நண்பன்


நமது சமூக உறவுகளில் பணத்திற்கு உறவு கொண்டாடும் சுற்றத்தை விட குணத்திற்கு உறவு கொண்டாடும் நண்பர்கள் நல்லவர்கள். ஏனென்றால் நண்பன் மட்டும் தான் சுகங்களில் மட்டுமல்லாமல் துக்கங்களிலும் பங்கேற்பான். நட்பு என்பது இன்பத்தை இரட்டிப்பாக்க வேண்டியது துன்பத்தை பாதியாக்க வேண்டியது. 

ஆனால் இன்றய நட்பு என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருக்கின்றார்கள. ஏனென்றால் தனது நண்பனின் மகிழ்ச்சியான நேரங்களில் மட்டும் இருந்து விட்டு செல்கின்றனர். இதற்கு சிறந்த எடுத்துகாட்டு எதுவென்றால் நமது திருவிவிலியத்தில் “ஊதாரி மகனின் ஊமையில் தனக்கு சேரவேண்டிய சொத்தினை அப்பாவிடம் கேட்டு பிரித்து எடுத்து கொண்டு செல்லும்போது தனது நண்பர்களுடன் சேர்ந்து அனைத்து பணத்தையும் தாறுமாறாக செலவு செய்து விட்டு கையில் காசுயில்லாமல் இருக்கும் போது நண்பர்கள் அனைவரும் ஓடிச்சென்றுவிடுவார்கள். ”

இன்றைய காலத்தில் இப்படிபட்ட நண்பர்களே காணப்படுகின்றனர். சிலரிடம் உனது துன்பத்தைச்சொல்லாதே அவர்கள் தரும் ஆறுதலை விட அவர்கள் அடையும் ஆனந்தமே அதிகம் என்ற சத்தான வாசகம் சத்தியமான வாசகம் ஆகும். 

போலி நட்புகள் என்றும் அகத்துக்குள் சென்று ஆணிவேர் பிடிப்பதில்லை அவை அலைமோதும் எழுத்துக்களைப் போல் அழிந்தே விடுகின்றனர்.  எனவே நண்பர்களை நாம் தேர்ந்தெடுப்பதிலே தான் இருக்கின்றது. ஏனெனில் பட்டபகலில் நிலவு காய்கின்றதே என்று ஒருவன் சொன்னால் ஆமாம் நட்சத்திரங்களும் அழகாகயில்லை என்பவன் எல்லாம் நண்பனில்லை. 

ஆனால் உண்மையான நண்பன் அடி மனத்தின் கனங்களை வாங்கிக் கொள்வதன் முலம் 100 மருத்துவர்கள் செய்ய முடியாத சிகிச்சையைச் செய்து விடுகிறான். இப்படிபட்டவர்களே உண்மையான நண்பர்கள் ஏனெனில் உன்னைப்பற்றி உன்னை விட உன் நண்பனே நன்றாக அறிந்தவன். 

நமது திருவிவிலியத்தில் இயேசு கிறிஸ்து “தன் நண்பனுக்காக உயிரை கொடுப்பதை விட மேலான அன்பு யாரிடமும் இல்லை”.  ஒரு பெண்ணிடம் கொள்ளும் காதல் கூட சதைவசப்பட்டது. ஆனால் நட்பு முழுக்க முழுக்க மனவசப்பட்டது. நல்ல நட்பிற்கு தேற்பிறையே கிடையாது. 

உனது குற்றங்களை உனக்கு மட்டுமே சுட்டிக்காட்டி மற்றவர்களிடம் மறைந்து விடுகிறவனே நம்ப தகுந்த நண்பன். ஆகவே நமக்கு தகுந்த நண்பனை தேர்ந்துகொண்டு வாழ்வில் வளர்ச்சியடைய வேண்டும். நல்ல நட்பு என்பதை ஆராய்ந்து கொள் பிறகு வாழ்க்கையின் எல்லை வரை வருவதாய் -நல்ல நட்பை நீ தேர்ந்துக் கொள்…

- அன்புராஜ், முதல் ஆண்டு இளங்கலை வரலாறு, கும்பகோணம் அரசினர் கல்லூரி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக