ஒளியானவா உயிரானவா


ஒளியானவா உயிரானவா மன்னவன் நீயே
ஒன்றானவா உருவானவா நின் மலர் பாதத்திலே
எனைமறந்து உனையடைந்து எழிலடைந்திட பாடுகின்றேன்


1.
உனக்காக என் ஜீவன் உயிர்வாழுது
உலகில் நான் உனைக்காண துடிக்கின்றது.
உன்பார்வை நிதம் காண மனம் ஏங்குது – 2
நாளும் பொழும் நீ எனில் வளர
நானிலமெங்கும் நின் மனம் கமழ
உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனைமறந்து பாடுகின்றேன்

2.
உள்ளங்கள் நிதம் தேடும் மகிழ்வானது
உறவில் உன் உறவே சுகமானது
உன்நெஞ்சம் எனக்கென்றும் மடியானது - 2
நீயேதானே நினைவினில் மலர
நின் உயிர்தானே எனில் என்றும் வளர

உயிர் கொடுத்திட துடித்தெழுந்திட எனைமறந்து பாடுகின்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக