சுருக்கமான பாரம்பரிய சிலுவைப்பாதை


பீடத்துக்கு முன்பாக:

என் இறைவா! நன்மை நிறைந்தவர் நீர்! அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவர். என் பாவங்களால் உம்மை மனம் நோகச் செய்துவிட்டேன். ஆகவே நான் குற்றங்கள் பல செய்தேன் எனவும், நன்மைகள் பல செய்யத் தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன். உமது அருள் துணையால் நான் மனம் திரும்பி, இனிமேல் பாவம் செய்வதில்லை என்றும், பாவத்துக்கு ஏதுவான சூழ்நிலைகளை விட்டு விலகுவேன் என்றும் உறுதி கொடுக்கிறேன். எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளின் பயனாக, இறைவா, என்மேல் இரக்கமாயிரும்.

திவ்விய இயேசுவே! எங்களுக்காகவும் உத்தரிப்பநிலை ஆன்மாக்களுக்காகவும் சிலுவைப் பாதையைத் தியானிப்பவர்களுக்கு அளிக்கப்படும் பலன்களை அடைய விரும்பி, உம் இரக்கத்தைக் கெஞ்சி மன்றாடுகிறோம்.

புனித மரியாயே! வியாகுல அன்னையே! இயேசுவின் பாடுகளின் போது அவரோடு நீர் உடனிருந்து, அவருடைய பாடுகளில் பங்கேற்றது போல, நாங்களும் எங்கள் அயலார் அனுபவிக்கும் துன்பங்களில் அவர்களுடன் இருந்து துணைபரியும் ஆற்றலைப் பெற உம் திருமைந்தனிடம் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
மைந்தனார் சிலுவை மீது மாத்துயருடன் வருந்த
நொந்தழுதாள் தாய் மரி!
முதலாம் தலம்:

முதல்வர்: திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதரைச் சாவுக்குத் தீர்வையிடுகிறார்கள்:

திவ்விய இயேசுவே! சிலுவையிலே நீர் அறையுண்டு சாகத் தீர்வையிடப்பட்டதை தியானித்து, நாங்கள் உம்மை வணங்குகிறோம். அகோரத் தீர்வையிலே நின்று எங்களை மீட்டருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு. -மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்.
திருமகன் அறையுண்ட சிலுவை அடியில் நின்று
தேவதாய் நொந்தழுதாள்!
இரண்டாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதரின் தோள்மேல் சிலுவையைச் சுமத்துகிறார்கள்.

திவ்விய இயேசுவே! நீர் பாரமான சிலுவையைச் சுமந்து சென்றதைத் தியானித்து உம்மைத் தொழுகிறோம். எங்களுக்கு இவ்வுலகில் வருகிற வேதனைகளையும் தீமைகளையும் பொறுமையோடு அனுபவிக்க அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்!
வேதனைக் கடலமிழ்ந்த மாதா ஆத்துமம் வதைய
வாள் பாய்ந்தூடுருவிற்று.
மூன்றாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் முதல் முறை தரையில் குப்புற விழுகிறார்.

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே முதல் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் செய்கிற பாவங்களிலே மூர்க்கராய் நிலை கொள்ளாமல் உடனே அவைகளை விட்டு எழுந்திட உதவிருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
நேச மகனை இழந்த தாய் அனுபவித்த துயர்
தானுரைக்க நாவுண்டோ!
நான்காம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதர் தமது புனித தாயாரைச் சந்திக்கிறார்.

திவ்விய இயேசுவே! உம்முடைய புனித அன்னை உமக்கு எதிர்கொண்டு வருகிறதைக் கண்டு நீர் சொல்லிலடங்கா வேதனையை அனுபவித்ததை தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாகும் வேளையில் வியாகுல அன்னையின் அடைக்கலத்தை அடைய உதவிருளும் சுவாமி.

ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்!
அருமையாய் ஈன்ற சுதன் அவஸ்தயைக் கண்டிளகி
உருகிப் புலம்பினாள்!
ஐந்தாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதர் சிலுவையைச் சுமப்பதற்கு சீமோன் உதவி செய்கிறார்.

திவ்விய இயேசுவே! நீர் சிலுவை சுமந்து போகிறதற்குச் சீரேன் ஊரானாகிய சீமோன் உதவி செய்ததைத் தியானித்து உம்மைத் தொழுகிறோம். எங்களுக்கு நியமித்திருக்கிற சிலுவையாகிய துன்பங்களை உம்மோடு கூட நாங்கள் சுமக்கக் கருணை புரிந்தருளும் சுவாமி!

ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
இரட்சகர் திருத்தாயார் இக்கொடிய வதைப்பட
யார் கண்டழாதிருப்பார்!
ஆறாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதருடைய திருமுகத்தை ஒரு பெண் துடைக்கிறார்.

திவ்விய இயேசுவே! வெரோணிக்கம்மாள் உம்முடைய திருமுகத்தைத் துடைத்ததை தியானித்து, உம்மை தொழுகிறோம். நாங்கள் ஆள்பார்த்து செயல்படாமல், புண்ணிய நெறியில் உறுதியாய் நடக்க உதவியருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
திருமகன் துயரத்தால் உருகுந்தாயைக் கண்டுள்ளம்
கரையாதார் யாருண்டு!
ஏழாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் இரண்டாம் முறை தரையில் குப்புற விழுகிறார்.!

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே இரண்டாம் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் எந்த பாவத்திலும் திரும்ப விழாதபடிக்குக் கருணை கூர்ந்தருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்.
அன்புள்ள தன் திருமகன் துன்பதுயர் அவஸ்தையுள்
தன் ஜீவன் தரக் கண்டாள்! 
எட்டாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதர் யூதப் பெண்களுக்கு ஆறுதல் சொல்லுகிறார்.

திவ்விய இயேசுவே! உம்மை நோக்கி அழுத எருசலேம் பட்டணத்துப் பெண்களுக்கு நீர் ஆறுதல் சொன்னதைத் தியானித்து, உம்மை தொழுகிறோம். நாங்கள் புரிந்த பாவ துரோகங்களுக்காகத் துயரப்பட்டு, அவைகளுக்காக எப்போதும் அழுதுகொண்டிருக்க அருள் பொழியும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
பட்ச ஊருணி மாதாவே பரிதவித்தே உம்மோடு
பாவி நான் அழச் செய்யும்!
ஒன்பதாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே

இயேசு நாதர் சிலுவையின் பாரத்தால் மூன்றாம் முறை தரையில் குப்புற விழுகிறார்!

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையின் கீழே மூன்றாம் முறை குப்புற விழுந்ததைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாவான பாவத்தோடே செத்து, முடிவில்லா நரகத்திலே விழாதபடிக்கு எங்களைக் காத்தருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு. - மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள்சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.

அ. - ஆமென்
ஆதி இயேசுவை நேசித்தே யான் அவருக்கினியனாய்
அன்பால் என்னுள்ளம் சுடும்!
பத்தாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதருடைய ஆடைகளைக் களைகிறார்கள்.

திவ்விய இயேசுவே! உம்முடைய ஆடைகளைக் களைந்ததையும் உமக்குப் புளித்த திராட்சை இரசத்தைக் குடிக்கக் கொடுத்ததையும் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் அனைத்திலும் உம்முடைய திருவுளத்துக்குக் கீழ்படிந்து, பொறுமையோடு நடக்கக் கருணை கூர்ந்தருளும் சுவாமி.-ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
தேவதாயே தயை கூர்ந்து பாவி என்னிருதயத்தில்
இயேசு காயம் பதியும்!
பதினோராம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதரை சிலுவையில் அறைகிறார்கள்.

திவ்விய இயேசுவே! நீர் சிலுவையில் அறையப்பட்டதைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் இவ்வுலகச் செல்வங்களையும் இன்பங்களையும் மட்டுமே நாடாமல், அவற்றைக் கொண்டு விண்ணுலக அரசினைச் சம்பாதித்துக் கொள்ள அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.-மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள், சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்.
சிலுவை அடியில் நின்று தேவதாயே உம்மோடே நான்
புலம்ப ஆசிக்கின்றேன்!
பன்னிரண்டாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும்: அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதர் சிலுவையில் இறக்கிறார்.

திவ்விய இயேசுவே! நீர் சிலுவை மரத்தில் உயிர் விட்டதை தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் உம்மை மாத்திரமே அன்ப செய்து, அருள் நிலையில் இறந்து விண்ணுலகில் உம்மோடே வீற்றிருக்க உதவியருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.- மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
கன்னியர் அரசியே, தாயே என் கண்ணீரை உம்முடைய
கண்ணீரோடேற்றருளும்!
பதின்மூன்றாம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இறந்த இயேசுவை அவர் தாயார் மடியில் வைக்கிறார்கள்.

திவ்விய இயேசுவே! உம்முடைய திருச்சடலத்தைத் சிலுவையினின்று இறக்கி வியாகுல அன்னையின் மடியிலே வைத்ததை தியானித்து, உம்மைத் தொழுகிறோம். எங்களுடைய இதயத்திலே உம்முடைய திருக்காயங்களும், பரிசுத்த மாதாவின் வியாகுலங்களும் பதிந்திருக்க உதவியருளும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு.-மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக்கடவது.

அ. - ஆமென்
அன்பால் அக்கினியை மூட்டி அடியேனைத் தீர்வை நாளில்
ஆதரிப்பீர் கன்னியே!
பதினான்காம் தலம்:

முதல்வர்: - திவ்விய இயேசுவே! உம்மை ஆராதித்து வணங்கி உமக்கு நன்றியறிந்த தோத்திரம் செய்கிறோம்.

அனைவரும் : அதேனென்றால் உமது பாரமான திருச் சிலுவையாலே உலகை மீட்டீரே!

இயேசு நாதரைக் கல்லறையில் அடக்கம் செய்கிறார்கள்.

திவ்விய இயேசுவே! உம்முடைய திருச்சடலம் அடக்கம் செய்யப்பட்டதைத் தியானித்து, உம்மைத் தொழுகிறோம். நாங்கள் சாகுமட்டும் உம்மை நேசிக்கவும், உம்முடைய பேரின்ப அரசுக்கு வந்து சேரவும் அருள் தாரும் சுவாமி. -ஒரு பர.அருள்.திரி.

மு. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.
அ. - எங்கள் பேரில் தயவாயிரும் சுவாமி எங்கள் பேரில் தயவாயிரும்.

மு -மரித்த விசுவாசிகளுடைய ஆத்துமாக்கள் சர்வேசுரனுடைய இரக்கத்தினால் நித்திய சமாதானத்தில் இளைப்பாறக் கடவது.

அ. - ஆமென்!
மண் உடல் உயிர் பிரிந்தால் வான் மோட்சம் விரைவில்
சேர்ந்து வாழவும் செய்தருளும்.
பொறுத்தருளும் கர்த்தாவே! உமது ஜனத்தின் பாவங்களைப் பொறுத்தருளும். என்றென்றைக்கும் எங்கள்மேல் கோபமாயிராதேயும் சுவாமி. தயவாயிரும் சுவாமி தயவாயிரும். -(ஐந்து முறை சொல்லவும்) 

திருத்தந்தையின் கருத்துகளுக்காக ஒரு பர. அருள். திரி. மந்திரம் ஜெபிப்போம்.

Stabat mater dolorosa


No.
Tamil
Latin
English
1.

மைந்தனார் சிலுவை மீது மாத்துயருடன் வருந்த
நொந்தழுதாள் தாய் மரி!
Stabat mater dolorosa
juxta Crucem lacrimosa,
dum pendebat Filius.
At the Cross her station keeping,
stood the mournful Mother weeping,
close to her son to the last.
2.



வேதனைக் கடலமிழ்ந்த மாதா ஆத்துமம் வதைய
வாள் பாய்ந்தூடுருவிற்று.
Cuius animam gementem,
contristatam et dolentem
pertransivit gladius.
Through her heart, His sorrow sharing,
all His bitter anguish bearing,
now at length the sword has passed.
3.



நேச மகனை இழந்த தாய் அனுபவித்த துயர்
தானுரைக்க நாவுண்டோ!
O quam tristis et afflicta
fuit illa benedicta,
mater Unigeniti!
O how sad and sore distressed
was that Mother, highly blest,
of the sole-begotten One.

4.


அருமையாய் ஈன்ற சுதன் அவஸ்தயைக் கண்டிளகி
உருகிப் புலம்பினாள்!
Quae moerebat et dolebat,
pia Mater, dum videbat
nati poenas inclyti.
Christ above in torment hangs,
she beneath beholds the pangs
of her dying glorious Son.
5.

இரட்சகர் திருத்தாயார் இக்கொடிய வதைப்பட
யார் கண்டழாதிருப்பார்!
Quis est homo qui non fleret,
matrem Christi si videret
in tanto supplicio?
Is there one who would not weep,
whelmed in miseries so deep,
Christ's dear Mother to behold?
6.

திருமகன் துயரத்தால் உருகுந்தாயைக் கண்டுள்ளம்
கரையாதார் யாருண்டு!
Quis non posset contristari
Christi Matrem contemplari
dolentem cum Filio?
Can the human heart refrain
from partaking in her pain,
in that Mother's pain untold?
7.

அன்புள்ள தன் திருமகன் துன்பதுயர் அவஸ்தையுள்
தன் ஜீவன் தரக் கண்டாள்! 
Pro peccatis suae gentis
vidit Iesum in tormentis,
et flagellis subditum.
For the sins of His own nation,
She saw Jesus wracked with torment,
All with scourges rent:
8.


பட்ச ஊருணி மாதாவே பரிதவித்தே உம்மோடு
பாவி நான் அழச் செய்யும்!
Vidit suum dulcem Natum
moriendo desolatum,
dum emisit spiritum.
She beheld her tender Child,
Saw Him hang in desolation,
Till His spirit forth He sent.
9.
ஆதி இயேசுவை நேசித்தே யான் அவருக்கினியனாய்
அன்பால் என்னுள்ளம் சுடும்!
Eia, Mater, fons amoris
me sentire vim doloris
fac, ut tecum lugeam.
O thou Mother! Fount of love!
Touch my spirit from above,
make my heart with thine accord:
10.
தேவதாயே தயை கூர்ந்து பாவி என்னிருதயத்தில்
இயேசு காயம் பதியும்!
Fac, ut ardeat cor meum
in amando Christum Deum
ut sibi complaceam.
Make me feel as thou hast felt;
make my soul to glow and melt
with the love of Christ my Lord.
11.
சிலுவை அடியில் நின்று தேவதாயே உம்மோடே நான்
புலம்ப ஆசிக்கின்றேன்!
Sancta Mater, istud agas,
crucifixi fige plagas
cordi meo valide.
Holy Mother! pierce me through,
in my heart each wound renew
of my Savior crucified:
12.
கன்னியர் அரசியே, தாயே என்
கண்ணீரை உம்முடைய
கண்ணீரோடேற்றருளும்!
Tui Nati vulnerati,
tam dignati pro me pati,
poenas mecum divide.
Let me share with thee His pain,
who for all my sins was slain,
who for me in torments died.
13.
அன்பால் அக்கினியை மூட்டி
அடியேனைத் தீர்வை நாளில்
ஆதரிப்பீர் கன்னியே!
Fac me tecum pie flere,crucifixo condolere,
donec ego vixero.
Let me mingle tears with thee,
mourning Him who mourned for me,
all the days that I may live:
14.
மண் உடல் உயிர் பிரிந்தால்
வான் மோட்சம் விரைவில்
சேர்ந்து வாழவும் செய்தருளும்.
Juxta Crucem tecum stare,
et me tibi sociare
in planctu desidero.
By the Cross with thee to stay,
there with thee to weep and pray,
is all I ask of thee to give.
15.

Virgo virginum praeclara,
mihi iam non sis amara,
fac me tecum plangere.
Virgin of all virgins blest!,
Listen to my fond request:
let me share thy grief divine;
16.

Fac, ut portem Christi mortem,
passionis fac consortem,
et plagas recolere.
Let me, to my latest breath,
in my body bear the death
of that dying Son of thine.
17.

Fac me plagis vulnerari,
fac me Cruce inebriari,
et cruore Filii.
Wounded with His every wound,
steep my soul till it hath swooned,
in His very Blood away;
18.

Flammis ne urar succensus,
per te, Virgo, sim defensus
in die iudicii.
Be to me, O Virgin, nigh,
lest in flames I burn and die,
in His awful Judgment Day.
19.

Christe, cum sit hinc exire,
da per Matrem me venire
ad palmam victoriae.
Christ, when Thou shalt call me hence,
by Thy Mother my defense,
by Thy Cross my victory;
20.

Quando corpus morietur,
fac, ut animae donetur
paradisi gloria. Amen.
While my body here decays,
may my soul Thy goodness praise,
Safe in Paradise with Thee.

புனித வியாழன் மறையுரை Holy Thursday Tamil Sermon



Click to listen to Fr. Arul Prakasam's Sermon on Holy Thursday 2011
(பெரிய வியாழன் மறையுரை ஒலி வடிவில்)


மறைந்த நம் திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பரின் சொந்த நாடான போலந்து கம்யூனிச ஆதிக்கம் ஓங்கியிருந்த நாடு. இரண்டாம் உலகப்போரின் சமயத்தில் மாக்சிமிலன் கோல்பே என்னும் ஒரு கத்தோலிக்க குருவானவருடன் பலரும் கைது செய்யப்பட்டனர். இந்த கைதிகளில் யாரோ தப்பிவிட்டான் என்று திடீரென தலைவன் வந்து பத்து பேரை பிடித்து கொல்லப் போவதாக அறிவித்தான். அந்தப் பத்து பேரில் ஒருவன் ஐயோ என் மனைவி மக்களை யார் காப்பாற்றுவது யாருமில்லையே எனக்கதறி அழுது புலம்ப ஆரம்பித்து விட்டான். கேட்டுக்கொண்டிருந்த இந்த குருவானவர் மாக்சிமில்லன் கோல்பே முன்னே சென்று அவரை விட்டு விடுங்கள் அவரிடத்தில் நான் சாகத் தயார் என்று கூறினார் பின் அவர் விடுவிக்கப்பட்டு, குருவானவர் கொல்லப்பட்டார் கொடூரமாக.

இறை இயேசுக் கிறிஸ்துவில் பிரியமானவர்களே, இன்றைய முதல் வாசகத்தில், எப்படி இந்த பாஸ்காவைக் கொண்டாட வேண்டும் என்று சொன்னதைக் கேட்போம். இதன் இறுதியில் ஆண்டவர்: “நீங்களோ அந்நாளை, நினைவு கூற வேண்டிய நாளாகக் கொண்டு அதை உங்கள் தலைமுறைதோறும் ஆண்டவருடைய திருவிழா என்று எக்காலமும் கொண்டாடி வருவீர்கள்” என்று விடுதலைப்பயணப் புத்தகத்தில் அதிகாரம் 12, 14ல் படிக்க கேட்டோம். அதனையே கட்டளையாகவும் இறைவன் கொடுக்கின்றார். அதன்படியே யூதர்கள் அனைவரும் ஆண்டுதோறும் இந்த பாஸ்காவைக் கொண்டாடி வந்தனர்.
றைமகன் இயேசுவும் 32 ஆண்டுகளாக இதையேதான் கொண்டாடினார்.  ஆனால் பழைய பாஸ்காவானது தன்னிலே ஒரு நிறைவடைந்தாகத் தெரியவில்லை. ஆனால் இயேசுவின் பாஸ்காவானது ஏதோ ஒரு முழுமையாக மாபெரும் ஒரு பாஸ்காவை சுட்டிக் காட்டியது.

இந்த முன் குறித்த மகத்தான பாஸ்காவை நிகழ்த்தப் போகும் நோக்கத்தோடுதான் பாஸ்காவுக்கு தயார் படுத்தும்படி இயேசு கூறியதாக புனித லூக்கா நற்செய்தியில் அதிகாரம் 22, 8-11, விவரிக்கின்றார். இந்த இறுதி பாஸ்கா உணவில் பழைய பாஸ்காவை இயேசு உருமாற்றுகிறார். அன்று இரவு பிடிபட்டு, கொடூரமாக மரிக்கப் போகும் நிலையை உணர்ந்து என்றுமே தன் பிரசன்னம் நிலைக்கவும், ஒருமைப்பாட்டை வளர்க்கவும், அந்த புளியாத அப்பத்தையும் இரத்தததையும் தன் உடலாகவும், இரத்தமாகவும் மாற்றிவிட்டார். இதுதான் விசுவாசத்தின் மறைபொருள், ஆண்டவரே தேவரீர் வருமளவும் உமது மரணத்தை அறிக்கையிடுக்கிறோம் என்று இன்றைய இரண்டாம் வாசகமாக புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் கடிதத்தில் கூறுவதைத்தான் நாம் ஒவ்வொரு திருப்பலியில் நடுப்பகுதியில் அறிக்கையிடுகிறோம். கிறிஸ்துவே தமது திருஇரத்ததால் நம்மை தந்தைக் கடவுளோடு இணைக்கும் இணைப்பாளராக உள்ளார். கிறிஸ்துதான் இந்த புதிய உடன்படிக்கையின் பலிப்பொருள், பலிப்பீடம், பலியிடும் குரு.

இந்த உன்னத பலியின் மூலம் கிறிஸ்து தாமே கடவுளின் தலைமை குருவாக இருக்கிறார். அதே சமயம் அவர் பாவத்தைத்த தவிர மற்ற அனைத்திலும் மனிதர்களைப் போல இருந்தார். அவர்களை சகோதரர்கள் என்று அழைக்க வெட்கப்படவுமில்லை (எபி 2, 11) நம்மோடு இப்படி உறவாட வந்த அவர் கொடுத்த இந்த சமத்துவமும், உரிமையும்தான் மற்ற மனிதர்களை அதாவது நம்மை அவரின் உன்னத குருத்துவத்தில் பங்கெடுக்கும் வாய்ப்பளிக்கிறது. வழியும் செய்கிறது.

எப்படி இந்த குருத்துவத்தில் இறைமக்கள் நாம் அனைவரும் பங்கெடுப்பது, புனித பேதுரு எழுதிய முதல் கடிதம் 2, 4-5 சொல்வது போல் இறைமக்கள் அனைவரும் தங்களையே கடவுளுக்கு உகந்த ஞானபலியால் காணிக்கை பங்கு பெரும் உரிமை பெற்று, அழைக்கப்பட்டிருகிறோம். 

இந்த பொதுக் குருத்துவத்தைத்தான் அதே கடிதம் முதல் பேதுரு 2 , 9ல் படிக்கக் கேட்கிறோம். எதில் இந்த பொதுக் குருத்துவம் அடங்கி இருக்கின்றது? ஏற்கெனவே பார்த்தது போல வாழ்க்கை பலியில் அடங்கி இருக்கிறது. இந்த வாழ்க்கை பலி என்பதென்ன?

இதற்கு அதே கடிதம் முதல் பேதுரு 2, 9ல் மேலும் நற்செய்தியின் மதீப்பீடுகளை வாழ்வதும், இறைவனின் வல்ல செயல்களுக்கு வாழ்வில் சான்று பகர்வதும் தான் வாழ்க்கைப்பலி.
  1. குழந்தை இறந்துவிடும் போலிருக்குங்க, கையில காசு இல்ல... ஒரு 1000 ரூபாய் கொடுத்தா திருப்பி கொடுத்திடுறேன் என்று கேட்டு ஒருவர் கண்ணீர் விடும்போது சாப்பாட்டுக்கு வைத்திருக்கும் பணத்தையும் கொடுப்பதுதான் வாழ்க்கைபலி.
  2. சம்பளம் மேசை மேல், கிம்பளம் மேசைக்கடியில், என்று இருப்பவர் மத்தியில் நான் கிறிஸ்தவன், சம்பளத்திற்கு உகந்த வேலை செய்வேன் என்பது வாழ்க்கைபலி.
  3. இருக்கும் உணவையெல்லாம் தன் 4, 5 குழந்தைகளுக்குப் போட்டுவிட்டு, வெறும் சோற்று நீரைக் குடித்துவிட்டு படுத்துவிடும் தாய் செய்வது வாழ்க்கைபலி.
  4. என்னைத் தரக்குறைவாக அனைவர் முன்னாடி பேசிவிட்டானே, இருந்தாலும் நான் அவனை மனதார மன்னிக்கிறேன் என்பது வாழக்கைபலி.
அன்றாடம் நாம் சந்திக்கும் இந்த உண்மைகளை செயல்படுத்துவதுதான் வாழ்க்கைபலி. கிறிஸ்து நம் மீது அன்புகொண்டு, தன் உயிரையும் கையளித்ததைப் போல நாமும் அயலானுக்காய் அவ்வாறு செய்யும் அளவுக்கு அன்பு செய்ய வேண்டும். அவர் கடவுளின் மகனாய் இருந்ததால் அவ்வாறு செய்ய முடிந்தது. நாம் மனிதர்கள் என்ன செய்ய முடியும்? என்ற கேள்வி கேட்க முடியாது. ஏனெனில் மறையுரையின் துவக்கத்தில் கேட்ட அந்த உண்மை சம்பவத்தில் தன் உயிரை விட்டது ஒரு சாதாரண குருதான். எப்படி முடிந்தது?

மனிதபலம் மனித சக்தி இதனை நிறைவேற்ற முடியாது. இதற்கு சக்தியும் வல்லமையும் அளிப்பதுதான் இந்த நற்கருணை எனும் ஒப்பற்ற திருவருட்சாதனம்தான் இந்த வாழ்க்கை பலியை நிறைவேற்றும் முயற்சியில் மனிதனுக்கு பொது குருத்துவத்திலிருந்து பணிக்குருத்துவத்தை இறைமகன் இன்று ஏற்படுத்தினார்.  ஆகவே அரச குருத்துவ திருக்கூட்டமாக கூடியுள்ள நாம் இந்த வாழக்கை பலியை வாழ, வலிமையும், வல்லமையும் தரும் இந்த கல்வாரி பலியில் தொடர்ந்து மன்றாடுவோம்.


இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி

குருத்து ஞாயிறு Palm Sunday Tamil Sermon


ஒரு தந்தையும் மகனும் பிழைப்பு தேடி காட்டு வழியே பயணம் செய்தனர். காட்டு வழியில் கற்களும் முட்களும் சிறுவனின் கால்களை பதம் பார்த்தன. கால்களில் ஏற்பட்ட வலி, அவனது வேகத்தை குறைத்தது. அதோடு பசியும், களைப்பும், சோர்வும் வாட்டின. தந்தை அவனை சிறிது நேரம் அமர வைத்தார். மகனின் வலியை சகிக்க முடியாத தந்தை, அவனை சிறிதுநேரம் தோளில் தாங்கினார். அவருக்கும் களைப்பு தட்டவே, தன் மகனிடம் கூறினார், தம்பி நான் முதலில் நடக்கிறேன் பிறகு நீ என் பாதச்சுவடுகளை, தடங்களை பின்பற்றி அதிலேயே உன் கால்களையும் வைத்து நடந்த வா.அப்போது கற்களும், முட்களும் உன் கால்களைத் தீண்டாது என்று கூறி தந்தை முன் நடந்த கற்களின் கடுமையையும், முட்களின் கொடுமையையும் தாங்கிக்கொண்டு மகனை பத்திரமாக அழைத்துச் சென்றார். 

தன் சுகத்தை, மகிழ்ச்சியை, சந்தோசத்தை ஏன் தன்னையே மறந்து, தன் பிள்ளை கஷ்டப்படாமல் கரை சேர கொடுமைகளை தாங்கினார் தந்தை. அதுபோலதான் தன் அவஸ்தை, பெருமையை, தெய்வம் என்ற நிலையை வலிந்து பிடித்துக் கொள்ளாமல் (பிலிப் 2, 6-11) ஒரு அடிமை போல, நாமெல்லாம் கஷ்டப்படாமல் விண்ணகம் சேர துன்ப, துயர, கரடுமுரடான வழி நடந்து நம்மை மீட்டவர்தான் இயேசு. அவரின் பாடுகளின் துவக்கம் தான் இந்த குருத்து ஞாயிறு. நமக்காக பாடுகள், வேதனைகள், துன்பங்கள் பட, ஏன் சாவதற்கு இயேசு தயாராகிறார் என்பதை நினைவுபடுத்துகிறது இந்த நாள். 

நமக்காக கொல்லப்பட கழுதை மீது ஏறிச்செல்கிறார். திருவிழாவிற்கு சமையலுக்காய் கொல்லப்படப்போகும் ஆடு எவ்வாறு மாலை மரியாதையுடன் மந்திரிக்கப்பட்டு அழைத்து செல்லப்படுகிறதோ, அப்படி மேள தாளத்துடன், ஓசான்னா பாடி அழைத்துச் செல்லப்படுகிறார் இயேசு. என்னே இயேசுவின் துணிச்சல் !

அவரின் பாடுகள் நம்மீது அவர்கொண்ட பாசத்தின் வெளிப்பாடு. அவரின் பாடுகள் அவர்மீது திணிக்கபட்டது அல்ல. அவராக விரும்பி ஏற்றுக்கொண்டது. நல்ல ஆயன் நானே, நல்ல ஆயர் ஆடுகளுக்காகத் தம் உயிரைக் கொடுப்பார் (யோ 10,11) என்று சொல்லி மனமுவந்து பாடுகளை, சாவைச் சந்தித்தவர் இயேசு. 

தான் கொண்ட இலட்சியத்திற்காக, தான் வந்த நோக்கத்திற்காக, துன்பங்களைக் கண்டு பின்வாங்கவில்லை. ஓடி ஒளிந்து கொள்ளவில்லை எதிர்த்துப் பேசவில்லை, அழுது புலம்பித் தள்ளவில்லை அவர். ஆனால் அவைகளைச் சந்திக்க கழுதைமீது ஏறுகிறார்.

இன்றைய முதல் வாசகம் இதை தெளிவுபடுத்துகிறது. நான் கிளர்ந்தெழவில்லை, விலகிச் செல்லவுமில்லை அடிப்போருக்கு என் முதுகையும், தாடியைப் பிடுங்குவோர்க்கு என் தாடையையும் ஒப்புவித்தேன். நிந்தனை செய்வோர்க்கும், காறி உமிழ்வோர்க்கும் என் முகத்தை மறைத்துக்கொள்ளவில்லை (எசா 50, 6). என்னே இயேசுவின் துணிச்சல். எருசலேமில் பாடுகள் உண்டு என்பது அவருக்குத் தெரியும். கொன்று விடுவார்கள் என்பது அவருக்குத் தெரியும். இன்று குருத்தோலை ஏந்தி ஓசான்னா பாடுபவர்கள் ஓரிரு நாட்களில் இவனை சிலுவையில் அறையும் என்று கத்துவார்கள் என்பதும் அவருக்குத் தெரியும். இருந்தும் துணிந்து செல்கிறார். ஏன்? இலட்சியத்தை நிறைவேற்ற, நாம் மீட்படைந்து விண்ணகம் சேர. யாராவது பாடுகள் படுவதற்கு, துன்பப்படுவதற்கு, கொல்லப்படுவதற்கு ஆரவாரத்தோடு, மகிழ்ச்சியோடு பவனி செல்வார்களா? ஆனால் இயேசு சென்றாரே, அந்த துணிச்சல் நம்மிடம் இருக்கிறதா? துன்ப துயரங்கள், பிரச்சனைகள் கண்டால் ஓடி ஒளிந்து கொள்கிறோமே சீடர்களைப் போல (மாற் 14, 50-52). துன்பங்களைத் தாங்குபவன், சந்திப்பவன், எதிர்கொள்பவன் தான் என் சீடன் என்பதை இயேசு பலமறை உரைத்திருக்கிறாரே (மத் 16,24), யோ 12, 24, 15,13, 16,33). 

துன்பங்களைத் தாங்க தூயவர் இயேசு துணிச்சலுடன் பயணிக்கிறார். இதுவே குருத்து ஞாயிறு துணிந்து நடக்க நாம் தயாரா? இதுவே குருத்து ஞாயிறு நம்மிடம் தொடுக்கும் கேள்வி?


இறையியல் மாணவர்கள்
கோவை நல்லாயன் குருத்துவக் கல்லூரி

இறை அழைத்தல்

(Tamil Pandit Vijayavalli was requested to write about Vocation, Formation and Priesthood.  Here is her contribution.)

1. இறை அழைத்தல் 
அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. 
ஆம்! இறைவன், மனிதனை தம் உருவிலும்,  சாயலிலும் உண்டாக்கி தன் உயிர் மூச்சை ஊதி, உயிருள்ளவனாக்கி, அவன் விலா எலும்பிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கி அவளை அவனுக்குத் துணையாக்கி, தான் படைத்த அனைத்து படைப்புகளையும் ஆண்டுகொள்ள அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக, மனுவைப் படைத்தான் தன்னை வணங்க. 

ஓரறிவு முதலாக ஆறறிவு வரையிலான அனைத்து உயிரினங்களைப் படைத்த இறைவனின் கட்டளையை ஆதிமனிதன் மீறியதால் சாவன பாவத்திற்கு ஆட்பட்ட மனித குலம், தொடர்ந்து வாழ்கிறது, வளர்கிறது, வாழ்ந்து கொண்டிருக்கிறது.  அவனது பாவச் செயல்களும் தொடர்கதையாய் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாவக்குழியிலே அமிழ்ந்து கொண்டிருந்த மனித குலத்தை மீட்க இறைவனால் அழைக்கப்பட்டவர்கள் தான் இறைவாக்கினர். 
ஆபிரகாம் முதல் அன்னை தெரசா வரை அனைவருமே இறை அழைத்தலுக்கு தன்னை அர்ப்பணித்தவர்கள் தான். 
தாய் வயிற்றில் உன்னை நான் உருவாக்கு முன்பே உன்னை திருநிலைப்படுத்துனேன். [எரேமியா 1;5].
தாயின் வயிற்றிலே உருவாக்கமுன்பே, ஏழையோ, செல்வந்தனோ, கூனோ,     குருடோ, இல்லறத்தரோ, துறவறத்தாரோ, ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டத்தை வகுத்து வழிநடத்துபவர் இறைவன்.

எகிப்தில் இஸ்ராயேல் மக்களை விடுவித்து வழிநடத்த மோசேயசை தேர்ந்தெடுத்தார் தன்னிடம் உள்ள குறைகளை எடுத்துக்கூறி மோசே தட்டிக் கழித்த போதும் இறைவன் அவரை வழிநடத்தி இஸ்ரேயல் மக்களின் விடுதலைக்கு உதவினார். சாமுவேல், சவுல், தாவீது, சாலமோன் போன்ற அரசர்களையும் எசாயா, எரேமியா, எசேக்கியல், தானியேல், ஆமோஸ் போன்ற இறைவாக்கினர்களையும் தேர்ந்தெடுத்து அவர்கள் வழியாக தம் எண்ணங்களை மக்களுக்கு எடுத்துரத்தார்.  தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் நேரிய வழியில் செல்லும் போது அவர்களை அரவணைக்கவும் தவறவில்லை, தடம் மாறி நடந்த போது தண்டிக்கவும் தயங்கவில்லை. இறைவன் தமக்கு கொடுக்கப்பட்ட பணியை தவிர்த்து, யோனா தப்பியோட முயன்றபோது,  ஏற்பட்ட விளைவுகளையும்,  யோனா இறை சித்தத்திற்கு கீழ்ப்படிந்து, அவர் தமக்கு இட்ட கட்டளைகளை நிறைவேற்றியபோது இறை ஆசிர் பெற்றதையும் நாம் அறிவோம். 

ஆதலால் இறைவன் தன் திட்டபடியே, ஒவ்வொரு செயலையும் ஆற்றுகிறார் மனிதனை வழிநடத்துகிறார் எனபதை பழைய, புதிய ஏற்பாட்டின் வழியே நாம் அறிகிறோம். குருத்துவப் பணிக்கு தம்மை அர்ப்பணித்தோரின் வாழ்வும் அப்படிப்பட்டதே! இப்பணிக்கு உயர்ந்தவன், தாழ்ந்தவன், ஏழை, பணக்காரன்,  படித்தவன், படிக்காதவன் என்ற பாகுபாடு இல்லை இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி நடப்பவனே போதும். அன்று இயேசு இறைப்பணிக்கு யாரை அழைத்தார்? மீன்பிடிப்போர், வரிவசூலிப்பவர் போன்ற பாமர மக்களை அல்லவா தேர்ந்தெடுத்தார்.  கிறிஸ்துவ இனத்தயே அடியோடு அழிப்பேன் என்று சபதம் செய்து வெறித்தனமாக செயலாற்றய சவுலை பவுலாக்கி,உலகமெங்கும் திருச்சபை பரவ வித்திட வைத்தவர்.  இயேசுவின் தாயாக மரியாளை இறைவன் தேர்ந்தேடுத்தபோது,
நான் ஆண்டவரின் அடிமை உம் சொற்படியே நிகட்டும்.  [லூக் 1;38]
என்று இறைஅழைத்தலுக்கு தலை குனிந்தார் அன்னை மரியாள். தூய ஆவியின் உந்துதலால் இறைஅழைத்தலுக்கான மாற்றங்கள் நம் உள்ளத்தில் எழும்போது,
ஆண்டவரே பேசும்! அடியேன் நான் கேட்கின்றேன்.
என சாமூவேல் போல் பதிலளிக்க வேண்டும். புனித வாழ்வை யாரும் வாழ்ந்து அனுபவித்து மகிழலாம். ஒரு சிலருக்காக மட்டுமே அதை இறைவன் படைக்கவில்லை. இல்லறத்தார், துறவறத்தார் யாராக இருந்தாலும் தத்தம் வாழ்வின் நிலைக்கேற்ப புனிதராக முடியும் என்று சலேசியார் கூறுவது போல் எந்தச் சூழ்நிலையும் நம்மை தாக்காது புனித வாழ்வு வாழ முயற்சிக்க வேண்டும். 

பெற்றோர், உற்றார், உறவினரின், தூண்டுதலால் நாம் குருத்துவ வாழ்வை மேற்கொள்ள இயலாது.  அன்று இயேசு தம் சீடர்களிடம் 
வந்து பாருங்கள் (யோ 1;38-39)
என்றார். பிலிப்பைக்கண்டு, 'என்னை பின்தொடர்ந்து வா' என்றார்.  (யோ 1;43) ஒரு பண்டத்தை பார்ப்பதால் மட்டுமல்ல சுவைத்துப் பார்ப்பதால் தான் சுவையின் தன்மை தெரியும். அது போல்இயேசுவை பின் செல்ல அவரோடு தம்மை ஐக்கியப்படுத்திக்கொள்ள வேண்டும். 
எண்ணித்துணிக கருமம் துணிந்த பின்
எண்ணுவம் என்பது இழுக்கு.
இறை அழைத்தலுக்கு தலைவணங்கி அவ்வாழ்வை ஏற்க துணிந்தவுடன் சில ஆண்டுகள் கழித்து ஏன் வந்தோம் என்று எண்ணுவது இழுக்கான செயல்.  கலப்பையில் கை வைத்த பின் திரும்பிப்பார்க்கலாமா?

சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் தடுமாற வைக்கும் பொழுது பரிசுத்த ஆவியாரின் துணையுடன் தெளிவுபெற்று இயேசுவைப் பின் செல்ல வேண்டும். திட மனதினைப் பெற இயேசுவிடம் மன்றாட வேண்டும் இறைவனின் அருளும் ஆசியும் இருந்தாலொழிய, குருத்துவ வாழ்விலே நம்மால் நிலைத்து நிற்க முடியாது. நிலையில்லா உலகம், நிலையில்லா செல்லவம், நிலையில்லா உறவு என அறிந்தும் அவற்றை உதறிவிட்டுச் செல்வது அவ்வளவு எளிதான செயல் அல்ல.  
அறுவடையோ மிகுதி ஆட்களோ குறைவு 
ஆம் நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கும் இவ்வுலகத்தை நித்திய வாழ்வுக்கு வழிகாட்ட, இயேசுவின் அன்பை சுவைக்க வைக்க, நமக்காக சிலுவையிலே மரித்த இயேசுவின் போதனையை மக்களுக்கு எடுத்துக்கூற குருத்துவப்பணி மிக முக்கியம்.

இவ்வுலகில் எவ்வளவோ பணிகள் உள்ளன அறிவூட்டும் ஆசிரியப் பணி, நோய்த் தீர்க்கும் மருத்துவப்பணி, நாட்டைக் காக்கும் இராணுவப் பணி என்று ஆயிரக்கணக்கான பணிகள் உள்ளன.  இவையனைத்தும் இவ்வுலகில் வாழும் வரைதான் பயன்படும். மறுவுலக வாழ்விற்கு வழிகாட்டும் ஒரே பணி குருத்துவப்பணி தான் என்பதை உணர்ந்தால் நாம் தடுமாற மாட்டோம். விருப்பு, வெறுப்பு இல்லா இறைவனின் திருவடியை அடைந்தவர்க்கு, எக்காலத்துக்கும் துன்பம் இல்லை.
 நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன  
என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது. கிறிஸ்துவைப் பற்றிய செய்தி அறிவிக்கப்பட்டால் தான் கிறிஸ்துவை அறிய முடியும். அவரை அறிந்தால் தான் நித்திய வாழ்வை அடைய முடியும். அந்த ஒப்பற்ற செயலை ஆற்றுவதற்கு ஏற்ற பணி குருத்துவப்பணி. ஆதலால் இறை அழைத்தலுக்கு நாம் நம்மையே கையளிக்க வேண்டும். அதுகல்லும், முள்ளும் நிறைந்த பாதைதான். அரவணைத்து அழைத்துச் செல்ல நல்லாயனாம் இயேசு இருக்க அச்சம் ஏன்?
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணிர் ஆகப் பெறின்
2. குருத்துவப் பயிற்சி 

சித்திரமும் கைப்பழக்கம்,செந்தமிழும் நாப்பழக்கம் என்பது பழமொழி பிறவியிலேயே யாரும் ஓவியராகவோ,சிற்பியாகவோ பிறப்பதில்லை. மனதில் பிறக்கும் ஆசை வரையத்தூண்டும், ஒரு செயலில் முழு கவனத்தை செலுத்தி பயிற்சி எடுத்தால், வெள்ளைத் தாள்களெல்லாம் உயிருள்ள ஒவியங்களாகும்.  கரடு முரடான கற்களெல்லாம்,  கை குவித்து வணங்கும் 

தெய்வங்களாகும். மழலை பேசும் குழைந்தைகளுக்கு ஆசிரியர் கொடுக்கும் பயிற்சி தான் பிழையில்லா தேன்தமிழாய் நம் காதுகளில் ஒலிக்கும்.  பயிற்சி என்பது நாம் மேற்கொள்ளப் போகும் பணிக்கு அடித்தளம் போன்றது. அந்த அடித்தளமானது முறையாக, ஒழுங்காக போடப்பட்டால்தான், அதன் மேல் எழுப்படும் கட்டிடம் நீண்டக்காலம் உறுதியோடு இருக்கும். இன்றேல் சாதாரண மழைக்கும், இடிக்கும் தாங்காது சரிந்து விழுந்து மண்ணோடு மண்ணாகிப் போகும். உலகத்தில் ஒவ்வொரு பணிக்கும் ஒரு சில ஆண்டுகளே பயிற்சி அளிக்கப்படும். அந்த பயிற்சியைப பெற்றப் பின் தனது அனுபவத்தால், திறமையால், ஆர்வத்தால் முயற்சி செய்து அந்தப் பணியில் சிறப்புற்று விளங்குகின்றனர். 

ஆனால் குருத்துவப் பயிற்சி? மேல்நிலைக் கல்வியை முடித்துவரும் ஒரு மாணவன்,  தன் விருப்பத்திற்கோ, அல்லது மற்றவரது விருப்பத்திற்காகவோ இணங்கி, உள்ளே நுழைகிறான். இருதலைக் கொள்ளி எறும்பு போன்ற சூழ்நிலை. இவர்களுக்கு ஏன் பல ஆண்டுகள் பயிற்சி அளிக்கின்றனர்? மருத்துவப் பயிற்சி பெற்றோர் மருத்துவராக மட்டுமே பணியாற்றுவர்,  ஆசிரியப் பயிற்சி பெற்றோர் ஆசிரியராக மட்டுமே பணியாற்றுவர்.  இவ்வாறு எந்தெந்த துறையில் யார் யார் பயிற்சி பெற்றாரோ அந்தந்த துறையில் மட்டுமே பணியாற்றுவர். 

ஆனால் எல்லோருடனும் கலந்து,  அவர்களது இன்ப துன்பங்களில் பங்கேற்று,  அவர்களது குறைகளை களைய ஆலோசனைகள் வழங்கி தாயாய்,  தந்தையாய், ஆசிரியராய் அவர்களை வழிநடத்தும் பெரும் பொறுப்பு குருக்களுக்கு மட்டுமே உரியது.  மற்றவர்களை வழிநடத்த இருக்கும் ஒருவர்,  அதற்கான தகுதியை தான் பெற்றிருக்க வேண்டும். அந்த தகுதி ஓரிரு ஆண்டுகளில் வந்துவிடாது. பலவகைகளில் தம்மை சோதித்து புடமிட்ட பொன்னாக வெளிவர பயிற்சி மிக மிக அவசியம். இயேசு மீன் பிடித்துக் கொண்டிருந்த பேதுருவையும் அந்திரேயாவையும் பார்த்து,
என்பின்னே வாருங்கள் நான் உங்களை மனிதரைப் பிடிப்பவர் ஆக்குவேன் என்றார்.  (மத் 4;19 )
இயேசு தம்மை வெளிப்படுத்தி, புதுமைகள் புரிந்து, நற்செய்தியை அறிவித்த மூன்று ஆண்டுகளும் தமது 12 சீடர்களை தன்னருகே வைத்திருந்தார். தான் செல்லும் இடங்களுக்கெல்லாம் அழைத்துச் சென்றார்.  ஏன்? 

தன்னோடிருந்து தனது செயல்களைப பார்க்கும் அவர்கள், தனக்குப் பின்னால் தனது மேய்ப்புப்பணியை திறம்பட ஆற்றும் வல்லமை பெற வேண்டும் என்பதற்காகவே.  அவர் செய்த அனைத்துப் புதுமைகளையும் கண்டு வியந்த அவர்கள்,  சிலுவை மரணத்தை இயேசு அடைந்த போது உயிருக்கு அஞ்சி சிதறுண்டுப் போனார்கள். 

இயேசுவின் துணையாளரான பரிசுத்த ஆவி அவர்களை ஆட்கொண்டபோது, அவர்கள் துணிவு பெற்றார்கள்,  சாவுக்கு பயந்து, ஓடி ஒழியாமல் உலகின் கடைசி எல்லைவரை நற்செய்தியைப் பரப்பினார்கள்.  அவர்கள் வழியாய் பல இலட்சம் பேர் கிறிஸ்துவை அறிந்தார்கள்; பாடுகள் பட்டனர்; வேதசாட்சிகளாய் மறித்தனர். அதற்கு அவர்களது உடலும், உள்ளமும் எவ்வளவு பக்குவப்பட்டிருக்க வேண்டும். உடலும், உள்ளமும், பக்குவப்பட பயிற்சி மிகமிக அவசியம்.

உலக வாழ்விலிருந்து பெரிதும் மாறுப்பட்டது குருக்கள் வாழ்க்கை பொருளை சம்பாதிப்பதை அடிப்படையாகக் கொண்டது மற்றப்பணிகள். ஆனால் பொருளை சம்பாதிக்க அல்ல, அருளை மட்டுமே சம்பாதிக்க, தன்னயே அர்ப்பணிக்கும் தியாக வாழ்வு தான் குருத்துவ வாழ்வு. இவ்வாழ்வு முழுமை பெற, படிப்படியாக,  உடலும், உள்ளமும் பக்குவப்பட பயிற்சி மிகமிக அவசியம். அதைவிட, அவர்களுக்குக் கற்பிப்பவர்களும், வழிநடத்துபவர்களும் இயேசுவாக இல்லாவிட்டாலும் இயேசுவைப் போலாவது இருக்க வேண்டும் இது மிகமிக முக்கியம்
என் இதயத்திற்கேற்ற மேய்ப்பர்களை உங்களுக்குக் கொடுப்பேன், அவர்கள் உங்களை அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துவார்கள். ( எரே 3-15)
குருமாணவர்களை,  அறிவுடனும் முன்மதியுடனும் வழிநடத்துபவர் அவசியம்.  ஏனெனில் குரு கிறிஸ்துவின் பிரதிநிதி. 
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
என்று வள்ளுவன் கூறியதுபோல் மனதை கட்டுப்படுத்த செபம், தியானம், பொறுமை,  தாழ்ச்சி,  சாந்தம்,  கீழ்ப்படிதல், கற்பு,  ஏழ்மை, எளிமை,  பிறரன்பு அனைத்தும் அவசியம்,  இவை அனைத்தும் முழுநாளிலோ, ஒரு மாதத்திலோ,  ஒரு ஆண்டிலோ வந்துவிடாது.  இறைவனின் ஆசியாலும், தூய ஆவியின் துணையினாலும், துளித்துளியாய் பக்குவப்பட்டு, எந்தச் சூழ்நிலையாலும், சூறாவளியாலும் பாதிக்கப்படாத மலைப்போல் நிமிர்ந்து நிற்க முடியும். அதற்கு பயிற்சியும், முயற்சியும் மிகமிக அவசியம். 

ஆமைபோல் ஐம்புலன்களை அடக்கி வாழ பயிற்சி அவசியம்.  மனம் ஒரு குரங்கு.  அதை அடக்கி ஆளாவிட்டால் தாவித்தாவி தனிச்சையாய் திரிந்து பாவம் என்ற சாக்கடையில் விழுந்துவிடும். பந்த,பாசங்களுக்கு அப்பாற்பட்டதான இவ்வாழ்க்கைக்கு தன்னை ஒப்பக்கொடுக்கும் ஒருவர், தனது சிந்தனை, சொல், செயல் அனைத்தையும் இயேசு ஒருவருக்கே சொந்தமாக்க வேண்டும்.
படைவீரர் எவரும் பிழைப்புக்காக பிற அலுவல்களில் ஈடுபடமாட்டார். தம்மைப்படையில் சேர்த்துக் கொண்டவருக்கு அவர் உகந்தவராய் இருக்க வேண்டும்.  விளையாட்டு வீரர் எவரும் விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடினால் மட்டுமே வெற்றிவாகை சூடமுடியும்
என்று புனித பவுல் திமொத்தியுவுக்கு எழுதிய இரண்டாம் திருமுகத்தில் கூறியுள்ளது போல் (2திமொ 2;4-6) இயேசுவின் மேய்ப்புப்பணியில் பங்கேற்கும் குருக்கள், இயேசுவுக்கு உகந்தவர்களாக, அவர் வகுத்த விதிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும். அப்பொழுதுதான் அப்பணி நிறைகுடமாகத் திகழும். நம்மையும் ஏமாற்றிக்கொண்டு மற்றவர்களையும் ஏமாற்றி வாழ வேண்டிய நிலை ஏற்படாது. 

நானும் மனிதன் தானே? எனக்குள் பந்த பாசம் இருக்க்க்கூடாதா என கேட்பவர்கள் நிச்சயம் இந்த குருத்துவ வாழ்விற்கு வரவே கூடாது. குருக்களின் பார்வை இயேசுவை நோக்கியே இருக்க வேண்டும். அவர்களது சொந்தமும்,  பந்தமும் இயேசு ஒருவரே.  அவர்களது உலக வாழ்வு தாமரை இலை தண்ணீர் போல் இருக்க வேண்டும். இயேசுவின் மேய்ப்புப்பணிக்கு தம்மை அர்ப்பணித்தவர்கள் பின்னால் திரும்பிப் பார்க்ககூடாது. ஆதலால் குருத்துவப் பயிற்சி என்பது நெருப்பின் மேல் நடப்பதுபோல்.  இயேசுவுக்கு சாட்சியாய் வாழ, தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட ஆடுகளை நன்முறையில் மேய்த்து உரியவரிடம் ஒப்படைக்க, புனிதனாக வாழ குருத்துவப் பயிற்சி மிகவும் தேவை முழுமையான பயிற்சியைப் பெற்றவர்கள் தான் வெற்றிக் கனிகளை பெற முடியும்.


குறிக்கோள்

இறை அழைத்தலுக்குச் செவிமடுத்து, குருத்துவ பயிற்சியில் ஈடுபட இருப்போர், வாழ்நாளெல்லாம் இப்பணியை ஆற்ற இருக்கம் இவர்கள், சிறந்த இலட்சியத்தோடு, நல்ல குறிக்கோளுடன் பயிற்சியைத் தொடங்க வேண்டும்.
“வெள்ளத்தளைய மலர்நீட்டம் மாந்தர் தம் உள்ளத்தனையது உயர்வு” நீர்ப்பூக்களின்தாளின் (தண்டுகள்) நீளம் நீர்மட்டத்திற்கு ஏற்ப அமையும் அதுபோல மக்களின் உள்ளத்தின் எண்ணத்திற்கு உயர்ச்சி இருக்கும். உயர்ந்த குறிக்கோளுடன் செயல் பட்டால் மேற்கொண்ட பணிசிறப்படையும்.

குறிக்கோள் என்பது ஒரு மரத்தின் ஆணிவேர் போன்றது, பூமியில் ஆணிவேர் எவ்வளவு ஆழம் செல்கின்றதோ, பூமியில் ஆணிவேர் எவ்வளவு ஆழம் செல்கின்றதோ. அவ்வளவிற்கு பூமியில் மேல் உள்ள மரம் உறுதியாய் செழித்து, தழைத்து, வளர்ந்து பலன் கொடுக்கும். எந்த புயலும் அதை தாக்காது. அதைப்போலவே சிறந்த குறிக்கோளுடன் குரத்துவப்பணியை மேற்கொள்ளும் போது, அப்பணி உள்றாய், தூறாய் பெருகி பலன் கொடுக்கும்.

சிறுவன் இயேசு 12 வயதில் எருசnலுமில் காணாமல் போய். பெற்றோரால் கண்டுபிடிக்கப்பட்டபோது, மரியாள் அவரை நோக்கி. ‘மகனே ஏன் இப்படிச் செய்தாய்’ என்று (லூக் 248.49) கேட்க அவர் “ஏன் என்னைத் தேடினீர்கள்? நான் என் தந்தையின் அலுவல்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பது உங்களுக்குத் தெரியாதா?” என்ற அருத்தமாகச் கூறினார். பன்னிரண்டு வயதே நிரம்பிய சிறுவன் இவ்வாறு கூறக்காரணம்: இறைவனின் திட்டத்தை நிறைவேற்ற இப்பூமிக்கு வந்த அவர், அதை நிறைவேற்ற அப்பொழுதே முடிவெடுத்த செயல்படத் தொடங்கி விட்டார். எதற்காக், இறைவனால் அனுப்பட்டடாரோ, அவர் எள்ளளவு கூட தவறவில்லை. சிலுவை மரணத்தை ஏற்கும் வரையிலும் இறைவனின் சித்தப்படியே நடந்தார்.

ஆண்டவர் மோசேயிடம் ‘நீ இஸ்ரயேல் மக்களிடம் கூறவேண்டியது. தூயோராய் இருங்கள். ஏனெனில் உங்கள் கடவுளும் ஆண்டவருமாகிய நான் தூயவர் என்றார். ஆம், ஆண்டவர் முதலில் நம்மிடம் எதிர்பபார்ப்பது தூய்மை. உடல்தூய்மை நீரால் அமையும். ஆனால் உள்ளத்தூய்மை வாய்மையால் காணப்படும். உள்ளத்தூய்மையையே ஆண்டவர் விரும்புகிறார். நம் உடலில் உள்ள மெய், வாய், கண், மூக்கு, செலி ஆகிய ஐந்து புலன்களுமே, நம்மை பாவத்திற்க அழைத்துச் செல்லும் கருவிகளாகும். இவற்றை அடக்கி வாழ நாம் பயிற்சி எடுக்க வேண்டும். இயேசு இவ்வுலகில் வாழ்ந்தது 33 ஆண்டுகள் தான். வாழ்ந்த காலத்தில் எப்படி வாழ்ந்தார்? உண்பதும், உறங்குவதுமாக அவர் காலத்தைக் கழிக்கவில்லை.

மக்களுக்க நற்செய்தியைப் போதித்தார். நோயாளர்களைக் குண்படுத்தினார். மற்ற நேரங்களில் எல்லாம் ஜெபம் செய்தார். குருத்துவ பணியை ஏற்க இருப்போர் இதையே முக்கியக் குறிக்கோளாகக் கொள்ள வேண்டும். தனியாகச் சென்று இறைவனிடம் பேசவேண்டும்.இறைவார்த்தைகளை ஊன்றிப்படித்து, இறைவன் நமக்கு கடும் கட்டளைகளை கேட்டு அதன்படி நடக்க முன்வரவேண்டும்

குறிக்கோள் அச்சாணி போன்றது. அந்த ஆணி சக்கரத்தோடு பொருத்தி அழுத்தமாக இருந்தால்தான் வண்டி ஓடும். அதைப்போலவே நல்ல பல குறிக்கோள்களை மனதில் பதியவைத்து செயல்படும் போது நம்பணி நிறைவாய், செல்ல வேண்டிய திசைநோக்கி செல்லும். இன்றேல் அச்சாணி இல்லாத வண்டிபோல் கவிழ்ந்துவிடும். நாம் இயேசுகிறிஸ்துவோடு ஒன்றித்திருப்பவர். இயேசுவின் திருவுளத்தை நிறைவேற்பவர் என்ற எண்ணம் குரக்கள் உள்ளத்தில் இருந்த கொண்டேயிருக்க வேண்டும். அப்போழுதான் பாவநாட்டங்கள் அவர்கள் உள்ளத்தில் எழாது. உலகம் பிறந்தது நமக்காக என்று உலக இச்சைகளில் மனம் செல்லாது.

உங்களை அழைத்தவர் தூய்மையுள்ளவராய் இருப்பதுபோல் நீங்களும் உங்கள் நடத்தையிலெல்லாம் தூய்மையுள்ளவராய் இருங்கள். ஏனெனில் நான் தூயவன் என மறைநூலில் எழுதப்பட்டிருக்கிறது.

தூயவராக வாழ்வது எப்படி, மனதில் குற்றமில்லாமல் வாழ்வது, மனக்குற்றங்கள் என வள்ளுவன் குறிப்பிடுவன அழுக்காறு அவா, வெகுளி, இன்னாச் சொல் நான்கும் ஆகும். இந்த பொறாமை, ஆசை, கோபம் கடுஞ்சொல் இவைகள்தான். எல்லாப்பாவங்களுக்கும் விளைநிலம். உலகவாழ்வில் ஈடுபட்டிருப்போருக்கு சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவைகள் ஏற்படலாம். ஆனால் உலகவாழ்வைத் துறந்து இறைப்பணிக்கு தம்மை அர்பணிக்கும் குருக்களுக்கு இந்த நான்கு குற்றங்களும் நெருங்கவே கூடாது. குருக்களுக்கு தந்தை, தாய், மனைவி, மக்கள், என்று யாரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. அவர்களுக்காக உழைக்கவேண்டும் என்ற திட்டமும் இல்லை. அவர்களும் இவர்களுக்காக வாழவேண்டிய அவசியம் இல்லை. இவர்களும் அவர்களுக்காக வாழவேண்டிய உலகில் உள்ள அனைவருமே இவர்களின் குடும்பத்தினர்தான் அவசியம் இல்லை. ஆகவே இந்த மனக்குற்றங்கள் இன்றி வாழ முறய்சி செய்தால் கூடாதா? கூடும், தன்னம்பிக்கையோடு, தூய ஆவியின் அருளோடு, ஓரடி எடுத்து வைத்து, இயேசுவின் கரங்களைப் பற்றிக் கொண்டால், பெற்ற தகப்பன் தன் குழந்தையை கைநழுவாது பத்திரமாக அழைத்துச் செல்வதுபோல் இறைமகன் இயேசுவும், இறுதிவரை அழைத்துச்செல்வார் என்ற நம்பிக்கை ஒவ்வொரு குருமாணவனுக்கும் இருக்க வேண்டும். இறைவன் ஆளைப்பார்த்து அல்ல அவரவர் செயல்களின்படியே தீர்ப்பு வழங்குபவர்.

புனித பவுலடியார் கொரிந்தியருக்கு எழுதும்போது பந்தயத்தில் ஓடுபவர் பலராயினும் பரிசுபெறுபவர் ஒருவரே தன்னடக்க பயிற்சி அழிவற்ற வெற்றிவாகை சூடும் நான் குறிக்கோள் இன்றி ஓடுபவரைப்போல ஓடமாட்டேன். பிறருக்கு நற்செய்தி என்உடலை அடக்கி கட்டுப்படுத்துகிறேன் என்கிறார். தன்னடக்கத்தை வாழ்வின் குறிக்கோளாகப் பேசுகிறார். ஒவ்வொருவருக்கும் ஆண்டவர் பகிர்ந்தளித்த கொடையின்படியும், அவர்விடுத்த அழைப்பின்படியும் வாழ முயற்சிக்க வேண்டும். உலகில் பல்லாயிரக்கணக்கானவர்கள் இருப்பினும் ஒருசிலருக்கு மட்டுமே இறைஅழைத்தல் விடுக்கப்பட்டுள்ளது. காரணம் கடவுளின் அருள் அவர்களுக்கு மிகுதியாக கிடைத்துள்ளது.

ஆதலால் சிறந்த குறிக்கோளோடு இப்பணியில் ஈடுபட்டால், அது ஆழமாய்த்தோண்டி  பாறைமீது அடித்தளம் அமைத்து, வீடுகட்டிய ஒருவருக்கு ஒப்பாகும். வெள்ளம் பெருக்கெடுத்து அந்த வீட்டின் மேல் மோதினாலும் வீடு அசையாது. ஆனால் குறிக்கோளின்று உள்ளொன்றும், புறமொன்றுமாக வாழ்ந்தால் அது மணல்மீது கட்டிய வீட்டிற்குச்சமமாகும். நீர் பெருக்கெடுத்து வீட்டின் மேல் மோதிய உடனே, மணல் கரைந்து வீடு விழுந்து அழிந்துவிடும். குருத்துவவாழ்வும் அதைப்போன்றதுதான்.

கடவுள் நமக்கு முன்னே நன்மையும், தீமையும் வைத்துள்ளார் எதுதேவையோ, அவற்றை எடுத்துக்கொள்ளும் சுதந்தரத்தையும் கொடுத்துள்ளார். ஞானம் நிறைந்த ஒருவன். இனிக்கும் கனிகளை விட்டு விட்டு, கசப்பான எட்டிக்காயை எடுத்து உன்ன மாட்டான். ஆதலால் எந்த சூழ்நிலையிலும் இறைவனின் கட்டளையிலிருந்து வழுவாது, இறைவன் எதற்காக என்னைத் தேர்ந்தெடுத்தாரோ, அந்த குருத்துவப்பணியை என் உயிர் உள்ளவரை பிரமாணிக்கமாய் கடைப்பிடிப்பேன் என்ற வைரநெஞ்சத்தோடு ஈடுபட்டு, குருத்துவப்பணியை புனிதத்தோடு ஆற்ற தூய ஆவியாரின் துணையை நாடி செயல்பட வேண்டும்.

அன்பு உறவில்

இறைஅழைத்தலை ஏற்று, பல்வேறு குறிக்கோளுடன் குருத்துவபயிற்சியை மேற்கொள்ளும் மாணவர், தன்னுள் வளர்த்துக் கொள்ளும் நற்பண்புகளில் தலைசிறந்து அன்பு. தன்னைப் படைத்த கடவுளிடமும், தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட மக்களிடமும் கொள்ளும் அன்பு.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு” தம் உயிரையை பிறருக்குக் கொடுக்கும் உத்தமர்கள்தான் உண்மையான அன்புடையோர் ஆவர். இறைவன், பாவசேற்றிலே மூழ்கிக் கெலாண்டிருந்த மக்களை மீட்க தன் ஒரேமகனான் இயேசுவை உலகிற்கு அனுப்பியது, இறைவன் தான் படைத்த மக்கள் மீது கொண்ட அன்புதான் அந்த மக்களை மீட்க தன் உயிரையே சிலுவையில் கொடுத்தாரே இறைமகன் இயேசு, அந்த அன்பு கல்வாரி அன்பு நமக்குக் கற்பிக்கும் பாடம்.



-விசயவல்லி
ஓய்வுபெற்ற தமிழ் ஆசிரியை
திரு இருதய மருத்துவமனை
கும்பகோணம்