கிறிஸ்துமஸ் பாடல் - ஆரிராரிரோ

ஆரிராரிரோ என் கண்ணே நீ தூங்கு- என்
அன்பே ஆரமுதே கண்மணியே நீ தூங்கு


1
அழியாத ஆன்மாவின் விருந்தாகவே
என்னில் எழுந்தே நீ வா- உன்
ஆன்மீக ராகங்கள் உயிர் வாழவே
என்னில் இசை பாடவா
கண் இமை மூட மறந்தே நான் காத்திருந்தேன்
தெய்வமே செல்வமே
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ

2
அழகான ஆன்மாவில் வருகின்றவர்
என்னை உருவாக்கவா- நல்
அணையாத தீபமாய் திகழ்கின்றவா
ஆன்ம ஒளி ஏற்றவா
சிறு திரியாக உலகெங்கும் ஒளியேற்றுவேன்
தெய்வமே செல்வமே!
நீ என் நெஞ்சம் எந்நாளும் துயில் கொள்ளவே
ஓடி வா அருள் கோடி தா - ஆரிராரிரோ

கிறிஸ்துமஸ் பாடல் - புத்தம் புதிய மலரே

புத்தம் புதிய மலரே இந்த
புவியில் உதித்த நிலவே
புதிய உலகின் விடிவே எங்கள்
இதயம் தேடும் மகிழ்வே(2)
ஆராரோ ஆரிரரோ ஆரிரராரோ(2)


1
என்றும் வாழும் இறைமகனே உலகில் வந்தாயே
இன்று எங்கள் உடன் பிறப்பாய் மாறிவிட்டாயே(2)
கண்ணின் மணியே கனியமுதே கண்வளராயோ(2)
அன்பின் மகிமை உணர்ந்த எம்மை அன்பில் இணைப்பாயோ
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம்
மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2)

2
ஈழவானில் எழும் கதிரே எங்கள் நம்பிக்கையே
தாழ்த்தப்பட்டோர் தவித்து நிற்போர் வாழ்த்தும் உன் வரவே(2)
துன்ப துயரம் துடைக்க வந்த கடவுளின் கரமே(2)
உளமகிழ்வே இகம் முழங்கும் இன்னிசை சுரமே
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் இணைந்தே பாடுவோம்
மனிதனே மழலையே மகிழ்ந்தே ஆடுவோம்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்(2)

கிறிஸ்துமஸ் பாடல் - பூத்தது பார் புதுப்பொழுது

பூத்தது பார் புதுப்பொழுது பூமகன் வரவினிலே- இதை
பூமி எங்கும் முழங்கிடவே புறப்படு இறைகுலமே- நம்
இயேசுவின் பிறப்பினிலே புது வாழ்வும் மலர்ந்திடுமே
இனிஎல்லான் நலம்தானே பல வளங்களும் பெருகிடுமே
லல்லல்லா........


1
இறைமகன் யேசு பிறந்தார்- ஏழை
எளியவர் மகிழ்வு கண்டார்
மாபரன் இன்று பிறந்தார்- நம்
பாவங்கள் போக்க வந்தார்
இருளை நீக்க வந்தார்- அருள்
ஒளியை ஏற்ற விளைந்தார்
விண்ணும் மண்ணும் இணைய- அதில்
இறைவன் புனிதம் கமழ
‌பாலன் இயேசு நம் மனங்களில்
சிரிப்பார் மகிழ்வாய் மனமே

2
அன்புருவானவர் வந்தார்- மண்ணில்
மனிதனாகப் பிறந்தார்
அமைதியின் தூதன் பிறந்தார்- நம்
அகமதில் நிறைவு தந்தார்
பாசம் பரிவு கொண்டார்- நம்
பாவம் யாவும் சுமந்தார்
நம்மில் ஒருவரானார்- நம்
இன்பம் துன்பம் பகிர்ந்தார்
பாலன் இயேசு நம் மனங்களில்
சிரிப்பார் மகிழ்வாய் மனமே

கிறிஸ்துமஸ் பாடல் - மார்கழியில் உதித்த மன்னவனே

மார்கழியில் உதித்த மன்னவனே உன்
மகிமையைத் துறந்து மண்ணகம் வந்தாய்
மனிதத்தை இழந்த இம்மண்ணில் நீ
மனுவாய் மலர்ந்து விந்தையுமானாய்


1
வருந்தியே உழைத்தும் வறியவரானோர்
உண்மையில் நடந்தும் ஊர்பழி சுமந்தோர்
அன்புக்கு பணிந்து அவமானம் அடைந்தோர்
அவனியை மாற்ற அடி உதை ஏற்றோர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

2
புனிதத்தில் வாழ்ந்து மனிதத்தை மறந்தோர்
செல்வத்தில் திளைத்து செருக்குடன் வாழ்ந்தோர்
அரியணை ஏறி அடக்கியே ஆள்வோர்
அணு ஆயுதத்தால் அகிலத்தை அழிப்போர்
இவர் நிலை மாற இறைமையை துறந்தாய்
மனுவுருவாகி மாண்பினைச் சொன்னாய்

கிறிஸ்துமஸ் பாடல் - நமக்காய் ஒரு குழந்தை

நமக்காய் ஒரு குழந்தை- இந்த
நானிலம் தவழ்ந்தது
நலிந்த நிலை மாறும் என்னும்
நம்பிக்கை மலர்ந்தது
ஆராரோ கண்ணுறங்கு உந்தன் ஊரேதோ கண்ணுறங்கு
விண்ணகமோ மண்ணகமோ இல்லை
இரண்டும் உந்தன் பிறந்தகமோ


1
வானின் தூதர்களே இன்று
வாழ்த்து பாடுங்களேன்
விண்ணகத்தில் என்றும் மகிமைதான்- ஆனால்
மண்ணகத்தில் அமைதி எங்கே
மாடடை குடிலில் பிறந்தவனே இந்த
மானிடர் நடுவில் பிறந்தாலென்ன
‌ஆடுகளே மாடுகளே நீங்கள்
மாந்தரிலும் சிறந்தவரே

2
மாந்தர் மைந்தர்கள் யாம்- எங்கள்
வாழ்க்கை எண்ணுகின்றோம்
மனித மாண்பு என்னவென்று- முற்றும்
மறந்த கூட்டம் உண்டு இங்கு
மனிதனாய் பிறந்த இறைமகனே- எங்கள்
மான்பினை எமக்கு கூறாயோ
வறுமை நோய் பிளவுகள்- இனி
வாராதிருக்கச் செய்வாயோ

கிறிஸ்துமஸ் பாடல் - பெத்லகேம் நகரிலே

பெத்லகேம் நகரிலே பூபாள ராகம் ஒன்று கேட்குதா இங்கு கேட்குதா
இடையர்கள் வியந்திட வானதூதர் பாடும் கானம் கேட்குதா உனக்கு கேட்குதா
கனவான காலங்கள் நனவாகிட பாவங்கள் சாபங்கள் மறைந்தோடிட‌
இறைமகனும் பிறந்துவிட்டார் வாருங்களே பாருங்களே


1
வார்த்தை வடிவிலே தந்தையோடு இருந்தவர் -தூய
‌ஆவியாலே மனிதன் ஆனாரே
மழலை உருவிலே நம் மன்னன் வந்தாரே -அன்னை
கன்னிமரி மைந்தன் ஆனாரே(2)
இடையர்களும் பாலகனை கண்டு களிக்கின்றார்
வேந்தர் மூவர் வான்மலரை வணங்கி மகிழ்கின்றார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்

2
மனிதன் வாழவே ஆதி சாபம் நீங்கவே- ஏழை
அடிமைக் கோலம் பூண்டு வந்தாரே
தந்தை திருவுளம் ஏற்று தம்மைத் தாழ்த்தியே- இந்த
‌தரணி மீது மழலை ஆனாரே(2)
மாந்தரெல்லாம் வாழ்வு பெற மீட்பர் பிறந்துள்ளார்
மனித நேயம் மலர்ந்திடவே மன்னன் பிறந்துள்ளார்
வாருங்களே... பாருங்களே.... பலகனை ..- நம்

கிறிஸ்துமஸ் பாடல் - கருணைக் கடலே

கருணைக் கடலே! வா
துதித்த தயாபரா! வா
சுருதி மறையோர்க்கு
சுடரொளியே வா

|
அதோனாயீ ஆனந்தமே
ஆவலுடன் காத்திருக்கும்
அடிமைகளை சந்திக்க

||
எம்மான்வேல் ஏசு நாதர்
எங்கள் பாவதோஷம் தீர
ஏன் இன்னும் வரத்தாமதம்

|||
பேய் மயக்கு பாவ வழிப்
பீடையினால் வாடும் உந்தன்
பிள்ளைகளின் மேலிரங்கி