திருவிருந்துப் பாடல்


வா மன்னவா இதயம் எழுந்து வா...
என்னுள்ளம் மலர வா
அன்பு பாதையில் கால்கள் நடந்திட
என் வாழ்வின் தீபம் ஏற்றிட

1.
வாழ்வில் இன்னல்கள் எத்துனை வந்தாலும்
உன் அன்பு என்றும் மாறாதையா
ஒளி வெள்ளமாய் நீ உதித்தாய் -2
என் இயேசுவே நீ எழுந்து வா...

2.
சொந்தங்கள் பந்தங்கள் விலகிடும் நேரம்
உன் துணை என்றும் மாறாதயா
உன் கையில் என் பெயர்பொறித்து வைத்தாய்-2
என் தெய்வமே எழுந்து வா.....

தியானப்பாடல் - நீ என் மகனல்லவா


நீ என் மகனல்லவா
உன்னை அழைத்ததும் நானல்லவா
நீ என் மகனல்லவா
உன்னை அழைத்ததும் நானல்லவா
கலக்கம் வேண்டாம் கவலை வேண்டாம்
காலமுழுவதும் உடனிருப்பேன்
நீ என் மகனல்லவா
ஆண்டவரின் ஆவி என்மேலே
ஏனெனில் என்னை அருட்பொழிவு செய்தார்
ஆண்டவர் வாழ்க

1
அருட்மிகு பலியாய் அரவணைத்து
நலிவுற்ற நெஞ்சத்திற்கு உறுதியூட்டு
மேடு பள்ளங்களை சமன்செய்ய
ஏற்றத் தாழ்வுகளை வேரறுக்க
உன்னைத் தேர்ந்துள்ளேன்
அழிக்கவே ஆக்கவே உன்னை அனுப்புகிறேன்
ஆண்டவரின்....

2
இடிந்து கிடப்பதை சீர்படுத்த
அழிந்து போனதை உருவாக்க -2
வாழ்வை அழந்தோர் வாழ்வு பெற-2
சிறையில் வாடுவோர் விடுதலையாய்
உன்னை தேர்ந்துள்ளேன்
படைக்கவே வளர்க்கவே
உன்னை அனுப்புகிறேன்
ஆண்டவரின்.......

வருகைப்பாடல் - உமது அரசு வருக


உமது அரசு வருக
எங்கள் இதயமே மகிழ
மக்கள் வாழ்வெல்லாம் மலர
மனித மாண்பு உயர்ந்திட இறைவன்
ஆட்சி துலங்கிட
உமது அரசு வருக வருக

1
மாந்தர் தம்மை வாட்டும் வருமை
ஒழிய வேண்டுமே
மகிழ்வு தென்றல் எங்கும் என்றும் வீச வேண்டுமே
ஏற்ற தாழ்வு என்னும் நோயும்
நீங்க வேண்டுமே
ஏங்கி தேடும் ஒருமைப்பாடு
விடிய வேண்டுமே
வேதங்கள் எல்லாம் வாழ்வாக மாறிட
பேதங்கள் எல்லாம் இல்லாமல் ஓடிட
உலகமெல்லாம் ஒரே குடும்பம் ஆகிட
ஏழை வாழ்வு மலரட்டும் ஏங்கும் நெஞ்சம் மகிழட்டும்-2
இயேசுவின கனவெல்லாம் நனவாகட்டும்-2
2
கடவுள் தாமே எல்லோருக்கும் தாயும் தந்தையுமாம்
கவி உலகின் மாந்தர் எல்லாம் உடன் பிறந்தவராம்
படைப்பெல்லாம் எல்லோருக்கும் பொது உடைமைதான்
பகிர்ந்து வாழ்தல் நமது வாழ்வின் பெரும் கடமைதான்
நண்பர்களாயினும் அந்நியராயினும்
துன்பங்கள் சேரினும் இன்பங்கள் கூடினும்
அன்பில் வாழும் இறைசமூகமாகனும்
எங்கும் துன்பம் விலகட்டும்
தங்கும் இன்பம் பறவட்டும்
இயேசுவின கனவெல்லாம் நனவாகட்டும்-2

இயேசுவின் திரு இருதயத்திற்கு நிந்தைப் பரிகார செபம்


எங்கள் திரு மீட்பராகிய இயேசு கிறிஸ்துவின் திரு இதயமே! நாங்கள் நீசப் பாவிகளாய் இருந்தாலும், உம்முடைய தயையை நம்பிக்கொண்டு, உம் திருமுன் பயபக்தியுள்ள வணக்கத்துடனே நெடுஞ்சாண்கடையாய் விழுந்து, நீர் எங்கள் மீது இரக்கமாயிருக்க மன்றாடுகிறோம். எங்கள் பாவங்களையும் நன்றி கெட்டத்தனத்தையும் நினைத்து வருந்துகிறோம். அவைகளை அருவருத்துஎன்றென்றைக்கும் விலக்கிவிடவும், எங்களாலே ஆன மட்டும் அவைகளுக்காக கழுவாய் செய்யும் துணிகிறோம்.

ஆண்டவரே! எளியோர் உமக்குச் செய்த குற்ற துரோகங்களுக்காகவும், பொல்லாத மக்கள் உமக்குச் செய்கிற நிந்தை அவமானங்களுக்காகவும் மிகுந்த மனத்துயர் கொண்டு, அவற்றை நீர் பொறுக்கவும், அனைவரையும் நல்வழியிலே திருப்பி மீட்கவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம். உம் திரு இதயத்துக்குச செய்யப்பட்ட எல்லா நிந்தை அவமான துரோகங்களுக்கும் கழுவாயாக எளியோரின் தொழுகை வணக்கத் துதிகளுடன் விண்ணுலகத் தூதர்களும் புனிதர்களும் செலுத்தும் தொழுகைப் புகழ்ச்சிகளையும், மண்ணுலகில் புண்ணியவாளர் செலுத்தும் துதிகளையும் மிகுந்த தாழ்ச்சி, பணிவுடனே உமக்கு காணிக்கையாக்குகிறோம்.

எங்கள் திவ்விய இயேசுவே, எங்கள் ஒரே நம்பிக்கையே, எளியோர் எங்களை முழுவதும் இன்றும் என்றும் உமது திரு இதயத்துக்கு ஒப்புக் கொடுக்கிறோம். இறைவா! எங்கள் இயதங்களை கைவசப்படுத்தி, தூய்மையாக்கி, புனிதமையச் செய்தருளும், எங்கள் வாழ்வின் இறுதிவரை எங்களை எல்லா எதிரிகளின் சூழ்ச்சிகளினின்றும் காப்பாற்றும். மாந்தர் அனைவருக்காவும் சிலுவை மரத்தில் நீர் சிந்தின திரு இரத்தத்தைப் பார்த்து இந்த மன்றாட்டுகளை நிறைவேற்றியருளும் - ஆமென்.