தொழிலாளிகளின் செபம்

அனைத்தையும் படைத்துப் பராமரிக்கும் இறைவா, நெற்றி வியர்வை தரையில் விழ உழைக்க எமக்குப் பணித்தீரே ! நான் என் வேலைகளை விரும்பவும், அன்பு செய்யவும் அருள்வீராக. நேரத்தோடு வேலைக்குச் சென்று காலத்தையும் பொருளையும், பணத்தையும் வீணாக்காமல், நுணுக்கமான கவனத்துடன் உழைப்பேனாக. எப்பொழுதும் வேலையில் உற்சாகத்தோடும், உடன் ஊழியருடன் மரியாதையோடும், நிறுவனத்தார்க்குப் பிரமாணிக்கத்தோடும் நடந்து கொள்வேனாக. என் வேலையின் பயனால் என் வீடும், எமது தொழிலும், பொது மக்களும் பயனடையச் செய்தருளும்.
தொழிலாளியின் பாதுகாவலரான புனித சூசையப்பரே ! உமது தொழிலை இறைமகனே வாழ்த்தி, உமக்கு உதவியாக வந்து தச்சுத் தொழிலைச் செய்தாரே! உமது தொழிலை நீர் அன்பு செய்து திருக்குடும்பத்தைக் காப்பாற்றியதுபோல், நானும் என் தொழிலைப் பெரிதெனக் கருதி, அதனை அன்பு செய்து, என் குடும்பத்தையும் காப்பாறுவேனாக. இறைவனின் திருவுளத்தை உமது தொழிலால் நிறைவு செய்ததுபோல், என் தொழிலால் இறைவனின் திருவுளத்தை நானும் நிறைவு செய்ய எனக்காக அதே இயேசுவிடனம் மன்றாடுவீராக. -ஆமென்


-----------------
நல்ல இயேசுவே, என் இரட்சகரே! தேவரீர் ஒரு தொழிலாளியாய் இருக்க திருவுளம் கொண்டமையால், என் ஆண்டவரும் மாதிரியுமாகிய உம்மை நான் அணுகி வருகிறேன்.

நாசரேத்தூரில் அந்த எளிய தொழிற்சாலையில், சாந்தமும் தாழ்ச்சியும் உள்ளவராய், தூய்மை, வாய்மை, நேர்மை, மேரை மரியாதை நிறைந்தவராய் வாழ்ந்தீர், உமது தொழில் முயற்சிகளில் பரிகார உணர்ச்சி ததும்பி நின்றது. கடின பிரயாசையான உம் வேலைகளை செபத்தினாலும், கீழ்படிதலினாலும் நீர் அர்ச்சித்தீர்.

ஓ இயேசுவே ! தெய்வீகத் தொழிலாளியே, நானும் இப்படி இருக்க எனக்கு வரமருளும்.

உம்முடைய திருவருளின் உதவியினாலும், வேலையாட்கள், தொழில் பயிலுவோர்களின் பாதுகாவலர்களாகிய தேவ தாயார், சூசையப்பர் இவர்களுடைய ஆசீர்வாதத்தின் பலனாலும் இன்னும் அதிகமதிகமாய் நானும் தேவரீரைப் போல் வாழ்ந்து, உழைப்பேனாக. என் திவ்விய இரட்சகரே, கடும் பிரயாசைகள் நிறைந்த இவ்வுலக வாழ்க்கையை நான் முடித்தபின், உமது நித்திய இளைப்பாற்றியை எனக்குக்குக் கட்டளையிட்டருளும். -ஆமென்.

தொழிலாளரின் மாதிரியாகிய புனித சூசையப்பரே, எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.

கணவன் மனைவியரின் செபம்

கிறிஸ்துவுக்கும், திருச்சபைக்கும் உள்ள நேச ஐக்கியத்தை குறிக்கவும், உலக பரம்புதலுக்காகவும், நெருங்கிய அன்புக்காகவும் புனித திருமணவாழ்வை அர்ச்சித்தருளின இறைவா, அதன் ஆசீர்வாதத்தை இருவரும் வணக்கத்தோடு ஏற்றுக் கொண்டு அதன் கடமைகளை நடத்தக் கிருபைபுரியும். எங்களுடைய ஒன்றிப்பை இடைவிடாமல் ஆசீர்வதிக்கவும், அதனால் நாங்கள் இருவரும் எல்லா கடமைகளையும் சமாதானத்தோடும் அன்போடும் நிறைவேற்றவும், பிரமாணிக்கமாய் எங்களில் ஒருவருக்கொருவர் நடக்கவும் உம்மை மன்றாடுகிறேன். பிரிபடக்கூடாத கட்டினால் கட்டின அந்தப் புனித பந்தத்தை பலவீனப்படுத்தக்கூடிய எவ்விதக் கெட்ட குணத்திலும் பாவச் செயலிலும் இருந்து என்னை விடுவித்தருளும். தன்னலத்தை மறந்து, தியாக உள்ளத்தோடு வாழ்ந்து நான் உமக்குப் பிரியப்பட நடக்க சுறுசுறுப்புள்ளவனாகவும் ஆசையுள்ளவனாகவும் செய்தருளும். இவ்வுலக சோதனை துன்பங்களினால் உமது பேரில் முறுமுறுத்து எல்லாவற்றிற்கும் காரணரும் ஈகிறவருமாயிருக்கிற உம்மை உலக வாழ்வின் நிறைவால் மறந்து விடாமலிருக்கச் செய்தருளும். பொறுமையாலும் கடன் சாந்த குணத்தாலும், செபத்தாலும், நன்றியறிதலாலும் உமக்குக் கீழ்படிந்திருக்க என்னை ஆசீர்வதித்து உமக்குத் தகுந்தவனாகவும் செய்தருளும். -ஆமென்.

காவல் தூதரை நோக்கிச் செபம்

அதிமிக பிரமாணிக்கம் அமைந்த காவலரே ! அடியேனுக்குப் பிரியாத துணைவராக இறைவனால் நியமிக்கப்பட்டு எப்போதும் என் அருகிலிருந்து என்னை ஆண்டு நடத்தி வரும் வான தூதரே! இன்று(பேர்) ஆகிய நான் உம்மை என் பாதுகாவலராகவும் அடைக்கலமாகவும் தெரிந்து கொண்டு என்றென்றைக்கும் என்னை முழுதும் உமது பராமரிப்பில் வைத்து விடுகிறேன். மேலும் நான் உமது மகிமை பிரதாபத்துக்கு விரோதமான எவ்வித சொல்லினாலும் செயலினாலும் உம்மை விட்டுப் பிரியாமலிருப்பதும் அன்றி எனக்கு கீழ்ப்பட்ட மற்றவர்களும் தேவரீருக்கு விரோதமாய் ஏதாவது சொல்லவும் செய்யவும் விடுகிறதில்லை என்றும் உறுதி செய்கிறேன். ஆதலால் இன்று முதல் என் மரண பரியந்தம் உமது ஊழியனாக என்னை ஏற்றுக் கொள்ளும். நான் செய்யும் செயல்களிலும் எனக்கு உதவி செய்து, சிறப்பாக என் மரண நேரத்தில் என்னைக் கைவிடாமல் காத்தருளும். – ஆமென்.

புனித மிக்கேல் அதிதூதரை நோக்கி செபம்

வானுலக சேனை தளங்களின் அதிபதியே, என்றும் வாழும் அரூபிகளில் மகிமை பிரதாபம் நிறைந்த வானதூதரே, அவர்களிலும் உத்தமமானவரே! உன்னத கடவுளின் மந்திராலோதனையின் நிர்ணய பெட்டகமே, தேவ சிம்மாசனத்தின் அருகே நிற்கப் பேறுபெற்ற பிரவுவே, தேவ கட்டளைபடி விண்ணுலக வாசலைத் திறக்கவும், பூட்டவும், அதிகாரம் உள்ள வானவரே, தேவ நீதியின் அரியணையின் முன் எங்களைச் சேர்ப்பிக்கும் தூதாதி தூதரே, மரண அவஸ்தை படுகிறவர்களுக்கு உதவி செய்ய விரைந்து வரும் உபகாரியே, மரித்தவர்களை அழைத்து கொண்டுபோய் திவ்விய கர்தரின் சன்னதியில் சேர்க்கும் காவலரே, பலவீனனும் நிர்ப்பக்கியனுமாகிய அடியேனை கிருபாகடாட்சமாய்ப் பார்த்து என் வாழ்நாள் முழுவதிலும் சிறப்பாக எனது மரண தருவாயிலும் எனக்கு உமது தயை நேச உதவி புரிந்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறேன். -ஆமென்.

தூய்மைக்காக இளைஞரின் மன்றாட்டு

எல்லாம் வல்லவரும், அனைத்தையும் காண்கிறவருமான இறைவா, என் ஆத்துமத்தை உமது திவ்விய இலட்சண சாயலாக உண்டாக்கினீரே, அதை நான் களங்கப்படுத்தாதபடி எனக்கு அனுக்கிரகம் செய்தருளும். நமது ஆலயத்தை யாதாமொருமன் அசுசிப்படுத்தினால் அவனைச் சிதைப்போம் என்று திருவுளம்பற்றினீரே,

சுவாமி ! உமது அருள் வாக்கின்படியே என் உடலே உமது தேவாலயமாயிற்று, இதிலே உமது திருவருளினால் தேவரீருடைய பரிசுத்த ஆவியார் உறைந்திடத் திருவுளம் கொண்டது மன்றி அநேக முறை உம்முடைய திருக்குமாரனுமாகி இயேசுநாதரும் தேவநற்கருணை வழியாக எழுந்தருளி வந்து இதனை அர்ச்சித்தருளினார். ஆகையால் தூய்மையின் உருவான இறைவா, உமக்குச் சொந்தமாகிய இத்தேவாலயத்தில் தேவரீர் மிகுந்த அருவருப்புடனே வெறுக்கிற பாவ அக்கிரமங்களை வரவிடாதேயும். தூய்மைக்கு விரோதமான ஓர் அர்ப்ப மாசும் என் ஆத்துமத்திலாவது உடலிலாவது உண்டாகாதபடி கிருபை செய்தருளும். என் திவ்விய இரட்சகரான இயேசுவே ! இந்த விலைமதியாத புண்ணியத்தை அனுசரிக்க உமது சிறப்பான உதவி வேண்டியிருக்கிறதினால், தூய்மையை விரும்புகிறவரும் கன்னியர்களுக்கு நிறைந்த தயையுள்ள அரசருமாகிய தேவரீர் பாதத்தில் இந்தத் தூய்மையான புண்ணியத்தைக் கேட்க வருகிறேன்.

உம்முடைய வரப்பிரசாதத்தினால் எத்தனையோ பேர்கள் இவ்வுலகில் தேவதூதர்களைப் போலத் தூயவர்களாய் நடந்தார்கள் ! அவர்களும் என்னைப் போலப் பலவீனர்களாகத்தானே இருந்தார்கள், ஆகையால் என் பலவீனத்தால் நான் தைரியமற்றுப்போக நியாயமில்லை. மனத்திடம் கொடுக்கிறவராகிய கர்த்தாவே ! தேவரீர் அவர்களை உறுதிப்படுத்தினது போல் என்னையும் தூய நெறியில் உறுதிப்படுத்தியருளும். அவர்களால் ஆனது போல் உம்மைக் கொண்டு எந்நாளும் எல்லா நலமும் ஆகக்கூடும். உமது தோத்திரத்துக்கும் என் இரட்ச்சணியத்துக்கும் விரோதியாகிய சத்துரு தன் சோதனையால் என்னை மயக்கி என் மீது வெற்றிக் கொண்டு விடாதபடி அடியேன் இடைவிடாமல் சுறுசுறுப்போடே வேண்டிக்கொள்ளவும், என் மேலே காவல் காத்து எச்சரிக்கையோடே நடக்கவும் தயைபுரியும். நான் என் புத்தி நினைவைத் திடமாய் ஒழுங்குபடுத்தி என் பொறிகள் ஐந்தினையும் எந்நேரமும் அடக்கிப் பாவ சமயங்களையெல்லாம் தைரியமாக விலக்கி என்னை அசுத்தப்படுத்துவதானன எல்லாவற்றையும் மகா அருவருட்னே ஆலோசித்து ஓர் அர்ப்பக் குற்றத்தின் சாயலுக்கு முதலாய் அஞ்சி நுணுக்கமான பக்தியுடன் சுமித்திரையாய் நடந்து மிகப் புச்சியமும் மழுங்குவதற்கு எளிதுமாகிய இந்தப் புண்ணியத்தைப் பழுதில்லாமல் காப்பாற்ற அனுக்கிரகம் செய்தருளும்.

தூய்மைக்கு இருப்பிடமாகிய கன்னித் தாயே, எனக்கு அடைக்கலமாயிரும். அடியேனுக்காக உம்முடைய திருக்குமாரனை மன்றாடியருளும். என் காவல் தூதரே, சோதனையில் என்னைக் கைவிடாமல் காத்தருளும். - ஆமென்.

இயேசுநாதருடைய திரு இருதயத்திற்கு மனுக்குலத்தை ஒப்புக்கொடுக்கும் செபம்

ஓ! மிகவும் மதுரம் நிறைந்த இயேசுவே! மனுக்குலத்தின் இரட்சகரே! உமது பீடத்தின் முன்பாக சாஷ்டாங்கமாய் விழுந்து கிடக்கும் அடியோர்கள் பேரில் உமது கண்களைத் திருப்பியருளும். நாங்கள் தேவரீர்க்குச் சொந்தமானவர்கள்@ உமக்கு சொந்தமானவர்களாகவே இருக்கும்படி ஆசையாய் இருக்கிறோம். இன்னும் அதிக உண்மையாய் தேவரீரோடு ஒன்றித்திருக்கத்தக்கதாக உங்களில் ஒவ்வொருவரும் எங்கள் மனதார எங்களை இன்றைக்கு உம்முடைய திருஇருதயத்திற்கு ஒப்புக்கொடுக்கிறோம்.

சுவாமி! மனிதர்களுக்குள்ளே அனேகர் தேவரீரை ஒருபோதும் அறிந்ததேயில்லை@ வேறே அநேகர் உம்முடைய கற்பனைகளை நிந்தித்துப் பழிநத்து உம்மை வேண்டாமென்று தள்ளிப்போட்டார்கள். ஓ! மகா தயாளம் நிறைந்த இயேசுவே! இவர்கள் எல்லார்பேரிலும் இரக்கமாயிரும்@ இவர்கள் எல்லாரையும் உமது திரு இருதயத்தருகில் இழுத்தருளும். ஆண்டவரே! உம்மை விட்டு ஒருபோதும் பிரியாமல், என்றும் பரமாணிக்கமாயிருக்கும் விசுவாசிகளான கிறிஸ்துவர்களுக்கு மாத்திரமேயன்றி, உம்மை விட்டுப் பிரிந்து போன ஊதாரிப்பிள்ளைகளுக்கும் தேவரீர் இராஜாவாக இருப்பீராக@ இவர்கள் எல்லாரும் பசியாலும் துன்பத்தாலும் வருந்திச் சாகாதபடி தங்கள் தகப்பன் வீட்டுக்குச் சீக்கிரத்தில் வந்து சேரும்படி கிருபை செய்வீராக! அபத்தப் பொய்க் கொள்கைகளால் ஏமாந்துபோய் இருப்பவர்களுக்கும், விரோதத்தால் விலகியிருப்பவர்களுக்கும் தேவரீர் இராஜாவாயிருப்பீராக@ எங்கும் ஒரே மேய்ப்பனும் ஒரே மந்தையும் இருக்கும்படி, இவர்கள் எல்லாரையம் சத்தியத்தின் துறைமுகத்திற்கும், விசுவாசத்தின் ஒருமைப்பாட்டிற்கும் அழைத்துக் கூட்டிச் சேர்த்தருளும்.

ஆண்டவரே! உம்முடைய திருச்சபையை தீமையிலிருந்து பாதுகாத்து திண்ணமான சுயாதீனத்தை அதற்குக் கட்டளையிட்டருளும். சகல நாட்டு மக்களுக்கும் ஒழுங்குக் கிரமத்தையும் சமாதனத்தையும் தந்தருளும். இப் பூமியில் ஒருகோடி முனைமுதல் மறுகோடி முனை மட்டும் ஒரே குரலில் சத்தமாய், "நமக்கு இரட்சணியம் கொண்டுவந்த திவ்விய இருதயத்துக்கு தோத்திரம் உண்டாவதாக, மகிமையும் வணக்கமும் சதாகாலமும் வருவதாக" என்ற புகழ் விடாது சப்தித்து ஒலிக்கக் கடவது. - ஆமென்.

இயேசுவின் திரு இருதயத்திற்கு குடும்பங்களை ஒப்புக்கொடுக்கின்ற செபம்

இயேசுவின் திரு இருதயமே! கிறிஸ்தவக் குடும்பங்களுக்கு தேவரீர் செய்துவரும் சகல உபகாரங்களையும், சொல்லமுடியாத உமது நன்மைத்தனத்தையும் நினைத்து நன்றியறிந்த பட்சத்தோடு உமது திருப்பாதத்தில் சாஷ்டாங்கமாக விழுந்துகிடக்கிறோம்.

நேசமுள்ள இயேசுவே! எங்கள் குடும்பங்களிலுள்ள சகலரையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். தேவரீர் எங்களை ஆசீர்வதித்து இப்போதும் எப்போதும் உம்முடைய திருஇருதய நிழலில் இளைப்பாறச் செய்தருளும்.
தவறி எங்களில் எவரேனும் உமது இருதயத்தை நோகச்செய்திருந்தால் அவர் குற்றத்திற்கு நாங்களே நிந்தைப் பரிகாரம் செய்கிறோம். உமது திருஇருதயத்தை பார்த்து எங்கள் பரிகாரத்தை ஏற்றுக்கொண்டு அவருக்கு கிருபை செய்தருளும்.

இதுவுமின்றி உலகத்திலிருக்கும் சகல குடும்பங்களுக்காகவும் மன்றாடுகிறோம். பலவீனர்களுக்கு பலமும், விருந்தாப்பியர்களுக்கு ஊன்றுகோலும், விதவைகளுக்கு ஆதரவும், அனாதைப் பிள்ளைகளுக்கு, தஞ்சமுமாயிருக்கத் தயைபுரியும். ஒவ்வொரு வீட்டிலும் நோயாளிகள் அவஸ்தைப்படுகிறவர்கள் தலைமாட்டிலும் தேவரீர் தாமே விழித்துக் காத்திருப்பீராக.
இயேசுவின் இரக்கமுள்ள திருஇருதயமே! சிறுபிள்ளைகளை எவ்வளவோ பட்சத்தோடு நேசித்தீரே. இந்த விசாரணையிலுள்ள சகல பிள்ளைகளையும் உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். அவர்களை ஆசீர்வதியும். அவர்களுடைய இருதயத்தில் விசுவாசத்தையும், தெய்வ பயத்தையும் வளரச்செய்யும். ஜீவிய காலத்தில் அவர்களுக்கு அடைக்கலமாகவும் மரண சமயத்தில் ஆறுதலாகவும் இருக்க மன்றாடுகிறோம். திவ்விய இயேசுவே! முறை முறையாய் உமது திருச்சிநேகத்தில் ஜீவித்து, மரித்து நித்திய காலமும் எங்கள் குடும்பம் முழுவதும் உம்மோடு இளைப்பாறக் கிருபை புரிந்தருளும். - ஆமென்

இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.
இயேசுவின் திரு இருதயமே என் நம்பிக்கையை உமது பெயரில் வைக்கிறேன்.

திருக்குடும்பத்தை நோக்கிச் செபம்

இயேசுவின் திரு இருதயமே ! அமலோற்பவ கன்னிமாதாவின் திரு இருதயமே! ஓ! மிகுந்த மகிமைப் பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே! உங்கள் அடைக்கலமாக ஓடி வந்து உங்கள் உபகார சகாயங்களை இறந்து மன்றாடிக் கேட்டஎவனும் அந்த மன்றாட்டுக்களை அடையாமற் போனதில்லையென்று நினைத்தருளுங்கள். இத்தகைய நம்பிக்கையால் ஏவப்பட்டு என் பாவச்சுமையோடே உங்கள் பாத சந்நிதானத்தில் சாஷ்டாங்கமாக விழுந்து பிரார்த்திக்கிறேன்.

இரக்கமுள்ள இயேசுவின் திரு இருதயமே! அமலோற்பவ கன்னி மாதாவின் திரு இருதயமே! ஓ! மகிமைப்பிரதாபம் பொருந்திய புனித சூசையப்பரே, அடியேனுடைய மன்றாட்டுக்களை புறக்கணியாமல் தயவாய்க் கேட்டுத் தந்தருளுங்கள். – ஆமென்.

பஞ்சகாலத்தில் செபம்

எலிசேயு இறைவாக்கினரின் காலத்தில் சமாரியாவிலே கடும் பஞ்சத்தைச் சடுதியில் அகற்றி மலிவுண்டாகச் செய்தருளின இரக்கமுள்ள தந்தையே ! எங்கள் பாவங்களின் நிமித்தம் தண்டனையாக வெகு துன்பப்படுகிற எங்களுக்கும் காலத்துக்குத் தகுந்த சகாயம் கிடைக்கும் படி இரக்கம் செய்தருளும். உமது பரம ஆசீரினாலே பூமி அதிக பலனைத் தரும்படி செய்து தேவரீர் தாராளமாய்க் கொடுக்கும் நன்மையைப் பெற்றுக்கொள்ளுகிற நாங்கள் உமக்கு மகிமையும் ஏழைகளுக்கு உதவியும் ஆறுதலுமாய் இருக்கத்தக்கதாக, அதை அனுபவிக்க எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

பூச்சிகளால் அழிக்கப்படுகிற பயிர்களுக்காக செபம்

வானமும் பூமியும் யாவும் படைத்த எல்லாம் வல்ல இறைவனின் திருப்பெயரினால் நலன்களெல்லாம் நமக்குப் பெருகுமாக!

மு.  இறைவா என் மன்றாட்டைக் கேட்டருளும்.
து.  எங்கள் குரலொலி உம் திருமுன் வருவதாக!

செபிப்போமாக
ஆண்டவரே ! நாங்கள் செய்கிற வேண்டுதலைத் தேவரீர் தயாளக் கருணையுடன் கேட்டருள மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களுக்கு நீதியுள்ள ஆக்கினையாக வந்த இந்த பூச்சிகளுடைய நெருக்கடியை உமது இரக்கப் பெருக்கினால் நோக்கி உமது திருப் பெயருக்குப் புகழ்ச்சி உண்டாகும் படி அவைகளை நீக்கியருளும். அப்படியே இந்த துஷ்டப் பூச்சிகள் உமது ஆணையின் பலத்தினால் தூரத் தள்ளுண்டுபோகவும், இந்தப் பயிர்கள் விக்கினமின்றி நன்றாக விளையவும் இதில் உண்டாகிற பலனும் உமது பணி விடைக்கும், எங்கள் பிழைப்புக்கும் பிரயோசனமாகவும் கிருபை செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

தாய் தந்தையருக்காக செபம்

இறைவா! என் தாய் தந்தையரை உமகு நேசத்தினுடையவும், வல்லமையினுடையவும் சாயலாக உண்டாக்கி என்னை எல்லாவறிறிலும் அவர்களுக்குக் கீழ்படியவும் அவர்களை நேசிக்கவும் கட்டளையிட்டீரே. எல்லாம் வல்ல இறைவா உமது கற்பனைகளை ஆசையோடு முழு இருதயத்தோடும் நான் கைப்பற்ற எனக்கு உமது அருளைத் தந்தருளும். நான் அன்போடு அவர்களை நேசிக்கவும், மதிக்கவும், அவர்களுடைய கட்டளைகளுக்கு உவப்புடன் கீழ்ப்படிந்து அவர்களுடைய விருப்பத்துக்கு இணங்கி நடக்கவும், எல்லாவறிறிலும் அவர்களுடைய நலனை விரும்பி அவர்களுடைய தண்டனைகளைத் தாழ்சியோடும் பொறுமையோடும் சகித்துக்கொள்ளவும், எனக்கு உதவிசெய்தருளும்!

அன்புள்ள இறைவா! அகங்காரத்திலும், கலகத்திலும், வைராக்கியத்திலும், பிடிவாதத்திலும், சோம்பலிலும் அசட்டைத்தனததிலுமிருந்து என்னை விடுவித்தருளும. என் எல்லாப படிப்புகளிலும் வேலைகளிலும் என்னைச் சுறுசுறுப்புடையவனாகவும் சோதனைகளில் பொறுமையுடையவனாகவும் செய்தருளும். நான் அப்படியே என் வாழ்நாள் முழுவதிலும் என் ஆண்டவரான இயேசுக்கிறிஸ்துநாதர் மூலமாக உமது பிள்ளை என்கிற பெயறுக்குத் தகுதியள்ளவனாய் இருப்பேனாக -ஆமென்.

ஊர்தி ஓட்டுநரின் செபம்

அன்புள்ள இறைத் தந்தையே ! உம்மைத் தொழுது நன்றி செலுத்துகிறேன். இந்த வாகனத்தை ஓட்டும் பொறுப்புமிக்கப் பணியை எனக்கு கொடுத்து, என்னைப் பராமரித்து வருவதற்காக நன்றி செலுத்துகிறேன். இந்த ஊர்தியைக் கவனமாக ஓட்ட எனக்கு உதவி புரிவீராக. இதில் பயணம் செய்வோரையும் ஆசீர்வதித்துக் காத்தருளும்.
இறை இயேசுவே ! எம் அன்னையை எங்களுக்கு அன்னையாகத் தந்ததற்காக நன்றி கூறுகிறேன். இறை அன்னையே ! என் அன்பு அம்மா ! அன்று இறைபாலனைப் பத்திரமாக ஏந்தி எகிப்துக்கு பயணமானீரே அதுபோல இன்று நான் ஓட்டுகிற இந்த ஊர்தியையும் உம் கைகளில் ஏந்தி, நாங்கள் சேர வேண்டிய இடத்தைப் பாதுகாப்புடன் சென்றடைய உதவியருளும்.

எங்கள் காவல் தூதர்களே ! எங்களுக்காக இறைவனை மன்றாடுங்கள். இந்தச் சாலையில் பயணம் செய்யும் ஏனைய ஊர்திகளின் ஓட்டுநரும் பாதசாரிகளும் பொறுப்புணர்ந்து கடக்க உதவி புரியும்.

நல்ல பயணத்தின் அன்னையே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். புனித கிறிஸ்டோபரே ! எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். - ஆமென்.

தாய்மை கொண்ட பெண்கள் செபம்

கன்னியும் தாயுமான புனித மரியாளே ! நீர் இயேசு நாதரை உமது திருவயிற்றில் தாங்கிக் கொண்டிருந்ந நாளெல்லாம் ஆனந்த சந்தோஷத்தில் அமிழ்ந்திக் கடைசியாய் பேறுகாலமானபோது, வாக்குக்கெட்டாத உன்னத பரவசத்தில் திவ்விய பாலகனைப் பெற்றீரே ! அந்தப் புத்திக்கெட்டாத ஆனந்தத்தைப் பார்த்து என்பேரில் கிருபையாயிரும்.

நானோ பாவத்தில் பிறந்து எல்லா உபத்திரவங்களுக்கும் உள்ளாயிருக்கிறேன். ஏவைக்கு இட்ட ஆக்கினை என்பேரிலும் இருக்கிறது. ஆகையால் என் மிடிமையைப் பார்த்து என் பலவீனங்களின் பேரில் இரக்கமாயிருந்து, என் வயிற்றிலிருக்கிற சிசுவுக்கு யாதொரு பொல்லாப்புமின்றி, அதிக சிரமமின்றி ப் பிரசவிக்க அனுக்கிரகம் செய்தருளும்.

மேலும் அந்தப் பாலகனுக்கு புத்தி சித்தம் மேன்மையுள்ளதாகி உமது திருக்குமாரனுடையவும், உம்முடையவும் பணியிலே நிலைக் கொண்டு, சிறப்புடன் வளர்ந்து, பேரின்ப பாக்கியத்தின் வழியிலே நடக்க உமது திருக்குமாரனை வேண்டிக்கொள்ளும். -ஆமென்.

இறை அழைத்தல் பெருக வேண்டுதல்

இயேசுவே ! ஆன்மாக்களின் தெய்வீக ஆயரே ! அன்று மீன் பிடிப்போரை, மனிதரைப் பிடிப்போராக்கிய ஆண்டவரே ! இன்று ஆர்வமும் தாராள மனமும் கொண்டுள்ள இளைஞரை உம்மைப் பின்பற்றுபவர்களாகவும், உம் திருப்பணியாளர்களாகவும் ஆக்கியருளும். அனைத்துலக மக்களின் மீட்புக்காக உமக்கிருக்கும் தாகத்தில் அவர்களும் பங்குபெறச் செய்தருளும். இந்த மீட்புக்காகவே ஒவ்வொரு நாளும் பலி மேடையில் திருப்பலியை நீர் புதுப்பித்து வருகின்றீர்.

இயேசுவே ! எங்கள் ஆண்டவரே ! எங்களுக்காகப் பரிந்துரைக்க, எங்களிடம் எப்பொழுதும் வாழ்கின்றீர். உண்மையின் ஒளிக்காக, அன்பின் அனலுக்காக ஏங்கும் அனைத்து மக்களின் மீதும் உமது மாட்சியின் எல்லையை விரிவடையச் செய்யும். இளைஞர் பலர் உமது அழைப்பை ஏற்று உமது திருப்பணியைத் தொடர்ந்து புரியவும் உமது மறையுடலாகிய திருச்சபைக்கு அணிகலனாகத் திகழவும், உலகின் உப்பாகவும், ஒளியாகவும் விளங்கவும் அருள் செய்யும்.

ஆண்டவரே ! உமது அன்பின் அழைப்பைத் தூய உள்ளமும், தாராளமனதுள்ள பெண்கள் பலருக்குத் தந்தருளும். நன்னெறியில் வளர அவர்கள் கற்றுக் கொள்வார்களாக. அயலாரின் சேவைக்காகவும், அவர்கள் தங்களை அர்ப்பணம் செய்ய அருள்புரியும் , ஆண்டவரே. - ஆமென்.

ஆசிரியரின் செபம்

ஆண்டவராகிய இயேசுவே ! குழந்தையின் உள்ளத்தை உருவாக்கும் உன்னத பணியை எனக்கு அளித்திருக்கிறீர். என் சொல்லும் செயலும் ஒரு குழந்தையின் உள்ளத்தில் ஆழமாய்ப் பதிகின்றன, என்றென்றும் வாழ ஏதுவான பண்புகளை அவர்களிடம் வளர்க்கின்றன என்பதை நான் அறிந்துள்ளேன். எனவே, பாடத் தயாரிப்பிலும் பாடப் போதனையிலும் நான் பெருமுயற்சி எடுக்க எனக்கு உதவியாயிரும்.

அவர்களிடம் ஒழுக்கத்தை உருவாக்குவதில் கண்டிப்புக் காட்டும் அதே நேரத்தில், அவர்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருப்பேனாக. அவர்களின் சிந்தனைத் திறனைச் சீராக வளர்த்திட நான் உதவுவேனாக. அவர்களிடம் உம்மையே கண்டு, உம் சாயலை அவர்களிடம் உருவாக்கும் அரிய பணியில் அயர்ந்து விடாமல் உழைக்க, நீர் என்றும் என்னோடு இருந்தருளும். -ஆமென்.

பேர் கொண்ட புனிதரை நோக்கி செபம்

என் பேர் கொண்டிருக்கிற புனிதரே ! ....உமது அடைக்கலத்தில் என்னை ஒப்படைத்து விடுகிறேன். எனக்கு இடப்பட்டிருக்கும் பெயருக்கு ஏற்ப சுகிர்த நடத்தை உள்ளவனாய் வாழவும் உம்மிடத்தில் சிறப்புற விளங்கிய புண்ணியங்களை நான் அனுசரிக்கவும், எனக்குத் தேவ கிருபை கிடைக்கத்தக்கதாகப் பலமாய் மனுபேசியருளும். என் வாழ்நாளில் எனக்கு நேரிடும் ஆபத்துகளில் நின்று என்னைத் தற்காத்துப் பயங்கரமான மரணவேளையில் என்னைக் கைவிடாமல் பாதுகாத்தருளும் காவலனே ! - ஆமென்.

நோயாளிகள் சொல்லத்தகும் செபம்

ஒரே சர்வேசுரன் உண்டு என்று விசுவசிக்கிறேன். அவர் நல்லவர்களுக்குச் சன்மானமும், கெட்டவர்களுக்குத் தண்டனையும் கொடுப்பார் என்று விசுவசிக்கிறேன். ஒரே சர்வேசுரனில் தந்தை இறைவன், மகன் இறைவன், பரிசுத்த ஆவியார் இறைவன் ஆகிய மூன்று தெய்வீக ஆட்கள் இருக்கிறார்கள் என்று விசுவசிக்கிறேன்.

மகனாகிய இறைவன் தம் கடவுள் தன்மையை விட்டுவிடாமல் மனிதனானார் என்று விசுவசிக்கிறேன். என் ஆண்டவர், என் இரட்சகர் மனுக்குலத்தின் மீட்பர் என்று விசுவசிக்கிறேன். அவர் எல்லா மனிதருடைய மீட்புக்காகவும் எனக்காகவும் சிலுவையில்
மரித்தார் என்று விசுவசிக்கிறேன். இறைவன் போதித்து வெளிப்படுத்திய அனைத்தையும் அவருடைய ஆதாரத்தின் மேல் விசுவசிக்கிறேன்.

ஓ, என் தேவனே ! எனக்குத் திடமான விசுவாசத்தைத் தந்தருளும். ஓ, என் தேவனே ! நான் உயிருள்ள விசுவாசத்தோடு விசுவசிக்க எனக்கு உதவி செய்யும்.
அளவற்ற நன்மையும் இரக்கமும் உள்ள இறைவா, நான் இரட்சணியம் அடைவேன் என்று எதார்த்தமாய் நம்புகிறேன். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய சகலத்தையும் நான் செய்யும் படி எனக்கு உதவி செய்யும்.

என் வாழ்நாளில் நான் அநேக பாவங்களை செய்தேன். ஆனால் இப்பொழுது நான் அவைகளைப் புறக்கணிக்கிறேன். அவைகளை வெறுக்கிறேன். அவைகள் எல்லாவற்றிற்காகவும் மெய்யாகவே மனஸ்தாபமாயிருக்கிறேன். அனைத்து நலனும், நிறைவான தூய்மையும், பேரிரக்க தயாளமும் கொண்டுள்ள என் இறைவனுக்கு விரோதமாகவும் சிலுவையில் எனக்காக மரித்த என் தேவனுக்கு விரோதமாகவும் துரோகம் செய்தேன் என்கிறதினாலே மனஸ்தாபமாயிருக்கிறேன்.

ஓ என் தேவனே ! என் முழு இருதயத்தோடு உம்மை நேசிக்கிறேன். தேவரீரை மனநோகச் செய்ததற்க்காக என்னை மன்னிக்கும் படி உம்மை கெஞ்சி மன்றாடுகிறேன்.
ஓ என் தேவனே ! உமது உதவியைக் கொண்டு இனிமேல் ஒருக்காலும் உமக்கு விரோதமாக நடக்கமாட்டேன் என்று வாக்குக் கொடுக்கிறேன்.

என் அன்புள்ள இறைவா ! என் பேரில் இரக்கமாயிரும்.

நல்ல மரணத்துக்கு ஆயத்தம்

நல்ல மரணத்தினாலே நித்திய பேரின்பமும் துன்மரணத்தினாலே நித்திய நரக நிர்பாந்த ஆக்கினையும் வருகிறபடியால் நல்ல மரணத்துக்கு ஆயத்தம் பண்ணுகிறது யாவருக்கும் மகா அவசரமான காரியமாயிருக்கறது. நன்மரண ஆயத்தத்துக்கு ஆத்தும சுத்திகரம் பிரதானமாய் இருக்கிரபடியதாலும், உனக்கு சாவு எப்போது வருமென்கிற நிச்சயம் தெரியாததினாலும், அப்போதைக்கப் போது பாவசங்கீர்த்தனத்தில் உன் ஆத்துமத்தைச் சுத்தி செய்வதுமில்லாமல், உனக்கு வியாதி வந்து உன் புத்தி தடுமாற்றங்கொள்ளும் போது குருவை அழைக்காமல், நல்ல நினைவு இருக்கும் போதே பாவசங்கீர்தனம் செய்து நோயில் பூசுதலைப் பெற்று, அடிக்கடி விசுவாச நம்பிக்கை தேவசிநேக முயற்சிகளையும், உத்தம மனஸ்தாப பரலோக, அருள் நிறைந்த, மந்திரங்களையும் செபித்து இதன் அடியில் வரும் செபத்தையும் செபித்துக் கொண்டு வருவாயாக.

கொடிய நேய்வாய் பட்ட காலத்தில் சொல்லத்தக்க செபம்

ஓ இயேசுவே ! திவ்விய மீட்பரே, எங்கள் பேரிலும், உலகினர் பேரிலும் இரக்கமாய் இரும் !
ஓ வல்லபக் கடவுளே ! ஓ பரம தேவனே ! என்றும் வாழும் இறைவா, எங்கள் பேரிலும் உலகத்தார் அனைவர்பேரிலும் தயையாயிரும்.

என் இயேசுவே ! எங்களுக்குப் பொறுத்தலும் இரக்கமும் அளித்து, இந்த ஆபத்தான காலத்தில் உமது விலையேறப் பெற்ற திரு இரத்தத்தை எங்கள் பேரில் தெளித்தருளும். என்றென்றும் வாழும் தந்தையே ! உமது ஒரே பேறான இயேசுகிறிஸ்துவின் திரு இருதயத்தைப் பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிற எங்கள் பேரில் இரக்கமாயிரும். -ஆமென்.

நோய்ப்பட்ட கால்நடைகளுக்கான செபம்

ஆண்டவரே ! மிகுந்த தாழ்ச்சியோடே வணங்கி உம்முடைய இரக்கத்தைக் கேட்கிறோம். கடின நோயால் பீடிக்கப்பட்டு இருக்கிற இந்த மிருகம் உம்முடைய ஆசீரினால் சுகம் அடைந்து, இனி யாதொரு நோய் படாதபடி எல்லாத் தொந்தரைகளும் விலகிப்போகச் செய்யும். நீரே அவைகளுக்குச் சீவனும் ஆரோக்கியமுமாயிரும். இரக்கம் மிகுந்த இறைவா, தேவரீர் தாமே இத்தகைய வாயில்லா ஜீவன்களை மனிதரின் நன்மைக்காக அளித்திருப்பதால், எங்கள் பிழைப்புக்கு வேண்டியிருக்கின்ற அவைகளுடைய உபகாரம் எங்களுக்கு இல்லாமல் போகாதபடிக்குக் கிருபை செய்தருளும். இந்த மன்றாட்டை எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். -ஆமென்.

பெற்றோரின் செபம்:

மனுமக்களின் தந்தையே, இந்தப் பிள்ளைகளை எனக்குக் கொடுத்து என் பொறுப்பில் வைத்துக் காத்து உமக்கேற்ப நடக்கவும், அவர்களை நித்திய சீவியத்துக்குக் கொணடு வரவும் செய்தீரே. இந்தப் புனித ஊழியத்தையும், கண்காணிப்புப் பொறுப்பையும் நிறைவேற்ற உனக்கு உதவியாக உமது ஞான வரத்தை தந்தருளும். நான் அவர்களுக்கு எதை கொடுக்கவேண்டியதோ அதையும், எதை நிறுத்த வேண்டியதோ அதையும் கற்பியும். எப்போது கண்டிக்க வேண்டியதோ அப்போது கண்டிக்கவும், எப்போது அரவணைக்க வேண்டியதோ அப்போது அரவணைக்கவும் செய்வீராக. இன்னமும் சாந்த குணத்தில் என்னைப் பலப்படுத்தியருளும். அவர்கள் பேரில் கவலையும் ஜாக்கிரதையுமாய் இருக்கவும் அந்தப் பிள்ளைகளுக்கு இளக்காரம் கொடுக்கிறதாலும், அதிகமாய்த் தண்டிக்கிற மூடத்தனத்திலும் இருந்து என்னை விடுவித்தருளும். சொல்லாலும் செயலாலும் அவர்களை ஞானத்திலும், பத்தியிலும் கூர்மையாய் நடத்த எனக்கு உதவி செய்யும். அதனால் விண்ணுலக வீடாகிய பேரின்ப அரசில் நாங்கள் அளவறுக்கப்படாத நித்திய பேற்றினை அனுபவிக்கச் சேர்த்துக் கொள்ளும்.

ஓ ! விண்ணுலகத் தந்தையே ! என் பிள்ளைகளை உம்மிடத்தில் ஒப்புவிக்கிறேன். நீரே அவர்களுடைய கடவுளாகவும், தகப்பனாகவும் இரும். எனது இரட்சணியத்துக்கு வேண்டிய ஞான வரங்களை தந்தருளுவதுடன் என் பிள்ளைகள் இவ்வுலக தந்திரங்களில் சாதுரியமாய் நடந்து, சோதனைகளை வெல்லவும் பசாசின் கண்ணிகளினின்று அவர்களை விடுவிக்கவும் தயைபுரியும். அவர்கள் இதயத்தில் உமது அருளைப் பொழிந்து பரிசுத்த ஆவியாரின் கொடைகளைப் கொடுத்தருளும். அந்த அருளினால் அவர்கள் எங்கள் ஆண்டவரான இயேசுகிறிஸ்துவிடம் உயர்ந்து, விசுவாசத்தோடு உமக்கு ஊழியம் செய்தபின் உம்மோடும் பரிசுத்த ஆவியோடும் அரசு செய்கிற எங்கள் ஆண்டவரான கிறிஸ்து வழியாக உமது சமூகத்தில் வந்து ஆனந்த பாக்கியத்தை அடையக்கடவார்கள். -ஆமென்.

தேர்வு எழுதுவோருக்காக செபம்

ஞானத்தின் ஊற்றே இறைவா! எங்களின் இந்த இளம் வயதில் பல நன்மைகளை எங்களுக்குப் பொழிந்து வழிநடத்தி வந்த நேரங்களை நன்றியோடு நினைக்கிறோம்.. எங்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்வுகளை எழுதவிருக்கும் நாங்கள், இந்த இறுதி நாட்களில் எங்கள் பாடங்களைக் கடின முயற்சியுடன் படித்து, தேர்வுகளைச் சிறப்பாக எழுதி முடிக்கவும், அனைத்து தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறவும், தேவையான ஞானத்தையும், நினைவாற்றலையும், தெளிந்த மனதையும் உடல் உள்ள வலிமைகளையும் எங்களுக்கு கொடுத்தருளுமாறு உம்மைத் தாழ்மையோடு வேண்டுகிறோம். ஞானத்தின் இருப்பிடமே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
- ஆமென்.

திருக்குடும்பத்தின் மன்றாட்டு மாலை

ஆண்டவரே இரக்கமாயிரும்
 கிறிஸ்துவே இரக்கமாயிரும்
ஆண்டவரே இரக்கமாயிரும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்
கிறிஸ்துவே எங்கள் மன்றாட்டைத் தயவாய்க் கேட்டருளும்

விண்ணகத்தில் இருக்கிற தந்தையாகிய இறைவா,
 - எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.
 ஊலகத்தை மீட்ட திருமகனாகிய இறைவா – எங்கள்...
 தூய ஆவியாகிய இறiவா - எங்கள்...
 மூன்று ஆட்களாயிருக்கும் ஒரே இறைவா - எங்கள்...

 அவதரித்த தேவ வார்த்தையின் திருக்குடும்பமே,
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
 மண்ணுலகில் அதி புனித திருத்துவத்தின் பாவனையாகிய திருக்குடும்பமே,
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
 பரம தேவ பிதா அத்தியந்த பிரியத்துடனே நேசித்த திருக்குடும்பமே,
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
 அனைத்து அருளாலும் நிறைந்து அலங்கரிக்கப் பட்ட திருக்குடும்பமே,
 எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
 எல்லாப் புண்ணியங்களுக்கும் உத்தம மாதிரிகையான திருக்குடும்பமே,
 எல்லா இருதயங்களின் நேசத்துக்கும் பாத்திரமான திருக்குடும்பமே,
 விண்ணுலகிற்குத் தேர்ந்தெக்கப்பட்டவரின் ஞானக் கருவூலமாகிய திருக்குடும்பமே,
 விண்ணுலகின் பேரின்பமாகிய திருக்குடும்பமே,
 அனைத்து வானதூதர்களாலும் வணங்கப்பட்ட திருக்குடும்பமே,
மனிதர்களால் நிந்திகரிக்கப்பட்டிருந்தாலும் தேவ சமூகத்தில் உன்னத மாட்சிமை பொருந்திய திருக்குடும்பமே,
பெத்லகேம் ஊரார்களால் புரக்கணிக்கப்பட்டு ஒரு மாட்டுக் கொட்டிலில் ஒடுங்கிப்போக அவசரப்பட்ட திருக்குடும்பமே,
திவ்விய இரடசகர் பிறந்த சமயத்தில் இடையர்களால் சந்திக்கப்பட்ட திருக்குடும்பமே,
பிறந்த திவ்விய குழுந்தைக்குத் தோத்திரமாக வானதூதர்கள் இசைத்த கீதங்களைக் கேட்ட திருக்குடும்பமே,
மூன்று அறிஞர்களால் வணங்கிப் பாதகாணிக்கை ஒப்புக்கொடுக்கப்பட்ட திருக்குடும்பமே,
ஆலயத்தில் திவ்விய பாலனை ஏந்தின சிமியோன் அவரைக் குறித்துச் சொல்லிய துதிகளையும் இறைவாக்குகளையும் கேட்டு மகிழ்ச்சியும் துயரமும் கொண்ட திருக்குடும்பமே,
எண்ணிறந்த ஆபத்துக்குள்ளே எகிப்து தேசத்துக்கு ஓடிப்போக கட்டளையிட்ட வானதூதரின் வாக்குக்கு தாமதமின்றி கீழ்ப்படிந்த திருக்குடும்பமே,
ஏரோது அரசனின் கொடுமைக்குத் தப்பித்துக் கொள்ள அத்தேசத்துக்கு கட்டாயப்பட்ட திருக்குடும்பமே,
அந்நிய தேசத்தில் பரதேசியான திருக்குடும்பமே,
மண்ணுலகம் அறிந்து கொள்ளாமல் மறைந்த தன்மையாய் வாழ்ந்து வந்த திருக்குடும்பமே,
ஏழ்மையும் உழைப்பும் தவமுமுள்ள சீவியமாய் சீவித்த திருக்குடும்பமே,
நெற்றி வியர்வை நிலத்தில் விழ, அன்றாட உணவைத் தேடிகொண்ட திருக்குடும்பமே,
மண்ணுலக வறுமையும் விண்ணுலக நன்மையும் மிகுதியும் கொண்டிருந்த திருக்குடும்பமே,
பிறர்சிநேகத்துக்கும் சமாதான ஒற்றுமைக்கும் மாதிரிகையான திருக்குடும்பமே,
நினைவிலும் மனப்பற்றுதலினாலும் முழுவதும் விண்ணுலகில் சஞ்சரித்திருந்த திருக்குடும்பமே,
உமது ஆயுள் முழுமையும் இடைவிடாது செபமும் ஞானயோகமுமாயிருந்த திருக்குடும்பமே,
துன்பப்படுகிறவர்களுக்கு ஆறுதலும் உம்மை மன்றாடுகிறவர்களின் நம்பிக்கையும் எல்லாக் கிறிஸ்தவர்களின் குடும்பங்களுக்குச் சுகிர்த மாதிரிகையுமாகிய திருக்குடும்பமே,

உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
- எங்கள் பாவங்களைப் போக்கியருளும் சுவாமி.
 உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
- எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்; சுவாமி
உலகின் பாவங்களைப் போக்கும் கடவுளின் ஆட்டுக்குட்டியே,
- எங்கள் மேல் இரக்கமாயிரும் சுவாமி.

மு. – இயேசுவே எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.
து. – இயேசுவே எங்கள் மன்றாட்டை நன்றாகக் கேட்டருளும்.

செபிப்போமாக
 இறைவா, திருக்குடும்பத்தின் சிறப்புமிக்க முன்மாதிரியை எங்களுக்கு அளித்தீரே, எம்மீது இரங்கி, இல்லறத்தின் புண்ணியங்களிலும் அன்பின் உறவுகளிலும் அக்குடும்பத்தை நாங்கள் பின்னற்றி, உமது முடிவற்ற சம்பாவனையைப் பெற்று மகிழச் செய்தருள வேண்டுமென்று எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம். – ஆமென்.

திருப்பலி செபங்கள்

Abbreviations:
அப: அருள்பணியாளர்
எல்: எல்லாரும்

தொடக்கச் சடங்குகள்:
அப : தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே.
எல் : ஆமென்.
அப : நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அருளும், கடவுளின் அன்பும், தூய ஆவியாரின் நட்புறவும் உங்கள் அனைவரோடும் இருப்பதாக.
எல் :  உம் ஆன்மாவோடும் இருப்பதாக.

பாவத்துயர் செயல்:
அப : சகோதர சகோதரிகளே, தூய மறைநிகழ்வைக் கொண்டாட நாம் தகுதி பெறும் பொருட்டு நம் பாவங்களை ஏற்றுக் கொள்வோம்.

எல் : எல்லாம் வல்ல இறைவனிடமும், சகோதர சகோதரிகளே உங்களிடமும், நான் பாவி என ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில், என் சிந்தனையாலும், சொல்லாலும், செயலாலும், கடமையில் தவறியதாலும், பாவங்கள் பல செய்தேன்.
(மார்பில் தட்டிக் கொண்டு)
என் பாவமே! என் பாவமே! என் பெரும் பாவமே! ஆகையால் எப்போதும் கன்னியான புனித மரியாவையும், வானதூதர், புனிதர் அனைவரையும், சகோதர சகோதரிகளே உங்களையும், நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.

அப : எல்லாம் வல்ல இறைவன் நம் மீது இரக்கம் வைத்து, நம் பாவங்களை மன்னித்து, நம்மை நிலைவாழ்வுக்கு அழைத்துச் செல்வாராக.
எல் : ஆமென்.

மன்னிப்பு வேண்டல்:
அப : ஆண்டவரே இரக்கமாயிரும்.
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்.

அப : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.
எல் : கிறிஸ்துவே இரக்கமாயிரும்.

அப : ஆண்டவரே இரக்கமாயிரும்.
எல் : ஆண்டவரே இரக்கமாயிரும்.

உன்னதங்களிலே (பாடல்):
உன்னதங்களிலே கடவுளுக்கு மாட்சி உண்டாகுக. உலகினிலே நன்மனத்தோருக்கு அமைதி உண்டாகுக. புகழ்கின்றோம் யாம் உம்மையே, வாழ்த்துகின்றோம் இறைவனே. உமக்கு ஆராதனை புரிந்து உம்மை மாட்சிப் படுத்துகின்றோம் யாம். உமது மேலான மாட்சியின் பொருட்டு உமக்கு நன்றி கூறுகின்றோம்.

ஆண்டவராகிய இறைவனே, இணையில்லாத விண்ணரசே. ஆற்றல் அனைத்தும் கொண்டு இலங்கும் வல்ல தந்தை இறைவனே. ஒரே மகனாக உதித்த ஆண்டவர் இயேசு கிறிஸ்துஇறைவனே. ஆண்டவராகிய இறைவனே, இறைவனின் திருச் செம்மறியே. தந்தையினின்று என்றென்றுமாக உதித்த இறைவன் மகனே நீர்.

உலகின் பாவம் போக்குபவரே, நீர் எம் மீது இரங்குவீர். உலகின் பாவம் போக்குபவரே, எங்கள் மன்றாட்டை ஏற்றருள்வீர். தந்தையின் வலப்பக்கம் வீற்றிருப்பவரே, நீர் எம் மீது இரங்குவீர்.

ஏனெனில் இயேசு கிறிஸ்துவே, நீர் ஒருவரே தூயவர்! நீர் ஒருவரே ஆண்டவர்! நீர் ஒருவரே உன்னதர்! தூய ஆவியோடு தந்தை இறைவனின் மாட்சியில் இருப்பவர் நீரே. ஆமென்.

சபை மன்றாட்டு
மன்றாடுவோமாக:  ………. உம்மோடு பரிசுத்த ஆவியின் ஐக்கியத்தில் ஒரே இறைவனாய் என்றென்றும் வாழ்ந்து, ஆட்சி செய்கின்ற எங்கள் ஆண்டவரும் உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.

வார்த்தை வழிபாடு:
அப : ஆண்டவரின் அருள்வாக்கு.
எல் : இறைவனுக்கு நன்றி.

நற்செய்தி:
அப : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப : மத்தேயு / மாற்கு / லூக்கா / யோவான் எழுதிய தூய நற்செய்தியிலிருந்து வாசகம்.
எல் : ஆண்டவரே, மாட்சி உமக்கே.

அப : கிறிஸ்துவின் நற்செய்தி.
எல் : கிறிஸ்துவே, உமக்குப் புகழ்.

நம்பிக்கை அறிக்கை (செபம்):
ஒரே கடவுளை நம்புகிறேன். விண்ணகமும் மண்ணகமும், காண்பவை காணாதவை, யாவும் படைத்த எல்லம் வல்ல தந்தை அவரே. கடவுளின் ஒரே மகனாய் உதித்த ஒரே ஆண்டவர் இயேசு கிறிஸ்துதுவை நம்புகிறேன்.

இவர் காலங்களுக்கெல்லாம் முன்பே தந்தையிடமிருந்து பிறந்தார். கடவுளினின்று கடவுளாக, ஒளியின்றி ஒளியாக, உண்மைக் கடவுளினின்று உண்மைக் கடவுளாக உதித்தவர். இவர் உதித்தவர், உண்டாக்கப்பட்டவர் அல்லர்.

தந்தையோடு ஒரே பொருளானவர். இவர் வழியாகவே யாவும் படைக்கப்பட்டன. மனிதர் நமக்காகவும், நம் மீட்புக்காகவும் விண்ணகம் இருந்து இரங்கினார்.
(“மனிதர் ஆனார்” எனச் சொல்லும் வரை எல்லாரும் தலை வணங்கவும்)
தூய ஆவியால் கன்னி மரியாவிடம் உடல் எடுத்து மனிதர் ஆனார். மேலும் நமக்காகப் பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் சிலுவையில் அறையப்பட்டுப், பாடுபட்டு, இறந்து, அடக்கம் செய்யப்பட்டார். மறைநூல்களின்படி மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார்.

விண்ணகத்துக்கு எழுந்தருளி, எல்லாம் வல்ல தந்தையின் வலப்பக்கம்  வீற்றிருக்கின்றார். வாழ்வோரையும், இறந்தோரையும் தீர்ப்பிட, மாட்சியுடன் மீண்டும் வர இருக்கின்றார். அவரது ஆட்சிக்கு முடிவு இராது. தந்தையிடமிருந்தும் மகனிடமிருந்தும் புறப்படும் ஆண்டவரும் உயிர் அளிப்பவருமான தூய ஆவியாரை நம்புகிறேன். இவர் தந்தையோடும் மகனோடும் ஒன்றாக ஆராதணையும் மாட்சியும் பெறுகின்றார். இறைவாக்கினர்கள் வாயிலாகப் பேசியவர் இவரே.

ஒரே புனித, கத்தோலிக்க, திருத்தூதர் வழிவரும் திரு அவையை நம்புகிறேன். பாவ மன்னிப்புக்கான ஒரே திருமுழுக்கை ஏற்றுக் கொள்கிறேன். இறந்தோரின் உயிர்ப்பையும், வரவிருக்கும் மறு உலக வாழ்வையும் எதிர்பார்க்கிறேன். ஆமென்.

நம்பிக்கை அறிக்கைப் (பாடல்):
விண்ணையும் மண்ணையும் படைத்தவராம் கடவுள் ஒருவர் இருக்கின்றார். தந்தை, மகன்,தூய ஆவியராய் ஒன்றாய் வாழ்வாரை நம்புகிறேன். தூய ஆவியின் வல்லமையால் இறை மகன் நமக்காய் மனிதரானார். கன்னி மரியிடம் பிறந்தவராம் இயேசுவை உறுதியாய் நம்புகிறேன்.

பிலாத்துவின் ஆட்சியில் பாடுபட்டார். சிலுவையில் இறந்து அடக்கப்பட்டார். மூன்றாம் நாளில் உயிர்த்தெழுந்தார். இறப்பின் மீதே வெற்றி கொண்டார். விண்ணகம் வாழும் தந்தையிடம் அரியணைக் கொண்டு இருக்கின்றார்.

உலகம் முடியும் காலத்திலே நடுவராய் திரும்பவும் வந்திடுவார். தூய ஆவியாரை நம்புகிறேன். பாரினில் அவர் துணை வேண்டுகிறேன். பாவ மன்னிப்பில் தூய்மை பெற்றுப் பரிகார வாழ்வில் நிலைத்திடுவேன்.

திரு அவை உரைப்பதை நம்புகிறேன். புனிதர்கள் உறவை நம்புகிறேன். உடலின் உயிர்ப்பை நிலைவாழ்வை உறுதியுடனே நம்புகிறேன்.

ஆமென்.

நம்பிக்கையாளரின் மன்றாட்டுகள்:
அப : ---------அருள வேண்டும் என ஆண்டவரைக் கெஞ்சி மன்றாடுவோம்.

எல் : எல்லாம் வல்ல இறைவா, எங்கள் மன்றாட்டைக் கேட்டருளும்.

நற்கருணை வழிபாடு:
ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா, நீர் வாழ்த்தப்பெறுவீராக.
ஏனெனில் உமது வள்ளன்மையிலிருந்து நாங்கள் இந்த அப்பத்தை பெற்றுள்ளோம்.  நிலத்தின் விளைவும் மனித உழைப்பின் பயனுமான இந்த அப்பத்தை ஒப்புக்கொடுக்கின்றோம். இது எங்களுக்கு வாழ்வு அளிக்கும் அப்பமாக மாறும்.

இறைவன் என்றென்றும் வாழ்த்துப்பெறுவாராக!
(கிறிஸ்துநம் மனித இயல்பில் பங்கு கொள்ளத் திருவுளமானார்.  இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறை இயல்பில் பங்குபெறுவோமாக.)
ஆண்டவரே, அனைத்துலகின் இறைவா,நீர் வாழ்த்தப்பெறுவீராக. ஏனெனில் உமது வள்ளமையிலிருந்து நாங்கள் இந்த இரசத்தை பெற்றுள்ளோ. திராட்சை கொடியும் மனித உழைப்பின் தந்த இந்த இரசத்தை உமக்கு ஒப்புக்கொடுக்கிறோம். இது எங்கள் ஆன்மீகப் பானமாக மாறும்.

இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக!
(குரு தலை குனிந்து அமைதியாகச் சொல்வார்):
ஆண்டவரே,  தாழ்மையான மனமும் நொறுங்கிய உள்ளமும் கொண்ட எங்களை ஏற்றருளும். ஆண்டவரே இறiவா, நாங்கள் இன்று உமது திருமுன் ஒப்புக்கொடுக்கும் இத்திருப்பலி  உமக்கு உகந்தது ஆவதாக.
ஆண்டவரே, என் குற்றம் நீங்க என்னைக் கழுவிய. பாவத்திலிருந்து என்னைத் தூய்மையாக்கும்.
அப : சகோதரர் சகோதரரிகளே,என்னுடையதும் உங்களுடையதுமான இபலி எல்லாம் வல்ல தந்தையாகிய இறைவனுக்கு ஏற்றதாகும்படி மன்றாடுங்கள்

எல். ஆண்டவர் தமது பெயரின் புகழ்ச்சிக்காகவும் மாட்சிக்காகவும், நமது நன்மைக்காகவும்,புனிதத் திருஅவை அனைத்தின் நலனுக்காகவும், உமது கையிலிருந்து இப்பலியை ஏற்றுக்கொள்வாராக.

காணிக்கை மன்றாட்டு
ஆண்டவரே,... எங்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம்.                 ஆமென்

நற்கருணை மன்றாட்டு:
அப : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப : இதயங்களை மேலே எழுப்புங்கள்.
எல் : ஆண்டவரிடம் எழுப்பியுள்ளோம்.

அப : நம் இறைவனாகிய ஆண்டவருக்கு நன்றி கூறுவோம்.
எல் : அது தகுதியும் நீதியும் ஆனதே.

ஆண்டவரே தூயவரான தந்தையே, என்றுமுள்ள எல்லாம் வல்ல இறைவா
எந்நாளும் எவ்விடத்திலும் நாங்கள் உமக்கு நன்றி செலுத்துவது  மெய்யாகவே தகுதியும் நீதியும் ஆகும். எங்கள் கடமையும் மீட்புக்குறிய செயலுமாகும். ............

ஆகவே,ஆற்றல் மிகுந்த விண்ணவரோடு சேர்ந்து நாங்களும் இம்மண்ணுலகில் இடையறாது உமது மாட்சியைக் கொண்டாடி முடிவின்றி ஆர்ப்பரித்துச் பாடுவதாவது.

தூயவர் பாடல்:
தூயவர், தூயவர், தூயவர்! வான் படைகளின் கடவுளாம் ஆண்டவர். விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன. உன்னதங்களிலே ஓசன்னா!

ஆண்டவர் பெயரால் வருகிறவர் ஆசி பெற்றவர். உன்னதங்களிலே ஓசன்னா! உன்னதங்களிலே ஓசன்னா!

நற்கருணை மன்றாட்டு:
ஆண்டவரே, நீர் மெய்யாகவே தூயவர்
உம்முடைய படைப்புகள் எல்லாம் உம்மைப் புகழ்வது தகுமே.
ஏனெனில் உம் திருமகனாகிய
எங்கள் ஆண்டவர் இயேசுக் கிறிஸ்துவழியாக
தூய ஆவியாரின் செயலாற்றலால்
ஆனைத்தையும் உய்வித்துத் தூய்மைப்படுத்துகின்றீர்.
கதிரவன் தோன்றி மறையும் வரை
உமது பெயருக்குத் தூய காணிக்கையை ஒப்புக் கொடுக்குமாறு உமக்கன மக்களை இடையறாது ஒன்று சேர்த்து வருகின்றீர்.

எனவே ஆண்டவரே
உமக்கு அர்ப்பணிக்க நாங்கள் கொண்டு வந்துள்ள இக்காணிக்கைகளை அதே ஆவியால் றீய்மைப்படுத்த
உம்மைத் தாழ்மையுடன் மன்றாடுகிறோம்.
இவ்வாறு, உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் உடலாகவும் இரத்தமுமாகவும் இவை மாறுவனவாக. அவர் பணித்தவாறே இம்மறைநிகழ்வுகளைக் கொண்டாடுகின்றோம்.

ஏனெனில் அவர் காட்டிகொடுக்கப்பட்ட இரவில்,
அப்பத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி, அதைப் பிட்டு தம் சீடர்களுக்கு அளித்துக் அவர் கூறியதாவது

அனைவரும் இதிலிருந்து பெற்று உண்ணுங்கள் : ஏனெனில் இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல்.

அவ்வண்ணமே, இரவு விருந்தை அருந்தியபின்,
கிண்ணத்தை எடுத்து, உமக்கு நன்றி செலுத்தி, ஆசி வழங்கி
அதைத் தம் சீடர்களுக்கு அளித்து அவர் கூறியதாவது

அனைவரும்  இதிலிருந்து பெற்றுப் பருகுங்கள் : ஏனெனில், இது புதிய, நிலையான உடன்படிக்கைக்கு உரிய என் இரத்தத்தின் கிண்ணம். இது பாவமன்னிப்புக்கென்று  உங்களுக்காகவும் பலருக்காகவும் சிந்தப்படும்.
இதை என் நினைவாகச் செய்யுங்கள்.

அப : நம்பிக்கையின் மறைபொருள்!
எல் : ஆண்டவரே, நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம். உமது உயிர்ப்பினையும் எடுத்துரைக்கின்றோம்.
(அல்லது)
ஆண்டவரே, நாங்கள் இந்த அப்பத்தை உண்டு
கிண்ணத்திலிருந்து பருகும்போதெல்லாம் நீர் வருமளவும் உமது இறப்பினை அறிக்கையிடுகின்றோம்.

அப : ஆகவே ஆண்டவரே
உமது திருமகனின் மீட்பு அளிக்கும் பாடுகளையும்,
வியப்புக்கு உரிய உயிர்ப்பையும், விண்ணேற்றத்தையும்
நாங்கள் நினைவுகூர்கின்றோம்.  இவர் மீண்டும் வருவார் என எதிபார்த்திருக்கும் நாங்கள் இப்புனிதமான, உயிருள்ள பலியை
நன்றி செலுத்தி உமக்கு ஒப்புக்கொடுக்கின்றோம்.

உமது திருஅவையின் காணிக்கையைக் கண்ணோக்கியருள
உம்மை மன்றாடுகிறோம். இப்பலியினால் நீர் உளம் கனியத் திருவுளமானீர்.  இவ்வாறு உம்முடைய திருமகனின் திருவுடல் திரு இரத்தத்தால் ஊட்டம் பெறும் நாங்கள், அவருடைய தூய ஆவியால் நிரப்பப்பெற்று கிறிஸ்துவுக்குள் ஒரே உடலும், ஒரே உள்ளமும் உடையவராக விளங்கச் செய்வீராக.

இவரே எங்களை உமக்கு என்றும் காணிக்கையாக்குவாராக! இவ்வாறு, உம்மால தேர்ந்துகொள்ளப்பட்வர்களோடு, முதன்முதலாக புனிதமிக்க கன்னியும்,கடவுளின் தாயுமான மரியா, அவருடைய கணவரான புனித யோசேப்பு,
புனித திருத்துதர்கள்,மாட்சிமிகு மறை சாட்சியர்
இன்று நாங்கள் கொண்டாடும் புனித ..............
மற்றும் புனிதாக அனைவரோடும்
நாங்கள் உரிமைப் பேற்றுக்கு தகுதியுடைவோர் ஆவோமாக! இவர்களின் வேண்டுதலால், நாங்கள் என்றும்
உமது உதவியைப் பெறுவோம் என உறுதியோடு இருக்கின்றோம்.

ஆண்டவரே, உங்களை உம்மோடு ஒப்புரவாக்கும் இப்பலி
உலகுகெல்லாம் அமைதியும் மீட்பும்
தரவேண்டும் என மன்றாடுகிறோம்.
இவ்வுலகில் பயணம் செய்யும் உமது திருஅவையை

சிறப்பாக உம் அடியாராகிய எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ்;...எங்கள் ஆயர் .......; ஏனைய ஆயர்கள், திருநிலையினர், உமக்குச் சொந்தமான மக்கள் ஆகிய அனைவரையும் நம்பிக்கையிலும் அன்பிலும் உறுதிபெறச் செய்வீராக. நீர் விரும்பியபடி உம் திருமுன் நிற்கின்ற
இக்குடும்பத்தின் வேண்டல்களுக்கு கனிவாய்ச் செவிசாய்த்தருயும்.

கனிவுள்ள தந்தையே,
எங்கும் சிதறுண்டிருக்கும் உம்முடைய பிள்ளைகளைத்
கனிவுடன் உம்மோடு சேர்த்துக் கொள்ளும்.


இறந்து போன எங்கள் சகோதரர் சகோதரிகளையும்
உமக்கு உகந்தவர்களாய் வாழ்ந்து
இவ்வுலகை விட்டுச் சென்ற அனைவரையும்
உமது அரசில் கனிவுடன் ஏற்றருளும்.
நாங்களும் அங்கு வந்து சேர்ந்து
அவர்களோடு உமது மாட்சியால்
என்றும் மனநிறைவு அடைவோம் என
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக எதிர்நோக்கியிருக்கின்றோம்.

இவர் வழியாகவே நீர் உலகுக்கு எல்லா நன்மைகளையும் வழங்குகின்றீர்.

இவர் வழியாக,
இவரோடு,
இவரில் எல்லாம் வல்ல இறைவனாகிய தந்தையே,
துய ஆவியின் ஒன்றிப்பில்
எல்லாப் புகழும் மாட்சியும்
என்றென்றும் உமக்கு உரியதே  - ஆமென்.

அப : மீட்பரின்கட்டளையால் கற்பிக்கப்பட்டு, இறை படிப்பினையால் பயிற்சி பெற்ற நாம் துணிந்து சொல்வோம்.

எல் : விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப் பெறுக. உமது ஆட்சி வருக. உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல, மண்ணுலகிலும் நிறைவேறுக.

எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல, எங்கள் குற்றங்களை மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீமையிலிருந்து எங்களை விடுவித்தருளும்.

அப : ஆண்டவரே, தீமை அனைத்திலிருந்தும் எங்களை விடுவித்து.
எங்கள் வாழ்நாளில் அமைதியைக் கனிவுடன் அருள
உம்மை மன்றாடுகின்றோம்.
உமது இரக்கத்தின் உதவியால்
நாங்கள் பாவத்திலிருந்து எப்போதும் விடுதலை பெற்று
யாதொரு கலக்கமும் இன்றி நலமாய் இருப்போமாக.
உங்கள் எதிர்நோக்கியிருக்கும் பேரின்பத்திற்காகவும்
எம் மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் வருகைக்காகவும் காத்திருக்கின்றோம்.
எல் : ஏனெனில், ஆட்சியும், வல்லமையும், மாட்சியும் என்றென்றும் உமதே!

அப : ஆண்டவரே, இயேசு கிறிஸ்துவே, “அமைதியை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன்,
என் அமைதியையே உங்களுக்கு அளிக்கின்றேன் என்று உம் திருத்துதர்களுக்கு மொழிந்தீரே. ஏங்கள் பாவங்களைப் பாராமல், உமது திருஅவையின் நம்பிக்கையை கண்ணோக்கி, உமது திருவுளத்துக்கு ஏற்ப அதற்கு அமைதியையும் ஒற்றுமையையும் அளித்தருள்வீராக. என்றென்றும் வாழ்ந்து ஆட்சி செய்கின்றவர் நீரே.
எல் : ஆமென்.

அப : ஆண்டவருடைய அமைதி உங்களோடு என்றும் இருப்பதாக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப : ஒருவருக்கொருவர் அமைதியைப் பகிர்ந்து கொள்வோம்.

நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திரு உடவும் திரு இரத்தமும் இங்கு ஒன்றாய் கலந்து இதை உட்கொள்ளும் நமக்கு நிலைவாழ்வு அளிப்பதாக.

மன்னிப்பு மன்றாட்டு (பாடல்):

உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே! எம் மேல் இரக்கம் வையும். - 2 உலகின் பாவம் போக்கும் இறைவனின் செம்மறியே! எமக்கு அமைதி அருளும்.

அப : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குபவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றோர் பேறுபெற்றோர்!

எல் : ஆண்டவரே! நீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால், ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா நலம் அடையும்.

(குரு தலை வணங்கி-ஆண்டவராகிய யேசு கிறிஸ்துவே, நான் உட்கொள்ளும் இத்திருஉடலும் இரத்தமும் என்னை நீதித்தீர்ப்ப்புக்கும் தண்டனைக்கும் உள்ளாக்காமல் உமது பரிவிரக்கத்தால் என் உள்ளத்தையும் உடலையும் காத்திடும் அருமருந்தாகிட அருள் புரியும்)

(கிறிஸ்துவின் திரு உடல் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)
(கிறிஸ்துவின் திரு இரத்தம் என்னைக் காத்து நித்திய வாழ்வளிப்பதாக -ஆமென்)

நற்கருணை விருந்து

நன்றி மன்றாட்டு
அப :மன்றாடுவோமாக. ஆண்டவரே,…. . .
எங்கள் ஆண்டவராகிய கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகின்றோம்.
எல் :   ஆமென்..

இறுதி ஆசீர்
அப : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக.
எல் : உம் ஆன்மாவோடும் இருப்பாராக.

அப : எல்லாம் வல்ல இறைவன், தந்தை, மகன்,தூய ஆவியார் உங்களுக்கு ஆசி வழங்குவாராக.
எல் : ஆமென்.

அப : சென்று வாருங்கள் திருப்பலி நிறைவேறிற்று
எல் : இறைவனுக்கு நன்றி.

Meaning and Objectives of Business Communication


Meaning of communication
The word “communication” is derived from the Latin word “communico” which means “To share”. It is the act of sharing thought, opinion, and ideas.
It is the two-way process
1. Speaker
2. Listener

Definition
“Communication is the action of conveying or exchanging information and ideas”. This is very simple definition.

Objectives of communication
Communication can be used for following objectives
1. Information
2. Advice
3. Order
4. Suggestion
5. Persuasion
6. Education
7. Warning
8. Motivation
9. Counselling
10 .Morale boosting

1. Information
One of the important objectives of communication is passing or receiving information about a particular fact. If large groups have to be informed, a meeting may be called.

2. Advice
Advice is a kind of information. It means opinion given as to the action to be taken. Advice should be related to a specific piece of work.

3.0rder
Order is an authoritative communication. It should be clear and complete. Its execution should be possible.

4. Suggestion
Suggestion means proposing something for acceptance or rejection. Subordinates normally give suggestion.

5. Persuasion
Promoting a person to act mostly in a positive way is known as persuasion. Persuasion is an important objective of communication.

6. Education
Education involves imparting instruction, character, building, enriching mental faculties, giving training to human being etc. it aims the knowledge and improving skills.

7. Warning
Warning is forceful means of communication. It gives oral or written.
Example; no smoking, beware of dogs, dangers.

8. Motivation
Interest ion job in the minds of employees is known as motivation. A motivated worker does not need much supervision.

9. Counseling
Counseling is objective and impersonal, whereas advice is a personal touch. Counseling is almost professional, whereas advice is not so.

10. Morale boosting
It refers to team spirit and co-operation of people for a common purpose. If the workers are highly motivated, morale is also said to be high.

(Excerpts from the Business Communication )
- summarized by Bro. Bruceline Binith, II Year B.B.A.

புனிதம் தேடும் பூபாளங்கள் - இறையழைத்தல் நாடகம்



காட்சி 1
பின்குரல்:  மிக்கேல்புரம்.... கிறிஸ்தவர்கள் மிகுந்து வாழும் ஓர் கிராமம். இவர்களது வழிபாடுகளும், கொண்டாட்டங்களும், வெறும் வெளிஆடம்பரங்களாக, சம்பிரதாயங்களாக நின்று விடுகின்றன. ஒற்றுமை உணர்வை, அன்பை, குடும்ப உணர்வை வளர்க்க வேண்டிய திருப்பலியில் கூட வேற்றுமை உணர்வுகளும், பகை உணர்வுகளும் தலைவிரித்தாடுங்கின்றன.... இறைவனின் திருப்பந்தியில் அமரச்செல்பவர்கள் அனைவரும் ஒன்றித்த கரத்தோடு செல்வது கிடையாது. ஒவ்வோருவர்க்குள்ளேயும் ஒரு சுயநலநோக்கு இருக்கத்தான் செய்கிறது...!
அந்தோணி:  அடடா பூசை ஆரம்பிக்கப்போவுதா....? வேற எவனாவது வாசகம் வாசிக்க வந்துடபோறானுங்க...! இந்த ஓசியாரு வாசக புத்தகத்தை எங்க வச்சாரோ தெரியலயே....?
{ எதிரே ராபர்ட் வாசகப் புத்தகத்துடன் வருதல் }
அந்தோணி:  ஏய் ராபர்ட்.... வாசகப் புத்தகத்தை மரியாதையா கொடுத்துடு....!
ராபர்ட்:  ஏம்பா... நீ மட்டும்தான் பூசையில் வாசகம் வாசிக்கனும்முன்னு எங்கேயாவது எழுதி வச்சிருக்கா...?
அந்தோணி: இத்தனை நாளா நான்தான் வாசிக்கிறேன்...இப்ப நீ என்னடா புதுசா வந்திருக்கே? வம்பு வளக்கனும்முன்னு ஆசையா இருக்கா...?
ராபர்ட்:   ஆமாம்டா ஆசையாத்தான் இருக்கு...! வாடா இன்னைக்கு ஒன்னால என்னால ஆனத பாத்துடலாம்! 
அந்தோணி:  அதைத்தான் இன்னைக்கு பாத்துடுவோமே..... டேய்
{சண்டை போட பாய்தல்}
ராபர்ட்:  டேய்! வாடா ஓன் வாலை இன்னைக்கு நறுக்கிப்புடுறேன்...!
{இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, அடித்துக்கொண்டவர்களாய் வெளியேறுகின்றனர்... தொடர்ந்து உபதேசியாரும், ஊர் பெரியவர் ஒருவரும் மேடையில் தோன்றுகின்றனர்....}
பெரியவர்:  யோவ் உபதேசியாரே....
உபதேசியார்:  என்ன விஷயமுங்க.....?
பெரியவர்:  வெள்ளிக்கிழமை என்னோட தாத்தா இறந்த நினைவு நாளு... அன்னைக்கு பாட்டுப்பூசை வைக்கனும்.... இந்தாங்க 25 ரூபா.... எப்பவும் 6 மணிக்குத்தானே பூசை...? சாமியாரை கொஞ்சம் 7 மணிக்கு ஆரம்பிக்கச் சொல்லுங்க. ஏன்னா வெளியூர்லேந்தெல்லாம் என்னுடைய மாமன் மச்சானெல்லாம் வரவேண்டியிருக்கு.....! இன்னும் நாலு அஞ்சி சாமியாருங்க சேர்ந்து பூசை வைச்சாக்கூட, நல்லா சிறப்பா இருக்கும்... எனக்கும் கௌரவமாக இருக்கும். அதுக்கு கொஞ்சம் ஏற்பாடு பண்ணிடுயா... அப்ப வரட்டுமா....?
உபதேசியார்:  {ஏளனமாக} ம்... ஒரு நாள்கூட இந்தக்கோவில் பக்கம் தலைவைச்சி படுக்கமாட்டாரு... தாத்தா செத்த நாள் பூசை மட்டும் சிறப்பா இருக்கனுமாம். வெளிவேடக்கார பயலுங்க...!இவனுங்களுக்கு பக்தியை விட கௌரவமும், ஆடம்பரமும்தான் முக்கியமாபோயிடுச்சி...!போக்கிரி பயலுங்க...!
{கோயிலில் ஒருவர் கையில் செபமாலை உருட்டிக்கொண்டிருக்க இளைஞர் இருவர் பேசிக்கொள்கின்றனர் }  
இளைஞர் 1:  மாப்பிள்ள... அந்த ஆளப்பத்தியா...?உழைக்கிறவனுக்கு ஒழுங்காகூலி தரமாட்டான்... செபமாலை உருட்டுறதப்பாரு.....
இளைஞன் 2:  மச்சி... அதை ஏண்டா நீ போய் பாத்துக்கிட்டிருக்க... நம்ம சின்னக் குட்டி இன்னைக்கு சிக்குன்னு வந்நிருக்கா பாருடா...! மாடர்ன் டிரஸ் போட்டு அசத்துறா பாரு!
இளைஞன் 1: ஆமாம் மாப்பிள... பிரசங்கம் ஆரம்பிக்கப்போவுது... நம்ம கொஞ்சம் காத்தாட போய்வருவோமா....?
இளைஞன் 2:  தம்மு இருக்குல ...? வா வா போகலாம்....!
{இருவரும் உல்லாசமாக வெளியேற விளக்கு அணைக்கப்படுகிறது}

காட்சி 2
பின்குரல்:  சூசைபுரம் என்னும் மற்றுமோர் கிராமம். இங்கு வாழ்பவர்கள் பரம்பரை கிறிஸ்தவர்கள் தான்... ஆனால் பெயரளவு கிறிஸ்தவர்கள்... அருள்வாழ்வின் ஊற்றும்,கிறிஸ்தவ வாழ்வை புனிதமாக்க வழிகளுமாகிய திருவருள்சாதனங்களின் மேன்மைய உணராதவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்...! ஆதலால், இவ்வூர் மக்களின் வாழ்வில் ஒழுக்கக்கேடுகளும், முறைக்கெட்ட வாழ்க்கையுமே வாடிக்கையாகிவிட்டன. உண்மையான கிறிஸ்தவ வாழ்வுக்கு அடிப்படைத்தேவையான மறைக்கல்வியில் அவர்களுக்கு ஆர்வமில்லை..... இச்சூழ்நிலையில் அருள்சகோதரர் ஒருவர் சூசைபுரத்தில் அடியெடுத்து வைக்கிறார்....!
பங்கேற்போர்:  
  • சகோதரர்
  • தாத்தா
  • பேரன்{ சிறுவன் }
சகோ:  தோஸ்திரம் தாத்தா....! நல்லாயிருக்கிங்களா....?
தாத்தா:  யாருப்பா இது? தெரியிலையே...! பாழாப்போன கண்ணும் தெரியமாட்டுதே...!
சகோ:  நான் பிரதர் தாத்தா. சாமியாராக இன்னும் ரெண்டு வருஷம் இருக்குது...!சும்மா உங்க ஊரை பாத்துட்டு போலாம்னு வந்தேன்... {பக்கத்தில் இருக்கும் சிறுவனைப் பார்த்து} இது யாரு தாத்தா உங்கப் பேரனா....?
தாத்தா:  ஆமாம்.....மாம்....என் பேரன்தான்...!
சகோ:  உன் பேரு என்னப்பா...?
சிறுவன்:  என் பேரு சின்னது...!
சகோ:  சின்னதா....!?! அதுசரி உன் ஞானஸ்தானப் பேரு என்னப்பா தம்பி...?  {சிறுவன் முழித்தல்... கைவிரித்தல்}
தாத்தா: அதை ஏன் தம்பி கேக்குறீங்க...? இவன் அப்பன் அதான் என் மொவன்.சரியான பொறுக்கி.. அவனுக்கு 17 வயசு இருந்தப்பவே எவளோ ஒருத்தியை கூட்டிகிட்டு வந்துட்டான்... அவளுக்கு பொறந்ததுதான் இவன்...!
சகோ:  அய்யய்யோ...பதினேழு வயசிலேவா...?
தாத்தா:  ஆமாம் தம்பி! இந்த ஊர்ல எவன் வயசை பார்க்கிறான். கொஞ்சம் மீசை முளைச்சாலே எவளையாவது இழுத்துட்டுப்போய் மாரியம்மன் கோவில்ல வைச்சு தாலி
கட்டுறானுங்க... இல்லைனா ரெ¬¬ஜிஸ்டர் கல்யாணம் பண்ணிபுடுறானுங்க...!
சகோ:  அடப்பாவமே...அதுசரி உங்க மகனை அப்படியே விட்டுட்டீங்களா...?
தாத்தா:  வேற என்ன தம்பி செய்யிறது...?
சகோ:  ஏய் பையா...? எங்க சிலுவைப்போடு பாக்கலாம்....!
{ சிறுவன் தெரியாமல் முழிக்கிறான் }
தாத்தா:  எங்க தம்பி இவுங்களுக்கு செபமெல்லாம் தெரியுது....? சினிமாப் படத்தை பத்தி கேளுங்க.... விவரமா, விளக்கமா சொல்வான்....!
சகோ:  சரி வர்றேன் பெரியவரே... { சிறிது தூரம் சென்றபின் } ச்சே... இப்படியும் ஒரு ஊரா...? கிறிஸ்துவ வாழ்வுக்கு தேவையான அடிப்படை மறைஅறிவும், இறைவனோடு ஒன்றிக்கச்செய்யும் புனித வழிகளாகிய திருவருள்சாதனங்களைப் பற்றியும் அறியாம, தெரியாம இருக்கிறாங்ளே...!?!

காட்சி. 3
பின்குரல்:  மூடப்பழக்கங்களிலே மூழ்கிப்போன சிற்றூர்தான் சின்னப்பன்பட்டி. அவ்வப்பொழுது எழும் இயற்கை சீற்றங்களுக்கும் நோய் நொடிகளுக்கும் சாபத்தின் விளைவு. பேய் பூதங்களின் வேலைபாடுகள் என காரணங்கள் காட்டப்பட்டன. நோய் கண்ட போதும் துன்பதுயரங்கள் சூழ்ந்து கொண்டபோதும் இவர்கள் குணமளிக்கும் இயேசு கிறிஸ்துவை துறந்து பூசாரிகளை நாடினர். மாய ஜால மந்திரிப்புகளில் நம்பிக்கை கொண்டனர். குருவின் வழியாய் இறைவன் செயல்படுத்தி குணப்படுத்தி புனிதமடையச் செய்கிறார் என்பதை ஏனோ மறந்தனர்....?
பங்கேற்போர்:   
  • பூசாரி, 
  • தகப்பன் குழந்தையுடன் 
  • பேய் பிடித்தவனோடு இருவர்.
{ பூசாரி தனக்குள் பேசிக் கொண்டிருத்தல் }
பூசாரி:  என்னடா இது... வழக்கமா சின்னப்பன் பட்டியிலிருந்து தெனம் பத்து பேருக்கு குறையாம வரும். இன்னைக்கு இன்னும் ஒருத்தனையும் காணோமே... ஆங்... யாரோ வரானே
தகப்பன்:  சாமி...{பதற்றத்துடன்} என்னுடைய புள்ளைக்கு ரெண்டு நாளா ஜூரம். நெருப்பா கொதிக்குதுங்க கொஞ்சம் மந்திரிச்சி விடுங்க...
பூசாரி:  அதுசரி... ஆத்தாளுக்கு தச்சனையா 20 ரூபா எடுத்து வைய்யு.
தகப்பன்:  வைக்கிறேன் சாமி... எவ்வளவு பணம் வேணும்னாலும் வைக்கிறேன்... என் புள்ள பொழச்சா போதுங்க
பூசாரி:  சரி உட்காரு { வேப்பிலையை வைத்து கொண்டு மந்திரம் சொல்லி திருநீரை ஊதிவிட்டு நெற்றியில் வைத்து அனுப்புதல் }
இன்னும் இரண்டு நாளைக்கு வந்து மந்திரிச்சிட்டுப் போ...
தந்தை:  சரிங்க சாமி... {செல்லுதல்... உடனே பேய் பிடித்தவனை சிலர் கூட்டி வர அவன் ஆடிக்கொண்டு வருதல்}
பூசாரி:  என்னங்கய்யா... பேய் பிடிச்ச கேசா?
ஒருவன்:  ஆமாங்க... மாடு மேய்க்கப்போன இடத்துலே ஈச்சமரத்து முனி பிடிச்சிடுச்சி... போவ மாட்டேங்குது...ஆள போட்டு அலங்க மலங்க அடிக்குது சாமி...
பூசாரி:  இங்க இப்படி கொண்டா...?{வேப்பில்லையை கொண்டு அடித்தல்}பேய் ஆடி அட்டகாசம் செய்கிறது.
இவனை விட்டு போறியா இல்லையா?
பேய்:  ஹ¨ம்... போறேன் அதற்கு முன்னாடி...
பூசாரி:  அதுக்கு முன்னடி....?
பேய்:  எனக்கு சேர வேண்டியதை  கொடுத்தாகனும்...
பூசாரி:  உனக்கு என்ன வேணும் சீக்கரம் சொல்லு?
பேய்:  சேவக் கோழியை காவு கொடு. பாக்கெட்டு மலிவு விலை சாராயம் கொன்டா.ஹ¨ம்... ஹ¨ம்... 2 பாக்கெட் கடாமார்க் சுருட்டு கொணாடா...{ஆடுதல்}
பூசாரி:  யோவ்... முனிபேய் சீக்கரம் போயிடாது.அது கேட்ட எல்லாம் எடுத்துக்கிட்டு சாயங்காலம் கூட்டிக்கிட்டு வாங்க.
எல்லோ:  சரிங்க சாமி {இழுத்துக்கொண்டு செல்தல்}
முடிவுரை:  இக்காட்சிகளில் கண்ட மூன்று கிறிஸ்தவ கிராம மக்களைப் போன்று எத்தனையோ பேர் இன்னும் திருப்பலியின் மேன்மையையும் உண்மைபொருளையும் உணராதவர்களாய் திருவருள்சாதனங்களை அறியாதவரகளாய் இறைவன் இத்திருவருள்சாதனங்கள் வழியே புனிதபடுத்தி தம்மோடு உறவு கொள்ள செய்கிறார் என்பதை தெரியாதவர்களாக திருமறைக் கல்வியை பெறாதவர்களாக, மூடநம்பிக்கையில் மூழ்கியவர்களாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை இறையரசின் துணைக்கொண்டு அர்ச்சித்து ஆசி வழங்கி புனித பாதையில் நடத்தி செல்ல மறு கிறிஸ்துகளாம் குருக்கள் தேவை. இவ்வர்ச்சிக்கும் பணியை ஏற்க குருத்துவ நிலையை தேர்ந்து கொள்ள உங்களில் எத்தனை பேர் முன்வரப் போகிறார்கள்... சிந்திப்பீர்... செயல்படுவீர்...
நன்றி....!!!