மனிதம் எங்கே?


மனிதம் எங்கே ??????.............
இன்றைய சமூகத்தில் மனிதன் என்பவன் இருக்கிறான் என்பதை மறந்து விட்டு பணம் பட்டம் பதவியை தேடி ஒடிக்கொண்டிருக்கிறான் மனிதன். இன்றைய சமூதாயத்தில் திரைப்பட ரசிகர்கள் ஆயிரம் ரூபாய் செலவு செய்து திரைப்பட பேனல்களுக்கு பாலாபிஷேகம் செய்வார்கள் ஆனால் பசிக்கும் ஓர் குழந்தைக்கு பத்து ரூபாய்க்கு பால் வாங்கி தரமாட்டார்கள்.

இன்று ஜாதி பெயரை சொல்லிக்கொண்டு ஒருவன் மற்றவனை அடிமைப்படுத்தி வாழ்ந்துக்கொண்டிருக்கிறான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய ஜாதிக்கு கொடுக்கும் முன்னுரிமையை மனிதனுக்கு கொடுப்பதில்லை.

இன்றைய தீர்ப்புகள் எப்படி தீர்மானிக்கப்படுகின்றன?  100 ரூபாய் திருடியவனோ சிறையில் துன்புறுகிறான். ஆனால் 100 கோடி திருடியவனோ அடுக்கு மாடி குடியிருப்பில் உல்லாசமாக வாழ்ந்துக் கொண்டிருக்கிறான்.

கடந்த ஆண்டு செய்தித்தாளில் வந்த சில செய்திகள்:

  • மேற்கு வங்களத்தில் ஒரு திருடனை ஒரு போலிஸ்காரர் தனது இரு சக்கர வாகனத்தில் அந்த திருடனின் கையை கட்டி அதை தன் வாகனத்தோடு இணைத்து நடு ரோட்டில் இழுத்துச் சென்றுள்ளார். இங்கு மனித நேயம் மதிக்கப்படவில்லை.
  • சொத்துக்காக ஆசைப்பட்டு வைஷ்னவி என்னும் சிறுமியை அணு உலையில் எரித்து கொன்றுள்ளனர்.
  • ஆதித்தியா என்னும் சிறுவன் பூவரசி என்னும் பெண்ணின் கள்ளக்காதலுக்கு பலியானான்.

தீவிரவாதி தன் கொள்கைக்காக தன் உயிரை அழித்து பல பேரையும் கொன்று குவிக்கின்றானே இது மனிதமா ? அல்லது இராணுவ வீரர் நாட்டிற்காக தன் உயிரையே கொடுக்கின்றானே இது மனிதமா ?
ஜாதி பெயரைச் சொல்லிக்கொண்டு ஒருவர் மற்றவரோடு  சண்டை போடுவது மனிதமா ? அல்லது அன்னை தெரசாளைப் போல பிறரை அன்பு செய்வது மனிதமா? 

நாம் எப்போது மற்றவர்களை அன்பு செய்ய தொடங்குகின்றோமோ அப்போது தான் மனிதம் மலரும்.
நாம் அனைவரும் மற்றவர்களை இனியாவது அன்பு செய்ய தொடங்குவோம். 

- Bruceline Binith, II Year BBA, Annai College, Kumbakonam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக