கடலைப் போற்றுவோம்


அனைவருக்கும் என் வணக்கம். உலகின் முதல் அதிசயம், சத்தமிடும் ரகசியம், காலவெள்ளம் தேங்கிநிற்கும் நீலப்பள்ளம் வாசிக்க கிடைக்காத வரலாற்றுகளைத் தின்று சிரிக்கும் நிஜம் ஆம், கடல். அந்த கடலின் பெருமைகளைப் போற்றவே நான் இங்கு வந்துள்ளேன்.

196 1\2 கோடி ஆண்டிகளுக்கு முன் இவ்வுலகில் தோன்றியது என்ன மனிதனா?மிருகமா? இல்லை கடல் மட்டும்தான். அந்த கடலில்தான் முதல் உயிரினமும் தோன்றியிருக்கும் நீரில் தான் சுவாசித்திருக்கும். இதன் மரபுரிமை தொடர்ச்சிதான் கருவில் உள்ள திசு தண்ணீர்க் குடத்தில் சுவாசிக்கிறது.

கடல் 85000 உயிர்கள் கொண்டு அமைக்கப்பட்ட தன் அரசாங்கம் இங்கு பிரிவில்லை எங்கும் பேதமில்லை பல கோடி வருடங்களுக்கு முன் துப்பிய இந்நிலவுலகில் பிரிவினை, பிரிவினை முற்றிய மனிதன் பொதுவுடமை கூறும் கடலையும் பெயர்வைத்து பிரித்தான். தன் நாட்டிலிருந்து 5 கிலோ மீட்டர் தொலைவு வரை உள்ள கடல் நாட்டை சார்ந்த்து என்றும் வகுத்து கொண்டான்.
தமிழர்கள் இந்த கடலின் பரப்பை கண்டு வியந்து 'பரவை' என்றும் ஆழம் கண்டு மலைத்து'ஆழி' என்றும் அழைத்தார்கள். குறுந்தொகை 45வது பாடலில் மேகங்கள் முகந்தபோதும் கடல் குறையவில்லை, புனல்கள் பல கலந்தபோதும் கடல் உயரவில்லை என்று கடலின் தாழ்ச்சியைப் புகழ்ந்துள்ளனர். 


கடல் மீனவர்களுக்கு மட்டுமல்ல நம் உலகின் எல்லா கண்டங்களுக்கும் கருணை பொழிகிறது.கடலடியில் குளிர் மற்றும் வெப்பம் என் 2 நீரோட்டங்கள் உண்டு. வெப்ப நீரோட்டம் தான் நார்வே மற்றும் ஸ்வீடன் நாடுகளை குளிரிளிருந்து பாதுகாக்கிறது. கடலின் முக்கிய பணியே பூமத்தியரேகைப் பகுதியின் வெப்பத்தை குளிர்பிரதேசங்களுக்கும், குளிர்பிரதேச குளிர்ச்சியை பூமத்திரேகைப்பகுதிக்கும் கடத்துவதுதான்.
குளிர்ச்சி பொழியும் நிலவும் நம் கடல்தாயின் மகளே, பூமி தோன்றி சில காலத்திற்கு பிறகு சூரியனின் சில பௌதிகமாற்றத்தால் பசுபிக்கடலில் உள்ள ஒருபகுதி பேரலை ஒன்றால் தூக்கி வீசப்பட்டது. அந்த பகுதி தனக்கென ஒரு சுற்றுப்பாதை அமைத்து சுழல ஆரம்பித்து. இதுவே நிலவு. ஆதரமாக நிலவில் உள்ள 'பாசல்' என்ற பாறை பசுபிக் பெருங்கடலில் உள்ள அந்த பெரும்பள்ளத்தில் காணப்படுகிறது.

இன்னொரு சுவையான செய்தி, கடல் நீரின் பரப்பில் 3.6% உப்பு உள்ளது. இதன் ஒவ்வொரு டன் நீரிலும் 0.000004கிராம் தங்கம் உள்ளது. கடல் பூமாதேவியின் திரவசீலை,மாறிவரும் சூழலில் மனிதன் விவசாயம் செய்ய மறந்து போகிறான். அப்போது நூற்றாண்டிற்கான உணவுத் தேவை? ‘நான் இருக்கிறேன்’ என்கிறது கடல்.ஆம் அடுத்த நூற்றாண்டின் உணவுத் தேவையின் அமுதசுரபியே கடல் தான்.
கடல் முத்துக்களின் கர்ப்பப்பை, பவளங்களின் தொட்டில், மங்கனீஷ் பாறைகளின் உலோக உலகம்,பெடரோலின் ஊற்று, கவிஞர்களின் கனா, ஞானிகளின் தத்துவம் விஞ்ஞானிகளின் ஆய்வு கூடம் எனவே கடலின் பெருமைகளை தொடர்ந்து போற்றி பிறவிப் பெருங்கடலை நீந்துவோம். நன்றி...
காட்சி வழித்தொடர்பியலில் இளங்கலை முதலாம் ஆண்டு படிக்கும் சகோதரர் வளனரசு பாரதிதாசன் பல்கலைகழகத்தின் சார்பில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் 'கடலைப் போற்றுவோம்' என்ற தலைப்பில் பேசியதன் சுருக்கம். 
-Points are taken from the book ‘Thannier dhesam’ written by the poet Vairamuthu

தொழிலாளிகளின் செபம்

அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா, நெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப் பணித்தீரே ! நான் என் வேலைகளை விரும்பவும், அன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு வேலைக்குச் சென்று காலத்தையும் பொருளையும், பணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன் உழைப்பேனாக. எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும், உடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தார்க்குப் பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின் பயனால் என் வீடும், எமது தொழிலும், பொது மக்களும் பயனடையச் செய்தருளும்.
தொழிலாளியின் பாதுகாவலரான புனித சூசையப்பரே ! உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே! உமது தொழிலை நீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக் காப்பாற்றியதுபோல், நானும் என் தொழிலைப் பெரிதெனக் கருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும் காப்பாறுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால் நிறைவு செய்ததுபோல், என் தொழிலால் இறைவனின் திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே இயேசுவிடனம் மன்றாடுவீராக. -ஆமென்


-----------------
நல்ல இயேசுவே, என் இரட்சகரே! தேவரீர் ஒரு தொழிலாளியாய் இருக்க திருவுளம் கொண்டமையால், என் ஆண்டவரும் மாதிரியுமாகிய உம்மை நான் அணுகி வருகிறேன்.

நாசரேத்தூரில் அந்த எளிய தொழிற்சாலையில், சாந்தமும் தாழ்ச்சியும் உள்ளவராய், தூய்மை, வாய்மை, நேர்மை, மேரை மரியாதை நிறைந்தவராய் வாழ்ந்தீர், உமது தொழில் முயற்சிகளில் பரிகார உணர்ச்சி ததும்பி நின்றது. கடின பிரயாசையான உம் வேலைகளை செபத்தினாலும், கீழ்படிதலினாலும் நீர் அர்ச்சித்தீர்.

ஓ இயேசுவே ! தெய்வீகத் தொழிலாளியே, நானும் இப்படி இருக்க எனக்கு வரமருளும்.

உம்முடைய திருவருளின் உதவியினாலும், வேலையாட்கள், தொழில் பயிலுவோர்களின் பாதுகாவலர்களாகிய தேவ தாயார், சூசையப்பர் இவர்களுடைய ஆசீர்வாதத்தின் பலனாலும் இன்னும் அதிகமதிகமாய் நானும் தேவரீரைப் போல் வாழ்ந்து, உழைப்பேனாக. என் திவ்விய இரட்சகரே, கடும் பிரயாசைகள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை நான் முடித்தபின், உமது நித்திய இளைப்பாற்றியை எனக்குக்குக் கட்டளையிட்டருளும். -ஆமென்.

தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கணவன் மனைவியரின் செபம்

கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் உள்ள நேச ஐக்கியத்தை குறிக்கவும், உலக பரம்புதலுக்காகவும், நெருங்கிய அன்புக்காகவும் புனித திருமணவாழ்வை அர்ச்சித்தருளின இறைவா, அதன் ஆசீர்வாதத்தை இருவரும் வணக்கத்தோடு ஏற்றுக் கொண்டு அதன் கடமைகளை நடத்தக் கிருபைபுரியும். எங்களுடைய ஒன்றிப்பை இடைவிடாமல் ஆசீர்வதிக்கவும், அதனால் நாங்கள் இருவரும் எல்லா கடமைகளையும் சமாதானத்தோடும் அன்போடும் நிறைவேற்றவும், பிரமாணிக்கமாய் எங்களில் ஒருவருக்கொருவர் நடக்கவும் உம்மை மன்றாடுகிறேன். பிரிபடக்கூடாத கட்டினால் கட்டின அந்தப் புனித பந்தத்தை பலவீனப்படுத்தக்கூடிய எவ்விதக் கெட்ட குணத்திலும் பாவச் செயலிலும் இருந்து என்னை விடுவித்தருளும். தன்னலத்தை மறந்து, தியாக உள்ளத்தோடு வாழ்ந்து நான் உமக்குப் பிரியப்பட நடக்க சுறுசுறுப்புள்ளவனாகவும் ஆசையுள்ளவனாகவும் செய்தருளும். இவ்வுலக சோதனை துன்பங்களினால் உமது பேரில் முறுமுறுத்து எல்லாவற்றிற்கும் காரணரும் ஈகிறவருமாயிருக்கிற உம்மை உலக வாழ்வின் நிறைவால் மறந்து விடாமலிருக்கச் செய்தருளும். பொறுமையாலும் கடன் சாந்த குணத்தாலும், செபத்தாலும், நன்றியறிதலாலும் உமக்குக் கீழ்படிந்திருக்க என்னை ஆசீர்வதித்து உமக்குத் தகுந்தவனாகவும் செய்தருளும். -ஆமென்.

காவல் தூதரை நோக்கிச் செபம்

அதிமிக பிரமாணிக்கம் அமைந்த காவலரே ! அடியேனுக்குப் பிரியாத துணைவராக இறைவனால் நியமிக்கப்பட்டு எப்போதும் என் அருகிலிருந்து என்னை ஆண்டு நடத்தி வரும் வான தூதரே! இன்று(பேர்) ஆகிய நான் உம்மை என் பாதுகாவலராகவும் அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு என்றென்றைக்கும் என்னை முழுதும் உமது பராமரிப்பில் வைத்து விடுகிறேன். மேலும் நான் உமது மகிமை பிரதாபத்துக்கு விரோதமான எவ்வித சொல்லினாலும் செயலினாலும் உம்மை விட்டுப் பிரியாமலிருப்பதும் அன்றி எனக்கு கீழ்ப்பட்ட மற்றவர்களும் தேவரீருக்கு விரோதமாய் ஏதாவது சொல்லவும் செய்யவும் விடுகிறதில்லை என்றும் உறுதி செய்கிறேன். ஆதலால் இன்று முதல் என் மரண பரியந்தம் உமது ஊழியனாக என்னை ஏற்றுக் கொள்ளும். நான் செய்யும் செயல்களிலும் எனக்கு உதவி செய்து, சிறப்பாக என் மரண நேரத்தில் என்னைக் கைவிடாமல் காத்தருளும். – ஆமென்.

புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்

வானுலக சேனை தளங்களின் அதிபதியே, என்றும் வாழும் அரூபிகளில் மகிமை பிரதாபம் நிறைந்த வானதூதரே, அவர்களிலும் உத்தமமானவரே! உன்னத கடவுளின் மந்திராலோதனையின் நிர்ணய பெட்டகமே, தேவ சிம்மாசனத்தின் அருகே நிற்கப் பேறுபெற்ற பிரவுவே, தேவ கட்டளைபடி விண்ணுலக வாசலைத் திறக்கவும், பூட்டவும், அதிகாரம் உள்ள வானவரே, தேவ நீதியின் அரியணையின் முன் எங்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே, மரண அவஸ்தை படுகிறவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் உபகாரியே, மரித்தவர்களை அழைத்து கொண்டுபோய் திவ்விய கர்தரின் சன்னதியில் சேர்க்கும் காவலரே, பலவீனனும் நிர்ப்பக்கியனுமாகிய அடியேனை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து என் வாழ்நாள் முழுவதிலும் சிறப்பாக எனது மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். -ஆமென்.