இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பத்தை ஒப்புக் கொடுக்கும் செபம்


இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவ குடும்பங்களிலே தேவரீர் இராசாவாக இருந்து ஆண்டருள வேண்டுமென்ற ஆசையை புனித மார்க்கரீத் மரியம்மாளுக்கு வெளிப்படுத்தினீரே! இந்தக்குடும்பத்தின் மேலே உமக்கு மாத்திரமே உள்ள முழுஅதிகாரத்தையும் அறிக்கையிட இங்கு கூடியிருக்கிறோம். 

உம்முடைய சீவிய மாதிரிகையாக நாங்களும் சீவிக்க விரும்புகிறோம். எந்தெந்தப் புண்ணியத்தினால் உலகத்துக்குச் சமாதானம் உண்டாகுமென்று தேவரீர் ஏலவே வாக்குப்பண்ணி இருக்கிறீரே! அந்தப் புண்ணியம் இந்தக் குடும்பத்தில் செழித்து வளரவேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். தேவரீர் சபித்துத் தள்ளிவிட்ட உலகப்பற்றுதல்களை எங்கள் மத்தியிலிருந்து புறக்கணித்து அகற்றிவிட ஆசிக்கிறோம். கபடற்ற விசுவாசத்தைத் தந்தருளிஇ எங்கள் புத்தியின்மேல் தேவரீர் உமது அரசாட்சியைச் செலுத்தியருளும். சிநே அக்கினியால் மூண்டெரிந்து உம்மையே முற்றாக நேசிக்கும் அன்பைத்தந்துஇ எங்கள் இருதயங்களிலே உமது அரசாட்சியைச் செலுத்தியருளும். அடிக்கடி தேவநற்கருணை உட்கொள்ளுவதனால் இந்த நேச அக்கினிச்சுவாலை வளர்க்கப்பட்டு வருவதாக. 


இயேசுவின் திவ்விய இருதயமே! நாங்கள் ஒன்றுகூடும் வேளைகளில் தேவரீரே எங்கள் கூட்டங்களக்குத் தலைவராக இருந்தருளும். எங்கள் ஞான அலுவல்களையும் ஆசீர்வதித்தருளும். எங்கள் கவலைகள் எல்லாவற்றையும் நீக்கியருளும். எங்கள் சந்தோ~ங்களைப் பரிசுத்தமாக்கியருளும். எங்களது துன்ப துரிதங்களில் எங்களுக்குத் தேற்றரவாயிருந்தருளும்.

எப்போதாவது எங்களில் எவரேனும் தேவரீரைப் பிரியவீனப் படுத்தும் நிர்ப்பாக்கியத்திற்கு உள்ளாக நேரிடுமானால் மகா பரிசுத்தமுள்ள இருதயமே! நீர் மனந்திரும்பும் பாவிகள் மட்டில் நல்லவரும் இரக்கமும் உள்ளவராய் இருக்கிறீர் என்பதனை அப்படிப்பட்டவர்களுக்கு நினைவு படுத்தியருளும். நாங்கள் ஒருவரை ஒருவர் விட்டுப் பிரியும் நேரம் வரும்போதும் மரணமானது எங்களது மத்தியில் துக்கங்களை உண்டுபண்ணும் போதும் பிரிகிறவர்களும் பிரியாதிருப்பவர்களுமாகிய நாங்கள் எல்லோரும் உம்முடைய நித்திய ஏற்பாடுகளுக்குப் பணிவான மனதுடன் இருக்கக் கிருபை செய்தருளும். இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நாங்கள் எல்லோரும் பரலோகத்தில் ஒருமித்துச் சேர்ந்து தேவரீருடைய மகிமைகளையும் நீர் எங்களுக்குச் செய்த உபகாரங்களையும் நித்தியமாய்ப் புகழ்ந்து பாடும் ஒரு நாள் வருமென்ற எண்ணம் எங்கள் எல்லோருக்கும் ஆறுதல் தருவதாக. 

மாசற்ற இருதய நாயகியும் மகத்துவம் பொருந்திய அதி பிதாவாகிய புனித சூசையப்பரும் இந்தக் காணிக்கையை உமக்கு ஒப்புக்கொடுத்து எங்கள் உயிருள்ளளவும் எங்களுக்கு இதனை நினைவ+ட்டுவார்களாக. எங்கள் அரசரும் தந்தையுமாகிய இயேசுவின் திரு இருதயம் துதிக்கப்படுவதாக. 

(இறந்து போன உறவினர்களுக்காக வேண்டிக்கொள்வோமாக. இவ்வேளையில் சிறிது நேரம் குடும்பங்களில் இறந்து போனவர்களை மௌனமாக நினைவு கூரவும்)

இரக்கத்தின் இறைவா! எமதுகுடும்பத்தில் இறந்துபோன உறவினர்களுக்காக நாங்கள் ஒப்புக் கொடுக்கும் இவ்வேண்டுதல் இறந்துபோன உமது அடியார்கள் அனைவருடைய ஆன்மாக்களுக்கும் பயன்படுவதாக. பாவம் அனைத்திலிமிருந்து அவர்களை விடுவித்து அவர்கள் உமது மீட்பில் பங்குபெற அருள்புரிவீராக. ஏன்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்ற அதே கிறிஸ்து இயேசு வழியாக உம்மை மன்றாடுகின்றோம் - ஆமென்.

(1பரமண்டலம் 1அருள்நிறை மரியே சொல்லவும்)

இயேசுக்கிறிஸ்துவின் திருவாக்குறுதிகளுக்கு நாங்கள் பாத்திரராய் இருக்கத்தக்கதாக.

மகா பரிசுத்த இயேசுவின் திவ்விய இருதயமே எங்கள் பேரில் இரக்கமாயிரும் 

(3முறை)

மரியாயின் மாசற்ற இருதயமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

புனித சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்


புனித மார்க்கரீத்து மரியம்மாளே! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். 
(பொருத்தமான பாடல் பாடலாம். பின்னர் குருவானவர் அனைவரையும் ஆசீர்வதிப்பார்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக