மறைப்பரப்பு தளங்களில் திருத்தொண்டர்கள் பெற்ற அனுபவம்

புனித பாத்திமா அன்னை ஆலயம் - பாத்திமாபுரம் (7,8,9 February 2011)
கடந்த 7,8,9 தேதிகளில் திருத்தொண்டர்களாகிய எங்களுக்கு பாத்திமாபுரம் பாங்கிலே திருவழிபாடு பற்றிய தெளிவுரைகளை அருட்தந்தை. அருள்சாமி அவர்களும், அருட்தந்தை. ஜோசப் கென்னடி அவர்களும் தெளிவாக எடுத்துக்கூறினார்கள். திருவழிபாடு பற்றிய சில சந்தேகங்களை விளக்கினார்கள். திருவழிபாட்டை எப்படி பக்தியான முறையில் செய்வது என்று சொன்னார்கள். சிறுபிள்ளைகளுக்கு விளையாட்டு போட்டிகளை நடத்த வாய்ப்பினைக் கொடுத்தார்கள். அது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இறுதியாக வடக்கலூர் பங்கில் உள்ள சுய உதவிக் குழுவின் கருத்துப்பகிர்வு எங்களது சமூக சிந்தனைகளை சீர்ப்படுத்தியது. இந்த மூன்று நாள் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக