நீர் ஒருவர் மட்டும் இயேசுவே

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னைவிட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ?

1.
என்னை பாடி மகிழ்வித்த புல்லினங்கள்
தங்கள் கூடுகள் தேடி பறந்த பின்னும் - 2
நான் வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம்
நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும் - நீர்

2.
எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் - 2
எந்தன் பாதையின் விளக்காய் பகலவனும்
வந்து காரிருள் மாயையாய் பிரிந்த பின்னும் - நீர்

என் வாழ்வில் இயேசுவே ...

என் வாழ்வில் இயேசுவே என் நாளும் இங்கே
எல்லாமும் நீயாக வேண்டும் எந்தன்
எல்லாமும் நீயாக வேண்டும்
சோகங்கள் ஆறாமல் நான் வாடும் போது
தாயாக நீ மாற வேண்டும்
தாயாக நீ மாற வேண்டும்

1. பாரங்கள் தாங்காமல் சாய்கின்ற போது
பாதங்கள் நீயாக வேண்டும்
எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும்
பாவங்கள் கடலாகி நான் மூழ்கும் போது
ஓடங்கள் நீயாக வேண்டும் – 2

2. போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும் போது
பாலங்கள் நீயாக வேண்டும் – இணைப் 2
தீராத ஆர்வத்தில் நான் தேடி பயிலும்
பாடங்கள் நீயாக வேண்டும் – மறை – 2

அன்பே கடவுள் என்றால் ...

அன்பே கடவுள் என்றால் அன்புக்கு ஈடேது சொல்
அன்பே இன்பம் என்றால் அன்புக்கு விலையேது சொல்

மண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா-2
விண்ணோர்கள் மொழி பேசினும் அன்புக்கு ஈடாகுமா

இறைவாக்கு சொல்வரமும் அன்புக்கு ஈடாகுமா-2
மறைபொருள் உணர்பொருளும் அன்புக்கு ஈடாகுமா

அளவில்லா அறிவுத்திறன் அன்புக்கு ஈடாகுமா-2
மலைபெயர் விசுவாசமும் அன்புக்கு ஈடாகுமா

உள்பொருள் வழங்கும் தன்மை அன்புக்கு ஈடாகுமா-2
என் உடல் எரிப்பதுமே அன்புக்கு ஈடாகுமா

நம்பிக்கை விசுவாசமும் நிலையாய் நின்றுவிடும்-2
நிலையாய் நிற்கும் அவை அன்புக்கு ஈடாகுமா

திருப்பலிக்கு செல்லும்போது நாம் தவிர்க்கப்பட வேண்டிய செயல்கள்..!!!

பெண்கள் கவனத்திற்கு :
****  *****
⭐லெக்கின்ஸ் போன்ற ஆபாச உடைகள் அணிந்து செல்வது...
⭐அடுத்தவரை ஈர்க்கும் ஆடைகள் அணிவது...
⭐ஆடம்பரமான ஆடைகள் அணிவது...
⭐மேக்கப் மற்றும் அழகு சாதனங்களுடன் தலைக்கு முக்காடிடாமல் 
திருப்பலியில் பங்கேற்பது...

ஆண்கள் கவனத்திற்கு :
****  ******
⭐காலர் இல்லாத டீ சர்ட் அணிவது...
⭐ஸ்போர்ட் சட்டைகள் மற்றும் பேண்ட் அணிதல்...
⭐முக்கால் பேண்ட் அணிதல், மற்றவர்களை கவர்ந்து இழுக்கும் ஆடைகள் அணிவது...
⭐நடிகர்கள் மற்றும் பேய் படம் போட்ட பனியன் அணிந்து செல்வது...
⭐ஆலயத்திற்குள் அமர்ந்து செல்போன்களை நோண்டுவது...
⭐திருப்பலி நேரத்தில் கோவிலுக்கு வெளியே அமர்ந்து அரட்டை அடிப்பது...

பொதுவானவைகள் :
********
⭐பராக்குகள் பக்தியை குறைக்கும் இடைச்செருகல்கள்...
⭐அருட்தந்தையர்கள் மிக முக்கியமான ஜெபங்களை பாடும்போது பிண்ணணி இசை கொடுப்பது....
⭐காதைப்பிளக்கும் ஸ்பீக்கர்கள் நாலாபுறமும் அலறுவது...
⭐எல்லோரும் சேர்ந்து ஜெபிக்கும் பாடல்களுக்கு அடிக்கடி டியூன் மாற்றுவது.சில நேரங்களில் பாடலையே மாற்றி விடுவது.இதனால் பாடல் குழுவினர் தவிர யாரும் வாயைக்கூட அசைக்க முடியாத நிலை ஏற்படுகிறது...

⭐எல்லாமே புதிய பாடல்களாகவே பாடுவது (எல்லோருக்கும் தெரிந்த ஒன்றிரண்டு பாடல்களையாவது பாட வேண்டும்)...
⭐அன்பியங்கள் போட்டி மனப்பான்மையில் ஆடம்பரங்களை அதிகரிப்பது...
⭐வருகைப்பாடல் நடனம், பொன்னாடை போர்த்துதல், கும்பம், கரவொலி, போன்ற ஆடம்பரங்கள். இன்னும் பல நவீனங்கள் புகுத்தப்படுவதை தவிர்க்க வேண்டும்...

மொத்தத்தில் திவ்ய பலிப்பூசை ஆடம்பரம், உலக காரியங்கள் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு எளிமையோடும், பக்தியோடும் ஆராதனை மன நிலையோடும் நடத்தப்பட வேண்டும்..!!!

இயேசுவுக்கே புகழ்...!!!❤💚
இயேசுவுக்கே நன்றி...!!!💛💙
மரியே வாழ்க...!!!💜❤

விண்ணக வேந்தன் என் அகம் இங்கே வருகின்றார்


விண்ணக வேந்தன் என் அகம் இங்கே வருகின்றார் வருக வருகவே 
என் நிலை மாற என்னிலே வாழ எழுகின்றார் எழுக எழுகவே 
விடியலின் கீதங்கள் பாடி விருந்துக்கு வாருங்கள் 
வியாதிகள் குணமாகும் நமது வாழ்வே சுகமாகும் 
அன்பாலே நமை ஆளும் இறைவன் இருப்பே இனிதாகும் 
எந்நாளும் (விண்ணக....) 

விடியலில் வானம் தெளிகிறதே புதிதாய் மன்னா பொழிகிறதே 
ஏதோ மாற்றம் நிகழ்கிறதே இதை மனமே இதயம் கமழ்கிறதே 
விதையாய் இதயம் விழுகிறதே நூறு மடங்கு பலன் தரவே
உறவில் விருந்து தொடர்கிறதே புது நிறைவில் இதயம் மகிழ்கிறதே 
கல்லான மனதெல்லாம் கனி இல்லா மரமாகும் 
கனிவான மனமெல்லாம் கனிகள் தரும் நிலமாகும்
மனமாய் வா வளமே வா ஒளியே அருளே இதயம் வா (இசை) எந்நாளும் (விண்ணக....) 

அன்னை தந்த அமுதல்லவா அழகாய் கரத்தில் தவழ்கிறதே 
உயிருள்ள உணவு இது அல்லவோ? அந்த வானக விருந்து மருந்தல்லவா அப்பம் என்பது அன்பல்லவா? 
அப்பாவின் நேசம் பெரிதல்லவா 
உள்ளம் என்பது குடில் அல்லவா? அதில் வாழ்ந்திட வருவது இறை அல்லவா 
இதை வாங்கி உண்ணுங்கள் இனிமையெல்லாம் இதிலேதான் 
இதை வாங்கி பருகுங்கள் நிலை வாழ்வு இதிலேதான்
அழியாத உணவே வா அருகில் நடக்கும் உறவே வா (இசை) எப்போதும் (விண்ணக....) 

அன்பான தந்தை ஒருவர்

 
அன்பான தந்தை ஒருவர்
அவருக்கு பண்பான பிள்ளைகள் இருவர் (2)

ஏராள செல்வம் வீட்டிலே
தாராள விளைச்சல் காட்டிலே (2)

1.தந்தையிடம் வந்தானே இரண்டாம் மகன்
சிந்தை மாறி சொத்தை பிரி என்றான் அவன்
கேட்டபடி சொத்தை பிரித்து கொடுத்தார் தந்தை
கேட்ட விலைக்கு சொத்தை விற்று சென்றான் பிள்ளை
இப்படி தான் வாழ வேண்டும் என்பதை மறந்தான்
எப்படியும் வாழலாம் என்றே நினைத்தான்
அப்படியே ஊதாரியாய் செலவுகள் செய்தான்
கைப்பிடி செல்வம் என்று எல்லாம் இழந்தான்
பன்றி மேய்க்கும் வேளையில் சேர்ந்தான்
உணவு இன்றி அவன் வாடியே நின்றான்
அன்பான தந்தை

2.வாடியவன் செய்த குற்றம் நினைத்தே நொந்தான்
ஓடியே நான் தந்தை காலில் விழுவேன் என்றான்
மகனென்று சொல்லும் தகுதி இழந்தேன் நானே
அடிமையாக சேர்த்து கொள்ளும் என்பேன் என்றான்
தொலைவினிலே இவன் வருவதை தந்தை பார்த்தார்
அலைக்குறளுள் அன்புடனும் ஓடியே அழைத்தார்
வருந்தி அவன் நினைத்ததெல்லாம் சொல்லியே அழுதான்
விருந்துக்கு வா மகனே என் மகனே என்றார்
மனிதர்களே பாவங்களை இன்றே உணருங்கள்
மன்னிக்கின்ற தந்தையிடம் விரைந்து திரும்புங்கள்

அன்பான தந்தை
அன்பான தந்தை ஒருவர்
என்றும் மன்னிக்கும் மனம் கொண்டவர் (3)

அன்பே அன்பே உயர்ந்தது இறை

பாடலைக் கேட்க


அன்பே அன்பே உயர்ந்தது இறை

அன்பே உலகில் சிறந்தது (2)

அன்பிற்காய் மனுவான அன்பிற்காய் தனைத் தந்த

அவர் அன்பே உலகில் சிறந்தது - 2


1. இறையன்பில் வேரூன்றி நான் பிறரன்பில் செழித்தோங்கி

அவரன்பின் ஆற்றலிலே நான் அவனியிலே காலூன்றி (2)

அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2


2. மதவெறியை வேரறுத்து தினம் மனித இனம் தனை நினைத்து

கல்வாரி சரித்திரத்தை நான் காலமெல்லாம் காத்திடவே (2)

அன்புப் பணியாற்றுவேன் அவர் அன்பில் பணியாற்றுவேன் - 2