Xmas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Xmas லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

இடையர்கள் தந்த காணிக்கை போல

 இடையர்கள் தந்த காணிக்கை போல

இருப்பதை நானும் எடுத்து வந்தேன்

கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்

கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)

இயேசு பாலனே ஏற்றிடுமே

நேச ராஜனே ஏற்றிடுமே (2)


1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க

அடிமையின் தன்மையை எடுத்தவனே

உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து

மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) - இயேசு...


2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து

நிம்மதி தந்திட வந்தவனே

வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல

மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) - இயேசு...

பெத்தலையில் பிறந்தவரை

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்
2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக ௦ - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்

இயேசு பிறந்த நாளிது


இயேசு பிறந்த நாளிது வானம் மகிழ்ந்து ஒளிருது
காலம் கனிந்த காலையில் கடவுள் தந்த கொடையிது

மணமில்லாத மலரை போல்
இசையில்லாத பறவைப் போல் (2)
அருளில்லாத பாருலகம் அடைந்த துயரம் மாறவே – 2

துள்ளி மகிழும் குழந்தையே
உள்ளம் கொள்ளை கொண்டதே (2)
உந்தன் அன்பின் வரவிலே

விண்ணும் மண்ணும் இணைந்ததே – 2
தொழுவில் தவழும் பாசமே கடவுள் தந்த திருமொழி – 2
சிந்தை குளிரும் பூமுகமே உலகை ஒளிரச் செய்யுமே – 2

குடிலினில் பிறந்த இறை மகனை


குடிலினில் பிறந்த இறைமகனை
குழந்தையாக வந்தவனை (2)
விண்ணில் வாழ்பவர் புகழ்ந்து பாடுவார்
மண்ணில் வாழ்பவர் மகிழ்ந்து காணுவார் (2)

மன்னாதி மன்னரெல்லாம் எண்ணங்கள் கொண்டிருந்தார்
தம் வீட்டில் பிறப்பாரென்று (2)
மாளிகை தேவையில்லை மண்வீடு போதுமென்று
குடிலினில் பிறந்து வந்தார் (2)

விண்மீன் வழிசெல்ல முன் வந்த ஞானியர்கள்
குடில் தன்னை அடைந்தார்களே (2)
பொன் தூபம் வெள்ளைப்போளம் பரிசாகக் கொண்டுவந்து
பணிந்தங்கு வணங்கி நின்றார் (2)

O come, let us adore Him

O Come All Ye Faithful
Joyful and triumphant,
O come ye, O come ye to Bethlehem.
Come and behold Him,
Born the King of Angels;
O come, let us adore Him,
O come, let us adore Him,
O come, let us adore Him,
Christ the Lord.
Adeste, fideles, laeti triumphantes;
Venite, venite in Bethlehem.
Natum videte Regem angelorum.
Refrain
Venite adoremus, venite adoremus,
Venite adoremus, (Dominum) Christ the Lord.

Sing, choirs of angels, Sing in exultation;
O Sing, all ye citizens of heaven above!
Glory to God, In the highest;
O come, let us adore Him,
O come, let us adore Him,
O come, let us adore Him,
Christ the Lord.

(Air: O Come All Ye Faithful)
-Same tune in Tamil
1.
வாரும் இறைமாந்தரே! ஆனந்தமே பொங்க!
வாரும், வாரும் பெத்தலெகெம் ஊர் அண்மையிலே
பாரும் விண்துதர் மன்னர் மானிடனா னாரே!
வாரும் ஆராதிப்போம் யாம் (2)
வாரும் ஆண்டவரை யாம் ஆராதிப்போம்!

2.
காவல் ஆயர் கேட்டனர் நள்ளிரா நற்செய்தி
''மாவல்லபர் முன்னிட்டியில் வரிந்தாரே!''
ஏவல் விட்டேகிச் சென்றார் பாலனைக் காணவே
வாரும் ஆராதிப்போம் யாம்....

3.
வானோர் கிதம் பாடவே கீழ்திசையில் ஞானி
ஆனோர், விண்மீன் பின் பொன், துபம், மீரையுடன்
போனோரைக் கண்டோம்; நாமிம் சேர்ந்து ஆராதிப்போம்
வாரும் ஆராதிப்போம் யாம்...

Silent night, holy night

Silent night, holy night!
All is calm, all is bright.
Round yon Virgin, Mother and Child.
Holy infant so tender and mild,
Sleep in heavenly peace,
Sleep in heavenly peace.
Silent night, holy night!
Shepherds quake at the sight.
Glories stream from heaven afar
Heavenly hosts sing Alleluia,
Christ the Savior is born!
Christ the Savior is born.

Silent night, holy night!
Son of God love's pure light.
Radiant beams from Thy holy face
With dawn of redeeming grace,
Jesus Lord, at Thy birth.
Jesus Lord, at Thy birth

(Air: Silent night)
-Same tune in Tamil
1.இராவினில் தூய்மையில் எங்கும் சேர் ஜோதியில்
பேரமைதி வேளையினில் கன்னித்தாயின் அன்பனைப்பில்
பாலா கண்ணுறங்காய், பாலானே கண்ணுறங்காய்

2.இரவினில் தூய்மையில் தூதரின் கீத்த்தில்
வானவீதீயின் கானத்தில் ஆயர்வந்திடும் நேரத்தில்
பாலா கண்ணுறங்காய், பாலானே கண்ணுறங்காய்

3.இரவினில் தூய்மையில் தேவசெய் அன்பொளி
தந்தைசொல் மனிவாகிடவே விந்தைசொல் நிறைவேறிடேவ
மாந்தர் மீட்படைந்தார் மாந்தரும் மீட்படைந்தார் !

கிறிஸ்துமஸ் பாடல் - ஆரிராரிரோ

ஆரிராரிரோ என் கண்ணே நீ தூங்கு- என்
அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்கு


1
அழியாத ஆன்மாவின் விருந்தாகவே
என்னில் எழுந்தே நீ வா- உன்
ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவே
என்னில் இசை பாடவா
கண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன்
தெய்வமே செல்வமே
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ

2
அழகான ஆன்மாவில் வருகின்றவர்
என்னை உருவாக்கவா- நல்
அணையாத தீபமாய் திகழ்கின்றவா
ஆன்ம ஒளி ஏற்றவா
சிறு திரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன்
தெய்வமே செல்வமே!
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ

கிறிஸ்துமஸ் பாடல் - புத்தம் புதிய மலரே

புத்தம் புதிய மலரே இந்த
புவியில் உதித்த நிலவே
புதிய உலகின் விடிவே எங்கள்
இதயம் தேடும் மகிழ்வே(2)
ஆராரோ ஆரிரரோ ஆரிரராரோ(2)


1
என்றும் வாழும் இறைமகனே உலகில் வந்தாயே
இன்று எங்கள் உடன் பிறப்பாய் மாறிவிட்டாயே(2)
கண்ணின் மணியே கனியமுதே கண்வளராயோ(2)
அன்பின் மகிமை உணர்ந்த எம்மை அன்பில் இணைப்பாயோ
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம்
மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2)

2
ஈழவானில் எழும் கதிரே எங்கள் நம்பிக்கையே
தாழ்த்தப்பட்டோர் தவித்து நிற்போர் வாழ்த்தும் உன் வரவே(2)
துன்ப துயரம் துடைக்க வந்த கடவுளின் கரமே(2)
உளமகிழ்வே இகம் முழங்கும் இன்னிசை சுரமே
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம்
மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2)

கிறிஸ்துமஸ் பாடல் - பூத்தது பார் புதுப்பொழுது

பூத்தது பார் புதுப்பொழுது பூமகன் வரவினிலே- இதை
பூமி எங்கும் முழங்கிடவே புறப்படு இறைகுலமே- நம்
இயேசுவின் பிறப்பினிலே புது வாழ்வும் மலர்ந்திடுமே
இனிஎல்லான் நலம்தானே பல வளங்களும் பெருகிடுமே
லல்லல்லா........


1
இறைமகன் யேசு பிறந்தார்- ஏழை
எளியவர் மகிழ்வு கண்டார்
மாபரன் இன்று பிறந்தார்- நம்
பாவங்கள் போக்க வந்தார்
இருளை நீக்க வந்தார்- அருள்
ஒளியை ஏற்ற விளைந்தார்
விண்ணும் மண்ணும் இணைய- அதில்
இறைவன் புனிதம் கமழ
‌பாலன் இயேசு நம் மனங்களில்
சிரிப்பார் மகிழ்வாய் மனமே

2
அன்புருவானவர் வந்தார்- மண்ணில்
மனிதனாகப் பிறந்தார்
அமைதியின் தூதன் பிறந்தார்- நம்
அகமதில் நிறைவு தந்தார்
பாசம் பரிவு கொண்டார்- நம்
பாவம் யாவும் சுமந்தார்
நம்மில் ஒருவரானார்- நம்
இன்பம் துன்பம் பகிர்ந்தார்
பாலன் இயேசு நம் மனங்களில்
சிரிப்பார் மகிழ்வாய் மனமே

கிறிஸ்துமஸ் பாடல் - மார்கழியில் உதித்த மன்னவனே

மார்கழியில் உதித்த மன்னவனே உன்
மகிமையைத் துறந்து மண்ணகம் வந்தாய்
மனிதத்தை இழந்த இம்மண்ணில் நீ
மனுவாய் மலர்ந்து விந்தையுமானாய்


1
வருந்தியே உழைத்தும் வறியவரானோர்
உண்மையில் நடந்தும் ஊர்பழி சுமந்தோர்
அன்புக்கு பணிந்து அவமானம் அடைந்தோர்
அவனியை மாற்ற அடி உதை ஏற்றோர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

2
புனிதத்தில் வாழ்ந்து மனிதத்தை மறந்தோர்
செல்வத்தில் திளைத்து செருக்குடன் வாழ்ந்தோர்
அரியணை ஏறி அடக்கியே ஆள்வோர்
அணு ஆயுதத்தால் அகிலத்தை அழிப்போர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

கிறிஸ்துமஸ் பாடல் - நமக்காய் ஒரு குழந்தை

நமக்காய் ஒரு குழந்தை- இந்த
நானிலம் தவழ்ந்தது
நலிந்த நிலை மாறும் என்னும்
நம்பிக்கை மலர்ந்தது
ஆராரோ கண்ணுறங்கு உந்தன் ஊரேதோ கண்ணுறங்கு
விண்ணகமோ மண்ணகமோ இல்லை
இரண்டும் உந்தன் பிறந்தகமோ


1
வானின் தூதர்களே இன்று
வாழ்த்து பாடுங்களேன்
விண்ணகத்தில் என்றும் மகிமைதான்- ஆனால்
மண்ணகத்தில் அமைதி எங்கே
மாடடை குடிலில் பிறந்தவனே இந்த
மானிடர் நடுவில் பிறந்தாலென்ன
‌ஆடுகளே மாடுகளே நீங்கள்
மாந்தரிலும் சிறந்தவரே

2
மாந்தர் மைந்தர்கள் யாம்- எங்கள்
வாழ்க்கை எண்ணுகின்றோம்
மனித மாண்பு என்னவென்று- முற்றும்
மறந்த கூட்டம் உண்டு இங்கு
மனிதனாய் பிறந்த இறைமகனே- எங்கள்
மான்பினை எமக்கு கூறாயோ
வறுமை நோய் பிளவுகள்- இனி
வாராதிருக்கச் செய்வாயோ

கிறிஸ்துமஸ் பாடல் - பெத்லகேம் நகரிலே

பெத்லகேம் நகரிலே பூபாள ராகம் ஒன்று கேட்குதா இங்கு கேட்குதா
இடையர்கள் வியந்திட வானதூதர் பாடும் கானம் கேட்குதா உனக்கு கேட்குதா
கனவான காலங்கள் நனவாகிட பாவங்கள் சாபங்கள் மறைந்தோடிட‌
இறைமகனும் பிறந்துவிட்டார் வாருங்களே பாருங்களே


1
வார்த்தை வடிவிலே தந்தையோடு இருந்தவர் -தூய
‌ஆவியாலே மனிதன் ஆனாரே
மழலை உருவிலே நம் மன்னன் வந்தாரே -அன்னை
கன்னிமரி மைந்தன் ஆனாரே(2)
இடையர்களும் பாலகனை கண்டு களிக்கின்றார்
வேந்தர் மூவர் வான்மலரை வணங்கி மகிழ்கின்றார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்

2
மனிதன் வாழவே ஆதி சாபம் நீங்கவே- ஏழை
அடிமைக் கோலம் பூண்டு வந்தாரே
தந்தை திருவுளம் ஏற்று தம்மைத் தாழ்த்தியே- இந்த
‌தரணி மீது மழலை ஆனாரே(2)
மாந்தரெல்லாம் வாழ்வு பெற மீட்பர் பிறந்துள்ளார்
மனித நேயம் மலர்ந்திடவே மன்னன் பிறந்துள்ளார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்

கிறிஸ்துமஸ் பாடல் - கருணைக் கடலே

கருணைக் கடலே! வா
துதித்த தயாபரா! வா
சுருதி மறையோர்க்கு
சுடரொளியே வா

|
அதோனாயீ ஆனந்தமே
ஆவலுடன் காத்திருக்கும்
அடிமைகளை சந்திக்க

||
எம்மான்வேல் ஏசு நாதர்
எங்கள் பாவதோஷம் தீர
ஏன் இன்னும் வரத்தாமதம்

|||
பேய் மயக்கு பாவ வழிப்
பீடையினால் வாடும் உந்தன்
பிள்ளைகளின் மேலிரங்கி

கிறிஸ்துமஸ் பாடல் - எந்தன் நெஞ்சுகுள்ளே

எந்தன் நெஞ்சுகுள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா - இனி
அச்சம் என்பது எனக்கில்லை
வழி எங்கும் தடையில்லை தலைவா -2
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே..ஆ...ஆ...
இறையரசு நனவாகுமே....ஆ....ஆ... -2
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே -2
எந்தன் நெஞ்சுகுள்ளே -3 பிறக்கவா


|
பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்
வழிகாட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ...ஆ...
எந்தன் துணையாகுமே...ஆ....ஆ....
உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே -உந்தன் வார்த்தை

||
வாழ்க்கையை இழந்து நான் திரிந்தேன்
நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்
உந்தன் உறவானது ....ஆ...ஆ....
உயிர் துணையாகுமே..ஆ...ஆ....
உந்தன் உறவானது உயிர் துணையாகுமே -உந்தன் வார்த்தை

கிறிஸ்மஸ் பாடல் - சர்க்கரை முத்தே

சர்க்கரை முத்தே சந்தன பொட்டே
கண்ணே கண்ணுறங்கு
முத்தமிழ் சொத்தே முல்லை பூ மொட்டே
கண்ணே கண்ணுறங்கு
அன்னை மரியின் செல்வமே
விண்ணக தேவ திலகமே
கண்ணே நீயும் கண்ணுறங்கு
ஆரிராரிரோ ஆரிராரிரோ -2


கந்தையில் நீயும் மகீமை கண்டாய்
கண்ணே கண்ணுறங்கு
தந்தையின் அன்பை எமக்கு தந்தாய் (2)
கண்ணே கண்ணுறங்கு ...
மந்தையின் ஆயர்கள் தோழமை ... (2)
கொண்டாய் கண்ணே கண்ணுறங்கு
விந்தையில் வந்து வேந்தர்கள்
நின்றாய் கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ ஆரிராரிரோ -2
||
விண்ணிலே தூதர் கீதங்கள் கேட்க
கண்ணே கண்ணுறங்கு
மண்ணிலே மாந்தர் நாதங்கள் கேட்க
கண்ணே கண்ணுறங்கு
கண்கவர் விண்மீனகள் உன்புகழ் காட்ட
கண்ணே கண்ணுறங்கு
தென்றலும் மெல்லிய தேனிசை மீட்ட
கண்ணே கண்ணுறங்கு
ஆரிராரிரோ ஆரிராரிரோ -2

லல்லா..லாலா லாலா Happy happy Christmas

லல்லா..லாலா லாலா
Happy happy Christmas
Merry merry Christmas

பாலன் இயேசு பிறந்துள்ளார் பூவுலகம் மகிழுதே -2
இறையாட்சி மலரட்டும் - நம்மில்
விடுதலை விடியட்டும் -2

1.
மாட்டுத் தொழுவத்தில் பிறந்துள்ளார்
மனித உள்ளத்தில் மலர்ந்துள்ளார் -2
மனிதம் மலரட்டும் நம்மில் அமைதி பரவட்டும்
நீதி நிலைக்கட்டும் மனித ஒற்றுமை ஓங்கட்டும் -2
(லல்லா...)

2.
ஏழை மனித மனங்களில்
பாமரன் இயேசு பிறந்துள்ளார் -2
வறுமை அழியட்டும்
உணமை செழிக்கட்டும்
புது வாழ்வு பிறக்கட்டும்
புது உறவுகள் வளரட்டும் -2
(லல்லா...)

வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்

வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்
வந்திவண் அன்பினை யாம் தருவோம்
வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்

1.
ஆனைத்துலகின் இறைமகனாம் அனைவருக்கும் ஆண்டவராம் -2
மாமரி மகனாக, இனைவார்த்தைநயே மனுவாக
பாருக்கு ஒளியாக பாவம் தீர்த்திட அருளாக
விண்ணவர்க்கு மகிமை தந்தார், மண்ணவர்க்கு அமைதி தந்தார் -2
2.
ஒளிர்ந்திடும் மீன் வழியே, அது விழித்திடும்
குடிலருகே
மன்னவர்கள் மூவர் சென்றர், மன்ன்னை மகிழ்வாய் வணங்கி நின்றர்
பொன்,மீரை,துபமுமாய்,பொருத்தனையாய் கவடுத்தனராம் -2

3.
ஆதியின் வினைத்திர்த்தார் நமை அறநெறியில் சேர்த்தார்
அன்புக்கு அருள் தருவார்,நம்மை அழித்திடும் இருள் மாய்ப்பார்
நாமவர்க்கு நமை அளிப்போம்,தமதமேன்?
அன்பு செய்வோம் -2