உன் திருயாழில்


உன் திருயாழில் என் இறைவா- பல
பண் தரு நரம்புண்டு
என்னையும் ஓர் சிறு நரம்பெனவே - அதில்
இணைத்திட வேண்டும் இசையரசே
                                       (உன் திருயாழில்)
1
யாழினை நீயும் மீட்டுகையில் - இந்த
ஏழையின் இதயம் துயில் கலையும்(2)
யாழிசை கேட்டு தனை மறந்து   (2) உந்தன் ஏழிசையோடு
இணைந்திடுமே இணைந்திடுமே
                                       (உன் திருயாழில்)
2
விண்ணகச் சோலையில் மலரெனவே - திகழ்
எண்ணில்லாத் தாரகை உனக்குண்டு (2)
உன்னருட் பேரொளி நடுவினிலே  (2)
நான் என் சிறு விளக்கையும் ஏற்றிடுவேன் ஏற்றிடுவேன்
                                       (உன் திருயாழில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக