இயேசுநாதருடைய திருஇருதயத்தின் செபமாலை


கிறிஸ்துவின் திருஆத்துமமே, என்னைப் பரிசுத்தமாக்கும்.
கிறிஸ்துவின் திருச்சரீரமே என்னை இரட்சித்தருளும்.
கிறிஸ்துவின் திருஇரத்தமே, என்னை நிறைவித்தருளும்.
கிறிஸ்துவின் திருவிலாவிலிருந்து வந்த திருநீரே, என்னைக் கழுவியருளும்.
கிறிஸ்துவின் திருப்பாடுகளே, என்னைத் தேற்றுங்கள்.
ஓ நல்ல இயேசுவே, எனக்கு செவிசாய்த்தருளும்.
உமது திருக்காயங்களுக்குள்ளே என்னை மறைத்தருளும்.
உம்மைவிட்டு என்னைப் பிரியவிடாதேயும்.
தீய எதிரியிடமிருந்து என்னைக் காத்தருளும்.
என் மரணநேரத்தில் என்னை அழைத்து,
உமது புனிதர்களோடு எக்காலமும்
உம்மைப் புகழ எனக்கு கற்பித்தருளும். -ஆமென்

பெரிய மணியில் :
இருதயத்தில் தாழ்ச்சியும் மனதில் சாந்தமும் நிறைந்த
ஆண்டவராகிய இயேசுவே/ என் இருதயத்தை தேவரீருடைய
திருஇருதயத்துக்கு ஒத்ததாகப் பண்ணியருளும்.

சிறியமணியில் :
இயேசுவின் மதுரமான திருஇருதயமே! என் சிநேகமாயிரும்.

பத்துமணி முடிந்தபின் :
மரியாயின் மாசற்ற இருதயமே! என் இரட்சணியமாயிரும்.

ஒவ்வொரு பத்து மணிச் செபமும், கீழ்க்கண்ட கருத்துக்களுக்காகச் சொல்லப்பட வேண்டும்.
1-ம் பத்துமணி - பிற சமயத்தினரும், பிரிந்துபோன சகோதரர்களுமான மக்களால் அவருக்குண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
2-ம் பத்துமணி - பொல்லாத கிறிஸ்தவர்களால் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
3-ம் பத்துமணி - நாம்தாமே அவருக்கு உண்டாக்கும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாக.
4-ம் பத்துமணி - சகல மனிதராலும் அவருக்கு உண்டாகும் நிந்தை அவமானங்களுக்குப் பரிகாரமாகவும், பரிசுத்த தேவமாதா சகல புனிதர்களுடைய சிநேகப் பற்றுதலோடு நாமும் நம்முடைய இருதயத்தை ஒப்புக்கொடுப்போம்.
5-ம் பத்துமணி - இயேசுவின் திருஇருதயமே! நாங்களும் மற்றவர்களும் சிநேகிக்கும்படி அநுக்கிரகம் செய்தருளும்.

ஐம்பது மணி முடிந்தபின் :
இயேசுவின் திருஇருதயமே! எங்கள் பேரில் இரக்கமாயிரும்.
ஜென்ம மாசின்றி உற்பவித்த புனித மரியாயின் மாசற்ற இருதயமே! எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
இயேசுநாதருடைய திருஇருதயம், எங்கும் சிநேகிக்கப் படுவதாக.
என் இயேசுவே! இரக்கமாயிரும்.
திருஇருதயத்தின் சிநேகிதராகிய புனித சூசையப்பரே! எங்களுக்காக வேண்டிக்
கொள்ளும். - ஆமென்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக