அன்பில் கனிந்த வந்த அமுதே Lyrics

அன்பில் கனிந்த வந்த அமுதே
சிந்தை மகிழ் உறவே தந்தை தரும் உணவே
உனக்காக நான் ஏங்கி தவித்தேன்
எனில் வாழும் உணவாக அழைத்தேன்

விருந்தாக வரும் தேவன்
உனை காண்கையில்
வரும் தாகம் பசியாவும் பறந்தோடுதே
மறந்தாலும் மறவாத உனது அன்பையே
இருந்தாலும் இறந்தாலும் மனம் தேடுதே
பசியாற பரிவோடு அழைக்கின்றேன் வா
இசையோடு தமிழ் சேரும் சுவை காணவே
உனைத்தேடி உனை நாடி நிறைவாகுவேன்
உன்னில் உருவாகுவேன்

என்னோடு நீ கொண்ட உறவானது
எந்தன் உயிர் போன பின்னாலும் விலகாதது
என் மீது நீ கொண்ட அன்பானது - அது
தினந்தோறும் பலியாக அரங்கேருது
இறைவா என் இறைவா என் அகம் வாருமே
இதயம் என் இதயம் உன் அருள் காணுமே
இறையாட்சி சமபந்தி உருவாகுமே
மண்ணில் உருவாகுமே

மாறாதது உன் பாசமே மறையாதது உன் நேசமே lyrics

மாறாதது உன் பாசமே மறையாதது உன் நேசமே
மாறாதது மாறாதது மாறாத உன் பாசமே
மறையாதது மறையாதது மறையாத உன் நேசமே
நிலையானது நிஜமானது நெஞ்சத்தில் நீங்காதது
என் நினைவெல்லாம் நிழலாடுது

1. என் அன்னையின் கருவில்
என்னை நீ என்னை நீ தெரிந்தெடுத்தாய்
உன் கண்ணின் கருவிழிப் போல்
கருத்தாய் கருத்தாய் காத்து வந்தாய்
எனை அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டாய்
உன் தோளில் சுமந்து நடந்து வந்தாய்
வாழ்வு முழுவதுமே இனிக்கச் செய்தாய்
வானின் மழையெனவே நின் அருளைப் பொழிந்தாய்
உன் பாசம் மாறாதது உன் நேசம் அழியாதது

2. என் உறவென்னை வெறுக்க
உறவாய் உறவாய் நீ வந்தாய்
நான் உன்னோடு இருப்பேன்
என்று நீ மட்டுமே உறுதி தந்தாய்
என் பயணம் முழுதும் தொடர்ந்து வந்தாய்
என் களைப்பு போக்க உன் மடியைத் தந்தாய்
துன்பமில்லா வாழ்வைத் தந்தாய்
இன்பம் காணும் உலகம் தந்தாய்

ஆண்டவரே என் ஆன்மாவின் ஆயனே Lyrics

என் இனிய இயேசுவே
நீர் என்னில் இருப்பதனால்
நான் அஞ்சாமல் நடந்திடுவேன்

ஆண்டவரே
என் ஆன்மாவின் ஆயனே 
என்னை காக்கும் இனிய
மேய்ப்பனே
உன் அன்பை பாடுகிறேன் -2
நிறைகள் நான் கண்டேன் 
குறைகள் இனி இல்லையே
வசந்தம் நான் கண்டேன்
வாழ்வில் பயம் இல்லையே

பசும்புல் மேய்ச்சலில் 
இளைபாற செய்தீர்
வாழ்வில் வசந்தம் 
மலர்ந்திட கண்டேன் 
அமைதியில் நீர் நிலை
புத்துயிர் அளித்திட 
என்னை அழைத்தீர் 
நீதியின் வழியினிலே 
சாவின் இருளினிலே 
பள்ளதாக்கின் நடுவினிலே 
நான் என்றும் அஞ்சாமல் 
நடந்திடுவேன்
நீர் என்னில் இருப்பதனால் 

எதிரிகள் காண
விருந்தொன்றை செய்தீர்
வளங்கள் வாழ்வில்
நிறைந்திட கண்டேன்
தலையில் நறுமண
தைலம் பூசினீர்
என் பாத்திரம் நிரம்பி
வழிய கண்டேன்
உந்தன் பேரன்பிலே
அருளும் நலம்பெறவே
நான் என்றும் அஞ்சாமல்
நடந்திடுவேன்
நீர் என்னில் இருப்பதனால்

அன்பு தீபம் இதயம் ஏந்திச் சங்கமமாவோம் lyrics

அன்பு தீபம் இதயம் ஏந்திச் சங்கமமாவோம்
அன்பர் இயேசு பலி இணைந்து சரித்திரமாவோம் -/1
அருள்நதிப் பாயும் இந்தத் திருப்பலிதனிலே
அரும்பெரும் பலியாய் நமது தியாகப் பணிகளை
அர்ச்சனைப் பூவாய் அர்ப்பணமாக்கி அர்த்தங்கள் காணுவோம் -/1 (அன்பு-1)

1.வார்த்தை வழியிலே வாழ சொல்லவதும்
வாழும் வாழ்விலே வரங்கள் பொழிவதும் -/1
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் -/2
நன்மைநெறியிலே நம்மை பகிரவும்
நாளும் நம்மக்குள்ளே நம்பிக்கை வளர்ப்பதும் -/1
இந்தபலி இறையின் பலி இணையில்லாத பலிதான் -/2
இறைவனே தம்மையே இறைவனே தம்மையே மனிதர்க்கு அளிக்கும்
இணையற்ற பலியின் புனித நிகழ்விலே -/1 (அன்பு-1)

2.நேர்மை உணர்விலே நெஞ்சம் துடிப்பதும்
நேயப் பணியிலே நம்மை இணைப்பதும் -/1
இந்த பலி இறையின் பலி இணையிலாதப் பலிதான் -/2
மன்னிக்கும் மனதிலே மகிழ்வைப் பொழிவதும்
மாந்தர் உறவிலே ஒன்றிக்கச் செய்வதும் -/1
இந்த பலி இறையின் பலி இணையிலாதப் பலிதான் -/2
அப்பமும் இரசமுமே அப்பமும் இரசமுமே இறை உயிராகும்
அற்புதங்கள் நிகழ்த்தி நமை மறை உடலாக்கும் -/1 (beginning)

இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள் lyrics

இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள்

இறையரசின் உணவிது பகிர்ந்து கொள்ளுங்கள் (2)
வருவோம் சமத்துவ உறவிலே
பெறுவோம் இறைவனின் அருளையே (2)

1. பாலை நிலத்திலே பசியைப் போக்கவே
மண்ணில் வந்தது மன்னா உணவு (2) இங்கு
வாடும் மக்களின் துயரைப் போக்கவே
தேடி வந்தது இந்த தெய்வீக உணவு - வருவோம்...

2. இறுதி இரவிலே இயேசு தந்த உணவு
விடுதலையைத் தந்திட பலியான உணவு (2) இன்று
வீதி எங்குமே வாழ்வு மலர்ந்திட
ஆற்றலாகிடும் இந்த உயிருள்ள உணவு - வருவோம்...

இறைவன் தரும் இந்த உணவு lyrics

இறைவன் தரும் இந்த உணவு ...

இதயம் நிறைந்திடும் உணர்வு ...
இறைவன் தரும் இந்த விருந்து ...
இதுவே அகமருந்து......(2)

என் வாழ்வும் ........ என் இயேசுதான் ....
என் வழியும் ..........என் இயேசுதான் ....
என் உயிரும் .......... என் இயேசுதான் என்றும் ......(2)

இறைவன் தரும் இந்த உணவு ...
இதயம் நிறைந்திடும் உணர்வு ...
இறைவன் தரும் இந்த விருந்து ...
இதுவே அகமருந்து....

தனிமையில் இருந்தால் கூட ...
உம்; உணவே உரமாகும்; ...
நான் துயரினில் விழுந்தால் கூட ...
உன் கரமே துணையாகும் ...(2)

இருளில் நானும் நடந்தாலும் ...
ஒளிப்பிழம்பாய் அருகே இருக்கின்றாய் ...(2)
சுமைகளுமே சுகமாகும் ...உந்தன்
வரவே வரமாகும் ...

எனைத் தேடி வந்தாயே .....
நலன்; யாவும் தந்தாயே .....
நல் வரமாய் வந்தாயே .....
புது வாழ்வைத் தந்தாயே .....(2)

இறைவன் தரும் இந்த உணவு ...
இதயம் நிறைந்திடும் உணர்வு ...
இறைவன் தரும் இந்த விருந்து ...
இதுவே அகமருந்து....

உன்னில் கலந்திடும்போது ...
நான் என் நிலை அறிந்து கொண்டேன் ....
உம்மை ஏற்றிடும் போது ....
நான் பிறரை அன்பு செய்தேன் ....

உலகே என்னை எதிர்த்தாலும் ...
நீ இருப்பதால் எனக்கு பயமில்லை ...
பேச்சினிலும் மூச்சினிலும்
உந்தன் சாட்சியாய் எழுந்திடுவேன் ...

என் தேடல் நீர்தானே ...
என் ஆவல் நீர்தானே ...
என் பாதை நீர்தானே ...
என் பயணம் நீர்தானே ...

இறைவன் தரும் இந்த உணவு ...
இதயம் நிறைந்திடும் உணர்வு ...
இறைவன் தரும் இந்த விருந்து ...
இதுவே அகமருந்து....

உறவென்னும் நதியிலே பயணங்கள் தொடர்ந்திட lyrics

உறவென்னும் நதியிலே பயணங்கள் தொடர்ந்திட 
அன்பென்ற மழையாக வந்தாயே
குன்றின்மேல் ஒளிர்ந்திடும் அணையாத சுடராய் 
வழிகாட்டி ஒளியேற்ற வந்தாயே
இதயத்தின் ஈரத்தில் காயங்கள் கரைந்திடும்
கண்ணீர் துளியிலும் காவியங்கள் அரங்கேறும்
வான்முகில் மழையாக வந்தாயே
வழிகாட்டி ஒளியேற்ற ஒன்றாயே


இறைவா உனை போற்றுவோம்
தினமும் உனை தேடுவோம்


உயிரோடு உறவாட உயிருக்குள் ஊற்றாகி
உன் வார்த்தை வழியானதே
அன்பின்றி இதயங்கள் காய்ந்திடும் நேரம்
உன் தியாகம் உயிரானதே
புவியெங்கு சென்றாலும் நீயின்றி வாழ்வேது
நான் புகழ்கோடி சேர்த்தும் உன் அருளன்றி பொருளேது
அருளும் நீ ஆற்றலும் நீ
எனைதாங்கும் நல் மீட்பனே
இறைவா உனை போற்றுவோம்
தினமும் உனை தேடுவோம்


ஆவியின் வரம்தேடி உண்மையின் வழிசெல்ல
உன் வாழ்வு கொடையானதே
இறைமையின் மொழிபேசும் மனிதர்கள் நடுவிலே 
இறைமனிதம் மலர்கின்றதே
வான்புகழ் பெற்றாலும் நீயின்றி உயர்வேது
பொருள்கோடி சேர்த்தாலும் 
நிறைவான நிலையேது
என் உயர்வும் நீ நிறைவும் நீ
எனை தேற்றும் நல் அன்பனே
உறவென்னும் நதியிலே