இடையர்கள் தந்த காணிக்கை போல

 இடையர்கள் தந்த காணிக்கை போல

இருப்பதை நானும் எடுத்து வந்தேன்

கொடைகளில் எல்லாம் சிறந்த என் இதயம்

கொடுப்பது நலம் என படைத்து நின்றேன் (2)

இயேசு பாலனே ஏற்றிடுமே

நேச ராஜனே ஏற்றிடுமே (2)


1. கடைநிலை வாழும் மனிதரை மீட்க

அடிமையின் தன்மையை எடுத்தவனே

உடைமைகள் பதவிகள் யாவையும் துறந்து

மடமையில் மகிமையைக் கொடுத்தவனே (2) - இயேசு...


2. நிலைதடுமாறும் மனங்களில் நிறைந்து

நிம்மதி தந்திட வந்தவனே

வலைகளில் மீன்களைப் பிடிப்பதைப் போல

மனிதரை வானகம் சேர்ப்பவனே (2) - இயேசு...

திருவருகைக்கால 4ஆம் ஞாயிறு (2ஆம் ஆண்டு) 18-12-2011


முன்னுரை:  அன்புக்குரிய சகோதரமே, நமது உள்ளம் நமது மனம் அருள் நிறைந்ததாக அதாவது நூற்றுகக்கு நூறு பரிசுத்தமாக இருந்தால் நமது உள்ளத்திற்குள், மனதுக்குள் இயேசு பிறப்பார். இயேசு பிறப்பு விழாவிற்கு வெளி அலங்காரத்தைவிட உள் அலங்காரம் தேவை. நமது கடவுள் மக்கள் நடுவே வாழ ஆசைப்படும் கடவுள். எனவே பிறக்க இருக்கும் இயேசுபாலன் நம்மோடு வாழ வேண்டுமென்றால் இறையருளால் நமது ஆன்மா நிரப்பப்பட வேண்டும். அந்த ஆவியானவரின் அருளைப் பெற தொடரும் இத்திருப்பலியில் மன்றாடுவோம்.

முதல் வாசக முன்னுரை:  கடவுள் மக்கள் நடுவே வாழும் கடவுளாக தன்னை வெளிப்படுத்துகிறார். நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவரது உடனிருப்பால் நமது உள்ளமும், இல்லமும் நிரப்பப்படவேண்டும். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று இறைவாக்குக் கூறும் கருத்தினை கேட்போம்.

இறைவாக்கினர் சாமுவேல் இரண்டாம் நூலிலிருந்து வாசகம் (2 சாமு. 7:1-5,8-12,14,16)

அரசர் தம் அரண்மனையில் குடியேறியப்பின், சுற்றிலிருந்த எல்லா எதிரிகளின் தொல்லையினின்றும் ஆண்டவர் அவருக்கு ஓய்வு அளித்தார். அப்போது இறைவாக்கினர் நாத்தானைத் தாவீது அழைத்து, பாரும் நான் கேதுரு மரங்களான அரண்மனையில் நான் வாழ்கிறேன். கடவுளின் பேழையோ கூடாரத்தில் வாழ்கிறது என்று கூறினார். அதற்கு நாத்தான் நீர் விரும்பிய அனைத்தையும் செய்துவிடும்: ஏனெனில் ஆண்டவர் என்னோடு இருக்கிறார் என்று அரசனிடம் சொன்னார். அன்று இரவே ஆண்டவரின் வார்த்தை நாத்தானுக்கு அருளப்பட்டது. நீ சென்று, என் ஊழியன் தாவீதிடம் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: நான் தங்குவதற்காக எனக்கு கோவில் கட்டப்போகிறாயா? எனது ஊழியன் தாவீதிடம் படைகளின் ஆண்டவர் இவ்வாறு கூறுவதாகச் சொல்: என் மக்கள் இஸ்ரயேலின் தலைவனாக விளங்க புல்வெளியில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்த உன்னை நான் அழைத்தேன். நீ சென்றவிடமெல்லாம் நான் உன்னோடு இருந்தேன்: உன் கண்முன் உன் எதிரிகள் அனைவரையும் அழித்தேன்: மேலும் உலகில் வாழும் பெரும் மனிதர் போல் நீ புகழுறச் செய்தேன். எனது மக்களாகிய இஸ்ரயேலுக்கு ஓர் இடத்தை அளிப்பேன். அவர்கள் அந்த இடத்திலேயே வாழ வைப்பேன். என் மக்களாகிய இஸ்ரயேல் மீதும் நீதித் தலைவர்களை ஏற்படுத்திய நாள்களாகிய தொடக்கத்தில் தீயவர்கள் அவர்கள் ஒடுக்கப்பட்டது போல இனியும் அவர்கள் அலைக்கழிக்கப்பட மாட்டார்கள். அனைவரின் தொல்லைகளினின்றும் எனக்கு நான் ஓய்வு அளிப்பேன். மேலும் ஆண்டவர் தாமே என் வீட்டைக் கட்டப்போவதாக அவர் உனக்கு அறிவிக்கிறார். வாழ் நாள் நிறைவுபெற்று நீ என் மூதாதையரோடு துயில்கொள்ளும் போது, உனக்கு பிறக்கும் உன் வழித்தோன்றலை உனக்குப் பின் நான் உயர்த்தி அவனது அரசை நான் நிலைநாட்டுவேன். நான் அவனுக்கு தந்தையாக இருப்பேன். அவன் எனக்கு மகனாக இருப்பான். அவன் தவறு செய்யும்போது மனித இயல்புக்கேற்ப அடித்து, மனிதருக்கே உரிய துன்பங்களைத் தருவேன். முன்பாக உனது குடும்பமும் உனது அரசும் என்றும் உறுதியாயிருக்கும்! உனது அரியணை என்றுமே நிலைத்திருக்கும்!
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

இரண்டாம் வாசக முன்னுரை:  நாம் ஒவ்வொருவரும் நன்மை செய்து வாழ வேண்டும். பிறரோடு பழகும்போது அன்பாக பழக வேண்டும். நற்செய்தியின் தூதுவர்களாக வாழ வேண்டும் என்ற ஆழந்த சிந்தனையுடன் கருத்துக்களை கூறும் பவுல் அடிகளாரின் அறிவுரையை வாசிக்க கேட்போம்.

திருத்தூதர் பவுல் உரோமையருக்கு எழுதிய முதல் திருமுகத்திலிருந்து வாசகம் (16:2-27)

இயேசு கிறிஸ்துவைப் பற்றி நான் பறைசாற்றும் நற்செய்திக்கு ஏற்ப வாழக் கடவுள் உங்களை உறுதிப்படுத்த வல்லவர். ஊழி காலமாக மறைபொருளாக இருந்த இந்த நற்செய்தி இப்பொழுது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இறைவாக்கினர் வாயிலாக இது நமக்குத் தெளிவாகியுள்ளது. என்றும் வாழும் கடவுளின் கட்டளைப்படி எல்லா மக்களினங்களுக்கும் அது தெரிய வந்துள்ளது. இதனால் அவர்கள் நற்செய்தியைக் கேட்டு நம்பிக்கை கொள்வர். ஞானமே உருவாகிய கடவுள் ஒருவருக்கே இயேசு கிறிஸ்துவின் வழியாய் என்றென்றும் மாட்சி உரித்தாகுக! ஆமென்.
- இது ஆண்டவரின் அருள்வாக்கு.
- இறைவா உமக்கு நன்றி.

நற்செய்தி வாசகம்: 
லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் (லூக். 1:26-38)

ஆறாம் மாதத்தில் கபிரியேல் என்னும் வானதூதரைக் கடவுள் கலிலேயாவிலுள்ள நாசரேத்து என்னும் ஊரிலிருந்த ஒரு கன்னியிடம் அனுப்பினார். அவர் தாவீது குடும்பத்தினராகிய யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவருக்கு மண ஒப்பந்தமானவர். அவர் பெயர் மரியா. வானதூதர் மரியாவுக்குத் தோன்றி, 'அருள்மிகப் பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்' என்றார். இவ்வார்த்தைகளைக் கேட்டு அவர் கலங்கி, இந்த வாழ்த்து எத்தகையதோ என்று எண்ணிக் கொண்டிருந்தார். வானதூதர் அவரைப் பார்த்து, 'மரியா, அஞ்சவேண்டாம்: கடவுளின் அருளைக் கண்டடைந்துள்ளீர். இதோ, கருவுற்று ஒரு மகனைப் பெறுவீர்: அவருக்கு இயேசு என்னும் பெயரிடுவீர். அவர் பெரியவராயிருப்பார்: உன்னத கடவுளின் மகன் எனப்படுவார். அவருடைய தந்தை தாவீதின் அரியணையை ஆண்டவராகிய கடவுள் அவருக்கு அளிப்பார். அவர் யாக்கோபின் குடும்பத்தின் மீது என்றென்றும் ஆட்சி செலுத்துவார். அவருடைய ஆட்சிக்கு முடிவே இராது'என்றார். அதற்கு மரியா வானதூதரிடம், 'இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே!' என்றார். வானதூதர் அவரிடம், 'தூய ஆவி உம்மீது வரும். உன்னத கடவுளின் வல்லமை உம்மேல் நிழலிடும். ஆதலால் உம்மிடம் பிறக்கப் போகும் குழந்தை தூயது. அக்குழந்தை இறைமகன் எனப்படும். உம் உறவினராகிய எலிசபெத்தும் தம் முதிர்ந்த வயதில் ஒரு மகனைக் கருத்தரித்திருக்கிறார். கருவுற இயலாதவர் என்று சொல்லப்பட்ட அவருக்கு இது ஆறாம் மாதம். ஏனெனில், கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை' என்றார். பின்னர் மரியா, 'நான் ஆண்டவரின் அடிமை: உம் சொற்படியே எனக்கு நிகழட்டும்' என்றார். அப்பொழுது வானதூதர் அவரை விட்டு அகன்றார்.
- இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி
- கிறிஸ்துவே உமக்கு புகழ்.

மன்றாட்டுக்கள்: 
  1. அன்பு தெய்வமே இறைவா, எம் திருச்சபையின் தலைவர்களை உமது பாதத்தில் சமர்ப்பிக்கின்றோம். அனைவருக்கும் உமது ஆவியின் அருளைப் பொழிந்து நற்செய்தியை சிறப்புடன் மக்களுக்கு வழங்கி திருச்சபையை சிறந்த முறையில் கட்டி எழுப்ப தேவையான அருளைத்தர இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  2. கருணையின் தெய்வமே, எம் பங்கு பணியாளரை நிறைவாக ஆசீர்வதியும், பங்கின் முன்னேற்றப் பணிகளில் அவர்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளிலும், பங்கு மக்கள் ஒத்துழைப்பு தந்திட அருள்புரிய இறைவா உம்மை மன்றாடுகிறோம்.
  3. நீதியின் இறைவா, எம் பங்கு மக்கள் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு உம்மை அன்பு செய்து ஏற்றுக்கொண்டு வாழ அருள் புரிய இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
  4. இறைவா! உமது பிறப்பு பெருவிழாவிற்கு தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் இந்நாட்களில் ஏழை, எளியவர்களிடத்தில், இரக்கம் உள்ளவர்களாக வாழவும், வியாதினால் வருந்துகின்றவர்களை சந்தித்து ஆதரவு அளித்திடவும் வரமருள இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

பெத்தலையில் பிறந்தவரை

பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி மனமே - இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் - இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் - பெத்
2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் - இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் - பெத்

3.முன்பு அவர் சொன்னபடி முடிப்பதற்காக ௦ - இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே - பெத்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் - இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் - பெத்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை - நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்

இயேசுவும் ஞானமும்


முன்னுரை
மனித வாழ்வை முழுமையாகவும் நிறைவாகவும் வாழ்வதற்க்கு இறைஞானம் அவசியம் என்பதை உணர்ந்து இறைஞானத்தின் வழியில் புத்துலகம் படைப்போம் என்ற தலைப்பில் இந்த கல்வி ஆண்டை தொடங்கியிருக்கும் பெஸ்கி தமிழ்மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்றைய மனிதன் அறிவை மட்டும் பயன்படுத்தி நிறைவான வாழ்வு வாழ முயற்சிக்கிறான். ஆனால் துரதிஷ்டவசமாக நமது வாழ்வின் பிரச்சனைகளுக்கு அறிவை மட்;டும் பயன்படுத்திக் கொடக்கபடும் தீர்வுகள் சரியான தீர்வுகளாக அமைவதில்லை. மாறாக வாழ்வையும் வாழ்வின் பிரச்சனைகளையும் இறைஞானத்தோடு அனுகும்போதுதான் கொடக்கப்படும் தீர்வுகள் சரியான தீர்வுகளாக அமைகின்றன. இத்தகைய மேலான ஞானத்தை அடைவதே நமது வாழ்வின் நோக்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இயேசுவின் ஞானத்தை பற்றி உங்களிடையே பகிர்ந்து கொள்;ள விழைகின்றேன்.
நான் என்னுடைய உறையில் முதலாவதாக ஞானம் என்பது என்ன? என்றும் அடுத்ததாக இயேசுவின் ஞானத்தைப் பற்றியும்; இந்த ஞானம் இறைவனின் அன்பை வெளிப்படத்துகின்றது. இது கொடைகளிலெல்லாம்  மேலானது இந்ந ஞானத்தை தேடி அடைவோம் இந்த ஞானம் நம்மைத் தேடுகிறது என்றும் மூன்றாவதாக இந்த ஞானத்தை எப்படி பெற முடியும்? 
ஏன்பதையும் கடைசியாக இந்த ஞானத்தை பெற்றால் நமக்கு கிடைக்கும் பலன்கள் யாவை? ஏன்பவற்றைப் கூறி என்னுடைய உரையை பொருத்தமான முடிவுரையோடு முடித்துகொள்ள விரும்புகின்றேன்.

ஞானம் என்பது என்ன?
ஞானம் என்பது இறைவின் வல்லமை இறைவனின் செயலாற்று நிலை. இறைவனின் வெளிப்பாடே ஞானம் என்று விவிலியம் கூறுகிறது. நம்மைத் தீமையை விட்டு விலகி நல்வழியில் நடத்திச் செல்லும் தூய ஆவியாரே ஞானம். நம் துன்ப துயரங்களில் நமக்குப் பற்றும் பரிவும் காட்டித் திடமளிக்கும்; இறைவனின ஆவியாரே ஞானம். (சா.ஞா.7:22) சொல்கின்றது ஞானம் ஆற்றல் கொண்டது. அறிவுடையது. தூய்மையானது. தனித்தன்மை வாய்ந்தது. உண்மையானது. உயிரோட்டம் உள்ளது. தெளிவு மிக்கது. மாசு படாதது. வெளிப்படையானது. உண்மையை விரும்புவது. கூர்மையானது. ஏதிர்க்க முடியாதது. மனித நேயம் கொண்டது. நிலை பெயராதது. உறுதியானது. எல்லாம் வல்லது. எல்லாவற்றையும் ஊடுருவிச் செல்லக்கூடியது. கடவுளின் ஆற்றலிருந்து புறப்படும் ஆவி. ஏன்றுமுள்ள ஒளிச்சுடர். கடவுளது செயல் திறனின் கறைபடியாக் கண்ணாடி. ஓன்றே என்றாலும் எல்லாம் செய்ய வல்லது. அனைத்தையும் புதுப்பிக்கிறது. கதிரவனைவிட அழகானது. விண்மீன் கூட்டத்தில் சிறந்தது. ஓளியைக் காட்டிலும் மேலானது.

இயேசுவும் ஞானமும்

கி.பி முதல் நுற்றாண்டில் வாழ்ந்த இயேசு பாலஸ்த்தீன நாட்டைச் சேர்ந்த ஒரு யுத மனிதர். அவர் கலிலேயப் பகுதியிலுள்ள நாசரேத்தில் வளர்ந்தார். வெளிச்சத்திற்க்கு வராத இந்த சின்ன கிராமத்தில் ஒளிவடிவான இறைமகன் இயேசு குழந்தை பருவத்திலேயே ஞானத்தால் நிறைந்திருந்தார் என விவிலியம் கூறுகிறது. லுக்கா 2:40 சொல்கின்றது “குழந்தையான இயேசு வளர்ந்து வலிமை பெற்று ஞானத்தால் நிறைந்து கடவுளுக்கு உகந்ததாய் இருந்;தது”. ஏன்று அழகாக இயேசுவின் ஞானத்தை வர்ணிக்கின்றது. மேலும் 12 வயதில் காணாமற்போய் 3 நாட்களுக்குப் பின் ஆலயத்தில் மரியா கண்டு கொண்டபின் இயேசு நீங்கள் ஏன் என்னை தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்;களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியாதா? என்று சிறுவயதிலேயே ஞானத்தோடு பதில் கூறுவதை திருவிவிலியத்தில் நாம் பார்க்கின்றோம்.
லூக். 2:52 “இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்ததாய் வாழ்ந்து வந்தார்” என்பது ஆணித்தரமாக கூறுகின்றது. வெளிப்படையான அவரது பிற்கால வாழ்விலே தெளிவும் திறனும் மிக்க இந்த ஞானம் பளிச்சிடுவதைப் பலமுறை நாம் பார்க்கின்றோம். அவருடைய போதனைகளிலும் உவமைகளிலும் கேள்விகளிலும் அளவிட முடியாத ஞானம் ஒளிர்ந்தது. அவன் தொழுகைத் கூடத்தில் கற்பித்த போது அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்து “இவருக்கு இவையெல்லாம் எங்கிருந்து வந்தன? ஏன்னெ இவருக்கு அருளப்பட்ட ஞானம் என்று மாற். 6:2 சொல்;கின்றது.
இப்படிப்பட்ட ஞானம் தான் அநேக நேரங்களில் இயேசுவை மடக்கப் பார்க்கும் பரிசேயருக்கு சாட்டையடி கொடுக்கவைக்கிறது. உதாரணமாக யோவா. 8:3-11 ல் விபசாரத்தில் பிடிபட்டப் பெண்ணை இயேசு முன் நிறுத்தி அவளை கல்லால் எறிய வேண்டுமா? வேண்டாமா? நீர் என்ன சொல்கிறீர் எனக் கேட்டபோது “உங்களில் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியப்படட்டும் என கூறவைத்தது அவரது ஞானமே.
இயேசுவின் சமகாலத்தில் வாழ்ந்த மனிதருக்கு அவர் ஒரு ஞானியாகத் தோற்றமளித்தார். பழமொழிகள் கதைகள், உவமைகள், அறிவுரைகள், போற்றல, தூற்றல், எச்சரித்தல் போன்ற பல வழிவகைகளைப் பயன்படுத்தி அவர் ஒரு போதகராக விளங்கினார். மேலும் கடவுளின் ஆட்சி வரவிருக்கின்றது என்று  இயேசு அறிவித்ததால் அவரை மக்கள் அழிவுகாலப் போதகராகப் பார்த்திருப்பர். கடவுளின் மக்களை மனமாற அழைப்பு விடுத்து கடவுளின் ஆட்சியை ஏற்றிட அவர்களை தயாரிக்க முயற்சி செய்ததால் அவரை மக்கள் ஒர் இறைவாக்கினராக பார்த்தருப்பர். இயேசுவை நெருக்கமாக பின்பற்றிய அவரது சீடர்கள் இயேசுவை மெசியாவாக பார்த்திருப்பர். ஆனால் லூக். 11:49 “இயேசுவை கடவுளின் ஞானம்”  என்று சித்தரிக்கின்றது. 
சா.ஞா 9:9 “ஞானம் கடவுளோடு இருக்கின்றது” என்று கூறுகின்றது. யோ.1:1 “தொடக்கத்தில் வாக்கு இருந்தது அவ்வாக்கு கடவுளாயும் இருந்தது” அப்படியென்றால் இயேசுகிறிஸ்து கடவுளும் கடவுளாக இருக்கின்றவர். ஆதலால் இயேசு கிறிஸ்து தான் அந்த ஞானம்.
சீ.ஞா.1:1 “ஞானம் எல்லாம் ஆண்டவரிடம் இருந்தே வருகிறது. ஆனால் இயேசுகிறிஸ்து  கடவுளால் அனுப்பபட்டவர் கடவுளிடம் இருந்து வந்தவர் . அதனால் தான் அவர்,  “என்னை கண்டவர் தந்தையை காண்கிறார். ஏன்று கூறுகிறார். எனவே இயேசுகிறிஸ்வே அந்த ஞானம்.
நீ.மொ.2:6 “ஞானத்தை அளிப்பவர் ஆண்டவர். கடவுள் தான் இயேசுவை அனுப்பி வைத்தவர். ஆதலால் இயேசுவே அந்த ஞானம். 
சா.ஞா. 7:25 “ஞானம் கடவுளின் ஆற்றலில் இருந்து புறப்படும் தூய ஆவி. லூக்.1:35 “தூய ஆவியின் வல்லமையால் மரியாள் கருத்தாங்கினாள்” என்று கூறுகின்றது. எனவே இயேசு ஞானத்தால் ஆட்கொள்ளப்பட்டு பிறந்தார். ஞானமே இங்கு ஆவி வடிவில் இறங்கி வந்தது. எனவே இயேசுவே அந்த ஞானம். அதனால் தான் ஞானிகள் என்று அழைக்கப்பட்ட மூவருமே இந்த ஞானத்தின் முன்னால் நெடுஞ்சாண்கிடையாய் விழுந்து வணங்கினார்கள’ என்று மத். 2:11 கூறுகின்றது.

அடுத்ததாக சா.ஞா.7:22 “ஞானம் என்றும் உள்ள ஒளி” என்று வரையறுக்கிறது. ஆனால் இயேசு நானே உலகின் ஒளி என்று கூறுகிறார். எனவே இயேசுவே அந்த ஞானம். இந்த ஞானம் இறைவனின் அன்பை வெளிப்படத்துகின்றது.
இயேசுவின் ஞானம் இருக்கும் இடத்தில் தூய ஆவியார் இருக்கிறார். தூய ஆவியாரே ஞானம். ஞானம் பரிவு காட்டும் இறை ஆவி. நம்மை பயிற்றுவிக்கும் பரிசுத்த ஆவி. தூய ஆவியாரின் பலன்களிலெல்லாம் மிகவும் சிறந்தது அன்பு (கலா. 5:22). எனவே ஞானமுடையோனிடம் அன்பு சிறந்திருக்கும். அன்பு  இருக்குமிடத்தில் தான் அன்பு அளிக்கப்படும் அன்பு வளரும். ஆதனால் தான் இயேசு மத்தேயு நற்செய்தியில் தம்மைதாமே அன்பு செய்வது போல பிறரையும் அன்பு செய்ய வேண்டம் என்று பணிக்கிறார்.

இது கொடைகளிலெல்லாம் மேலானது
இறைவன் உலகிற்க்கு அளித்த கொடைகளே இவ்வுலகப் படைப்புகள். கடல் மீன்கள் வானத்து பறவைகள் நிலத்தில் ஊர்ந்து உயிர் வாழ்வன அனைத்தையும் படைத்து மனிதனிடம் ஆளுங்கள் என்றார். இவை எல்லாவற்றையும் விடச் சிறப்பான கொடையாக இறைவன் நமக்களித்தது ஞானம். ஏனெனில் படைப்பு பொருள்கள் நம்மை தீமைக்கு இட்டுச் செல்லலாம். ஆனால் ஞானமோ  எப்போதும் நம்மை நன்மைக்கே, வழி நடத்திச் செல்லும். ஏனெனில் இயேசுவே ஞானம் ஆதலால் நன்மையை தவிர வேறு எதுவும் அவர் நமக்கு கொடையாக அளியார். எனவே அவர்தரும் இந்த ஞானம் கொடைகளிலெல்லாம் மேலானது.

இந்த ஞானத்தை தேடி அடைவோம்
ஞானத்தின் பிறப்பிடமான இயேசு சொல்கிறார். நீங்கள் நம்மை தேடுவீர்கள். முழு இதயத்தோடு நம்மைத் கண்டடைவீர்கள். ஆம் மெய்யாகவே நம்மை கண்டைவீர்கள்  என்ற இயேசுவின் வாக்கு இதையே வலியுறுத்துகிறது. திருக்குறள் 616 சொல்கின்றது “முயற்சி திருவினையாக்கும் முயற்றின்மை இன்மை புகுத்திவிடும். லூக்.11:9 “தேடுங்கள் நீங்கள் கண்டடைவீர்கள். எனவே ஞானத்தின் மேல் அன்பு கொள்வோம். அவ்வன்பால் தூண்டப்படும் விடாமுயற்ச்சியோடு ஞானத்தை தேடுவோம்.

இந்த ஞானம் நம்மைத் தேடுகிறது
நம்முடைய முயற்ச்சியினால் மட்டும் நாம் ஞானத்தை அடைந்திட முடியாது. அதே வேளையில் திருவிவிலியம் சொல்கின்றது இறை ஞானமும் தகுதியுள்ளவர்களைத் தேடிக்கொண்டு வருகிறது. என் எண்ணம் நீ! எல்லாம் நீ! என்ற முறையிலே ஆண்டவரைப்பற்றி இடையறாது சிந்திப்பவரை ஞானம் தேடுகிறது. தேடுங்கள்  கண்டடைவீர்கள் என்று சொன்ன ஆண்டவரை தேடி அலையும் மக்களை ஞானம் தேடுகிறது. எளிய உள்ளம் எளிய தன்மையுடையோரை ஞானம் தேடுகிறது. பிறர் பால் அன்பும் நீதியும் காட்டுவோரை ஞானம் தேடி அலைகின்றது. தம் நினைவிலும் சொல்லிலும் செயலிலும் பிறர் நலன் விழைவோரை நீதி நியாயம் நிலவ உழைப்போரை ஞானம் தேடுகிறது.

இந்த ஞானத்தை எப்படி பெற முடியும்? 
ஞானத்தை அடைவதற்கு முதலில் அதை அன்பு செய்யவேண்டும். ஞானத்தை அன்பு செய்வோர் அதை கண்டடைவர் என்று விவிலியம் பல இடங்களில் பறைசாற்றுகின்றது. இன்றைய நவநாகரீக மனிதன் பணம், புகழ், பதவி, செல்வம், செல்வாக்கு முதலியவைதான் மகிழ்ச்சியை கொடுக்கும் என்று சொல்லி அதை அன்பு செய்கிறான்.  அவற்றை தேடி அலைகிறான். ஆனால் இவைகளெல்லாம் கானல் நீர் போன்றவை. நிலையானாலும், நிறைவானாலும் ஞானம் மட்டுமே என்று மிகத்தெளிவாக சுட்டிக்தாட்டுகிறது. நீ.மொ.8:11ல் “பவளத்திலும் ஞானம் சிறந்தது என்றும் பொன்னைவிட ஞானத்தை பெறுவது மேல் என்றும் வாசிக்கின்றோம். எனவே எல்லாவற்றையும் விட ஞானத்தை யார் அன்பு செய்கிறார்களோ அவர்கள் 
அதை கண்டுகொள்ள முடியும்.

இரண்டாவதாக செபத்தின் மூலம் நாம் ஞானத்தை அடையலாம். ஏனென்றால் இறைவனால் மட்டுமே நமக்கு ஞானத்தை கொடுக்க முடியும். திருவிவிலியத்தில் “உங்களில் ஞானம் குறைவாக உள்ளவன் அதை கடவுளிடம் கேட்கட்டும். அதை அவர் அவனுக்கு தருவார் என்று பாhக்கின்றோம். இவ்வாறு இறைவனிடம் இருந்து ஞானத்தைப் பெற வேண்டுமானால் செபத்தின் வழியாக அவரை தேடக் கூடியவர்களாக நாம் இருப்பது அவசியம்.

மூன்றாவதாக விழித்திருப்பதன் மூலம் நாம் ஞானத்தை பெற முடியம். முன்மதியுடையவர்களாய் விழிப்பாயிருந்தவர்களாய் இருந்த 5 கன்னியர்கள் கடவுளின் ஞானமாக விளங்கும் கிறிஸ்துவை கண்டுகொண்டனர். ஆனால் அறிவிலிகளோ ஞானத்தை கோட்டை விட்டனர். நிகழ்காலத்தில் வாழ்ந்து அதற்குரிய கடமைகளைச் செய்யாமல் கடந்த காலத்திலோ அல்லது எதிர்காலத்திலோ வாழ்ந்தோமென்றால் அதுவே விழிப்பற்றதன்மை என்றழைக்கப்படுகிறது. மாறாக விழிப்பாயிருந்து தற்போது செய்கின்ற காரியத்தில் நம்முடைய மனத்தையும் கவனத்தையும் முழுமையாக செலுத்தி அவற்றை நன்றாக செய்வதின் மூலம் ஞானத்தை அடையலாம்.
இந்த ஞானத்தை பெற்றால் நமக்கு கிடைக்கும் பலன்கள் யாவை?

(ச.உ.7:9) ஞானம் வலிமை தரும். முகத்தை ஒளிரச்செய்யும். ஞானம் இறந்த காலத்தை அறியும். எதிர்க்காலத்தை உய்த்துணரும். உறைகளின் நுட்பங்களை புதிர்களின் விடைகளையும் அறியும். அடையாளங்களையும் வியத்தகு செயல்களையும் காலத்தின் பயன்களையும் முன்னறியும். துன்பத் துயரங்களிலிருந்து விடுதலை தரும். தன் மக்களை மேன்மைப்படுத்தும். தன்னை தேடுவோர்க்கு துணை நிற்கும். எல்லாவற்றிற்க்கும் மேலாக மக்களிடம் அடித்தளம் அமைந்துள்ளதோ அவர்களிடம் நீங்காது நிறைந்;திருக்;கும்.

முடிவுரை
நம்முடைய சமுதாய பெருளாதார ஆன்மீக வாழ்வில் முன்னேறுவதற்கு திட்டமிடல் அவசியம். இந்தத் திட்டமிடல் சரியானதாக இருக்க வேண்டுமானால் இறைஞானம் அவசியம். இந்த இறைஞானத்தின்படி நம்முடைய வாழ்வின் திட்டங்களை அமைத்து கொள்ளும் போது நம் வாழ்வு வளம் பெறுகிறது. எனவே ஞானமுள்ளவர்களாக வாழ முயற்சிப்போம். ஞானமே கடவுளின் இருப்பிடம். இயேசுவின் ஞானவிளக்கை ஏற்றி இச்சமுதாயத்தில் ஒளிர்வோம். நன்றி.

சகோ. ஈ.எடிசன்ராஜ்
முதலாம் ஆண்டு இறையியல்
மங்களுர்


LECTIO DIVINA


INTRODUCTION
       Lectio Devina literally means ‘the divine reading’ or the method of prayerful reading of the scripture. St. Benedict of Nursia, Italy, (480-542 CE) the father of western monasticism, may be credited with the idea of Lectio Divina. The Holy Father, Pope Benedict XVI says on Lectio Divina as one of the many fruits of the biblical springtime.[1]  Lectio Divina involves five stages or spiritual degrees:

i) LECTIO (READING)
       Lectio Divina begins with an attentive reading or a rereading several times of the text in which we want to hear what God says. The chosen text needs to be read over and over until it becomes familiar, almost learned by heart, emphasizing the main elements. We are supposed to reply the question in this stage: What is the real meaning of the passage I have read?

ii) MEDITATIO (MEDITATION)
        Once we discover the meaning of the biblical text we try to become involved personally by applying the meaning to our own life. The question that arises in the mind is “what is the text saying to me?  Meditation on what we have read helps us to make it our own by confronting it with ourselves. Here, another book is opened; the book of life. We pass from thought to reality. The text that we have read and understood becomes the norm of life. We find an answer to the question ‘what must I do to put it into practice or what must I do to give its meaning to my own life? [2]    

iii) ORATIO (PRAYER)
         The aspiration to know what God wants from us leads naturally to prayer. In this way a burning desire arises for what daily life should become. When we pray we don’t ask so much for what we lack but rather for what God has enabled us to see and understand. We need to ask ourselves: what do we say to the Lord in response to His word? Hence, we have to use the phrases or verses in the text to respond to God in our own words and express our burning desire to do God’s will which must be the object of our prayer.

iv) CONTEMPLATIO (CONTEMPLATION)
            The desire to do God’s will leads gradually and unconsciously to adoration, silence praise and a humble surrender to Him. We look at the person of God with the eye of our heart and wait patiently and silently for the Lord to infuse us with His love.  We desire to have a deep union with God and long for it with our whole heart. God will give it to us. Let us ask ourselves what conversion of mind, heart and life is the Lord asking of us?[3]

v) ACTIO (ACTION)
          We take a practical resolution that emanates from the text that we have considered in the Lectio Divina and let that resolution move us to make our lives gifts for others in charity.

CONCLUSION  
          St. Jerome declares that ignorance of the scripture is the ignorance of Christ. Therefore, let us take effort to nourish and thrive in holiness through the word of God by practising the Lectio Divina that serves as the cornerstone of the interpretation of the Word of God. 

BIBLIOGRAPHY
Egan, Keith. J. ed. Carmelite Prayer: A Tradition for the 21st Century. Mysore: Dhyanavana Publications, 2005.
Pazheparamphil, Thomas P.A. Lectio Divina: A Prayerful Reading of the Bible. Bangalore: Asian Trading Corporation, 2006.
Morello, Antony Sam. Lectio Divina  and the Practice of Therasian Prayer. Trivandrum: International Publishing House, 2004.
Benedict XVI, Verbum Domini: Post- Synodal Apostolic Exhortation. Trivandrum: Carmel Publishing House, 2011.
Document of the Pontificial Biblical Commission, The Interpretation of the Bible in the Church. Bangalore: NBCLC Publication, 1994.


[1] Pazheparamphil, Thomas P.A. Lectio Divina: A Prayerful Reading of the Bible. Bangalore: Asian Trading Corporation, 2006 p 13

[2] Morello,  Sam. Lectio Divina  and the Practice of Therasian Prayer. Trivandrum: International Publishing House, 2004 p 42

[3] Benedict XVI, Verbum Domini: Post- Synodal Apostolic Exhortation. Trivandrum: Carmel Publishing House, 2011 p 143

BRO. E.Edison Raj I Th.
ST.JOSEPH’S INTERDIOCESAN SEMINARY
MANGALORE