தாய் தந்தையருக்காக செபம்

இறைவா! என் தாய் தந்தையரை உமகு நேசத்தினுடையவும், வல்லமையினுடையவும் சாயலாக உண்டாக்கி என்னை எல்லாவறிறிலும் அவர்களுக்குக் கீழ்படியவும் அவர்களை நேசிக்கவும் கட்டளையிட்டீரே. எல்லாம் வல்ல இறைவா உமது கற்பனைகளை ஆசையோடு முழு இருதயத்தோடும் நான் கைப்பற்ற எனக்கு உமது அருளைத் தந்தருளும். நான் அன்போடு அவர்களை நேசிக்கவும், மதிக்கவும், அவர்களுடைய கட்டளைகளுக்கு உவப்புடன் கீழ்ப்படிந்து அவர்களுடைய விருப்பத்துக்கு இணங்கி நடக்கவும், எல்லாவறிறிலும் அவர்களுடைய நலனை விரும்பி அவர்களுடைய தண்டனைகளைத் தாழ்சியோடும் பொறுமையோடும் சகித்துக்கொள்ளவும், எனக்கு உதவிசெய்தருளும்!

அன்புள்ள இறைவா! அகங்காரத்திலும், கலகத்திலும், வைராக்கியத்திலும், பிடிவாதத்திலும், சோம்பலிலும் அசட்டைத்தனததிலுமிருந்து என்னை விடுவித்தருளும. என் எல்லாப படிப்புகளிலும் வேலைகளிலும் என்னைச் சுறுசுறுப்புடையவனாகவும் சோதனைகளில் பொறுமையுடையவனாகவும் செய்தருளும். நான் அப்படியே என் வாழ்நாள் முழுவதிலும் என் ஆண்டவரான இயேசுக்கிறிஸ்துநாதர் மூலமாக உமது பிள்ளை என்கிற பெயறுக்குத் தகுதியள்ளவனாய் இருப்பேனாக -ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக