நீர் ஒருவர் மட்டும் இயேசுவே

நீர் ஒருவர் மட்டும் இயேசுவே
என்னைவிட்டு நீங்காதிருப்பது ஏனோ?
தெய்வீக அன்பால் தானோ?

1.
என்னை பாடி மகிழ்வித்த புல்லினங்கள்
தங்கள் கூடுகள் தேடி பறந்த பின்னும் - 2
நான் வாழ்ந்த காலத்து நண்பரெல்லாம்
நான் தாழ்ந்த காலத்தில் பிரிந்த பின்னும் - நீர்

2.
எந்தன் மேனி தழுவிய இளந்தென்றல்
சொந்த தாய் கடலோடு கலந்த பின்னும் - 2
எந்தன் பாதையின் விளக்காய் பகலவனும்
வந்து காரிருள் மாயையாய் பிரிந்த பின்னும் - நீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக