தெரிந்து கொள்வோம் திருப்பலியைப் பற்றி...


1.      பங்குபெறுவோர்:
1) திருப்பலியில் பங்குபெறுவோர் குருவானவர்: இவர் திருப்பலி கொண்டாட கூடியிருக்கும் சபையின் தலைவர். இவரின்வழியாக கிறிஸ்து திருப்பலியில் வெளிப்படுகின்றார்.
2)   பீடச்சிறுவர்: இறைமக்களின் சார்பாக பீடத்திலிருந்து திருப்பலி நிறைவேற்றும் குருவானவருக்குத் தேவையான உதவிகளைச் செய்பவர்கள்.
3)   இறைமக்கள் சபை: திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் ஒரு குடும்பமாகத் திகழ்கின்றனர்.உலகம் முழுவதும் உள்ள விசுவாசிகளின் பிரதிநிதிகளாக உள்ளனர்.இத்திருக்கூட்டத்தின் மூலமும் இறைவன் வெளிப்படுகின்றார்.ஏனெனில் அவர் பெயரால் ஒன்று கூடும்போது அவர்கள் நடுவே அவர் இருக்கிறார் என்பது வெள்ளிடைமலை.
2.      திருப்பலியில் முக்கிய இடங்கள்:
1)   பலிப்பீடம்: கல்வாரியில் தம்மைப் பலியாக்கிய கிறிஸ்து இன்று இப்பீடமதில் கண்களுக்கு மறைந்த வண்ணம் இரத்தம் சிந்தா பலியாவதால் இம்மேடையைப் பலிப்பீடம் என்கிறோம். இதனின்று முக்கியமாக நமக்குக் கிறிஸ்து வெளிப்படுகின்றார். உயிருள்ள இறைமகனாக அப்ப இரச வழியிலே.
2) வாசக மேடை: அன்று இறைவாக்கினரின் மூலமும், தம் திருமகனின் மூலமும் மக்களோடு பேசிய கடவுள், திருநூலின் மூலமும், குருவின் மூலமும் இவ்விடத்திலிருந்து பகிர்ந்து கொள்ளுகிறார். இறைமக்கள் இறைப் பிரசன்னத்தை மீண்டும் உணருகின்றனர்.
3.      திருப்பலி சடங்குகள்:
1)      தொடக்கச் சடங்குகள்:
                                                     i.      சிலுவை அடையாளம்: நாம் மூவோரு கடவுளின் பெயரால், பெற்ற ஞானஸ்நானத்தின் அடையாளமாக திருப்பலியின் தொடக்கத்தில் இதனைப் பயன்படுத்துகின்றோம்.
                                                         ii.      வாழ்த்தும் வரவேற்பும்:  ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்று குரு கூடியுள்ள அனைவரையும் வாழ்த்தி வரவேற்கின்றார்.மக்களும் குருவை உம்மோடும் இருப்பாராக என வாழ்த்தி வரவேற்கின்றனர்.
                                                        iii.      மன்னிப்பு வழிபாடு: செய்த குற்றங்களுக்காக இறைவனின் மன்னிப்பு கேட்டு தாய்மையுடன் திருப்பலி கொண்டாட முயல்கின்றோம்.
                                    iv.      சபை மன்றாட்டு: சபையினர் அனைவரின் வேண்டுதல்களையும் உள்ள ஏக்கங்களையும் ஒன்று திரட்டி, குரு இம்மன்றாட்டுச் செபத்தை நிகழ்த்துகின்றார்.
2)      இறைவார்த்தை வழிபாடு
                                                              i.      முதல் இரண்டு வாசகங்கள்: அவை முறையே பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் (நற்செய்தி ஏடுகள் நீங்களாக) எடுக்கப்பட்டு இறைவார்த்தையாக வாசிக்கப்படும். 
                                                            ii.      தியானப்பாடல்: இறைவார்த்தையைக் கேட்ட மக்கள் இறைவனோடு இப்பாடல் மூலமாக ஒன்றிக்கின்றனர்.
                                                          iii.      மகிழ்ச்சிப்பாடல்: அல்லேலூயா - என்பதன் பொருள் ஆண்டவருக்குள் மகிழ்கின்றோம். இறைவனைப் போற்றுகின்றோம்.
                                                      iv.      நற்செய்தி வாசகம்: (தூய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களிலிருந்து காலத்திற்குத் தகுந்தவாறு எடுத்தாளப்படுகிறது.இதனின் விளக்கத்தை மறையுரையாகக் குருவானவர் மக்களோடு பகிர்ந்து கொள்கிறார்.  
                                                            v.      விசுவாச அறிக்கை: இறைவனையும், அவர் பேசிய இறைவார்த்தையையும், அவர் பிரசன்னம் கொண்ட திருச்சபையையும், அது கொண்டுள்ள உண்மைகளையும் ஏற்றுக் கொள்கிறோம் என அறிக்கையிடுகிறோம்.
                                                          vi.      இறை மக்கள் வேண்டுதல்கள்: நம்பிக்கை கொடுத்த தேவனிடத்தில் வேண்டிய வரங்களை மக்கள் எடுத்துக் கூறுகின்றனர்.இவ்வேண்டுதல்களுக்காக திருச்சபையும் பரிந்துரை செய்கிறது.
3)      நற்கருணை வழிபாடு:
                                                              i.      காணிக்கை: நமது அன்பைக் காட்ட, நன்றியினைத் தெரிவிக்க, விளைபொருள்களையும், வாங்கின பொருள்களையும், தன்னுடைய அன்பை நமக்குக் காட்டின இயேசு தேர்ந்துகொண்டஉணவுப்பொருள்களை அப்ப இரச வடிவிலும் அர்ப்பணிக்கிறோம்.
                                                            ii.      உண்டியல்: ஆலயத்தின் தேவைகளுக்கும், அமைப்புத் திருசபையின் தேவைகளுக்கும் மக்களால் தரப்படும் காணிக்கையாகும்.
                               iii.     காணிக்கை செபம்: காணிக்கைப் பொருள்களை மக்களிடமிருந்து பெற்று அவற்றினை இறைவன் ஏற்றுக் கொள்ளும்படியாகவும், பலிக்கு அவைகள் தகுதிபெறகூம் வேண்டுகின்றோம்.
                                                          iv.      கை கழுவுதல்: மகத்து மிக்க பலி நிறைவேற்ற, குரு அகமும் புறமும் தூய்மையாக, செபித்து அருள்பெறும் அடையாளமாக இதனைச் செய்கின்றார்.
                                                       v. தொடக்கவுரை:இறைவனிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கும், அவர் நமக்குச் செய்த மீட்புச் செயலுக்கும் நன்றி கூறி, இறை புகழ் கூறும் பகுதியே இது.
                                        vi.      பரிசுத்தர், பரிசுத்தர் (தூயவர், தூயவர்): இறைவனின் மகிமையை இப்பாடல் மூலம் வாழ்த்திக் கூறிப் பாடுகிறோம். (ஓசன்னா- எனில் வாழ்க என்பது பொருள்)
                                                        vii.      புனிதப்படுத்தும் செபம்: காணிக்கையாகப் பெற்ற அப்ப இரசத்தை ஆவியினால் புனிதப்படுத்தி இறைமகன் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற செபிக்கின்றோம்.
                                                viii.      திருவுடல் திரு இரத்தம்: இது உங்களுக்காகக் கையளிக்கப் படும் என் சரீரம். இது உங்களுக்காகச் சிந்தப்படும் புதிய நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம், எனும் இயேசுவின் அர்ப்பணிப்பு வார்த்தைகளைக்கூறும் போது, அவை இயேசுவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாறி முழுமையாகின்றன.
                                                          ix.      விசுவாசத்தின் மறைபொருள்: வெறும் கண்கள் காணும் அப்பத்திலும் இரசத்திலும், அவரின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் கண்டுணர்ந்து, அவர்பட்ட பாடுகளையும், எதிர்கொண்ட வீர மரணத்தையும், இலட்சிய புரு­னாக உயிர்த்ததையும் அறிக்கையிடுகின்றோம்.
                                 x.      நினைவு: புனிதர்கள், திருச்சபையின் தலைவர்கள், திருச்சபையின் மக்கள், இறந்தவர்கள் அனைவரையும் ஒரே ஆண்டவரின் பிள்ளைகள் எனும் நோக்கோடு நினைவு கூறுகின்றோம்.
                                                          xi.      இறுதிப் புகழுரை: அன்பில் ஒன்றான திருச்சபை கிறிஸ்து வழியாகக் கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்குள் பிதாவிற்கு புகழ்ச்சியைச் செலுத்துகின்றது.
                                                        xii.      கர்த்தர் கற்பித்த செபம்: அனைவரும் குழந்தைகளுக்குரிய மனநிலையோடு, ஆண்டவர் கிறிஸ்து சொல்லிக் கொடுத்த செபத்தினைச் சொல்கின்றனர்.
                                                      xiii.      சமாதானப் பகிர்வு: திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கு பெறுவோர் அனைவரும் சகோதர, சகோதரிகளாக இருக்கிறோம், வேறுபாடுகளோ, பகைமையோ இல்லை, என்பதனைக் காட்டுகின்றதன் அடையாளம் இது.
                                        xiv.      நற்கருணை விருந்து: ஆன்ம உணவாக ஆண்டவர் வருகின்றார், நற்கருணை வடிவிலே அவரை ஏற்றுக் கொள்ளும் வண்ணம், ஆமென் என்று சொல்லி அவரைப் பெற்றுக் கொள்கிறோம் (ஆமென் எனில் ஆம் என்பது பொருள்)
                                          xv.      நன்றி செபம்: இறை மக்களின் நன்றியைத் திருக் கூட்டத்தின் தலைவராக இருக்கும் குரு நன்றி செபமாகக் கூறுகின்றார்.
                                                      xvi.      பிரியாவிடை: குருவின் ஆசிகளோடு இறைமக்கள் பலியான கிறிஸ்துவைப் பெற்றுக் கொண்டு பரந்த உலகில் இனி பலியாக, விடைபெற்றுச் செல்கின்றனர்.
4)      திருப்பலியில் உடல் செயல்பாடுகள்
                                     i.     எழுந்து நிற்பது: உயிர்த்த இயேசுவுடன் நாமும் இணைந்தவர்கள் என்பதனை இது காட்டுகின்றது.
                                                            ii.      அமர்தல்: இறைவார்த்தையைக் கவனமாகக் கேட்கவும், தியானிக்கவும் எவ்வித சலனத்திற்கும், இடையூறுக்கும் இடம் கொடாதிருக்க இது மேற்கொள்ளப்படுகிறது.
                                  iii.      மண்டியிடுதல்: இறைவனுக்கு முன் நாம் ஒன்று மில்லாதவர்கள் எனும் நிலையைக் குறிக்கிறது.
                                                     iv.      தலைவணங்குதல்: இறைவனை ஆராதிப்பதற்கும், மரியாதை செய்வதற்கும்அவருக்கு முன் நாம் தகுதியற்றவர்கள் என்பதனை இது காட்டுகின்றது.
                                                            v.      பவனி: (வருகை, காணிக்கை, நற்கருணை) அனைவரும் ஒன்ருகூடி இறைவனை நோக்கி ஆவலுடன் அவர் வழி நடக்கவும், அவரிடம் தஞ்சமடையவும் செல்கிறோம் என்பதற்கான அடையாளம்.
                                                          vi.      நெஞ்சில் அறைதல்: செய்த குற்றத்திற்கு வருந்துகின்ற மனநிலையின் ஓர் அடையாளம்.
                                                        vii.      கரங்களைக் குவித்தல்: இது நாமும், இறைவனுடன் இணைந்துள்ளோம் என்பதனையும், நமது மரியாதையையும் காட்டுகின்றது.
                                                      viii.      சமாதானத்தை அறிவித்தல்: ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு, மன்னித்து, மதிப்பளித்து, அன்பு உறவில் வாழத் தயாராக இருக்கிறோம் என்பதன் வெளி அடையாளம்.
5)      திருப்பலியில் பயன்படுத்தப்படும் பொருள்கள்
                                                              i.      விளக்கு, எரியும் மெழுகுவர்த்திகள்: கிறிஸ்து, உயிருள்ள இறைவனாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம்.
                                                       ii.      தூபம்: இறைவனை ஆராதிப்பதற்கும் அதனின்று மேலெழும் புகை, போன்று நமது செபங்களும் இறைவனை நோக்கி மேலெழுகின்றன என்பதற்கும் அடையாளம்.
                                                          iii.      மலர்கள்: இயற்கையின் சிகரம் மலர்கள். அவற்றினைப் பீடத்தின் மீது வைத்து இயற்கை வழியாக இறைவனை மகிமைப்படுத்துகிறோம்.
                                                      iv.      தண்ணீர்: இறைவனே நமது வாழ்வின் மையம். அவர் இல்லையெனில் நமது வாழ்வு வறண்டுவிடும். அவராலே வாழ்வு பெற்று தூய்மையாக்கப்படுகிறோம் என்பதன் அடையாளம்.
                                                     v.      அப்பமும் இரசமும்: மனிதன், அவனது உழைப்பு, இன்பங்கள், துன்பங்கள் இவைகளின் முழு உருவாகப் பீடத்தின் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகின்றன.
                                                          vi.      நற்கருணைப் பாத்திரம், திருக்கிண்ணம், நன்மைத்தட்டு: தினந்தோறும் திருச்சடங்கில் பலியாகும் கிறிஸ்துவைத் தாங்கும் பாத்திரங்கள்.
                                                        vii.      திரு உடைகள்: குருவின் பணியையும், இத்திருப்பலிக் கொண்டாட்டத்தின் பொருளையும், மக்களின் மனநிலையையும், இவை குறிக்கின்றன.
                                                      viii.      திருச்சிலுவை: பீடத்தல் நிகழும் பலி, கல்வாரிப் பலியின் நிகழ்வே என்பதனை நமக்கு நினைவுறுத்துகிறது.
............................................


திருவழிபாட்டில்: வழிபாட்டில் அடையாளங்களும் குறியீடுகளும் முக்கிய இடம் பெறுகின்றன.அவை இறைவன் மக்களிடம் கூற விரும்புவதையும், மக்கள் இறைவனிடம் கூற விரும்புவதையும் உணர்த்திக் காட்டும் ஆழ்ந்த பொருள்மிக்க அடையாளங்கள் ஆகும்.மேலும் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பல விதமான சொற்களும், செயல்களும், உடல்நிலைகளும், சைகைகளும் பொருள் பொதிந்தவை. இவற்றை நாம் விளக்கிக் கூற வேண்டும்.
சில எடுத்துக்காட்டுகள்
·         ஓய்வு நாள்- ஆண்டவரின் நாள்
·         கோவில்- இறைவனின் இல்லம், புனித இடம்
·         கைகளைக் குவித்தல்- செபத்தின் அடையாளம்
· சொல் (செபங்கள்)- புகழ்ச்சி, நன்றி, மன்னிப்பு ஆகியவற்றின் அடையாளம்
·         மார்பில் பிழைதட்டுதல்- மனவருத்தத்தின் அடையாளம்
·         பணிந்து வணங்குதல்
·      (முழந்தாளிடுதல்)- ஆராதனை, வணக்கம் செலுத்துவதன் அடையாளம்
·         நிற்றல்- எதிர்பார்த்துக் காத்திருத்தலின் அடையாளம்
·         அமர்தல்- கூர்ந்து கவனித்தல், தியானத்தின் அடையாளம்
·         சிரம் தாழ்த்துதல்- பணிவின் அடையாளம்
·         உண்ணா நோன்பு- தவத்தின் அடையாளம்
·         தைலம் பூசுதல்- அருள்பொழிவின் அடையாளம்
·         உடன்படிக்கை - ஒப்பந்தத்தின் அடையாளம்
·         சாம்பல்- தவத்தின் அடையாளம்
·         தீர்த்தம்- தூய்மைப்படுத்துதல், ஆசீர் அளிப்பதன் அடையாளம்

அருள்சாதனங்களில்: அருள்சாதனக் கொண்டாட்டங்களின்போது,
1)      கொண்டாடப்படும் அருள்சாதனத்தின் சிறப்பு,
2)      அதன் தேவை,
3)      அதில் இடம் பெறும் முக்கிய அடையாளச் செயல்கள்,
4)      பயன்படுத்தப்படும் பொருள்கள்,
5)      அதன் முக்கிய சடங்குகள்,
6) அதில் சொல்லப்படும் செபங்கள் போன்றவற்றைப் பற்றிய விளக்கங்களைச் சொல்லலாம்.
சில எடுத்துக்காட்டுகள்:
திருமுழுக்கில்: திருமுழுக்கின்போது,
1)      பெற்றோரின் பணிகள், கடமைகள்,
2)      ஞானப் பெறறோரைத் தெரிவு செய்தல்,
3)      அவர்களுடைய பணிகள், கடமைகள்,
4) விவிலியத்தில் திருமுழுக்கு பற்றிய பகுதிகளையும் விளக்கிச் சொல்லலாம்.  (மேலும் பின்வருபவற்றையும் விளக்கலாம்.)
சில எடுத்துக்காட்டுகள்.,
·         தண்ணீர் - புது வாழ்வின் அடையாளம்
·         ஆயத்த எண்ணெய் பூசுதல் - பேயை ஓட்டி வலிமை அளித்தல்
·  சாத்தானை மறுதலித்தல் - பாவம், தீமை, தீய நாட்டம் ஆகிய அனைத்தையும் துறக்க விரும்புவதன் அடையாளம்
· விசுவாச அறிக்கையிடல் - மூவொரு இறைவனை வெளிப்படையாக அறிக்கையிட்டுஏற்றுக்கொள்வதன் அடையாளம்
·    சடங்குக் குளியல் - திருமுழுக்கு பெறுவதன், பாவம் போக்கப்படுவன் அடையாளம்
·  மூழ்கி எழுதல் -இறப்பிலிருந்து உயிர்ப்புக்கும், பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்வுக்கும் கடந்து செல்வதன் அடையாளம் 
·         திருத்தைலம் பூசுதல் - அருள்பொழிவின் அடையாளம்
·         பாஸ்கா திரி - ஒளியாம் கிறிஸ்துவின் அடையாளம்
·    எரியும் திரி - பாவ இருள் நீக்கி, அருள் ஒளி பெற்ற ஆன்மாவின் அடையாளம்
·         வெள்ளைத் துணி - தூய உள்ளத்தின் அடையாளம்
· எப்பேத்தா சடங்கு - இறைவார்த்தையைக் கேட்டு, அறிவிக்க அழைக்கப்படுவதன் அடையாளம்

முதல் நற்கருணையில் : முதல் நற்கருணை (புது நன்மை) கொண்டாட்டத்தில், நற்கருணை என்பது
1)      இயேசுவின் திருவுடல், திரு இரத்தம்,
2)      இயேசுவின் பலி உணவு,
3)      நமது ஆன்ம உணவு,
4)      இயேசுவின் மெய்யான உடனிருப்பு
5)      கிறிஸ்தவ வாழ்வின் மையம்,
6)      பகிர்வின் அடையாளம்,
7)      உட்கொள்ளும் முன் செய்ய வேண்டிய முன்தயாரிப்புகள்,
8)      நற்கருணை ஆன்மிகம்,
9) நற்கருணை பக்தி போன்றவை பற்றிச் சொல்லலாம்.  (மேலும் பின்வருபவற்றையும் விளக்கலாம்).
சில எடுத்துக்காட்டுகள்:
·         பீடம் - பலியிடும் இடத்தின் அடையாளம்
·         அப்பம் - கிறிஸ்துவின் உடல்(ஆன்ம உணவு)
·         இரசம் - மகிழ்வின் அடையாளம், கிறிஸ்துவின் திருஇரத்தம்
·         காணிக்கை - தற்கையளிப்பின் அடையாளம்
·         நற்கருணை மன்றாட்டு - இறைப்புகழ்ச்சி, நன்றியின் அடையாளம்
·         அப்பம் பிடுதல் - பகிர்வின் அடையாளம்
·         சமாதானம் கூறுதல் - ஒப்புரவின் அடையாளம்

குருத்துவத்தில்: இக்கொண்டாட்டத்தில் இடம்பெறும் முக்கியச் சடங்குகளைப் பின்வரும் கண்ணோட்டத்தோடு விளக்கலாம்.
·   கைகளை வைத்துச் செபித்தல் - தூய ஆவியாரை வழங்குவதன் அடையாளம்
·         திருவுடை அணிவித்தல் - திருப்பணி நிலைகளின் அடையாளம்
·         புதிய ஆயருக்கு மோதிரம் - விசுவாச முத்திரையின் அடையாளம்
·         தலைச் சீரா - புனிதத்தின் அடையாளம்
·         செங்கோல் - வழிநடத்தும் பணியின் அடையாளம்
·  இருக்கையில் அமரச் செய்தல் - மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்பதன் அடையாளம்
·    ஆயர்களின் சமாதான முத்தம் - மகிழ்ச்சி, ஒன்றிப்பின் அடையாளம்
· கைகளில் திருத்தைலம் பூசுதல்- திருப்பலி நிறைவேற்றுமாறு (குருக்களுக்கு) புனிதப்படுத்துதல்
·   தலையில் திருத்தைலம் பூசுதல் - அருள்பொழிவின் அடையாளம் (ஆயர்களுக்கு)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக