இயேசுவினிடத்தில் நான்

பொற்கீரிடம் அணிவித்து ஆரவரத்தோடு அவையோர் சூழ
பொற்கீரிடம் சூடவேண்டிய உன் நெற்றியிலே
கசைகளோடு கள்வர்கள் உனைசுழ்ந்து கண்ணீர் மழ்கிய
உன் முகத்தில் காரி உமிழ்ந்தபோது உன்னை வேதனையால் துடிக்கவைத்த முற்கீரிடமாய் இருந்தேன் நான் !

மாலை மயங்கும் நேரத்திலே மந்தையிலிருந்து தவறிய
ஆட்டுக் குட்டியை கண்டு நல்லாயனைப் போல
அதனை அன்போடு சுமர்ந்த உன் தோள்களில் மக்களால்
மறுக்கப்பட்டு வெறுத்து ஒதுக்கப்பட்ட அவமான
சின்னமாகிய சிலுவையாய் இருந்தேன் நான் !

அன்று ஆலயத்தில் அறிஞர்கள் உன்னை
புகழக்கண்டு அக்களித்த உன்தாயின் இருதயத்தில்
இன்று நீ வடிக்கும் இரத்த துளிகளின்
காணமாய் உருவான வாளாய் இருந்து
உள்ளத்தை ஊடுவினேன் நான் !

நறுமணத் தைலம் வார்க்கப்பட்டு முத்தமிடபட்ட
உந்தன் கைகளிலும் காலகளிலும் எந்தன்
பாவத்தினால் உன் பொற்பாதங்களை ஆணியாய்
இருந்து குருதி சிந்த அதனைப்
பிளந்தெரிந்தவன் நான் !

இத்தனை துனபங்கள் நான்
தந்த பொழுதும் என் பாவங்கள்
போக்கிட பலியாய் உன்னையே தந்தாய்
நீ இது தான் இறைஅன்போ
என்று வியந்துபோனேன் நான் !

M. Arulraj
I Year B.A.
Thiruvaiyaru

1 கருத்து: