரிந்துரை செய்திடுவாய்
வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2
||
வார்த்தை நீ கேட்டாய் இதயத்தாலே சுமர்ந்தாய் -இறை
வார்த்தையைக் கேட்கும் மாந்தருக்கு மாதிரியாய் ஆனாய்
வாரத்தையை ஏற்று இயேசுவை சுமர்ந்து
உலகிலே வார்த்தைக்கு சாட்சியாய் வாழ்ந்திட
பரிந்துரை செய்திடுவாய்
வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி வாழ்க வாழ்க மரி
வாழ்க வாழ்க மரியே-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக