என் சுவாசக்காற்றே


என் சுவாசக்காற்றே என்வாழ்வின் ஊற்றே
இறைவா என் உள்ளம் வருவாய்
என் உயிரியின் உணவே
என்வாழ்வின் வழியே தலைவா நீ உன்னை தருவாய்
என்வாழ்வும் என்வளமும் எல்லாமும் நீதானே
நிறைவாய் தலைவாய் அன்பினை பொழிவாய்


1.
என்சொந்தம் யாவும் என் தேவை யாவும்
நீதானே நீதானே இறைவா
என் நெஞ்சில் நேசம் மாறாத பாசம்
தருவாயே தருவாயே தலைவா
வாழ்நாளெல்லாம் நீ வேண்டுமே
வளர்ந்திட நாளும் வரம் வேண்டுமே - 2
வாழ்வாய் வழியாய் நிறைந்திட வருவாய்

2.
எழில்வானம் போல நிலைக்கும் உன் அன்பை
அறிவேனே அறிவேனே இறைவா
உனைப்போல நானும் பிறரன்பில் வளர
அருள்வாயே அருள்வாயே தலைவா
மகிழ்ந்திட நாளும் துணைவேண்டுமே - 2
நிழலாய் நினைவாய் வாழ்வினில் வருவாய்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக