அன்பில் கனிந்த வந்த அமுதே Lyrics

அன்பில் கனிந்த வந்த அமுதே
சிந்தை மகிழ் உறவே தந்தை தரும் உணவே
உனக்காக நான் ஏங்கி தவித்தேன்
எனில் வாழும் உணவாக அழைத்தேன்

விருந்தாக வரும் தேவன்
உனை காண்கையில்
வரும் தாகம் பசியாவும் பறந்தோடுதே
மறந்தாலும் மறவாத உனது அன்பையே
இருந்தாலும் இறந்தாலும் மனம் தேடுதே
பசியாற பரிவோடு அழைக்கின்றேன் வா
இசையோடு தமிழ் சேரும் சுவை காணவே
உனைத்தேடி உனை நாடி நிறைவாகுவேன்
உன்னில் உருவாகுவேன்

என்னோடு நீ கொண்ட உறவானது
எந்தன் உயிர் போன பின்னாலும் விலகாதது
என் மீது நீ கொண்ட அன்பானது - அது
தினந்தோறும் பலியாக அரங்கேருது
இறைவா என் இறைவா என் அகம் வாருமே
இதயம் என் இதயம் உன் அருள் காணுமே
இறையாட்சி சமபந்தி உருவாகுமே
மண்ணில் உருவாகுமே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக