தேவனே என்னை பாருங்கள்


தேவனே என்னை பாருங்கள்
என் பாவங்கள் தம்மை வாங்கி கொள்ளுங்கள்
ஆயிரம் நன்மை தீமைகள்
நாங்க செய்கின்றோம் நீங்கள் அறிவீர் மன்னித்தருள்வீர்
Oh my Lord, pardon me 
உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள்
வேறு வேறு பாதையில் போய் விட்டன
இரண்டும் சந்தித்த போது
பேச முடியவில்லையே

தாய் மடியிலே மழலைகள் ஊமையோ
சேய் உறவிலும் நினைவுகள் மௌனமோ
காய் உடலிலா மனதிலா தேவனே
நான் அழுவதா சிரிப்பதா கர்த்தரே


மான்களும் சொந்தம் தேடுமே
இம்மானிடன் செய்த பாவம் என்னவோ
காவலே தந்த வெளியே
உன் பார்வையில் பிள்ளை பாசம் இல்லையோ

செல்வங்கள் குவிந்தது மாளிகை வந்தது
சேவை புரிந்திட சேவகர் ஆயிரம்
தேடி கொண்டாடிட நண்பர்கள் வந்தனர்
ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும்
no peace of mind 

கேள் தருகிறேன் என்றதே நீர் அன்றோ
நான் பலமுறை கேட்கிறேன் தரவில்லை
என் கருணையே திறக்குமா சந்நிதி
என் கர்த்தரே கிடைக்குமா நிம்மதி
Oh Lord, please answer my prayer 

கண்களில் கண்ணீர் இல்லையே
இந்த உள்ளமும் இதை தாங்கவில்லையே
கொண்டு வா இல்லை கொண்டு போ
உன் கோவிலில் வந்து சேவை செய்கின்றேன்

முள்ளை வளைத்தது மகுடம் அணிந்தது
ஆணி அடித்தது சிலுவையில் அறைந்தது
அன்று நடந்தது ஆவி துடித்தது
இன்று நடப்பது நெஞ்சு துடிக்குது....

திரைப்படம்: ஞான ஒளி
பாடல் ஆசிரியர்: கண்ணதாசன்
இசையமைப்பு: எம். எஸ். விஸ்வநாதன்
நடிகர் திலகம்:  சிவாஜி கணேசன்
பாடியவர்: T.M. சௌந்தரராஜன்

2 கருத்துகள்: