ஓ மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே


ஓ மகா மதுரம் பொருந்திய நல்ல இயேசுவே அடியேன் சாஷ்டாங்கமாய் விழுந்து என் கைகளையும் கால்களையும் துளைத்தார்கள் என் எலுமபுகளை  எண்ணினார்கள் என்று தேவரீரை பற்றி முன்னால் தாவீது தீர்க்க தரிசி உமது  வாயின் வாக்கியமாக வாசித்ததை என் கண் முன்பாக கண்டு தேவரீருடைய ஐந்து திருக்காயங்களையும் மிகுந்த மன வருத்ததேடும் துக்கத்தோடும் என் உளளத்தில்; தியானிக்கும் இன்நேரத்தில் திடமான விசுவாசம் நம்பிக்கை தேவசிநேகம் ஆகியவற்றையும் என் ஆத்மத்திற்கு மேலான மனஸ்தாபத்தையும் அவற்றிற்கு மேலான பிரதிக்கினைகளையும் என் உள்ளத்;தில் பதிய செய்தருள வேண்டுமென்று எம் திருமகனாகிய இயேசுகிறிஸ்து வழியாக உம்மை பார்த்து மன்றாடுகின்றோம்.        ஆமென்;;. 

என் ஆண்டவரே என் முமு சுதந்தரத்தை ஏற்றுக்கொள்ளும் என் ஞானம் புத்தி சுயம் யாவற்றையும் ஏற்றுக்கொள்ளும், ஏனெனில் அவை யாவும் நீர் எமக்கு அழித்தவையே இவற்றை எல்லாம் நான் உமக்கே திருப்பி கொடுத்து விடுகிறேன். உமது திருவுலப்படி என்னை நடத்தியருளும் அப்போது நான் செல்வந்தனாய் இருப்பேன்; வேரொன்றையும் விரும்பமாட்டேன்.......               ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக