திருப்பலிப் பாடல்கள்

வருகையில் 

இறைகுலமே இறைவனிலே
இணைந்திடும் நேரமிது
இறையருளே இதயத்திலே
எழுந்திடும் வேளையிது - 2
அகமகிழ்வுடன் வருவோம் அவர் இல்லம்
மீட்பளிக்கும் ஊற்றில் பருகிடுவோம்
கல்வாரி பலியிது கருணையின் வழியிது
தேவனின் பேரன்பே - நம் -2


1.
கருணை மழையென இதயம் இறங்கி
காக்கும் தேவன் இங்கே
பேரன்பிலே அன்பின் வழியில்தான்
அன்பாய் பிறந்தோம் அன்பாய் வளர்ந்தோம்
அவர் அன்பின் வழியில் அன்பின் ஒளியிலே
அன்பை கொண்டாடுவோம்
இருகரம் நீட்டி இறைவன் அழைக்கின்றார் - 2
அவர் திமுக தரிசனம் பிறந்திடும் இதயம்
திருப்பலியில் இணைவோம் - 2
2.
பாலை நிலத்திலே மன்னா பொழிந்து பாதுகாத்த
தேவன் இந்த பாவ நிலத்திலே பாதை வகுத்திட
பலியும் உணவும் ஆனார்
தேவனின் அன்பு தேடும் அன்பு மீட்கும் பேரன்பு
நம்மை தாங்கிடும் அன்பு
தேவனிலே உறவாடும் தாயன்பு
விண்ணகம் தேடும் தந்தையின் மந்தைகளே- 2
விடுதலை அடைந்திட விடியலில் நடந்திட
விரைவோம் மானிடரே - 2

தியானிக்கையில்

அருமை அருமை வான் படைகளின் இறைவன்
வாழும் இல்லம் அருமை


1.
அழகு முற்றங்கள் அங்கு ஆயிரம் உண்டு
அத்தனையும் காண அருமை
தங்குது அங்கே சின்ன சின்ன குருவிகள்
ஏங்குது மனமே அதைக் கண்டு
எந்த நேரமும் அந்த குருவிபோல்
உன் சன்னிதி வாழும் அருள் நிலையே வேண்டும்
எனது ஆன்மா கொண்ட தாகம் - 2 இது
2.
ஆவல் கொள்கிறேன் உன் அழுகு வாயியிலில்
காவல் காக்கவே தினமும்
அரண்மனை வாழ்க்கை ஆயிரம் நாளானாலும்
ஆலயத்தின் ஒரு நாள்போல் இல்லை

எந்த நேரமும் அந்த குருவிபோல்
உன் சன்னிதிவாழும் அருள் நிலையே வேண்டும்
எனது ஆன்மா கொண்ட தாகம் - 2 இது

தருகையில்

என்ன என்ன ஆனந்தம் எல்லையில்லா ஆனந்தம்
என்னை உனக்கு கொடுப்பதில் தானே ஆனந்தம் உன்னில் உனக்காய்
வாழ்வது எந்தன் ஆனந்தம் - 2


1.
கனிகளை ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
கனிவாய் உள்ளம் வேண்டும் என்று நீர் கேட்டீர்
மலர்களை ஏந்தி உம்பீடம் நான் வந்தேன்
எனக்காய் மலர வேண்டும் என்று நீர் கேட்டீர்
உன்னில் என்னை தந்து விட்டேன்
உம் பணி செய்ய துணிந்து விட்டேன் - 2
என்னை ஏற்று மகிழ்வாயா
என்றும் உன்னில் வாழ்ந்திடுவேன் - 2
2.
கோதுமை மணிகள் கையில் ஏந்தி நான் வந்தேன்
எனக்காய் வாழ வேண்டும் என்று நீர் கேட்டீர்
தீபம் ஏந்தி உம் பீடம் நான் வந்தேன்
எனக்காய் ஒளிர வேண்டும் என்று நீர் கேட்டீர்
உன்னில் வாழ முடிவெடுத்தேன்
உம் பணி செய்ய துணிந்து விடேன் - 2
என்னை ஏற்று மகிழ்வாயா - 2
என்றும் உன்னில் வாழ்ந்திடுவேன் -2

பெறுகையில்

நெஞ்சுக்குள்ளே வாரும் எந்தன் இயேசுவே
கண்ணுக்குள்ளே வாரும் எந்தன் ஜீவனே - 2
தேனான உன் நினைவில் தேடி வரும் சங்கீதமே
பாடாத நாவும் உன்னைப் பாடவே - 2


1.
தீராத ஆவல் உன்னைத் தேடச் சொல்லுதே - 3
வாராத உந்தன் வாசல் நாடச் சொல்லுதே - 3
இமைகளில் இருந்து நீ சுமைகள்
தாங்கும் சொந்தமாகினாய்
அகத்தினில் அமைதிiயை தந்திடும்
எந்தன் தந்தையாகினாய்

உன்னைத் தேடாத உள்ளம் இல்லை மண்ணிலே
உன்னைப் பாடாத வாழ்வு இல்லை என்னிலே - 2
2.
வானத்தின் மழைத்துளி மண்ணைத் தேடுதே - 3
ஞானத்தின் இறைமொழி விண்ணைத் தேடுதே - 3
மேகமாய் திரண்டு நீ
அருளைப் பொழியும் அன்னலாகினாய்
தேகமாய் வந்து நீ தெவிட்டா
உணவின் சுவையாகினாய்

உன்னைத் தேடாத உள்ளம் இல்லை மண்ணிலே
உன்னைப் பாடாத வாழ்வு இல்லை என்னிலே - 2

பெறுகையில் 

வாழ்வு தரும் ஒளியும் நீயே - இயேசுவே
வாழ்வு தரும் வழியும் நீயே - 2
உம்மிடம் வருபவர்கள் பசியடையார்
நம்பிக்கை வைப்பவர்கள் தாகமடையார்


1.
உம் வார்த்தை கேட்போரெல்லாம்
எந்நாளும் நிலைத்திருப்பர்
எப்பொழுதும் கனி தருவர்
உம் நாமம் புகழ்ந்திடுவர்
உம் அன்பில் நிலைப்போரெல்லாம்
உம் நினைவாய் வாழ்ந்திடுவர்
உம் விழியில் நடந்திடுவர்
உம் பணியை தொடர்ந்திடுவர்
வார்த்தையான இயேசுவே ஆசீர்தாருமே - 2
உம் படைப்பாய் வாழவே எம்மைமாற்றுமே - 2
2.
உம்மை நம்பி வருவோரெல்லாம்
வெருமையாய் சென்றதில்லை
வழிதவறி நடந்ததில்லை
வான்வெளியை கண்டிடுவர்
உம் விருப்பம் செய்வோரெல்லாம்
உமக்காக வாழ்ந்திடுவர்
உம்மருளை தந்திடுவர்
நிறைவாழ்வை பெற்றிடுவர் வார்த்தையான …..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக