தமிழால் உன் புகழ் பாடி


தமிழால் உன் புகழ் பாடி
தேவா நான் தினம் வாழ
வருவாயே திருநாயகா - வரம்
தருவாயே உருவானவா

எனை ஆழும் துன்பங்கள் கணையாக வரும்போது
துணையாக எனையாள்பவா
மனநோயில் நான் மூழ்கி மடிகின்ற பொழுதங்கு
குணமாக்க வருவாயப்பா - எனை
உனதாக்கி அருள்வாயப்பா

உலகெல்லாம் இருளாகி உடனுள்ளோர் சென்றாலும்
வழிகாட்டும் ஒளியானவா
நீதானே எனக்கெல்லாம் நினைவெல்லாம் நீதானே
நாதா உன் புகைழ் பாடுவேன் - எனை
நாளெல்லாம் நீ ஆளுவாய்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக