வருகைப்பாடல் - உமது அரசு வருக


உமது அரசு வருக
எங்கள் இதயமே மகிழ
மக்கள் வாழ்வெல்லாம் மலர
மனித மாண்பு உயர்ந்திட இறைவன்
ஆட்சி துலங்கிட
உமது அரசு வருக வருக

1
மாந்தர் தம்மை வாட்டும் வருமை
ஒழிய வேண்டுமே
மகிழ்வு தென்றல் எங்கும் என்றும் வீச வேண்டுமே
ஏற்ற தாழ்வு என்னும் நோயும்
நீங்க வேண்டுமே
ஏங்கி தேடும் ஒருமைப்பாடு
விடிய வேண்டுமே
வேதங்கள் எல்லாம் வாழ்வாக மாறிட
பேதங்கள் எல்லாம் இல்லாமல் ஓடிட
உலகமெல்லாம் ஒரே குடும்பம் ஆகிட
ஏழை வாழ்வு மலரட்டும் ஏங்கும் நெஞ்சம் மகிழட்டும்-2
இயேசுவின கனவெல்லாம் நனவாகட்டும்-2
2
கடவுள் தாமே எல்லோருக்கும் தாயும் தந்தையுமாம்
கவி உலகின் மாந்தர் எல்லாம் உடன் பிறந்தவராம்
படைப்பெல்லாம் எல்லோருக்கும் பொது உடைமைதான்
பகிர்ந்து வாழ்தல் நமது வாழ்வின் பெரும் கடமைதான்
நண்பர்களாயினும் அந்நியராயினும்
துன்பங்கள் சேரினும் இன்பங்கள் கூடினும்
அன்பில் வாழும் இறைசமூகமாகனும்
எங்கும் துன்பம் விலகட்டும்
தங்கும் இன்பம் பறவட்டும்
இயேசுவின கனவெல்லாம் நனவாகட்டும்-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக