அஞ்சலி


என் தெய்வமே உனக்காகும் அஞ்சலி – 2
தீபாஞ்சலி, மலரஞ்சலி தூபாஞ்சலி


தீமையினை எரிக்கின்ற நெருப்பே
இருளினை அழிக்கின்ற விளக்கே
பொய்மையை ஒழிக்கின்ற வாய்மையே
மெய்மையில் நடத்துவாய் தீபாஞ்சலி

நிதம் காலை மலர்கின்ற மலரே
நுகர்வோரை மகிழ்விக்கும் மணமே
நிலையற்ற வாழ்வுக்கு சாட்சியே
நிறைவினை அருள்வாயே மலரஞ்சலி

நறுமணம் தருகின்ற தூபமே
நாதனின் பூஜைக்கு உதவும்
நலம் பல வழங்கும் நல்தேவன்
பணிக்காக வருகின்றோம் தூபாஞ்சலி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக