நோயில் துன்புறுவோருக்கு நற்கருணை வழங்கல்

பணி : தந்தை மகன் தூய ஆவியார் பெயராலே - ஆமென்
பணி : ஆண்டவரின் சமாதானம் உங்களோடு இருப்பதாக….
            உம்மோடும் இருப்பதாக (தீர்த்தம் தெளித்தல்…. )

மன்னிப்பு வழிபாடு
பணி : அன்புக்குரியவர்களே இந்த திருச்சடங்கில் நாம் தகுந்த உள்ளத்துடன் பங்குபெற நமது பாவங்களை ஏற்று மனம் வருந்துவோம்.

எல்லாம் வல்ல இறைவனிடமும் சகோதர சகோதரிகளே, உங்களிடமும் நான் பாவியென்று ஏற்றுக் கொள்கிறேன். ஏனெனில் . என் சிந்தனையாலும் சொல்லாலும் செயலாலும், கடமையில் தவறியதாலும் பாவங்கள் பல செய்தேன். ( பிழை தட்டிக் கொண்டு ) என் பாவமே என் பாவமே என் பெரும் பாவமே ஆகையால், எப்போதும் கன்னியான தூய கன்னிமரியாளையும் வானதூதர் புனிதர் அனைவரையும் சகோதரர் சகோதரிகளே, உங்களையும் நம் இறைவனாகிய ஆண்டவரிடம் எனக்காக வேண்டிக் கொள்ள மன்றாடுகிறேன்.

பணி : எல்லாம் வல்ல இறைவன் நம்மீது இரக்கம் வைத்து நம் பாவங்களை மன்னித்து நம்மை நித்திய வாழ்வுக்கு அழைத்துச்செல்வாராக.

இறைவாக்கு வழிபாடு

யோவான் எழுதிய நற்செய்திலிருந்து வாசகம் (6 : 54-55)
எனது சதையை உண்டு என் இரத்தத்தைக் குடிப்பவர் நிலைவாழ்வைக் கொண்டுள்ளார், நானும் அவரை இறுதி நாளில் உயிர்த்தெழச் செய்வேன். எனது சதை உண்மையான உணவு, எனது இரத்தம் உண்மையான பானம்.
-இது கிறிஸ்து வழங்கும் நற்செய்தி

திருவிருந்து
பணி : நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்றுக்கொடுத்தபடி நாம் ஒருமித்து நமது சகோதரருக்காக மன்றாடுவோம்.

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே 
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக 
உமது ஆட்சி வருக 
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக. 
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும். 
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களை சோதனைக்கு உட்படுத்தரதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும். ஆமென்.

பணி : இதோ, இறைவனின் செம்மறி! இதோ, உலகின் பாவங்களைப் போக்குகின்றவர்! செம்மறியின் விருந்துக்கு அழைக்கப் பெற்றவர் பேறு பெற்றோர்!
ஆண்டவரே! தேவரீர் என் இல்லத்தில் எழுந்தருள நான் தகுதியற்றவன், ஆனால் ஒரு வார்த்தை மட்டும் சொல்லியருளும் எனது ஆன்மா குணமடையும்.

மன்றாடுவோமாக: என்றும் வாழும் எல்லாம் வல்ல இறைவா எம் சகோதரர்…. (சகோதரி… ) உம் திருமகனாகிய எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருஉடலை உட்கொண்டுள்ளார். இது அவருடைய உடலுக்கும் ஆன்மாவுக்கும் மருந்தாகி நற்பயன் அளிப்பதாக. இதனால் இவர் விரைவில் உடல் நலம் பெற்று உமது திருவுளத்தை நிறைவேற்றும் வண்ணம் செயல்பட அருள்புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

பணி : ஆண்டவர் உங்களோடு இருப்பாராக
உம்மோடும் இருப்பாராக
பணி : எல்லாம் வல்ல இறைவன் தந்தை, மகன், தூய ஆவியார் உங்களை
நிறைவாக ஆசிர்வதிப்பாராக.  – ஆமென்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக