வருகைப்பாடல்

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்
அவர் பலியினில் கலந்திட அவர் ஒளிpயினில் நடந்திட
சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே
1.
தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்
தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் நம்மை தேற்றுவார்
சுமைகளை சுகங்களாக மாற்றுவார்
வளமுடன் வாழும் வழியை காட்டுவார்
வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்
2.
அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார்
அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்
விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார். வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம்
வானக தந்தையை நாம் வணங்கிடுவோம்

1 கருத்து:

  1. வருவாய் வருவாய் திருகுலமே நிறைவாய் மகிழ்வாய் மறைகுலமே பாடல் வரிகள்

    பதிலளிநீக்கு