நெஞ்சத்திலே தூய்மையுண்டோ


  நெஞ்சத்திலே தூய்மையுண்டோ
  இயேசு வருகின்றார்
  நொறுங்குண்ட நெஞ்சத்தையே
  இயேசு அழைக்கிறார்

1. வருந்தி சுமக்கும் பாவம் - நம்மை
  கொடிய இருளில் சேர்க்கும்
  செய்த பாவம் இனி போதும்
  அவர் பாதம் வந்து சேரும்

2. குருதி சிந்தும் நெஞ்சம் - நம்மை
  கூர்ந்து நோக்கும் கண்கள் - 2
  அங்கு பாரும் செந்நீர் வெள்ளம்
  அவர் பாதம் வந்து சேரும் - 2

3. மாய லோக வாழ்வு - உன்னில்
  கோடி இன்பம் காட்டும் - 2
  என்னில் வாழும் அன்பர் இயேசு
  உன்னில் வாழ இடம் வேண்டும் - 2

தொடும் என் கண்களையே


  தொடும் என் கண்களையே
  உம்மை நான் காண வேண்டுமே
  இயேசுவே உம்மையே நான் காண வேண்டுமே

1. தொடும் என் காதுகளை
  உம் குரல் கேட்க வேண்டுமே
                       இயேசுவே - 2
  தொடும் என் நாவினையே
  உம் புகழ் பாட வேண்டுமே
                       இயேசுவே - 2
2. தொடும் என் கைகளையே
  உம் பணி செய்ய வேண்டுமே
                       இயேசுவே - 2
  தொடும் என் மனதினையே
  மனப்புண்கள் ஆற வேண்டுமே
                       இயேசுவே - 2
3. தொடும் என் உடலினையே
  உடல் நோய்கள் தீர வேண்டுமே
                       இயேசுவே - 2
  தொடும் என் ஆன்மாவையே
  என் பாவம் போக வேண்டுமே
                       இயேசுவே - 2
4. தொடும் என் இருதயத்தையே
  உம் அன்பு பெருக வேண்டுமே
                       இயேசுவே - 2

தேடிவந்த தெய்வம்



  தேடி வந்த தெய்வம் இயேசு என்னைத்
  தேடி வந்த தெய்வம் இயேசு
  வாடி நின்ற என்னையே வாழவைத்திட
  தேடி வந்த தெய்வம் இயேசு
  ஆ...ஆ...ஆ...ஆ...ஆ...ஆ - 2

1. பாவியாக இருந்த என் பாவம் போக்கினார்
  ஆவி பொழிந்து என்னையே தாவி
  அணைத்திட்டார் - 2
  அன்பே அவர் பெயராம் 2
  அருளே அவரின் மொழியாம்
  இருளே போக்கும் ஒளியாம் - 2

2. இயேசு என்னில் இருக்கிறார் என்ன ஆனந்தம்
  இருளும் புயலும் வரட்டுமே இதயம் கலங்குமோ - 2
  இறைவா இயேசு தேவா - 2
  இதயம் மகிழ்ந்து பாடும்
  என்றும் உம்மை நாடும் - 2

என் ஆயனாய் இறைவன்


  என் ஆயனாய் இறைவன் இருக்கின்றபோது
  என் வாழ்விலே குறைகள் என்பது ஏது?

1. என்னை அவர் பசும்புல் பூமியிலே
  எந்நேரமும் நடத்திடும் போதினிலே - 2
  என்றும் இன்பம் ஆ ... ஆ என்றும் இன்பம்
  ஆ... ஆ என்றென்றும் இன்பமல்லவா!

2. என்னோடவர் வாழ்ந்திடும் போதினிலே
  எங்கே இருள் படர்ந்திரும் பாதையிலே - 2
  எங்கும் ஒளி ஆ... ஆ எங்கும் ஒளி
  ஆ... ஆ எங்கெங்கும் ஒளி அல்லவா!

3. என்னை அவர் அன்பால் நிரப்பியதால்
  எல்லோர்க்குமே நண்பனாய் ஆக்கியதால் - 2
  என்னுள்ளமே ஆ... ஆ - என் தேவனை
  ஆ... ஆ எந்நாளும் புகழ்ந்திடுமே

இறைவனைத் தேடும் இதயங்களே


  இறைவனைத் தேடும் இதயங்களே
  வாருங்கள் என் இறைவன் யார்
  என்று சொல்வேன் கேளுங்கள்

1. பாடும் குயிலுக்கு பாடச் சொல்லி தந்தவர் யார்?
  ஆடும் மயிலுக்கு ஆடச் சொல்லி தந்தவர் யார்?
  அவரே என் இயேசு
  அவர் தாழ் நான் பணிவேன்
  அவர் தாழ் நான் பணிந்தால்
  அகமே மகிழ்ந்திடுமே

2. வானும் மண்ணும் வாழும் யாவும் படைத்தவர் யார்?
  வாழும் உயிருக்கு வாழ்வின் முடிவாய் நிலைப்பவன் யார்?
  என்னென்ன விந்தைகள்
  எங்கெங்கே காண்கின்றோம்
  அனைத்திற்கும் அடிப்படையாம்
  இயேசுவே காரணம்

இயேசுவின் திருநாமக் கீதம்


  இயேசுவின் திருநாமக் கீதம்
  என் நெஞ்சிலே என் நாளுமே
  சங்காக முழங்கிட வேண்டும்

1. நான் பாடும் பாடல் நாளிலமெங்கும்
  எதிரொலித்திட வேண்டும்
  ஆ...ஆ...ஆ ஆ... (நான் பாடும்)
  உள்ளம் உடைந்தோர் உவகை இழந்தோர்
  உணர்வுப் பெற வேண்டும்
  உவகை பெற வேண்டும் -2

2. பலகோடி புதுமைகள் செய்தது இயேசுவின்
  இணையில்லா திருநாமம்
  ஆ...ஆ...ஆ ஆ... (பல கோடி)
  வாழவைப்பதும் வாழ்விக்கப்போவதும்
  அருள் தரும் ஒரு நாமம்
  இயேசுவின் திருநாமம் -2

இயேசுவின் நாமத்தினால்


இயேசுவின் நாமத்தினால் கூடிடும் சமயங்களில்
திவ்விய அவர் சமூகம் நம் அருகினில் இருக்கிறது 2

1. கேளுங்கள் கொடுக்கப்படும் தேடுங்கள் கண்டடைவீர்-2
  மாறாத தேவன் மறைவாக்கு இதுவே மாறாத தென்னாளிலும்-2

2. பாடுங்கள் பரவசமாய் பரமன் இயேசு அன்பினையே-2
  துதிக்கின்றபோது எழுகின்ற நெருப்பு மகிமையைக் காணச் செய்யும்-2

3. கண்ணீர் துடைத்திடுவார் கரங்கள் பற்றி நடத்திடுவார்-2
  அழைக்கின்ற பக்தர் குரலினைக் கேட்டு ஆசீர்கள் அளித்திடுவார்-2