புத்தாண்டு இரவுத் திருப்பலி 01-01-2012


திருப்பலி முன்னுரை:
குழந்தை இயேசுவை மகிழ்ச்சியோடு உள்ளத்திலே வரவேற்றிருக்கும் அன்பார்ந்த இறைமக்களே! எவ்வாறு இயேசுவின் வருகையை பழைய ஏற்பாட்டு நூல்கள் சுட்டிக்காட்டி கடவுளின் மகனை இவ்வுலகிற்கு தந்ததோ அதே போல் இன்றைய நாளும் நாம் கடந்து வந்த நல்ல பாதைகளுக்கு நன்றியாகவும் இடறலான காலங்களை நினைந்து அவற்றிலிருந்து நம் அறியாமையை போக்கிக் கொள்ளவும் எதிர் காலத்தை சரியான விதத்திலே முழுமையாக பயன்படுத்தத் தேவையான மன பலத்தையும் நமக்கு கொடுக்க இத்திருப்பலியில் குழந்தை இயேசுவின் மூலம் கடவுளைப் போற்றி நன்றி கூறவும் தாய் மரியாளும் வளர்ப்புத் தந்தை யோசேப்பும் குழந்தை இயேசுவுடன் தங்களை கடவுளிடம் எவ்வாறு முழுமையாக ஒப்படைத்தார்களோ அதுபோல இன்று நம்மை நாமே கடவுளிடம் ஒப்படைப்பதன் மூலம் புதிய வாழ்வை இப்புதிய ஆண்டிலே பெற இத்திருப்பலியில் பக்தியோடு பங்கேற்போம்.

முதல் வாசகமுன்னுரை:
கடவுள் இஸ்ராயேல் மக்களை பராமரிக்கும் நிலையையும் அவர்களுக்கு அவர் தருகின்ற அருள் வரங்களையும் ஆசிரையும் மோசேயிடம் விவரிக்கும் நிகழ்வை எடுத்துரைக்கும் முதல்வாசகத்திற்கு செவிமெடுப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை:
கடவுள் தம் ஒரே அன்பு மகனை அனுப்பி நாம் அவரின் பி;ள்ளைகளாக திருவுளம் கொண்டார் என்றும் இதனால் நாம் அனைவரும் கடவுள் மீது பிள்ளைகள் என்ற முறையில் முழு உரிமை கொண்டவர்களாக இருக்க முடியும் என்ற மேலான கருத்தை விவரிக்கும் இறைவார்த்தைக்கு செவிமெடுப்போம்.

விசுவாசிகளின் மன்றாட்டு:
பதில் : ஆண்டவரே எங்கள் மன்றாட்டைத் தயவாய் கேட்டருளும்.
  1. எங்கள் திருச்சபையை இறையன்பில் வழிநடத்தி வருகின்ற எம் திருத்தந்தை ஆயர்கள் குருக்கள் அனைவரையும் உம் பாதம் அர்ப்பணிக்கின்றோம். இவர்கள் இறைவார்த்தையை மக்களுக்கு அறிவிக்கவும் அதன் வழியில் சென்று இறைப்பணி செய்திட அருளையும் ஆற்றலையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  2. உண்மையின் ஊற்றாகிய எம் இறைவா! எங்களி;ன் நாட்டு தலைவர்களுக்காக மன்றாடுகிறோம். இவர்கள் அனைவரும் நாட்டை சொந்தமாக்கி கொள்ளாமல் நாட்டிற்காக தொடர்ந்து உழைக்க அருளையும் ஆற்றலையும் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  3. நலன்களை வழங்கும் இறைவா! கடந்த ஆண்டு முழுவதும் எங்களை எல்லா வித நன்மைகளிலும் தீமைகளிலும் காத்து வழி நடத்தினீரே. அதேப்போல் புலர்ந்துள்ள இந்த புதிய ஆண்டிலும் எங்களை உமது அருளால் வழிநடத்தி செல்ல வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  4. சமாதானத்தின் இறைவா! உலக சமாதானத்திற்காகவும் எங்கள் குடும்பங்களில் இருப்பவர்களுக்காகவும் வேண்டுகிறோம். நீர் அளித்;த சமாதானம் எங்களின் வாழ்விற்கு ஒளியாக மலர அருள் தர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
  5. ஓற்றுமையின் உறைவிடமே இறைவா! இந்த புதிய ஆண்டில் எங்களிடையே உள்ள தீய குணங்களை வெறுத்து பிறரோடு அன்பு ஒற்றுமை பகிர்வு ஆகிய உயரிய குணங்களோடு நல் வாழ்வு வாழ வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
Prepared by:
  • William Edward
  • Arokia Rajesh
  • Maria Vinod Kumar doing Spirituality Course at St. John’s Propaedeutic Seminary, Cuddalore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக