தெரிந்து கொள்வோம் திருப்பலியைப் பற்றி...


1.      பங்குபெறுவோர்:
1) திருப்பலியில் பங்குபெறுவோர் குருவானவர்: இவர் திருப்பலி கொண்டாட கூடியிருக்கும் சபையின் தலைவர். இவரின்வழியாக கிறிஸ்து திருப்பலியில் வெளிப்படுகின்றார்.
2)   பீடச்சிறுவர்: இறைமக்களின் சார்பாக பீடத்திலிருந்து திருப்பலி நிறைவேற்றும் குருவானவருக்குத் தேவையான உதவிகளைச் செய்பவர்கள்.
3)   இறைமக்கள் சபை: திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் ஒரு குடும்பமாகத் திகழ்கின்றனர்.உலகம் முழுவதும் உள்ள விசுவாசிகளின் பிரதிநிதிகளாக உள்ளனர்.இத்திருக்கூட்டத்தின் மூலமும் இறைவன் வெளிப்படுகின்றார்.ஏனெனில் அவர் பெயரால் ஒன்று கூடும்போது அவர்கள் நடுவே அவர் இருக்கிறார் என்பது வெள்ளிடைமலை.
2.      திருப்பலியில் முக்கிய இடங்கள்:
1)   பலிப்பீடம்: கல்வாரியில் தம்மைப் பலியாக்கிய கிறிஸ்து இன்று இப்பீடமதில் கண்களுக்கு மறைந்த வண்ணம் இரத்தம் சிந்தா பலியாவதால் இம்மேடையைப் பலிப்பீடம் என்கிறோம். இதனின்று முக்கியமாக நமக்குக் கிறிஸ்து வெளிப்படுகின்றார். உயிருள்ள இறைமகனாக அப்ப இரச வழியிலே.
2) வாசக மேடை: அன்று இறைவாக்கினரின் மூலமும், தம் திருமகனின் மூலமும் மக்களோடு பேசிய கடவுள், திருநூலின் மூலமும், குருவின் மூலமும் இவ்விடத்திலிருந்து பகிர்ந்து கொள்ளுகிறார். இறைமக்கள் இறைப் பிரசன்னத்தை மீண்டும் உணருகின்றனர்.
3.      திருப்பலி சடங்குகள்:
1)      தொடக்கச் சடங்குகள்:
                                                     i.      சிலுவை அடையாளம்: நாம் மூவோரு கடவுளின் பெயரால், பெற்ற ஞானஸ்நானத்தின் அடையாளமாக திருப்பலியின் தொடக்கத்தில் இதனைப் பயன்படுத்துகின்றோம்.
                                                         ii.      வாழ்த்தும் வரவேற்பும்:  ஆண்டவர் உங்களோடு இருப்பாராக என்று குரு கூடியுள்ள அனைவரையும் வாழ்த்தி வரவேற்கின்றார்.மக்களும் குருவை உம்மோடும் இருப்பாராக என வாழ்த்தி வரவேற்கின்றனர்.
                                                        iii.      மன்னிப்பு வழிபாடு: செய்த குற்றங்களுக்காக இறைவனின் மன்னிப்பு கேட்டு தாய்மையுடன் திருப்பலி கொண்டாட முயல்கின்றோம்.
                                    iv.      சபை மன்றாட்டு: சபையினர் அனைவரின் வேண்டுதல்களையும் உள்ள ஏக்கங்களையும் ஒன்று திரட்டி, குரு இம்மன்றாட்டுச் செபத்தை நிகழ்த்துகின்றார்.
2)      இறைவார்த்தை வழிபாடு
                                                              i.      முதல் இரண்டு வாசகங்கள்: அவை முறையே பழைய ஏற்பாட்டிலிருந்தும், புதிய ஏற்பாட்டிலிருந்தும் (நற்செய்தி ஏடுகள் நீங்களாக) எடுக்கப்பட்டு இறைவார்த்தையாக வாசிக்கப்படும். 
                                                            ii.      தியானப்பாடல்: இறைவார்த்தையைக் கேட்ட மக்கள் இறைவனோடு இப்பாடல் மூலமாக ஒன்றிக்கின்றனர்.
                                                          iii.      மகிழ்ச்சிப்பாடல்: அல்லேலூயா - என்பதன் பொருள் ஆண்டவருக்குள் மகிழ்கின்றோம். இறைவனைப் போற்றுகின்றோம்.
                                                      iv.      நற்செய்தி வாசகம்: (தூய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான்) புதிய ஏற்பாட்டு நற்செய்தி நூல்களிலிருந்து காலத்திற்குத் தகுந்தவாறு எடுத்தாளப்படுகிறது.இதனின் விளக்கத்தை மறையுரையாகக் குருவானவர் மக்களோடு பகிர்ந்து கொள்கிறார்.  
                                                            v.      விசுவாச அறிக்கை: இறைவனையும், அவர் பேசிய இறைவார்த்தையையும், அவர் பிரசன்னம் கொண்ட திருச்சபையையும், அது கொண்டுள்ள உண்மைகளையும் ஏற்றுக் கொள்கிறோம் என அறிக்கையிடுகிறோம்.
                                                          vi.      இறை மக்கள் வேண்டுதல்கள்: நம்பிக்கை கொடுத்த தேவனிடத்தில் வேண்டிய வரங்களை மக்கள் எடுத்துக் கூறுகின்றனர்.இவ்வேண்டுதல்களுக்காக திருச்சபையும் பரிந்துரை செய்கிறது.
3)      நற்கருணை வழிபாடு:
                                                              i.      காணிக்கை: நமது அன்பைக் காட்ட, நன்றியினைத் தெரிவிக்க, விளைபொருள்களையும், வாங்கின பொருள்களையும், தன்னுடைய அன்பை நமக்குக் காட்டின இயேசு தேர்ந்துகொண்டஉணவுப்பொருள்களை அப்ப இரச வடிவிலும் அர்ப்பணிக்கிறோம்.
                                                            ii.      உண்டியல்: ஆலயத்தின் தேவைகளுக்கும், அமைப்புத் திருசபையின் தேவைகளுக்கும் மக்களால் தரப்படும் காணிக்கையாகும்.
                               iii.     காணிக்கை செபம்: காணிக்கைப் பொருள்களை மக்களிடமிருந்து பெற்று அவற்றினை இறைவன் ஏற்றுக் கொள்ளும்படியாகவும், பலிக்கு அவைகள் தகுதிபெறகூம் வேண்டுகின்றோம்.
                                                          iv.      கை கழுவுதல்: மகத்து மிக்க பலி நிறைவேற்ற, குரு அகமும் புறமும் தூய்மையாக, செபித்து அருள்பெறும் அடையாளமாக இதனைச் செய்கின்றார்.
                                                       v. தொடக்கவுரை:இறைவனிடம் நாம் பெற்ற நன்மைகளுக்கும், அவர் நமக்குச் செய்த மீட்புச் செயலுக்கும் நன்றி கூறி, இறை புகழ் கூறும் பகுதியே இது.
                                        vi.      பரிசுத்தர், பரிசுத்தர் (தூயவர், தூயவர்): இறைவனின் மகிமையை இப்பாடல் மூலம் வாழ்த்திக் கூறிப் பாடுகிறோம். (ஓசன்னா- எனில் வாழ்க என்பது பொருள்)
                                                        vii.      புனிதப்படுத்தும் செபம்: காணிக்கையாகப் பெற்ற அப்ப இரசத்தை ஆவியினால் புனிதப்படுத்தி இறைமகன் கிறிஸ்துவின் உடலாகவும், இரத்தமாகவும் மாற செபிக்கின்றோம்.
                                                viii.      திருவுடல் திரு இரத்தம்: இது உங்களுக்காகக் கையளிக்கப் படும் என் சரீரம். இது உங்களுக்காகச் சிந்தப்படும் புதிய நித்திய உடன்படிக்கைக்கான என் இரத்தம், எனும் இயேசுவின் அர்ப்பணிப்பு வார்த்தைகளைக்கூறும் போது, அவை இயேசுவின் திருவுடலாகவும், திரு இரத்தமாகவும் மாறி முழுமையாகின்றன.
                                                          ix.      விசுவாசத்தின் மறைபொருள்: வெறும் கண்கள் காணும் அப்பத்திலும் இரசத்திலும், அவரின் திரு உடலையும் திரு இரத்தத்தையும் கண்டுணர்ந்து, அவர்பட்ட பாடுகளையும், எதிர்கொண்ட வீர மரணத்தையும், இலட்சிய புரு­னாக உயிர்த்ததையும் அறிக்கையிடுகின்றோம்.
                                 x.      நினைவு: புனிதர்கள், திருச்சபையின் தலைவர்கள், திருச்சபையின் மக்கள், இறந்தவர்கள் அனைவரையும் ஒரே ஆண்டவரின் பிள்ளைகள் எனும் நோக்கோடு நினைவு கூறுகின்றோம்.
                                                          xi.      இறுதிப் புகழுரை: அன்பில் ஒன்றான திருச்சபை கிறிஸ்து வழியாகக் கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்குள் பிதாவிற்கு புகழ்ச்சியைச் செலுத்துகின்றது.
                                                        xii.      கர்த்தர் கற்பித்த செபம்: அனைவரும் குழந்தைகளுக்குரிய மனநிலையோடு, ஆண்டவர் கிறிஸ்து சொல்லிக் கொடுத்த செபத்தினைச் சொல்கின்றனர்.
                                                      xiii.      சமாதானப் பகிர்வு: திருப்பலி கொண்டாட்டத்தில் பங்கு பெறுவோர் அனைவரும் சகோதர, சகோதரிகளாக இருக்கிறோம், வேறுபாடுகளோ, பகைமையோ இல்லை, என்பதனைக் காட்டுகின்றதன் அடையாளம் இது.
                                        xiv.      நற்கருணை விருந்து: ஆன்ம உணவாக ஆண்டவர் வருகின்றார், நற்கருணை வடிவிலே அவரை ஏற்றுக் கொள்ளும் வண்ணம், ஆமென் என்று சொல்லி அவரைப் பெற்றுக் கொள்கிறோம் (ஆமென் எனில் ஆம் என்பது பொருள்)
                                          xv.      நன்றி செபம்: இறை மக்களின் நன்றியைத் திருக் கூட்டத்தின் தலைவராக இருக்கும் குரு நன்றி செபமாகக் கூறுகின்றார்.
                                                      xvi.      பிரியாவிடை: குருவின் ஆசிகளோடு இறைமக்கள் பலியான கிறிஸ்துவைப் பெற்றுக் கொண்டு பரந்த உலகில் இனி பலியாக, விடைபெற்றுச் செல்கின்றனர்.
4)      திருப்பலியில் உடல் செயல்பாடுகள்
                                     i.     எழுந்து நிற்பது: உயிர்த்த இயேசுவுடன் நாமும் இணைந்தவர்கள் என்பதனை இது காட்டுகின்றது.
                                                            ii.      அமர்தல்: இறைவார்த்தையைக் கவனமாகக் கேட்கவும், தியானிக்கவும் எவ்வித சலனத்திற்கும், இடையூறுக்கும் இடம் கொடாதிருக்க இது மேற்கொள்ளப்படுகிறது.
                                  iii.      மண்டியிடுதல்: இறைவனுக்கு முன் நாம் ஒன்று மில்லாதவர்கள் எனும் நிலையைக் குறிக்கிறது.
                                                     iv.      தலைவணங்குதல்: இறைவனை ஆராதிப்பதற்கும், மரியாதை செய்வதற்கும்அவருக்கு முன் நாம் தகுதியற்றவர்கள் என்பதனை இது காட்டுகின்றது.
                                                            v.      பவனி: (வருகை, காணிக்கை, நற்கருணை) அனைவரும் ஒன்ருகூடி இறைவனை நோக்கி ஆவலுடன் அவர் வழி நடக்கவும், அவரிடம் தஞ்சமடையவும் செல்கிறோம் என்பதற்கான அடையாளம்.
                                                          vi.      நெஞ்சில் அறைதல்: செய்த குற்றத்திற்கு வருந்துகின்ற மனநிலையின் ஓர் அடையாளம்.
                                                        vii.      கரங்களைக் குவித்தல்: இது நாமும், இறைவனுடன் இணைந்துள்ளோம் என்பதனையும், நமது மரியாதையையும் காட்டுகின்றது.
                                                      viii.      சமாதானத்தை அறிவித்தல்: ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொண்டு, மன்னித்து, மதிப்பளித்து, அன்பு உறவில் வாழத் தயாராக இருக்கிறோம் என்பதன் வெளி அடையாளம்.
5)      திருப்பலியில் பயன்படுத்தப்படும் பொருள்கள்
                                                              i.      விளக்கு, எரியும் மெழுகுவர்த்திகள்: கிறிஸ்து, உயிருள்ள இறைவனாகத் தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பதன் அடையாளம்.
                                                       ii.      தூபம்: இறைவனை ஆராதிப்பதற்கும் அதனின்று மேலெழும் புகை, போன்று நமது செபங்களும் இறைவனை நோக்கி மேலெழுகின்றன என்பதற்கும் அடையாளம்.
                                                          iii.      மலர்கள்: இயற்கையின் சிகரம் மலர்கள். அவற்றினைப் பீடத்தின் மீது வைத்து இயற்கை வழியாக இறைவனை மகிமைப்படுத்துகிறோம்.
                                                      iv.      தண்ணீர்: இறைவனே நமது வாழ்வின் மையம். அவர் இல்லையெனில் நமது வாழ்வு வறண்டுவிடும். அவராலே வாழ்வு பெற்று தூய்மையாக்கப்படுகிறோம் என்பதன் அடையாளம்.
                                                     v.      அப்பமும் இரசமும்: மனிதன், அவனது உழைப்பு, இன்பங்கள், துன்பங்கள் இவைகளின் முழு உருவாகப் பீடத்தின் காணிக்கையாக அர்ப்பணிக்கப்படுகின்றன.
                                                          vi.      நற்கருணைப் பாத்திரம், திருக்கிண்ணம், நன்மைத்தட்டு: தினந்தோறும் திருச்சடங்கில் பலியாகும் கிறிஸ்துவைத் தாங்கும் பாத்திரங்கள்.
                                                        vii.      திரு உடைகள்: குருவின் பணியையும், இத்திருப்பலிக் கொண்டாட்டத்தின் பொருளையும், மக்களின் மனநிலையையும், இவை குறிக்கின்றன.
                                                      viii.      திருச்சிலுவை: பீடத்தல் நிகழும் பலி, கல்வாரிப் பலியின் நிகழ்வே என்பதனை நமக்கு நினைவுறுத்துகிறது.
............................................


திருவழிபாட்டில்: வழிபாட்டில் அடையாளங்களும் குறியீடுகளும் முக்கிய இடம் பெறுகின்றன.அவை இறைவன் மக்களிடம் கூற விரும்புவதையும், மக்கள் இறைவனிடம் கூற விரும்புவதையும் உணர்த்திக் காட்டும் ஆழ்ந்த பொருள்மிக்க அடையாளங்கள் ஆகும்.மேலும் வழிபாட்டில் பயன்படுத்தப்படும் பல விதமான சொற்களும், செயல்களும், உடல்நிலைகளும், சைகைகளும் பொருள் பொதிந்தவை. இவற்றை நாம் விளக்கிக் கூற வேண்டும்.
சில எடுத்துக்காட்டுகள்
·         ஓய்வு நாள்- ஆண்டவரின் நாள்
·         கோவில்- இறைவனின் இல்லம், புனித இடம்
·         கைகளைக் குவித்தல்- செபத்தின் அடையாளம்
· சொல் (செபங்கள்)- புகழ்ச்சி, நன்றி, மன்னிப்பு ஆகியவற்றின் அடையாளம்
·         மார்பில் பிழைதட்டுதல்- மனவருத்தத்தின் அடையாளம்
·         பணிந்து வணங்குதல்
·      (முழந்தாளிடுதல்)- ஆராதனை, வணக்கம் செலுத்துவதன் அடையாளம்
·         நிற்றல்- எதிர்பார்த்துக் காத்திருத்தலின் அடையாளம்
·         அமர்தல்- கூர்ந்து கவனித்தல், தியானத்தின் அடையாளம்
·         சிரம் தாழ்த்துதல்- பணிவின் அடையாளம்
·         உண்ணா நோன்பு- தவத்தின் அடையாளம்
·         தைலம் பூசுதல்- அருள்பொழிவின் அடையாளம்
·         உடன்படிக்கை - ஒப்பந்தத்தின் அடையாளம்
·         சாம்பல்- தவத்தின் அடையாளம்
·         தீர்த்தம்- தூய்மைப்படுத்துதல், ஆசீர் அளிப்பதன் அடையாளம்

அருள்சாதனங்களில்: அருள்சாதனக் கொண்டாட்டங்களின்போது,
1)      கொண்டாடப்படும் அருள்சாதனத்தின் சிறப்பு,
2)      அதன் தேவை,
3)      அதில் இடம் பெறும் முக்கிய அடையாளச் செயல்கள்,
4)      பயன்படுத்தப்படும் பொருள்கள்,
5)      அதன் முக்கிய சடங்குகள்,
6) அதில் சொல்லப்படும் செபங்கள் போன்றவற்றைப் பற்றிய விளக்கங்களைச் சொல்லலாம்.
சில எடுத்துக்காட்டுகள்:
திருமுழுக்கில்: திருமுழுக்கின்போது,
1)      பெற்றோரின் பணிகள், கடமைகள்,
2)      ஞானப் பெறறோரைத் தெரிவு செய்தல்,
3)      அவர்களுடைய பணிகள், கடமைகள்,
4) விவிலியத்தில் திருமுழுக்கு பற்றிய பகுதிகளையும் விளக்கிச் சொல்லலாம்.  (மேலும் பின்வருபவற்றையும் விளக்கலாம்.)
சில எடுத்துக்காட்டுகள்.,
·         தண்ணீர் - புது வாழ்வின் அடையாளம்
·         ஆயத்த எண்ணெய் பூசுதல் - பேயை ஓட்டி வலிமை அளித்தல்
·  சாத்தானை மறுதலித்தல் - பாவம், தீமை, தீய நாட்டம் ஆகிய அனைத்தையும் துறக்க விரும்புவதன் அடையாளம்
· விசுவாச அறிக்கையிடல் - மூவொரு இறைவனை வெளிப்படையாக அறிக்கையிட்டுஏற்றுக்கொள்வதன் அடையாளம்
·    சடங்குக் குளியல் - திருமுழுக்கு பெறுவதன், பாவம் போக்கப்படுவன் அடையாளம்
·  மூழ்கி எழுதல் -இறப்பிலிருந்து உயிர்ப்புக்கும், பழைய வாழ்விலிருந்து புதிய வாழ்வுக்கும் கடந்து செல்வதன் அடையாளம் 
·         திருத்தைலம் பூசுதல் - அருள்பொழிவின் அடையாளம்
·         பாஸ்கா திரி - ஒளியாம் கிறிஸ்துவின் அடையாளம்
·    எரியும் திரி - பாவ இருள் நீக்கி, அருள் ஒளி பெற்ற ஆன்மாவின் அடையாளம்
·         வெள்ளைத் துணி - தூய உள்ளத்தின் அடையாளம்
· எப்பேத்தா சடங்கு - இறைவார்த்தையைக் கேட்டு, அறிவிக்க அழைக்கப்படுவதன் அடையாளம்

முதல் நற்கருணையில் : முதல் நற்கருணை (புது நன்மை) கொண்டாட்டத்தில், நற்கருணை என்பது
1)      இயேசுவின் திருவுடல், திரு இரத்தம்,
2)      இயேசுவின் பலி உணவு,
3)      நமது ஆன்ம உணவு,
4)      இயேசுவின் மெய்யான உடனிருப்பு
5)      கிறிஸ்தவ வாழ்வின் மையம்,
6)      பகிர்வின் அடையாளம்,
7)      உட்கொள்ளும் முன் செய்ய வேண்டிய முன்தயாரிப்புகள்,
8)      நற்கருணை ஆன்மிகம்,
9) நற்கருணை பக்தி போன்றவை பற்றிச் சொல்லலாம்.  (மேலும் பின்வருபவற்றையும் விளக்கலாம்).
சில எடுத்துக்காட்டுகள்:
·         பீடம் - பலியிடும் இடத்தின் அடையாளம்
·         அப்பம் - கிறிஸ்துவின் உடல்(ஆன்ம உணவு)
·         இரசம் - மகிழ்வின் அடையாளம், கிறிஸ்துவின் திருஇரத்தம்
·         காணிக்கை - தற்கையளிப்பின் அடையாளம்
·         நற்கருணை மன்றாட்டு - இறைப்புகழ்ச்சி, நன்றியின் அடையாளம்
·         அப்பம் பிடுதல் - பகிர்வின் அடையாளம்
·         சமாதானம் கூறுதல் - ஒப்புரவின் அடையாளம்

குருத்துவத்தில்: இக்கொண்டாட்டத்தில் இடம்பெறும் முக்கியச் சடங்குகளைப் பின்வரும் கண்ணோட்டத்தோடு விளக்கலாம்.
·   கைகளை வைத்துச் செபித்தல் - தூய ஆவியாரை வழங்குவதன் அடையாளம்
·         திருவுடை அணிவித்தல் - திருப்பணி நிலைகளின் அடையாளம்
·         புதிய ஆயருக்கு மோதிரம் - விசுவாச முத்திரையின் அடையாளம்
·         தலைச் சீரா - புனிதத்தின் அடையாளம்
·         செங்கோல் - வழிநடத்தும் பணியின் அடையாளம்
·  இருக்கையில் அமரச் செய்தல் - மறைமாவட்டத்தின் பொறுப்பை ஏற்பதன் அடையாளம்
·    ஆயர்களின் சமாதான முத்தம் - மகிழ்ச்சி, ஒன்றிப்பின் அடையாளம்
· கைகளில் திருத்தைலம் பூசுதல்- திருப்பலி நிறைவேற்றுமாறு (குருக்களுக்கு) புனிதப்படுத்துதல்
·   தலையில் திருத்தைலம் பூசுதல் - அருள்பொழிவின் அடையாளம் (ஆயர்களுக்கு)

பொதுக்காலம் 30 ஆம் ஞாயிறு முதல் ஆண்டு 23-10-2011


முன்னுரை:
பரிவு, இரக்கம், நல்லெண்ணம், மனத்தாழ்மை, கனிவு, பொறுமை, மன்னிப்பு ஆகிய அனைத்திற்கும் மேலாக அன்பையே கொண்டிருங்கள். அதுவே இவையனைத்தையும் இணைத்து நிறைவுறச் செய்யும். மனித வாழ்வின் அச்சாணி அன்பு. ஒவ்வொரு மனிதனும் அன்புக்காக ஏங்கி தவிக்கிறான. அடுத்தவருக்கு கெடுதல் செய்யாமல், அடுத்தவர்களின் பெயரை கெடுக்காமல் வாழ்ந்தாலே போதும். இறைவன் எங்கும் இருக்கிறார். அவர் இல்லாத இடமே இல்லை. அவரது பிரசன்னம் ஒவ்வொரு மனிதனிடத்திலும் வெளிப்படுகிறது. எனவே நம்மை சூழ்ந்து வாழும் ஒவ்வொருவரையும் அன்பு செய்து வாழக் கூடிய தியாக உள்ளத்தை இறைவன் நம் ஒவ்வொருவருக்கும் தரவேண்டுமென்று தொடரும் கல்வாரிப் பலியில் இறைஞ்சி மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை: வி.ப.22:20-26
ஏழை எளியவர்களுக்கும, விதவை அனாதைகளுக்கும, தீங்கிழைக்காமல் நற்செயல்கள் செய்வதற்கான அழைப்பை யாவே இறைவன் நமக்கு முன்வைக்கிறார். எனவே நற்செயல் புரிவதற்கென்றே நம்மை இறைவன் படைத்திருக்கிறார்,அழைத்திருக்கிறார் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை: 1தெச1:5-10
புனித பவுல் தெசலோனிக்க நகர் மக்களைப்பற்றி பெருமையாகப் பேசுகின்றார். எதற்காக என்றால, அவர்கள் தங்கள் நம்பிக்கையின் வழியாக கிறிஸ்துவின் சாட்சிகளாகத் திகழ்ந்ததற்காக. ஆண்டவரின் வார்த்தை அவர்கள் நடுவிலிருந்தே பரவியது. கடவுள்மீது அவர்கள் நம்பிக்கை கொண்டிருந்தது மாசிதோனியாவிலும, அக்காயாவிலும் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் பரவியது. நம்பிக்கையினால் ஆட்கொள்ளப்படும் மக்கள் நற்செய்திப் பணியின் தூதுவர்களாக மாற ஆரம்பிக்கின்றனர் என்று கூறும் இவ்வாசகத்திற்கு செவிமடுப்போம்.

மன்றாட்டுக்கள்
  1. அன்பின் இறைவா, உம் அன்பு திருச்சபையை காத்து வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், குருக்கள், திருத்தொண்டர்கள், துறவறத்தார், அனைவருக்கும் உடல் உள்ள சுகத்தை தந்து திருச்சபையை திறம்பட வழிநடத்த தூய ஆவியானவரின் அருட்கொடைகளை நிறைவாகப் பொழிந்து தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களை அன்பிலும், விசுவாசத்திலும், ஞானத்திலும், ஆன்மீகத்திலும் அழைத்து செல்ல வேண்டிய அருளை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. வழியும் உண்மையுமான இறைவா, எம் நாட்டை ஆளும் தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். பணம், பட்டம, பதவி என்று தங்களுடைய விருப்பத்தை தேடாமல், மக்களின் தேவைகளையும் எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி நாட்டில் பல்வேறு நலன்களை அவர்களுக்கு கொடுத்து வாழ்வில் முன்னேற்றம் அடையவும, அன்பு செய்து வாழ வேண்டிய நலன்களை தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. அன்பு இறைவா, எம் பங்கு மக்கள் அனைவரும் இறையன்பு, பிறரன்பு இவற்றில் நாளும் வளர்ந்து இறைபக்தியில் சிறந்து விளங்கிட தூய ஆவியை நிறைவாகப் பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  4. இந்த சினனஞ்சிறு குழந்தைகளுக்கு செய்தபோதெல்லாம் என்கே செய்தீர்கள் என்று மொழிந்த இறைவா, எம் பங்கில் உள்ள சிறுவர் சிறுமியர்கள் அனைவரும் படிப்பிலும், நல்லொலுக்கத்திலும் சிறந்து விளங்க வேண்டுமென்றும்,  இளைஞர்கள், இளம்பெண்கள் அனைவரும் தங்கள் எதிர்கால வாழ்வை தன் கண்முன் கொண்டு எப்போதும் உமக்கு ஏற்ற பிள்ளைகளாக வாழ தேவையான அருளைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்

உறவாடும் தெய்வம் உணவாக வந்தார்

என் நெஞ்சம் இனிதாகப் பாடும்

கார்மேகம் காணும் மயிலாக நானும்

என் நாவில் ஆனந்த ராகம்

உணவாய் வந்த தெய்வம் - என்

உள்ளம் கவர்ந்த தெய்வம்

உள்ளம் கவர்ந்த தெய்வம் - என்

உணவாய் வந்த தெய்வம்


1. எழில்கொண்ட மன்னா உன் மணக்கோலம் காண

விளக்கோடு உனைத் தேடினேன்

விழி இரண்டும் ஏங்க நேரங்கள் நீள

நான் இங்கு உளம் வாடினேன்

வாராயோ நெஞ்சம் தாராயோ தஞ்சம் ஆ

உனக்காக நான் வாழ்கிறேன்

உன் அன்பில் ஒன்றாகிறேன்


2. பல வண்ணப் பட்டோடும் ஒபீர் நாட்டுப் பொன்னோடும்

நான் என்னை அழகாக்கினேன்

மன்னா நீ காண மகிழ்வென்னை ஆள

உனக்காக யாழ் மீட்டினேன்

வாராதோ இன்பம் நீங்காதோ துன்பம் ஆ

உம் மாண்பு நிறைவானது

உம் மாட்சி நிலையானது

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா

எடுத்து வருகிறேன் கொடுத்து மகிழ்கிறேன் ஏற்றிடு என்இறைவா

உன் திருப்பலி பீடம் அர்ச்சனை மலராய் மலர்ந்திட அருள் புரிவாய்.

1.

உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா

உழைப்பின் கனியிது உமக்கென தந்தேன் ஏற்றிடு என் இறைவா

உமக்குகந்த பலியில் பலிப்பொருளாய் தினம் தருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

2.

ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட ஏற்றிடு என் இறைவா

ஏழை எளியோர் வறியோர் வாழ்ந்திட ஏற்றிடு என் இறைவா

துயர் துடைத்திடும் கரமாய் பணிவிடைபுரிய வருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

3.

உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட ஏற்றிடு என் இறைவா

உண்மையும் நீதியும் உலகினில் நிலைத்திட ஏற்றிடு என் இறைவா

தினம் அழிந்திடும் மனிதத்தில் விடியலை கண்டிட வருவேன் ஏற்றிடுவாய்


எனை தருவேன் ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

வருவேன் ஏற்றிடுவாய்

என் இறைவா ஏற்றிடுவாய்

உனக்கென நான் தரும் காணிக்கையை

 உனக்கென நான் தரும் காணிக்கையை

உவப்புடன் ஏற்பாய் என் இறைவா - 2

பலியென எனை நான் தருகின்றேன் - 2 - உன்

பதமலர் பணிந்து மகிழ்கின்றேன் - 2


1. உழைப்பின் கனி இது உனக்காக

உன்னருள் கொடைகளின் பலனாக - 2

படைத்தவன் கரங்களில் மகிழ்வாக - 2 - உன்

படைப்பினில் சிறந்ததை தருகின்றேன் - 2


2. உடல் பொருள் ஆவி உனக்காக

உன் பணி புவிதனில் நிறைவாக - 2

மடிந்திடும் மனிதத்தின் விளக்காக - 2 - நான்

மகிழ்வுடன் என்னையே தருகின்றேன் - 2

எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே Lyrics

எனக்குள்ளே உறவாடும் என் தெய்வமே
உன் நினைவில் நான் என்றும் உயிர் வாழ்வேனே
உன் பாதச் சுவடுகளில் என் பயணம் தொடர
நீயாக எனை மாற்றும் என் நேசமே
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
உன் அன்பே தூய்மையானது என்வாழ்வில்
உன் அணைப்பே உயர்வானது - 2
வாழ்வின் எதிர்ப்புகளில் கலங்கிடமாட்டேன் -2
நம்பிக்கையின் தீபமாய், நீ இருக்கின்றாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே
உன் அருளே மேலானது என் வாழ்வில்
உன் உறவே மாறாதது
உனக்காக நான் என்றும் காத்திருப்பேன்
நிழலாக எனை என்றும் நீ தொடர்வாய்
உன்னோடு நான் சங்கமிக்கும் வேளையிலே..
ஆனந்தம் என் வாழ்வில் என்றுமே

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.

நெஞ்சே நீ ஆண்டவரை வாழ்த்து 
அவர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே.

.உன் பாவங்கள் மன்னித்திடுவார் உன் நோய்களைக் குணமாக்குவார் 2
உன் உயிரை அழிவிலின்று மீட்டு காத்திடுவார் 2
கருணையம் இரக்கத்தையும் முடியாக சூட்டிடுவார் 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

நன்மைகளால் உன் வாழ்வை நிறைவுபெற செய்கின்றார் 2
உன் இளமை கழுகின் இளமை போல் நாளும் புதுப்பிக்கின்றார் 2
நீதியான செயல்களையே எந்நாளும் செய்கின்றார். 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

தம்வழியை வெளிப்படுத்தி மாட்சிமையைக் காணசெய்கிறார் 2
மண்ணினின்று விண்ணளவுயர்ந்த பேரன்பில் ஆட்க்கொள்வார் 2
வயல்வெளி மலரெனவே எந்நாளும் மலரச்செய்வார் 
நன்றி நன்றி நன்றி என்று பாடுவேன் 
நன்மை செய்த நல்லவரை போற்றுவேன்

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது Lyrics

வசந்தமாய் விடியல் புலர்ந்திடும் பொழுது 
வாருங்கள் இறைகுலமே
நிறை வாஞ்சை மனதுடன் விண்ணக தேவனை 
வழிபட வாருங்களே
இறை அருட் தரும் பலியிது ஆதவன் ஒளியிது
அர்ப்பணமாகிட வாருங்களே 
திருப்பலியினில் கலந்திட கூடுங்களே

வறண்ட மணலாய் வாடி தவித்திடும்
வாழ்வினில் மகிழ்ச்சி பொங்கிடும் பலியிது (2)
மாபெரும் தவமாய் மானுட நேசம்
மனங்களில் என்றும் மலர்ந்திடும் பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

எங்கும் நிறைந்த தந்தை வழிசெல்ல
வார்த்தையை வழங்கிடும் வாழ்வின் பலியிது (2)
ஆறுதல் இன்றி அலைந்திடும் உலகில்
தேற்றுதல் தந்திடும் தெய்வீக பலியிது (2)
மூவொரு இறைவனை இதயத்தில் ஏந்தி
வணங்கியே மகிழ்வோம் இறைகுலமே - 2
தினம் சாட்சியாய் திகழ்வோம் திருக்குலமே

அன்பில் கனிந்த வந்த அமுதே Lyrics

அன்பில் கனிந்த வந்த அமுதே
சிந்தை மகிழ் உறவே தந்தை தரும் உணவே
உனக்காக நான் ஏங்கி தவித்தேன்
எனில் வாழும் உணவாக அழைத்தேன்

விருந்தாக வரும் தேவன்
உனை காண்கையில்
வரும் தாகம் பசியாவும் பறந்தோடுதே
மறந்தாலும் மறவாத உனது அன்பையே
இருந்தாலும் இறந்தாலும் மனம் தேடுதே
பசியாற பரிவோடு அழைக்கின்றேன் வா
இசையோடு தமிழ் சேரும் சுவை காணவே
உனைத்தேடி உனை நாடி நிறைவாகுவேன்
உன்னில் உருவாகுவேன்

என்னோடு நீ கொண்ட உறவானது
எந்தன் உயிர் போன பின்னாலும் விலகாதது
என் மீது நீ கொண்ட அன்பானது - அது
தினந்தோறும் பலியாக அரங்கேருது
இறைவா என் இறைவா என் அகம் வாருமே
இதயம் என் இதயம் உன் அருள் காணுமே
இறையாட்சி சமபந்தி உருவாகுமே
மண்ணில் உருவாகுமே

மாறாதது உன் பாசமே மறையாதது உன் நேசமே lyrics

மாறாதது உன் பாசமே மறையாதது உன் நேசமே
மாறாதது மாறாதது மாறாத உன் பாசமே
மறையாதது மறையாதது மறையாத உன் நேசமே
நிலையானது நிஜமானது நெஞ்சத்தில் நீங்காதது
என் நினைவெல்லாம் நிழலாடுது

1. என் அன்னையின் கருவில்
என்னை நீ என்னை நீ தெரிந்தெடுத்தாய்
உன் கண்ணின் கருவிழிப் போல்
கருத்தாய் கருத்தாய் காத்து வந்தாய்
எனை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டாய்
உன் தோளில் சுமந்து நடந்து வந்தாய்
வாழ்வு முழுவதுமே இனிக்கச் செய்தாய்
வானின் மழையெனவே நின் அருளைப் பொழிந்தாய்
உன் பாசம் மாறாதது உன் நேசம் அழியாதது

2. என் உறவென்னை வெறுக்க
உறவாய் உறவாய் நீ வந்தாய்
நான் உன்னோடு இருப்பேன்
என்று நீ மட்டுமே உறுதி தந்தாய்
என் பயணம் முழுதும் தொடர்ந்து வந்தாய்
என் களைப்பு போக்க உன் மடியைத் தந்தாய்
துன்பமில்லா வாழ்வைத் தந்தாய்
இன்பம் காணும் உலகம் தந்தாய்

ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே Lyrics

என் இனிய இயேசுவே
நீர் என்னில் இருப்பதனால்
நான் அஞ்சாமல் நடந்திடுவேன்

ஆண்டவரே
என் ஆன்மாவின் ஆயனே 
என்னை காக்கும் இனிய
மேய்ப்பனே
உன் அன்பை பாடுகிறேன் -2
நிறைகள் நான் கண்டேன் 
குறைகள் இனி இல்லையே
வசந்தம் நான் கண்டேன்
வாழ்வில் பயம் இல்லையே

பசும்புல் மேய்ச்சலில் 
இளைபாற செய்தீர்
வாழ்வில் வசந்தம் 
மலர்ந்திட கண்டேன் 
அமைதியில் நீர் நிலை
புத்துயிர் அளித்திட 
என்னை அழைத்தீர் 
நீதியின் வழியினிலே 
சாவின் இருளினிலே 
பள்ளதாக்கின் நடுவினிலே 
நான் என்றும் அஞ்சாமல் 
நடந்திடுவேன்
நீர் என்னில் இருப்பதனால் 

எதிரிகள் காண
விருந்தொன்றை செய்தீர்
வளங்கள் வாழ்வில்
நிறைந்திட கண்டேன்
தலையில் நறுமண
தைலம் பூசினீர்
என் பாத்திரம் நிரம்பி
வழிய கண்டேன்
உந்தன் பேரன்பிலே
அருளும் நலம்பெறவே
நான் என்றும் அஞ்சாமல்
நடந்திடுவேன்
நீர் என்னில் இருப்பதனால்

அன்பு தீபம் இதயம் ஏந்திச் சங்கமமாவோம் lyrics

அன்பு தீபம் இதயம் ஏந்திச் சங்கமமாவோம்
அன்பர் இயேசு பலி இணைந்து சரித்திரமாவோம் -/1
அருள்நதிப் பாயும் இந்தத் திருப்பலிதனிலே
அரும்பெரும் பலியாய் நமது தியாகப் பணிகளை
அர்ச்சனைப் பூவாய் அர்ப்பணமாக்கி அர்த்தங்கள் காணுவோம் -/1 (அன்பு-1)

1.வார்த்தை வழியிலே வாழ சொல்லவதும்
வாழும் வாழ்விலே வரங்கள் பொழிவதும் -/1
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் -/2
நன்மைநெறியிலே நம்மை பகிரவும்
நாளும் நம்மக்குள்ளே நம்பிக்கை வளர்ப்பதும் -/1
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் -/2
இறைவனே தம்மையே இறைவனே தம்மையே மனிதர்க்கு அளிக்கும்
இணையற்ற பலியின் புனித நிகழ்விலே -/1 (அன்பு-1)

2.நேர்மை உணர்விலே நெஞ்சம் துடிப்பதும்
நேயப் பணியிலே நம்மை இணைப்பதும் -/1
இந்த பலி இறையின் பலி இணையிலாதப் பலிதான் -/2
மன்னிக்கும் மனதிலே மகிழ்வைப் பொழிவதும்
மாந்தர் உறவிலே ஒன்றிக்கச் செய்வதும் -/1
இந்த பலி இறையின் பலி இணையிலாதப் பலிதான் -/2
அப்பமும் இரசமுமே அப்பமும் இரசமுமே இறை உயிராகும்
அற்புதங்கள் நிகழ்த்தி நமை மறை உடலாக்கும் -/1 (beginning)

இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள் lyrics

இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள்

இறையரசின் உணவிது பகிர்ந்து கொள்ளுங்கள் (2)
வருவோம் சமத்துவ உறவிலே
பெறுவோம் இறைவனின் அருளையே (2)

1. பாலை நிலத்திலே பசியைப் போக்கவே
மண்ணில் வந்தது மன்னா உணவு (2) இங்கு
வாடும் மக்களின் துயரைப் போக்கவே
தேடி வந்தது இந்த தெய்வீக உணவு - வருவோம்...

2. இறுதி இரவிலே இயேசு தந்த உணவு
விடுதலையைத் தந்திட பலியான உணவு (2) இன்று
வீதி எங்குமே வாழ்வு மலர்ந்திட
ஆற்றலாகிடும் இந்த உயிருள்ள உணவு - வருவோம்...

இறைவன் தரும் இந்த உணவு lyrics

இறைவன் தரும் இந்த உணவு ...

இதயம் நிறைந்திடும் உணர்வு ...
இறைவன் தரும் இந்த விருந்து ...
இதுவே அகமருந்து......(2)

என் வாழ்வும் ........ என் இயேசுதான் ....
என் வழியும் ..........என் இயேசுதான் ....
என் உயிரும் .......... என் இயேசுதான் என்றும் ......(2)

இறைவன் தரும் இந்த உணவு ...
இதயம் நிறைந்திடும் உணர்வு ...
இறைவன் தரும் இந்த விருந்து ...
இதுவே அகமருந்து....

தனிமையில் இருந்தால் கூட ...
உம்; உணவே உரமாகும்; ...
நான் துயரினில் விழுந்தால் கூட ...
உன் கரமே துணையாகும் ...(2)

இருளில் நானும் நடந்தாலும் ...
ஒளிப்பிழம்பாய் அருகே இருக்கின்றாய் ...(2)
சுமைகளுமே சுகமாகும் ...உந்தன்
வரவே வரமாகும் ...

எனைத் தேடி வந்தாயே .....
நலன்; யாவும் தந்தாயே .....
நல் வரமாய் வந்தாயே .....
புது வாழ்வைத் தந்தாயே .....(2)

இறைவன் தரும் இந்த உணவு ...
இதயம் நிறைந்திடும் உணர்வு ...
இறைவன் தரும் இந்த விருந்து ...
இதுவே அகமருந்து....

உன்னில் கலந்திடும்போது ...
நான் என் நிலை அறிந்து கொண்டேன் ....
உம்மை ஏற்றிடும் போது ....
நான் பிறரை அன்பு செய்தேன் ....

உலகே என்னை எதிர்த்தாலும் ...
நீ இருப்பதால் எனக்கு பயமில்லை ...
பேச்சினிலும் மூச்சினிலும்
உந்தன் சாட்சியாய் எழுந்திடுவேன் ...

என் தேடல் நீர்தானே ...
என் ஆவல் நீர்தானே ...
என் பாதை நீர்தானே ...
என் பயணம் நீர்தானே ...

இறைவன் தரும் இந்த உணவு ...
இதயம் நிறைந்திடும் உணர்வு ...
இறைவன் தரும் இந்த விருந்து ...
இதுவே அகமருந்து....