உலகினைப் படைத்த ஆண்டவரே

உலகினைப் படைத்த ஆண்டவரே
உம்மிடம் சரணடைந்தேன்
என் மனம் தருகின்ற காணிக்கையை
ஏற்றிட வேண்டுகிறேன் -2
கருணையின் இறைவா ஏற்பாயே
காலமெல்லாம் நலம் சேர்ப்பாயே -2
1.
விலைமதிப்பில்லா கலப்படம் இல்லா
நறுமணத் தைலம் முழுமையாய் தந்தேன் -2
உள்ளத்தின் எண்ணம் அறிந்திடும் இறைவா
ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் -2
உன் எழில் பாதம் சரணடைந்தேன்
என் பிழையாவும் பொறுத்தருள் செய்வாய்

2.
கோதுமை அப்பமும் திராட்சை இரசமும்
உம் மனம் விரும்பும் காணிக்கையன்றோ -2
கலைகளும் கல்வியும் திறமையும் யாவும்
அடுத்தவர் நலம் பெற கையளித்தேன் -2
ஆவியை என்னில் பொழிந்திடுவாய்
யாவரும் நலமுடன் வாழ்ந்திடச் செய்வாய்

தாயாக அன்பு செய்யும்

தொகையறா..
தாயாக அன்பு செய்யும் இறைவா அன் வாழ்விலே
ஒளியேற்றவா

தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா
சேயாக நம்பி வந்தோம் வாழ்வில் ஒளியேற்றவா -2
கொஞ்சும் தமிழ் மொழிபேசி எனைத்தேற்றவே -2
பிஞ்சு நெஞ்சம் அழைக்குது வருவாய் தேவா
1.
உன் அன்பு சாரலில் நனைந்தலே போதும்
இன்னல்கள் நீங்கிடுமே
உன் சுவாசக்காற்றில் கலந்தலே போதும்
விண்வாசல் அடைந்திடுவேன்
நான் என்றும் உன் சாயல் தானே
உன் கோவில் குடி கொள்ள நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

2.
உன் பாச நரம்பில் இணைந்தாலே போதும்
சுகராகம் மிட்டிவேன்
உன் வார்த்தைகடலில் மிதந்தாலே போதும்
யுகம் பல படைத்திடுவேன்
எல்லாமே நீ பானே இறைவா
என் உள்ள தினைவாக நீ வா -2
தாயாக அன்பு செய்யும் என்னுயிர் நீதானய்யா

ஆயனைத் தேடும் ஆடுகளே

ஆயனைத் தேடும் ஆடுகளே
ஆயன் நம்மை தேடுகிறார் -2
சிதறிய சிறுமந்தை நாமே -2
சேர்ந்தே அவரிடம் செல்வோம்

சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2
1.
பசும்புல் மேய்ச்சலில் இளைப்பாற செய்வேன்
பாயும் நீர் அருவிக்கு நடத்தி செல்வேன் -2
நலிவுற்றதும் வலுவற்றதும்
களைப்புற்றதும் சோர்வுற்றதும்
நிலை வாழ்விலே நிலைபெற செய்வேன்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2

2.
பெரும்சுமை சுமர்ந்து சோர்ந்திருப்போரே
பணிவும் கனிவும் எனக்குண்டு -2
என சுமையோ எளிதானது என் நுகமும் எளிதானது
என்னிடம் பகின்று இளைப்பாற்றி காண்பீர்
சிறுமந்தையே சேர்ந்திடுவோம்
இறையாட்சியை அமைத்திடுவோம் -2

உலகினைப் படைத்த ஆண்டவரே

உலகினைப் படைத்த ஆண்டவரே
உம்மிடம் சரணடைந்தேன்
என் மனம் தருகின்ற காணிக்கையை
ஏற்றிட வேண்டுகிறேன் -2
கருணையின் இறைவா ஏற்பாயே
காலமெல்லாம் நலம் சேர்ப்பாயே -2
1.
விலைமதிப்பில்லா கலப்படம் இல்லா
நறுமணத் தைலம் முழுமையாய் தந்தேன் -2
உள்ளத்தின் எண்ணம் அறிந்திடும் இறைவா
ஏழையின் அன்பை ஏற்றிடுவாய் -2
உன் எழில் பாதம் சரணடைந்தேன்
என் பிழையாவும் பொறுத்தருள் செய்வாய்

2.
கோதுமை அப்பமும் திராட்சை இரசமும்
உம் மனம் விரும்பும் காணிக்கையன்றோ -2
கலைகளும் கல்வியும் திறமையும் யாவும்
அடுத்தவர் நலம் பெற கையளித்தேன் -2
ஆவியை என்னில் பொழிந்திடுவாய்
யாவரும் நலமுடன் வாழ்ந்திடச் செய்வாய்

லல்லா..லாலா லாலா Happy happy Christmas

லல்லா..லாலா லாலா
Happy happy Christmas
Merry merry Christmas

பாலன் இயேசு பிறந்துள்ளார் பூவுலகம் மகிழுதே -2
இறையாட்சி மலரட்டும் - நம்மில்
விடுதலை விடியட்டும் -2

1.
மாட்டுத் தொழுவத்தில் பிறந்துள்ளார்
மனித உள்ளத்தில் மலர்ந்துள்ளார் -2
மனிதம் மலரட்டும் நம்மில் அமைதி பரவட்டும்
நீதி நிலைக்கட்டும் மனித ஒற்றுமை ஓங்கட்டும் -2
(லல்லா...)

2.
ஏழை மனித மனங்களில்
பாமரன் இயேசு பிறந்துள்ளார் -2
வறுமை அழியட்டும்
உணமை செழிக்கட்டும்
புது வாழ்வு பிறக்கட்டும்
புது உறவுகள் வளரட்டும் -2
(லல்லா...)

நீயாக நான் மாறனும்

நீயாக நான் மாறனும்
நிஜமாக நான் வாழனும்
எனக்காக பலியானதால்
உனக்காக நான் வாழனும்
உயிரே வா... உறவே வா..
வழியே வா... ஒளியே நீ வா...

1.
உயர்தவன் தாழ்ந்தவன் நிலையிங்கு மாறிட
நான் மாறனும் நீயாகவே
மனிதமும் புனிதமும் இணைந்திடவே
நான் மாறனும் நீயாகவே
உயிரே வா... உறவே வா..
வழியே வா... ஒளியே நீ வா...
2.
பாவமும் சாபமும் மறையந்திடவே
நான் மாறனும் நீயாகவே
பரிவையும் கனிவையும் வளர்த்திடவே
நான் மாறனும் நீயாகவே
உயிரே வா... உறவே வா..
வழியே வா... ஒளியே நீ வா...

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்

இறைவா உந்தன் பாதம் வருகின்றேன்
என்னையே உனக்காக தருகின்றேன் -2
மலர்களில் விழுந்து மணமேன நுழைந்து
காற்றினில் கலந்து கனிவோடு பனிந்து
1.
பசி உள்ளோர்க்கு உணவாக நானிருப்பேன்
உடை இல்லாத எளியோர்க்கு உடை அளிப்பேன் -2
விழுந்தவரை தூக்கிடுவேன்
இங்கு நலிந்தவரின் துணையிருப்பேன்
இதுவே நான் தரும் காணிக்கையே
இறைவா....

2.
இருப்பவர் கொடுப்பதில் இன்பம் என்ன
கையில் இருப்பதை கொடுப்பதே இனபம் என்றாய-2
பலியை அல்ல இரக்கத்தையே
என்னில் விரும்புகின்ற இறைமகனே
உன்னைபோல் நானும் உருவாகிட
இறைவா...