இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காக தருகின்றேன் -2
மலர்களில் விழுந்து மணமேன நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பனிந்து
1.
பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன் -2
விழுந்தவரை தூக்கிடுவேன்
இங்கு நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
இறைவா....

2.
இருப்பவர் கொடுப்பதில் இன்பம் என்ன
கையில் இருப்பதை கொடுப்பதே இனபம் என்றாய-2
பலியை அல்ல இரக்கத்தையே
என்னில் விரும்புகின்ற இறைமகனே
உன்னைபோல் நானும் உருவாகிட
இறைவா...

வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்

வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்
வந்திவண் அன்பினை யாம் தருவோம்
வாருங்கள் இறைவனை ஆராதிப்போம்

1.
ஆனைத்துலகின் இறைமகனாம் அனைவருக்கும் ஆண்டவராம் -2
மாமரி மகனாக, இனைவார்த்தைநயே மனுவாக
பாருக்கு ஒளியாக பாவம் தீர்த்திட அருளாக
விண்ணவர்க்கு மகிமை தந்தார், மண்ணவர்க்கு அமைதி தந்தார் -2
2.
ஒளிர்ந்திடும் மீன் வழியே, அது விழித்திடும்
குடிலருகே
மன்னவர்கள் மூவர் சென்றர், மன்ன்னை மகிழ்வாய் வணங்கி நின்றர்
பொன்,மீரை,துபமுமாய்,பொருத்தனையாய் கவடுத்தனராம் -2

3.
ஆதியின் வினைத்திர்த்தார் நமை அறநெறியில் சேர்த்தார்
அன்புக்கு அருள் தருவார்,நம்மை அழித்திடும் இருள் மாய்ப்பார்
நாமவர்க்கு நமை அளிப்போம்,தமதமேன்?
அன்பு செய்வோம் -2

அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே


அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே – 2
1.
ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருள்ஒளி வீசும் ஒரு வழி போவோம் (2)
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம் – 2
பரிவுள்ள இறைவன் திருவுளம் காண்போம்
2.
பிறப்பிலும் இயேசு இறப்பிலும் நம்மை
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை (2)
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் – 2
பிறரையும் நமைப் போல் நினைத்திட வேண்டும்

கிறிஸ்துமஸ் பாடல் - பெத்தலையிலே சின்னப் பாலன்

பெத்தலையிலே சின்னப் பாலன் பிறந்தார்
இறைவன் நம்மோடு கொண்டாடுவோம் (2)
தனை வழங்கும் தலைவன் இவரே – 2
உள்ளக்குடிலில் பிறந்து வந்த ஒளியே
பெத்தலையிலே சின்னப் பாலன் பிறந்தார்
இறைவன் நம்மோடு கொண்டாடுவோம்
ஏழைகள் வாழ்வினிலே – புது நற்செய்தி ஒளியாகினாய்
சிறை உழன்றோரெல்லாம் விடுதலை – என்றும்
அடைந்திட உழைக்க வந்தாய் (2)
ஆண்டவர் அருள்தரும் ஆண்டினைக் கொணர்ந்தாய்-2
உலக இருளகற்றும் ஒளி விளக்கே

விழிகளை இழந்தவரின் புதுப்பார்வைகள் நீயாகினாய்
ஒடுக்கப்பட்டோரெல்லாம் உரிமைகள் – பெற்று
மகிழ்ந்திட மலர்ந்து வந்தாய் (2)
ஆண்டவர் அருள்தரும் ஆவியைப் பொழிந்தாய் -2
அன்பின் வழி நடக்க எமைப் பணித்தாய்

பாலகா உனக்கொரு பாட்டு

பாலகா உனக்கொரு பாட்டு தூங்கிடு நீ அதை கேட்டு
ஏழை எந்தன் தாலாட்டு உனக்கு
ஏற்றுக் கொண்டால் ஆனந்தம் எனக்கு (2)
அகயிருள் நீக்கிடும் ஒளியாய் என்னில்
ஆறுதல் தந்திடும் மொழியாய் (2)
விண்ணில் வந்த நிலவே என்னில் வந்த உறவே – 2
நீ வருவாய் இதயம் தருவேன் – 2

வாழ்வினை வழங்கிடும் உணவாய் – என்னில்
தாழ்வினைக் களைந்திடும் உணவாய் (2)
மண்ணில் வந்த இறையே என்னில் வந்த உறவே – 2
நீ வருவாய் இதயம் தருவேன் – 2

கிறிஸ்துமஸ் பாடல் - எந்தன் நெஞ்சுக்குள்ளே

எந்தன் நெஞ்சுக்குள்ளே நீ பிறக்க
எனக்கென்ன கவலை என் இறைவா – இனி
அச்சமென்ப தெனக்கில்லை

வழியெங்கும் தடையில்லை தலைவா
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே ஆ இறையரசு நனவாகுமே ஆ
உந்தன் பிறப்பு சிறப்பு தருமே இறையரசு நனவாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்கவா
பாதைகள் தெரியாமல் நான் திரிந்தேன்
வழி காட்டிடும் விண்மீனாய் நீ பிறந்தாய்
உந்தன் கரமானது ஆ எந்தன் துணையாகுமே ஆ
உந்தன் கரமானது எந்தன் துணையாகுமே
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே – 3 பிறக்க வா

வாழ்க்கையை இழந்து நான் தவித்தேன்
நான் உன்னோடு என்று என்னில் மலர்ந்தாய்
உந்தன் உறவானது ஆ உயிர்த் துணையானது ஆ
உந்தன் உறவானது உயிர்த் துணையானது
உந்தன் வார்த்தை என் வாழ்வின் உயிராகுமே உயிராகுமே
எந்தன் நெஞ்சுக்குள்ளே -3 பிறக்கவா

கிறிஸ்துமஸ் பாடல் - இன்று நமக்காக மீட்பர்

இன்று நமக்காக மீட்பர் பிறந்துள்ளார்
அவரே ஆண்டவராம் மெசியா – 2 (2)

ஆண்டவர்க்கு புதியதொரு பாடல் பாடுங்கள்
மாநிலத்தோரே நீங்கள் அனைவரும் அவரைப் போற்றுங்கள் (2)
ஆண்டவரைப் போற்றுங்கள்
அவர் பெயரை தினமும் வாழ்த்துங்கள் (2)
அவர் தரும் மீட்பை நாள்தோறும் மகிழ்ச்சியாய் அறிவியுங்கள்
புறவினத்தாரிடை அவரது மாட்சியை எடுத்துச் சொல்லுங்கள்
மக்கள் அனைவரும் அவர்தம் வியத்தகு
செயல்களைக் கூறங்கள் (2)
வானங்கள் மகிழட்டும் இந்த பூவுலகும் களிகூறட்டும் -2
கடலும் அதிலுள்ள உயினமும் ஆரவாரம் செய்யட்டும்