நெஞ்சத்திலே தூய்மையுண்டோ


  நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
  இயேசு வருகின்றார்
  நொறுங்குண்ட நெஞ்சத்தையே
  இயேசு அழைக்கிறார்

1. வருந்தி சுமக்கும் பாவம் - நம்மை
  கொடிய இருளில் சேர்க்கும்
  செய்த பாவம் இனி போதும்
  அவர் பாதம் வந்து சேரும்

2. குருதி சிந்தும் நெஞ்சம் - நம்மை
  கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
  அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்
  அவர் பாதம் வந்து சேரும் - 2

3. மாய லோக வாழ்வு - உன்னில்
  கோடி இன்பம் காட்டும் - 2
  என்னில் வாழும் அன்பர் இயேசு
  உன்னில் வாழ இடம் வேண்டும் - 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக